Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி

ஆயர் பால் சி. ஜோங்

நிரந்தரமான பாவ விடுதலை இயேசுவின் ஞானஸ்நானமும் பாவப்பரிகாரமும் இயேசுகிறிஸ்து நீரினாலும், இரத்தத்தினாலும், ஆவியினாலும் வந்தார் இயேசுவின் ஞானஸ்நானமானது பாவிகளின் இரட்சிப்பிற்கு ஒப்பனையாக இருக்கிறது நற்செய்தியாகிய மறுபடியும் பிறப்பது என்பதன் பொருள் என்ன? உண்மையான ஆவிக்குரிய விருத்த சேதனம் மாறுதலடைந்த ஆசாரித்துவம் பாவ மன்னிப்பு முறையில் இயேசுவின் ஞானஸ்நானம் இன்றியமையாதது விசுவாசத்தினால் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவோமாக


நிரந்தரமான பாவ விடுதலை

【3-1】< யோவான் 8:1-12 >


யோவான் 8:1-12 >

"இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது,ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து,அவளை நடுவே நிறுத்தி: போதகரே,இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப் பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே,நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர் மேல் குற்றஞ் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து,விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஔயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில்,அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன் என்று சொல்லி,அவர் மறுபடியும் குனிந்து,தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு,தங்கள் மனச்சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு,பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார்,அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறோருவரையுங் காணாமல்: ஸ்திரீயே,உன் மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை,ஆண்டவரே,என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை;நீ போ. இனிப் பாவஞ்செய்யாதே என்றார். மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்,என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்."

  1. எவ்வளவு பாவங்களை இயேசு துடைத்தார்?
    1. உலகின் எல்லாப் பாவங்களையும்.

இயேசு நமக்கு நிரந்தர பாவ விடுதலையை அளித்தார். இயேசுவைத் தம் இரட்சகராக விசுவாசித்து பாவ விடுதலைப் பெறாத ஒருவனும் இல்லை. நம் அனைவரையும் அவர் விடுவித்தார். ஒரு பாவி தன் பாவங்களினால் அலைக்கழிக்கப்பட்டால் அது இயேசு தம் ஞானஸ்நானம் மூலம் அவனின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்தார் என்று அவன் புரிந்து கொள்ளாததாலேயே.,

இரட்சிப்பின் இரகசியத்தை நாமெல்லாரும் அறிந்து அதனை விசுவாசிக்கவேண்டும். அவர் தம் ஞானஸ்நானம் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து நம் பாவங்களுக்கான தீர்ப்பையும் எற்றுக்கொண்டு நமக்காக அவர் சிலுவையில் மரித்தார். ,

நீர் மற்றும் ஆவியிலான இரட்சிப்பை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்: அது நம் அனைத்துப் பாவங்களுக்கான நிரந்தர விடுதலையாகும். உன்னை ஏற்கெனவே நீதிமானாக்கிய அவரின் பெரிதான அன்பை நீ விசுவாசிக்க வேண்டும். உன்னுடைய இரட்சிப்பிற்காக அவர் யோர்தான் நதியிலும் சிலுவையிலும் செய்தவற்றை விசுவாசி.,

இயேசுவிற்கு நம் மறைவான பாவங்களும் கூடத்தெரியும். சில மக்கள் பாவங்குறித்து தப்பாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் சில பாவங்களிலிருந்து விடுதலை பெறமுடியாது என்று நினைக்கிறார்கள். இயேசு எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒன்று விடாமல் விடுதலை செய்தார்.,

இவ்வுலகில் அவர் விட்டு விட்டப் பாவங்கள் ஒன்று கூட இல்லை. அவர் உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை அளித்ததால்,பாவிகள் இல்லவே இல்லை. உன்னுடைய எதிர்கால பாவங்கள் உட்பட உன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைச் செய்த நற்செய்தியைக் குறித்து உனக்குத் தெரியுமா?அதனை விசுவாசித்து இரட்சிக்கப் படுவாயாக. மேலும் கர்த்தரின் மகிமைக்குத் திரும்புவாயாக.,

விபசாரத்தில் பிடிபட்ட பெண்,

  • இவ்வுலகில் எத்தனை பேர் விபசாரம் செய்கிறார்கள்?
  • அனைவரும்.

யோவான் 8 இல்,விபசாரத்தில் பிடிபட்ட பெண் இருக்கிறாள். அவள் இயேசுவினால் எப்படி இரட்சிக்கப் பட்டாள் என்று காண்கிறோம். அவள் பெற்ற கிருபையில் பங்கு பெற விரும்புகிறோம். மனிதர்கள் அனைவரும் தம் வாழ்நாளில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது அதிகமில்லையா. எல்லா ஆத்துமாக்களும் விபசாரம் செய்கின்றன.,

,அது அப்படித் தெரியவில்லையென்றால்,அதற்கான ஒரே காரணம், அதனை நாம் தொடர்ந்து செய்வதால்,அதனைச் செய்யாதது போல் தெரிவதே. ஏன்?நம் வாழ்வில் அத்தனை விபசாரத்துடன் வாழ்கிறோம்.,

அப்பெண்ணைப் பார்த்ததுடன் நம்மில் விபசாரம் செய்யாதவர்கள் யாருமில்லையா என்று மனதில் நினைத்தேன். விபசாரத்தில் பிடிபட்ட அப்பெண்ணைப் போன்றே விபசாரம் செய்யாத மனிதர்கள் யாருமேயில்லை. நாமெல்லாருமே அப்படி செய்தாலும் எதுவும் செய்யாதது போல் காட்டிக்கொள்கிறோம்.,

நான் கூறுவது தவறு என்கிறாயா?இல்லை, நான் தவறாக கூறவில்லை. உன்னுள் கவனமாகப் பார். உலகின் மீதுள்ள எல்லோரும் அதனைச் செய்துள்ளார்கள். அவர்கள் தெருவில் செல்லும் பெண்களைப் பார்க்கும்போது,அவர்கள் நினைப்பிலும்,செய்கையிலும், எந்நேரத்திலும்,எங்கும் விபசாரம் செய்கிறார்கள்.,

அதனைச் செய்வதாக அவர்கள் அறிவதில்லை. தாம் வாழ்ந்திருந்த நாட்களெல்லாம் எண்ணிலடங்காத முறை விபசாரம் செய்ததை தாம் மரிக்கும் நாளிலே மட்டும் உணர்ந்து கொள்ளும் அநேக மனிதர்கள் இருக்கின்றனர். பிடிபட்டவர்கள் மட்டுமல்ல, பிடிபடாத நாமனைவரும் கூட அப்படியே. எல்லா மக்களும் அதனைத் தம் மனதிலும் செய்கையிலும் செய்கின்றனர். இது நம் வாழ்வின் ஔர் அங்கமில்லையா?

,நீ குழம்பிவிட்டாயா?இதுவே உண்மையாகும். நாம் கூச்சமடைந்துவிட்டதால் இதனைத் தவிர்க்கிறோம். மக்கள் இக்காலத்தில் எப்பொழுதும் விபசாரத்தில் ஈடு பட்டிருக்கிறார்களென்றும் ஆனால் அதனை அவர்கள் உணருவதில்லை என்றும் நம்புகிறேன்.,

மக்கள் தம் ஆத்துமாக்களிலும் விபசாரம் செய்கிறார்கள். கர்த்தரால் படைக்கப்பட்ட நாம்,நம் ஆத்துமாக்களில் விபசாரம் செய்வதை அறியாமலேயே இப்பூமியில் வாழுகிறோம். மற்ற தேவர்களை ஆராதிப்பது ஆவிக்குரிய விபசாரம். ஏனெனில் கர்த்தரே மனிதர்கள் அனைவரின் மணவாளன்.,

விபசாரத்தில் பிடிபட்ட பெண் நம்மைப் போன்றே மனிதகுலத்தவள், நாம் விடுவிக்கப்பட்டது போல் அவள் கிருபைப் பெற்றாள். ஆனால் கபட்டு பரிசேயர்கள் அவளைத் தம் மத்தியில் நிறுத்தி,அவர்களே நீதிபதி போன்று அவளை நோக்கி கைக்காட்டி அவள் மீது கல்லெறிய தயாராயிருந்தார்கள். அவர்கள் தாம் சுத்தமானவர்கள் என்பது போலும் தாம் விபசாரத்தில் ஈடுபடவே இல்லை என்பது போலும் நினைத்து,அவளை மேற்கொண்டு அவளைத் தீர்க்க தயாராக இருந்தனர்.,

உடன் கிறிஸ்தவர்களே,தாமொரு பாவக்குவியல் என்றறிந்தவர்கள் கர்த்தர் முன் மற்றவர்களைத் தீர்ப்பதில்லை. மாறாக,அவர்களுக்குத் தாம் தம் வாழ்நாள் முழுவதும் விபசாரம் செய்வதை அறிந்திருப்பதால்,நம் அனைவரையும் விடுதலை செய்த கர்த்தரின் கிருபையைப் பெறுவார்கள். எப்போதும் விபசாரம் செய்யும் பாவிகள் என்று உணர்ந்து கொள்பவர்கள் கர்த்தர் முன்பாக விடுதலைப் பெற தகுதியானவர்கள்.,

கர்த்தரின் கிருபையைப் பெற்றுக்கொள்வது யார்?

  • கர்த்தரின் கிருபையைப் பெறுவது யார்?
  • மதிப்பேதுமில்லாதவன்.

விபசாரமே செய்யாது சுத்தமாக வாழும் ஒருவன் அவரின் கிருபையைப் பெறுவானா அல்லது அப்படிச் செய்யும் மதிப்பில்லாதவன் அவர் கிருபையைப் பெறுவானா?அப்படிச் செய்யும் ஒருவனே அவரின் விடுதலைக்கான அளவு கடந்த கிருபையைப் பெறுபவன். தமக்குத்தாமே உதவிக்கொள்ள முடியாதவர்கள்,பலவீணமான மற்றும் உதவியற்றவர்கள் விடுதலைப் பெறுவார்கள். அவர்களே அவர் கிருபையிலுள்ளவர்கள்.,

தம்மிடம் பாவமில்லை என்று நினைப்பவர்களை விடுவிக்க முடியாது. விடுவிக்க ஏதுமில்லாத போது விடுதலைக்கான கிருபையை அவர்கள் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?

வேதபாரகரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் இழுத்து வந்து அவளை நடுவில் நிறுத்தி அவரிடம் கேட்டனர்,"போதகரே,இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்,நீர் என்ன சொல்லுகிறீர்?”அவர்கள் அப்பெண்ணை அவருக்கு முன் கொண்டு வந்து அவரை ஏன் சோதித்தார்கள்?

அவர்களோ அநேக முறை விபசாரம் செய்துள்ளனர்,ஆனால் அவளைத் தீர்க்கவும் இயேசுவின் மூலம் கொல்லவும் முயற்சித்து அப்பலியை அவர் மீது சுமத்தவும் முயற்சி செய்தனர்.,

இயேசுவிற்கு அவர்கள் மனதிலுள்ளது தெரியும்,அப்பெண்ணைக் குறித்து சகலமும் அறிந்திருந்தார். ஆகவே அவர் கூறினார், “உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக் கடவன்.” பிறகு வேதபாரகரும் பரிசேயரும்,மூத்தவர்கள் முதல் இளையவர்கள் வரை அனைவரும் ஒவ்வொருவராகப் போய்விட்டனர். மீதிருந்தது இயேசுவும் அப்பெண்ணும் மட்டுமே.,

மதத்தலைவர்களான வேதபாரகரும்,பரிசேயருமே நழுவியவர்கள். அவர்கள் தாம் பாவிகள் இல்லை என்பது போல் விபசாரத்தில் பிடிபட்ட அப்பெண்ணைத் தீர்க்கவிருந்தார்கள்.,

இயேசு இவ்வுலகில் தம் அன்பைப் பிரகடனப் படுத்தினார். அவரே அன்பின் உருவம். இயேசு மனிதர்களுக்கு உணவளித்தார்,இறந்தவர்களை உயிரோடெழுப்பினார்,விதவையின் மகனின் உயிரைத் திரும்பப் கொடுத்தார். லாசருவை உயிரோடெழுப்பினார்,குஷ்டரோகிகளைச் சுகமாக்கினார். ஏழைகளுக்கு அநேக அற்புதங்களைச் செய்தார். அவர் அனைத்துப் பாவிகளிடமிருந்தும் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டு அவர்களுக்கு இரட்சிப்பை அளித்தார்.,

இயேசு நம்மை நேசிக்கிறார். அவர் மகத்துவமுள்ளவரான படியால் அவருக்கு எதையும் செய்யமுடியும்,ஆனால் பரிசேயரும் வேதபாரகரும் அவரைத் தம் எதிரியாக நினைத்தனர். அதனாலேயே அப்பெண்ணை அவர் முன் கொண்டு வந்து அவரைச் சோதித்தனர்.,

அவர்கள் கேட்டனர்,"போதகரே,இப்படிப் பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப் பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே,நீர் என்ன சொல்லுகிறீர்?”அவர் கல்லெறியச் சொல்வார் என்று நினைத்திருந்தனர். ஏன்? கர்த்தரின் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளதன்படி நாமெல்லாரும் தீர்க்கப்படவேண்டுமானால், விபசாரம் செய்த அனைத்து மனிதர்களும்,யாரையும் தவிர்க்காது,கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவர்களே.,

எல்லோரும் கல்லெறியப்பட்டு மரித்து நரகம் செல்ல வேண்டியவர்கள். பாவத்தின் சம்பளம் மரணம். ஆயினும் இயேசு அவர்களைக் கல்லெறியும்படிக் கூறாமல்,"உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக் கடவன்",என்று கூறினார்.,

  • கர்த்தர் ஏன் 613 பிரிவுகளுள்ள சட்டத்தை நமக்குத் தந்தார்?
    • நாம் பாவிகளென்று நம்மைப் புரியச் செய்யவே.

சட்டம் கோபாக்கினையை கொண்டு வருகிறது. கர்த்தர் பரிசுத்தமானவர் அது போன்றதே அவர் சட்டமும். இந்த பரிசுத்தமான சட்டம் 613 பகுதிகளாக நம்மிடம் வந்தது. இந்த 613 பகுதிகளுள்ள சட்டத்தைக் கர்த்தர் நமக்குக் கொடுத்தற்கான காரணம்,நாம் பாவிகளென்றும் குறையுள்ளவர்கள் என்றும் நம்மைப் புரியச் செய்யவே. நாம் விடுதலைப் பெறும் பொருட்டு கர்த்தரின் கிருபையை நோக்க வேண்டுமென அது போதிக்கிறது. இது நமக்குத் தெரியாமல், எழுதப்பட்டுள்ளதை மட்டுமே நாம் சிந்தித்தால் விபசாரத்தில் ஈடுபட்ட அப்பெண்ணைப் போன்றே நாம் அனைவரும் கல்லெறிந்து கொல்லப்படவேண்டியவர்கள்.,

வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சட்டத்தின் உண்மையைத் தெரியாதவர்களானபடியால் அப்பெண்ணை நாமுட்பட எல்லோரும் கல்லெறியலாம் என்று நினைத்திருக்கலாம். உதவியற்ற பெண் மீது யாரால் கல்லெறிய முடியும்? அவள் விபசாரத்தில் பிடிபட்டிருந்தாலும் கூட,இவ்வுலகிலுள்ள யாராலும் அவள் மீது கல்லெறிய முடியாது.,

அப்பெண்ணும் நம்மில் ஒவ்வொருவரும் சட்டப்படி தீர்க்கப் படவேண்டியவர்கள் என்றால்,நாமும் அப்பெண்ணும் பயங்கரமான ஔர் தீர்ப்பைப் பெறுவோம். ஆனால் பாவிகளாகிய நம்மை,நம்முடையப் பாவங்களிலிருந்தும்,நியாயத்தீர்ப்பிலிருந்தும் இயேசு இரட்சித்தார். நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் நாம் கர்த்தரின் சட்டமானது சொற்படி உபயோகிக்கப்பட்டால், நம்மில் யாரால் உயிருடனிருக்க முடியும்?நம்மில் ஒவ்வொருவரும் நரகத்தில் முடிவடைந்திருப்போம்.,

ஆனால் வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் சட்டமானது எழுதப்பட்டுள்ளதைப் போன்றே தெரியும். அச்சட்டம் சரியாக உபயோகிக்கப்பட்டால் அவனால் தீர்க்கப்பட்டவள் உட்பட அவனையும் அது கொல்லும். குறிப்பாக கர்த்தரின் சட்டம் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டதன் காரணம் அவர்கள் தம் பாவத்தைக் குறித்து அறிந்து கொள்ளவே,ஆனால் அதனைத் தவறாகப் புரிந்து தவறாக உபயோகப் படுத்தியதால் அவர்கள் துன்புற்றனர்.,

இக்கால பரிசேயரும் வேதாகம பரிசேயரைப் போல் எழுதப்பட்டுள்ளதைப் போன்றே சட்டமறிந்தவர்கள். அவர்கள் கர்த்தரின் கிருபையும், நீதியையும் அவரின் சத்தியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இரட்சிக்கப்படும்படியாக விடுதலையின் நற்செய்தியை அவர்களுக்கு போதிக்கவேண்டும்.,

பரிசேயர் கூறினர், “இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று நியாயப் பிரமாணத்தில் நமக்கு கட்டளையிடப் பட்டிருக்கிறதே. நீர் என்ன சொல்லுகிறீர்?” கையில் கற்களை வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் கேட்டனர். அதனைக் குறித்து கூறுவதற்கு இயேசுவிடம் எதுவுமில்லை என்று அவர்கள் நினைத்திருந்தனர். தம்முடையவைகளை எடுத்துக்கொள்ள இயேசுவிற்காக காத்திருந்தனர்.,

சட்டத்தின்படி இயேசு நியாயந்தீர்த்திருந்தால்,அவரும் கூட அவர்களால் கல்லெறியப்பட்டிருப்பார். அவர்களுடைய நோக்கம் இருவர் மீதும் கல்லெறிவதாயிருந்தது. அப்பெண்ணின் மீது கல்லெறிய வேண்டாம் என்று இயேசு கூறியிருந்தால்,கர்த்தரின் சட்டத்தை இயேசு இழிவுப்படுத்திவிட்டார் என்றும்,இந்த அவதூறுக்காக அவர் மீது கல்லெறிந்திருப்பர். அது எத்தனை பயங்கரமான திட்டம்!.,

ஆனால் இயேசு குனிந்து தரையில் தம் விரல்களால் எழுதினார், அவர்கள் தொடர்ந்து அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தனர், “நீர் என்ன கூறுகிறீர்?நீர் தரையில் எழுதுவது என்ன? எங்களுடைய கேள்விக்கு பதில் கூறும். நீர் என்ன சொல்லுகிறீர்?” அவர்கள் தம் கையினால் இயேசுவைச் சுட்டிக்காட்டி அவரை இம்சித்தனர்.,

இயேசு எழுந்து அவர்களிடம் உங்களில் பாவமில்லாதவன் அவள் மீது முதலில் கல்லெறியட்டும் என்று கூறினார். பிறகு மீண்டும் குனிந்து தரையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். அதனைக் கேட்டவர்கள்,தம் மனசாட்சியினால் உறுத்தப்பட்டு,வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை,ஒவ்வொருவராக போய்விட்டனர். அப்பெண் அவர் பிரசன்னத்தில் நின்றிருக்க,இயேசு தனிமையில் விடப்பட்டார்.,

"உங்களில் பாவமில்லாதவன் எவனோ,அவன் இவள் மீது முதலில் கல்லெறியட்டும்"

  • பாவங்கள் எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன?
    • இருதயப் பலகையிலும் செய்கையின் புத்தகத்திலும்.

இயேசு அவர்களிடம் கூறினார்,"உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக் கடவன்",அவர் தொடர்ந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரண்டொரு வயதானவர்கள் போகத் தொடங்கினர். அதிகப் பாவம் செய்த வயதானவர்கள் முதலில் போயினர். இளையவர்களும் கூட சென்றுவிட்டனர். இயேசு நம்மிடம் இருக்கிறாரென்றும் நாம் பெண்ணைச் சுற்றிலும் நிற்பதாகவும் கொள்வோம். இயேசு நம்மிடம், உங்களில் பாவமில்லாதவர்கள் இவள் மீது முதலில் கல் வீசட்டும் என்றால்,நீ என்ன செய்திருப்பாய்?

இயேசு தரையில் என்ன எழுதிக்கொண்டிருந்தார்?நம்மைப் படைத்த கர்த்தர் நம் பாவங்களை இரண்டு இடங்களில் எழுதுகிறார்.,

முதலில்,நம் இருதயப் பலகையில் நம் பாவங்களை எழுதுகிறார்.     "யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும்,வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு,அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது” (எரேமியா 17:1),

நம்முடைய பிரதிநிதியான யூதேயாவின் மூலம் கர்த்தர் நம்முடன் பேசுகிறார். மனிதர்களின் பாவங்கள் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டுள்ளது. அவை நமது இருதயப் பலகையில் எழுதப்பட்டுள்ளன. இயேசு குனிந்து மனிதர்கள் பாவிகள் என்று தரையில் எழுதினார். ,

கர்த்தருக்கு நாம் பாவம் செய்வோம் என்று தெரியுமாகையால் பாவங்களை நம் இருதயப்பலகையில் எழுதுகிறார். முதலில் நம் செய்கைகள் நாம் செய்யும் பாவங்களை எழுதுகிறார். ஏனெனில் சட்டத்திற்கு முன்னால் நாம் உடைந்து போகக் கூடியவர்கள். பாவங்கள் நம் இருதயத்தில் எழுதப்பட்டுள்ளதால்,சட்டத்தை நாம் பார்க்கும்போது நாம் பாவிகள் என்பதை உணர்ந்து கொள்கிறோம். அவர் அவற்றை நம் இருதயத்தில்,மனசாட்சியில் எழுதியிருப்பதால்,அவருக்கு முன்பாக நாம் பாவிகள் என்பது நமக்குத் தெரியும்.,

தரையில் எழுதுவதற்காக இயேசு இரண்டாம் முறை குனிந்தார். கர்த்தருக்கு முன்பாக செய்கையின் புத்தகத்தில் நம் எல்லாப் பாவங்களும் எழுதப்பட்டுள்ளதாக வேதாகமம் கூறுகிறது. (வெளி 20:12). அப்புத்தகத்தில் ஒருவனின்/ஒருத்தியின் பெயரும் அவனின்/அவளின் பாவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அம்மனிதனின் இருதயப் பலகையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்முடைய பாவங்கள் செய்கையின் புத்தகத்திலும் நம் இருதயப் பலகையிலுமாக இரண்டு முறை பதிவு செய்யப்பட்டுள்ளது.,

இளையவர்களோ அல்லது வயதானவர்களோ,பாவங்கள் எல்லோருடைய இருதயப்பலகையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே இயேசுவின் முன் அவர்களின் பாவத்தைக் குறித்து அவர்கள் கூற அவர்களிடம் எதுமிருக்கவில்லை. அப்பெண்ணின் மீது கல்லெறிய முயன்றவர்கள் அவர் வார்த்தைகள் முன்பு உதவியற்றவராயினர்.

  • இரண்டு இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள பாவங்கள் எப்போது அழிக்கப்படும்?
        • நம்மிருதயத்தில் நீர் மற்றும் இயேசுவின் இரத்தத்தினால் வரும் பாவவிடுதலையை எற்றுக்கொள்ளும்போது.

ஆயினும்,நீ இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும்போது,செய்கையின் புத்தகத்திலுள்ள உன் பாவங்களெல்லாம் அழிக்கப்பட்டு உன் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்படும். ஜீவப் புத்தகத்தில் யாருடைய பெயர் காணப்படுகிறதோ அவர்கள் பரலோகம் செல்வர். அவர்களுடைய நற்செயல்களும், கர்த்தரின் ராஜ்யத்திற்காக அவர்கள் இவ்வுலகில் செய்தவைகளும், அவனின் நீதியும் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவர்கள் பரலோகத்தினுள் ஏற்றுக் கொள்ளப்படுவர். தம் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் நிரந்தர உலகினுள் பிரவேசிப்பர்.,

ஒவ்வொரு மனிதனுடைய பாவங்களும் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே,யாராலும் கர்த்தரை ஏமாற்ற முடியாது. தம் இருதயத்தில் பாவஞ் செய்யாதவர்களோ,தம் இருதயத்தில் விபசாரம் செய்யாதவர்களோ ஒருவருமில்லை. நாமெல்லாம் பாவிகள் மேலும் நாமெல்லாம் குறைவுள்ளவர்கள்.,

இயேசுவின் பாவ விடுதலையை தம்மிருதயத்தில் ஏற்றுக்கொள்ளாதவர்கள் தம் பாவங்களினிமித்தம் துன்பப்படுவதைத் தவிர வேறேதும் செய்வதற்கில்லை. அவர்கள் மன உறுதி உள்ளவர்களில்லை. அவர்களுக்கு கர்த்தரென்றால் பயம். அவர்கள் பாவங்களினிமித்தம் கர்த்தருக்கு முன்பும் மற்றவர்கள் முன்பும் பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் நீர் மற்றும் ஆவியின் பாவ விடுதலையின் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட நொடியில்,அவர்கள் இருதயப் பலகையிலும் செய்கையின் புத்தகத்திலும் எழுதப்பட்ட பாவங்கள் சுத்தமாக அழிக்கப்பட்டுவிடும். அவர்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெற்றார்கள்.,

பரலோகத்தில் ஜீவ புத்தகம் உள்ளது. நீர் மற்றும் ஆவியின் பாவ விடுதலையை விசுவாசிப்போரின் பெயர்கள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவர்கள் பரலோகத்தினுள் பிரவேசிப்பார்கள். அவர்கள் இவ்வுலகில் பாவம் செய்யாததினால் பரலோகத்தினுள் பிரவேசிக்கவில்லை. ஆனால் நீர் மற்றும் ஆவியின் பாவ விடுதலையை விசுவாசித்து தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெற்றதாலேயே அவர்கள் பிரவேசிக்கிறார்கள். அது "விசுவாசப் பிரமாணத்தினாலேயே ஆகும்” ( ரோமர் 3:27 ).

உடன் கிறிஸ்தவர்களே,வேதபாரகரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட அப்பெண்ணைப் போன்றே பாவிகள். ,

, அவர்கள் அதிக பாவம் செய்தவர்கள் எனெனில் அவர்கள் பாவிகளில்லை என்று காட்டிக்கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருந்தனர். மதத்தலைவர்கள் அனுமதி பத்திரம் பெற்ற திருடர்கள். அவர்கள் ஆத்துமாக்களைத் திருடும் திருடர்கள்,உயிர்களின் திருடர்கள். தாம் விடுதலைப் பெறாதவர்களாக இருந்தபோதிலும் மற்றவர்களுக்கு நல்லவற்றைக் குறித்து போதிக்கத் துணிச்சலுடையவர்கள்.,

சட்டத்தின்படி ஒருவன் கூட பாவமில்லாதவன் இல்லை. ஆனால் ஒருவன்/ஒருத்தி தன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெறுவதாலும் அவன்/அவள் பெயர் ஜீவப்புத்தகத்தில் எழுதப்படுவதாலும் அவன்/அவள் நீதிமானகிறானேயன்றி, அவன்/அவள் பாவஞ்செய்யாததினால் அல்ல. முக்கியமானது ஒருவனின்/ஒருத்தியின் பெயர் ஜீவப்புத்தகத்தில் உள்ளதா இல்லையா என்பதிலிருக்கிறது. மக்கள் பாவங்களின்றி வாழ முடியாததாகையால்,அவர்கள் பாவ விடுதலைப் பெறவேண்டும்.,

அதனை விசுவாசிக்கிறாயா இல்லையா என்பதைப் பொறுத்து நீ பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவது இருக்கிறது. இயேசுவில் இரட்சிப்பை நீ ஏற்றுக்கொள்வதில் கர்த்தரின் கிருபையைப் பெற்றுக்கொள்வது இருக்கிறது. பிடிபட்ட பெண்ணின் கதி என்னவாயிற்று?தன் கண்களை மூடிக்கொண்டு அவள் நின்றிருந்தாள். ஏனெனில் அவளுக்கு தன் சாவு தயாராக இருப்பது தெரியும். அநேகமாக அவள் பயத்தினாலும்,மனம் திரும்பியும் அழுதுகொண்டிருந்திருப்பாள். மக்கள் தம் சாவை சந்திக்கும்போது தமக்கு நேர்மையானவர்களாய் இருக்கின்றனர்.,

"ஓ, கர்த்தரே,நான் சாவதே சரியானது. தயவுசெய்து என் ஆத்துமாவை உம் கரங்களில் ஏற்று,என் மீது இரங்கும். என் மீது இரங்கும் இயேசுவே.” விடுதலையின் அன்பிற்காக அவள் இயேசுவிடம் கெஞ்சினாள். "கர்த்தரே,நீர் என்னைத் தீர்த்தால்,நான் தீர்க்கப்படுவேன்,நீ பாவமில்லாதவள் என்று நீர் கூறினால்,என் பாவங்களெல்லாம் மன்னிக்கப்படும். அது உம்மிடமிருக்கிறது.இவற்றையெல்லாம் அநேகமாக அவள் கூறியிருப்பாள். இயேசுவிடம் சகலமும் விடப்பட்டது.,

"நான் தவறு செய்தேன். தயவு செய்து என் விபசாரத்திற்காக என்னை மன்னியும்.” என்று இயேசுவின் முன் அழைத்து வரப்பட்ட பெண் கூறவில்லை. அவள் கூறினாள், “என்னுடைய பாவங்களிலிருந்து என்னை இரட்சியும். என்னுடைய பாவங்களிலிருந்து பாவ விடுதலை அளித்தால்,நான் இரட்சிக்கப்படுவேன். இல்லையெனில்,நான் நரகஞ்செல்லுவேன். உம்முடைய பாவ விடுதலை எனக்குத் தேவை. கர்த்தரின் அன்பு எனக்குத் தேவை. என் மீது இரங்க அவர் எனக்குத் தேவை.” அவள் தன் கண்களை மூடி பாவ அறிக்கைச் செய்தாள்.,

இயேசு அவளிடம் கேட்டார்,"உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே?ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா?”அவள் பதிலளித்தாள், “ இல்லை ஆண்டவரே” என்றாள்.,

இயேசு அவளிடம் கூறினார்,"நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை."இயேசு அவளைத் தண்டிக்கவில்லை,ஏனெனில் அவர் யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் அவளுடைய எல்லாப் பாவங்களையும் ஏற்கெனவே எடுத்து விட்டிருந்தார். ஆகவே அவள் ஏற்கெனவே பாவ விடுதலைப் பெற்றிருந்தாள். இப்போது, அந்த பாவங்களுக்காக,அப்பெண்ணல்ல, இயேசுவே நியாயந்தீர்க்கப் படவேண்டியவர்.,

"நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை"என்று அவர் கூறினார்,

  • இயேசுவால் அவள் தண்டிக்கப்பட்டாளா?
  • இல்லை.

இயேசுவின் இரட்சிப்பினால் அப்பெண் ஆசீர்வதிக்கப்பட்டாள். அவளின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவள் விடுவிக்கப்பட்டாள். இயேசு நம்மிடம், நம் பாவங்களிலிருந்து நாம் விடுதலைப் பெற்று,நாமெல்லாம் நீதிமான்கள் ஆனோம் என்று கூறுகிறார்.,

வேதாகமத்தில் அவர் அப்படித்தான் கூறுகிறார். யோர்தான் நதியில் தன் ஞானஸ்நானத்தின் மூலம் எடுத்துக்கொண்ட பாவங்களுக்கு கிரயஞ்செலுத்த அவர் சிலுவையில் மரித்தார். அவருடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவைத் தீர்ப்பினால் வரும் பாவ விடுதலையை விசுவாசிப்போரை விடுதலை செய்வதாக அவர் தெளிவாக கூறுகிறார். நமக்கு வேண்டியது இயேசுவின் எழுதப்பட்ட வார்த்தைகளும்,அவற்றைப் பற்றிக்கொள்வதுமாகும். அப்பொழுது அவரின் விடுதலையின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்.,

"கர்த்தரே,உமக்கு முன்பாக என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை. என்னிடம் எந்த தாலந்துகளும் இல்லை. உம்மிடம் காட்ட என் பாவங்களைத் தவிர வேறெதுவுமில்லை. ஆனால் இயேசுவே பாவ விடுதலை அளிக்கும் கர்த்தர் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் யோர்தான் நதியில் என் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டு அவற்றிற்காக சிலுவையில் கிரயஞ்செலுத்தினார். அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் என் எல்லாப் பாவங்களையும் அவர் எடுத்துப் போட்டார். கர்த்தரே,உம்மை நான் விசுவாசிக்கிறேன்.”

இப்படியாகவே இரட்சிக்கப்பட்டீர்கள். இயேசு நம்மை ‘ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை’ அவர் நமக்கு கர்த்தரின் பிள்ளையாகும் உரிமையை வழங்கினார்: நீர் மற்றும் ஆவியின் பாவ விடுதலையை நம்புவோரின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டு அவர்களை நீதிமான்கள் என்று அழைத்தார்.,

அன்பு நண்பர்களே! அப்பெண் விடுவிக்கப்பட்டாள். விபசாரத்தில் பிடிபட்ட அப்பெண் இயேசுவின் முன் பாவ விடுதலையினால் ஆசீர்வதிக்கப்பட்டாள். நாமும் அந்தப்படியே ஆசீர்வாதம் பெறமுடியும். யாரெல்லாம் தம் பாவத்தை உணர்ந்து கர்த்தரிடம் இரக்கத்தை வேண்டுகிறார்களோ,யாரெல்லாம் இயேசுவினுள் நீர் மற்றும் ஆவியின் விடுதலையை விசுவாசிக்கிறார்களோ,அவர்கள் கர்த்தரிடமிருந்து விடுதலையின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். பாவமுள்ளவர்கள் தம் பாவங்களிலிருந்து விடுதலைப் பெறவேண்டும். பாவஞ்செய்யும் ஒருவன் அதனை அறிந்து கொள்ளவில்லையென்றால், விடுதலையினால் ஆசீர்வதிக்கப் பட முடியாது.,

இயேசு இவ்வுலகின் பாவங்களை சுமந்து தீர்த்தார். (யோவான் 1:29). இவ்வுலகிலுள்ள எப்பாவிகளாலும் இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் விடுதலையடைய முடியும். இயேசு அப்பெண்ணிடம் கூறினார். "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை.” அவளை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை என்று இயேசு கூறியதற்கு காரணம்,அவளின் பாவங்கள் ஏற்கெனவே அவரிடம் இருப்பதே,நம்முடையப் பாவங்களை அவர் தம்மீது ஏற்றுக்கொண்டார்,நமக்கு பதிலாக அவர் தீர்க்கப்படவேண்டியவராயிருந்தார்.,


இயேசுவிற்கு முன் நாமும் கூட விடுதலைப் பெறவேண்டும்,

  • எது பெரியது,கர்த்தரின் அன்பா அல்லது அவரின் நியாயத்தீர்ப்பா?
  • கர்த்தரின் அன்பு.

,தம் கைகளில் கற்களை வைத்துக் கொண்டிருந்த பரிசேயரும்,இந்நாளின் மதத்தலைவர்களும்,சட்டத்தை எழுத்துவரை விவரிக்கிறார்கள். சட்டம் நம்மிடம் விபசாரம் செய்யாதே என்று கூறுவதால்,பாவஞ்செய்யும் ஒருவன் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்று விசுவாசிக்கிறார்கள். அவர்கள் பெண்களை இச்சையுடன் நோக்கினாலும் விபசாரத்தில் ஈடுபடவில்லை என்பது போல் காட்டிக்கொள்கிறார்கள். அவர்களை விடுவிக்கவோ இரட்சிக்கவோ முடியாது. பரிசேயரும் வேத பாரகருமே இவ்வுலகின் சிறந்தவர்களாவர். இயேசு அழைத்தது அவர்களையல்ல. "நான் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை"என்பதை இம்மக்கள் கேட்டதில்லை.,

விபசாரத்தில் பிடிபட்ட பெண் மட்டுமே இந்த சந்தோஷமான வார்த்தைகளைக் கேட்டாள். அவரின் முன் நேர்மையாக நின்றீர்களானால், அவளைப் போல் நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். "கர்த்தரே,என் வாழ்வு முழுவதும் விபசாரம் செய்தேன். அதனை அடிக்கடிச் செய்வதால் நான் அதனைச் செய்யாதது போலிருக்கிறது. ஒரு நாளில் பல முறை நான் பாவஞ்செய்கிறேன்."

நாம் சட்டத்தை ஏற்றுக்கொண்டு நாம் பாவிகளென்பதையும், அதற்காக மரிக்கவேண்டும் என்பதையும் அறிந்து,கர்த்தரை நேர்மையாக நோக்கி நாம் எப்படியானவர்கள் என்று ஒப்புக்கொண்டு, “கர்த்தரே,நான் இப்படிப்பட்டவன்,தயவுசெய்து என்னை இரட்சியும்” என்றால் கர்த்தர் நம்மை விடுதலையால் ஆசீர்வதிப்பார்.,

இயேசுவின் அன்பாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தரின் நியாயத் தீர்ப்பை வென்றது. "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை"அவர் நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, அவர் கூறுகிறார். "நீ விடுவிக்கப்பட்டாய்"நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அன்பின் தேவனாயிருக்கிறார். அவர் நம்மை இவ்வுலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்தார்.,

,நம் கர்த்தர், நீதியின் கர்த்தராகவும் அன்பின் கர்த்தராகவுமிருக்கிறார். அவரின் நீர் மற்றும் ஆவியாகிய அன்பு அவரின் நியாயத் தீர்ப்பை விடவும் பெரிதானது.,

அவரின் அன்பு அவரின் நீதியை விட பெரிதானது,

  • அவர் ஏன் நம்மை விடுதலைச் செய்தார்?
  • அவரின் அன்பு அவரின் நீதியை விட பெரிதானதாக இருப்பதால்.

கர்த்தர் தம் நீதியை நிறைவேற்ற நீயாயத்தீர்ப்பை அமல்படுத்தியிருந்தால்,அவர் பாவிகளை நியாயந்தீர்த்து நரகத்திற்கு அனுப்பியிருப்பார். ஆனால் நியாயத்தீர்ப்பிலிருந்து,நம்மை இரட்சிக்கும் இயேசுவின் அன்பு பெரிதானதாக இருப்பதால்,கர்த்தர் தன் ஒரே குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். இயேசு தன் மீது நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு,நமக்காக நியாயத்தீர்ப்பினைப் பெற்றார். இப்பொழுது,இயேசுவைத் தம் இரட்சகராக விசுவாசிப்பவர்கள் அவரின் பிள்ளையாகவும் நீதிமானாகவும் ஆவர். அவரின் அன்பு அவரின் நீதியை விட பெரிதானதாக இருப்பதால்,அவர் நம்மை விடுதலைச் செய்தார்.,

அவரின் நீதியின் மூலம் மட்டும் நம்மைத் தீர்க்காததற்கு கர்த்தருக்கு நாம் நன்றி கூறவேண்டும். இயேசு வேத பாரகரிடமும், பரிசேயரிடமும், தம் சீடர்களிடமும் கூறியது போல் கர்த்தருக்கு வேண்டியதெல்லாம் கர்த்தரைக் குறித்தும் அவரின் கிருபையைக் குறித்தும் நாம் அறிந்திருப்பதே - நம் காணிக்கையயைல்ல. சிலர் ஒரு பசுவையோ,அல்லது ஒரு ஆட்டையை தினமும் பலியிட்டு அதனைக் கர்த்தர் முன் படைத்து, “கர்த்தரே என் பாவங்களை தினமும் மன்னியும்” என்று ஜெபிக்கிறார்கள். கர்த்தர் நம்மிடமிருந்து பலிகளை எதிர்பார்க்கவில்லை,மாறாக நீர் மற்றும் ஆவியின் விடுதலையின் மீதுள்ள நம் விசுவாசத்தை எதிர்ப்பார்க்கிறார். நாம் விடுவிக்கப்பட்டு விடுதலையாவதை அவர் விரும்புகிறார். நமக்குத் தன் அன்பைக் கொடுத்து நம் விசுவாசத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார். உங்களால் இதனைப் பார்க்க முடிகிறதா?இயேசு நமக்கு இரட்சிப்பை அளித்தார்.,

இயேசு பாவங்களை வெறுக்கிறார்,ஆனால் கர்த்தரின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் மீது அளவு கடந்த அன்புடையவராயிருக்கிறார். காலம் தொடங்குவதற்கு முன்பே நம்மை கர்த்தரின் பிள்ளையாக்க அவர் தீர்மானித்தார். அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் நம் பாவங்களையெல்லாம் துடைத்தார். நம்மை விடுவிக்கும்பொருட்டும், இயேசுவைத் தரித்துக் கொள்ளவும்,நம்மை அவரின் பிள்ளைகளாக்கும் படியாகவும்,கர்த்தர் படைத்தார்.,

அவரின் நீதியின் சட்டத்தினால் மட்டும் அவர் நம்மை நியாயந்தீர்த்தால்,பாவிகளாகிய நாம், சாகவேண்டியர்கள். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அவர் நம்மை விடுவித்து சிலுவையில் அவர் மகனைத் தீர்த்தார். நீ விசுவாசிக்கிறாயா? பழைய ஏற்பாட்டில் இதனை நாம் உறுதிப்படுத்துவோம். ,

ஆரோன் போக்காட்டின் மீது தன் கைகளை வைத்தான்,

  • இஸ்ரவேலின் பாவங்களை அவர்களின் பிரதிநிதியாக இருந்து போக்காட்டின் மீது சுமத்தியது யார்?
  • தலைமை ஆசாரியன்.

உலகின் பாவங்கள் யாவும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலியிடுவதன் மூலமும், புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானம் மூலமும் துடைக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டில்,களங்கமில்லாத ஆட்டின் தலைமீது தலைமை ஆசாரியன் தன் கைகளை வைப்பதன் மூலம்,இஸ்ரவேலரின் ஓராண்டு பாவங்களுக்கும் கிரயஞ் செலுத்தினான்.,

"அதின் தலையின் மேல்,ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து,அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு,அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின் மேல் சுமத்தி,அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்திரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்” (லேவியராகமம் 16:21).

பழைய ஏற்பாட்டு நாட்களில் இப்படியாகவே அவர்கள் பாவவிடுதலைப் பெற்றனர். தினப்பாவங்களிலிருந்து விடுதலையாகும்படி,ஒருவன் களங்கமில்லாத ஆட்டுக் குட்டியையோ,அல்லது ஆட்டையோ ஆசரிப்புக் கூடாரத்திற்கு எடுத்து வந்து அதனை பலிபீடத்திற்கு முன் பலியிட்டான். பலிமிருகத்தின் மீது அவன் தன் கைகளை வைக்க, பலியின் மீது அவன் பாவங்கள் மாற்றப்பட்டன. பிறகு அப்பலியானது,கொல்லப்பட்டு அதன் இரத்தம் பலிபீடத்தின் மேலுள்ள கொம்புகளின் மீது ஆசாரியனால் ஊற்றப்பட்டது.,

பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் கொம்புகள் இருந்தன. இக்கொம்புகள் வெளி 20:12 இல் கூறப்பட்டுள்ள செய்கையின் புத்தகத்திற்கு ஒப்பாயுள்ளன. மீதியுள்ள இரத்தம் தரையிலும் கூடத் தெளிக்கப்பட்டது. மனிதன் புழுதியிலிருந்து உருவாக்கப் பட்டவனாகையால்,தரையானது மனிதனின் இருதயத்தைக் குறிக்கிறது. இப்படியாக மக்கள் தம் தினப் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். ,

ஆனால் அவர்களால் தினமும் பாவபலியைச் செலுத்த முடியவில்லை. ஆகவே அவர்கள் வருடம் முழுவதும் செய்த பாவங்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை பாவ விடுதலைப் பெறுவதை அனுமதித்தார். இந்த பாவ விடுதலை தினமானது,எழாம் மாதம் பத்தாம் திகதியாகும். அந்நாளில்,இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதிகளும்,தலைமை ஆசாரியனும் இரண்டு ஆடுகளை எடுத்து வந்து,அவற்றின் தலை மீது மக்களின் எல்லாப் பாவங்களையும் அதன் மீது செலுத்தும்படி கை வைத்து இஸ்ரவேல் மக்கள் விடுதலைப் பெறும்படி கர்த்தருக்கு முன்பாக அதனைப் பலியிட்டார்கள்.,

"அதின் தலையின் மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து,அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு,அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின் மேல் சுமத்தி."

இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதியாக தலைமை ஆசாரியனான ஆரோனை கர்த்தர் நியமித்தார். ஒவ்வொருவரும் தம் கைகளை ஆட்டின் தலைமீது தனித்தனியாக வைப்பதற்கு பதிலாக,அனைத்து மக்களின் பிரதிநிதியாகிய,தலைமை ஆசாரியன்,தன் கைகளை உயிருள்ள ஆட்டின் மீது அவ்வருடப் பாவங்களுக்கு கிரயமாக வைத்தான்.,

அவன் கர்த்தரின் முன்பு இஸ்ரவேலரின் பாவங்களைக் கூறினான். "ஓ கர்த்தரே,உம்முடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேலர்கள் பாவஞ்செய்தனர். நாம் சிலைகளை ஆராதித்தோம்,உம்முடைய கற்பனைகளை உடைத்தோம்,உம் பெயரை வீணில் வழங்கினோம், வேறு சிலைகளைச் செய்வித்து அவற்றை உமக்கும் மேலாக நேசித்தோம். நாம் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கவில்லை, பெற்றோருக்கு மரியாதைச் செலுத்தவில்லை கொலை செய்திருக்கிறோம்,விபசாரம் செய்துள்ளோம், திருடியிருக்கிறோம்... நாம் பொறாமையிலும் சண்டைகளிலும் ஈடுபட்டிருக்கிறோம்."

அவன் எல்லாப் பாவங்களையும் பட்டியலிட்டான். "கர்த்தரே,இஸ்ரவேல் மக்களாலோ, என்னாலோ உம் சட்டத்தைக் கடைபிடிக்க முடியவில்லை. அந்த பாவங்களிலிருந்து விடுதலை பெறும் பொருட்டு,இந்த ஆட்டின் மீது என் கைகளை வைத்து அனைத்து பாவங்களையும் அதன் மீது சுமத்துகிறேன்.” எல்லா மனிதர்களுக்காகவும் தலைமை ஆசாரியன் தன் கைகளை பலியின் மீது வைத்து,அதின் தலைமீது எல்லாப் பாவங்களையும் செலுத்தினான். அங்கீகரிக்கப்படுதல்,அல்லது கைகளை வைத்தல் என்பது ‘சுமத்தல்’ என்று பொருள்படும். ( லேவியராகமம் 1:1-4, 16:20-21 )

  • பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவவிடுதலை நிறைவேற்றப்பட்டது எப்படி?
  • பலி மிருகத்தின் தலைமீது கைகளை வைப்பதன் மூலம்.

கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு பாவ பலியிடும் சடங்கைக் கொடுத்தமையால் அவர்களால் தம் பாவங்களை அதன் மீது சுமத்தி விடுதலைப் பெறமுடிந்தது. அவர் பாவப்பலிமிருகமானது களங்கமில்லாததாகவும்,ஒருவனுக்கு பதிலாக அப்பாவ பலியானது கொல்லப்படவேண்டுமென்றார்.,

,பாவ விடுதலைத் தினத்தில்,பாவ பலியானது கொல்லப்பட்டு அதன் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு கிருபாசனத்தின் மீது ஏழு முறைத் தெளிக்கப்பட்டது. இப்படியாக ஏழாம் மாதம் பத்தாம் நாளில் இஸ்ரவேல் மக்கள் அவ்வருடப்பாவத்திற்கு கிரயஞ்செலுத்தினர்.,

தலைமை ஆசாரியன் தனியாக பலி காணிக்கையைச் செலுத்த பரிசுத்த ஸ்தலத்தினுள் சென்றான்,ஆனால் வெளியே குழுமியிருந்த மக்கள்,கிருபாசனத்தின் மீது இரத்தம் தெளிக்கப்படுகையில் தலமை ஆசாரியனின் ஏபோது என்ற உடையிலிருந்த பொன்னாலான மணிகள் ஒலிப்பதைக் கேட்டனர். பிறகு தம் எல்லாப் பாவங்களுக்கும் கிரயஞ்செலுத்தப்பட்டது என்று மக்கள் மகிழ்ந்தனர். தங்க மணிகளின் ஒலியானது சந்தோஷமான நற்செய்தியின் ஒலியாகும்.,

இயேசு குறிப்பிட்ட மக்களை மட்டுமே நேசித்து அவர்களை விடுவிக்கிறார் என்பது உண்மையல்ல. இயேசு உலகின் எல்லாப் பாவங்களையும் தன் ஞானஸ்நானத்தின் மூலம் ஒரேதரமாக ஏற்றுக்கொண்டார். அவர் நம்மை ஒரே தரமாக விடுவிக்க விரும்புகிறார். நம்முடையப் பாவங்களிலிருந்து தினமும் விடுதலைப் பெற முடியாது; அவையெல்லாம் ஒரேதரம் விடுதலையாயிற்று.,

பழைய ஏற்பாட்டில், பாவ மன்னிப்பானது கைவைப்பதன் மூலமும் பலி காணிக்கை மூலமாகவும் வழங்கப்பட்டது. ஆரோன் மக்களுக்கு முன் தன் கைகளை உயிருள்ள ஆட்டின் தலை மீது வைத்து அவ்வருடம் முழுவதும் மக்கள் செய்த பாவங்களைப் பட்டியலிட்டான். எல்லோர் முன்பும் ஆட்டின் மீது பாவங்களைச் சுமத்தினான். அப்படியானால் மக்களின் பாவங்கள் எங்கே?அவையெல்லாம் ஆட்டின் மீது சுமத்தப்பட்டது.,

பிறகு ‘பொருத்தமான மனிதனால்'ஆடானது வழி நடத்தப்பட்டது. இஸ்ரவேலின் அனைத்துப் பாவங்களுடனும் அந்த ஆடானது,நீரோ,புல்லோ இல்லாத வனாந்திரத்திற்குள் வழி நடத்தப்பட்டது. அந்த ஆடு,வனாந்தரத்தில், எரியும் சூரியனுக்கு கீழ் அலைந்து இறுதியில் மரித்து போகும். அந்த ஆடு இஸ்ரவேலின் பாவங்களுக்காக மரித்தது.,

இதுவே விடுதலையின் அன்பாகிய,கர்த்தரின் அன்பாகும். அந்நாட்களில் இப்படியாகத்தான் வருடப் பாவங்களிலிருந்து அவர்கள் விடுதலைப் பெற்றார்கள். ஆனால் நாம் புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இயேசு நம்முலகிற்கு இறங்கி வந்து 2000 ஆண்டுகளாகிவிட்டது. பழைய ஏற்பாட்டில் அவர் உரைத்த தீர்க்க தரிசனங்களை நிறைவேற்ற அவர் வந்தார். அவர் வந்து நம் பாவங்களுக்கு விடுதலைத் தந்தார்.,

நம்மை விடுவிக்கவே,

  • இயேசு என்பதன் பொருள் என்ன?
  • அவரின் மக்களைப் பாவங்களிலிருந்து இரட்சிப்பவர்.

மத்தேயு 1 ஐ வாசிப்போமாக. "அவன் இப்படிச் சிந்தித்து கொண்டிருக்கையில்,கர்த்தருடைய தூதன் சொப்பணத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே,உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்,அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்."

இவ்வுலகின் பாவங்களை கழுவிப்போடும் விதமாக தம் குமாரனை இவ்வுலகிற்கு அனுப்ப பரலோகத்திலிருக்கும் கர்த்தர் கன்னிமரியாளின் சரீரத்தை உபயோகித்தார். அவர் மரியாளிடம் ஒரு தூதனை அனுப்பி, “இதோ,நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.” அதன் பொருள் மரியாளின் மகன் இரட்சகராவார் என்பதாகும். இயேசுகிறிஸ்து என்பதன் பொருள் தம் மக்களை இரட்சிப்பவர் என்பதாகும் வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,அவரே இரட்சகர்.,

உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு தம்மீது ஏற்றுக்கொண்ட முறை அவர் யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாகும். அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதன் மூலம் உலகின் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது. மத்தேயு 3:13-17 ஐ நாம் வாசிப்போமாக.,

"அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைச் செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க,நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு,இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று,ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,இதோ,வானம் அவருக்கு திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி,தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும்,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன்,இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது."

நம்முடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக இயேசு யோவான் ஸ்நானனிடம் சென்றார். "யோவான்,என்னை இப்போது ஞானஸ்நானம் செய். இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. நான் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு பாவிகளையெல்லாம் அவர்களின் பாவங்களிலிருந்து விடுவிக்க வேண்டியிருப்பதால்,ஞானஸ்நானத்தின் மூலம் அவர்கள் பாவங்களை ஏற்க வேண்டியவனாக இருக்கிறேன். என்னை இப்போது ஞானஸ்நானம் செய்! அனுமதி !,

இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது ஏற்றதாயிருக்கிறது. இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். சரியாக அந்நொடிப் பொழுதில், நம்மை எல்லாப் பாவங்களையும் விடுவிக்கும் கர்த்தரின் எல்லா நீதியும் நிறைவேற்றப்பட்டது.,

இப்படியாகவே அவர் நம் பாவங்களையெல்லாம் எடுத்துப் போட்டார். உன்னுடையப் பாவங்களும் கூட இயேசுவின் மீது சுமத்தப்பட்டுவிட்டது. இதனைப் புரிந்து கொள்கிறாயா?

இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் ஆவியின் மூலம் வரும் பாவ விடுதலையை விசுவாசித்து இரட்சிக்கப்படு.,

  • எல்லா நீதிகளும் எப்படி நிறைவேற்றப்பட்டது?
  • இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம்.

கைவைப்பதன் மூலமும் பாவ காணிக்கையின் பலியின் மூலமும் உலகின் அனைத்துப் பாவங்களும் கழுவப்படும் என்று கர்த்தர் இஸ்ரவேலருக்கு முதலில் உறுதியளித்தார். ஆயினும், ஒவ்வொருவரும் ஆட்டின் தலைமீது கைவைப்பது சாத்தியமில்லையாகையால்,கர்த்தர் ஆரோனைத் தலைமை ஆசாரியனாக்குவதன் மூலம் அவனால் எல்லா மக்களுக்குமாக பலி செலுத்த முடிந்தது. ஆகவே அவனால் அவர்களின் வருடப் பாவங்களை பாவ பலியின் தலைமீது ஒரேயடியாக சுமத்த முடிந்தது. இது அவரின் ஞானமும் விடுவிக்கும் வல்லமையுமாயிருந்தது. கர்த்தர் ஞானவானும் ஆச்சரியமும் மிக்கவர்.,

,நம் உலகை இரட்சிக்கும்படியாக அவர் தம் குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். ஆகவே பாவ பலி தயாராகிவிட்டது, உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் தலை மீது சுமத்த கைவைக்கும்படியாக, ‘மனிதர்களின் பிரதிநிதி'ஒருவன் இப்போது தேவைப்பட்டான். அப்பிரதிநிதி யோவான் ஸ்நானன் ஆவான். மத்தேயு 11:11 இல் மனிதர்களின் பிரதிநிதியை இயேசுவிற்கு முன்னதாக உலகிற்கு அனுப்பினார்.,

மனிதர்களின் கடைசித் தலைமை ஆசாரியன்,யோவான் ஸ்நானனாவான். மத்தேயு 11:1 இல் "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவன் எழும்பினதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. அவனே மனிதர்களின் ஒரே பிரதிநிதி. படைக்கப் பட்டவைகளுக்கெல்லாம் யோவானை அவர் அனுப்பியதால்,அவன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்விப்பதன் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் அவர் மீது சுமத்த முடிந்தது.,

பூமியின் ஆறு பில்லியன் மக்களும் இப்போது இயேசுவின் முன் சென்று அவர்களின் பாவங்களைச் சுமத்த இயேசுவின் தலைமீது கைவத்தார்களேயானால் அவர் தலை என்னவாகும்?உலகின் ஆறு பில்லியன் மக்களும் இயேசுவின் தலைமீது கை வைக்க வேண்டுமென்பது அத்தனை அழகிய காட்சியாக இருக்காது. ஆர்வமுள்ள சிலர் அவர் தலையை அழுத்துவதன் மூலம் அவர் தலைமுடி உதிர்ந்து போகும். கர்த்தர் தம்முடைய ஞானத்தினாலே, யோவானை நம் பிரதிநிதியாக நியமித்து உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது ஒரேதரம் சுமத்தினார்.,

மத்தேயு 3:13-17 இல் "அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்."என்று எழுதப்பட்டுள்ளது. இயேசு 30 வயதுடையவராகும்போது இது நடந்தது. இயேசு தம் பிறப்பிற்கு 8 நாட்களுக்கு பிறகு விருத்தசேதனம் பண்ணப்பட்டார். அதன் பிறகு அவர் 30 வயதாகும் வரை நடந்த சில சம்பவங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன.,

இயேசு தம் 30 ஆம் வயது வரைக் காத்திருக்க வேண்டியதன் காரணம் பழைய ஏற்பாடு கூறும் பரலோக தலைமை ஆசாரியராவதை நிறைவேற்றவே. உபாகமத்தில், தலைமை ஆசாரியத்துவத்தை கடைபிடிக்கும் தலைமை ஆசாரியன் குறைந்தது 30 வயதுடையவனாக இருக்க வேண்டுமென கர்த்தர் மோசேயிடம் கூறினார். இயேசுவே பரலோகத்தின் தலைமை ஆசாரியர். நீ இதனை விசுவாசிக்கிறாயா?

புதிய ஏற்பாட்டில் மத்தேயு 3:13-14 இல் "அப்போழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க,நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்மனிதர்களின் பிரதிநிதி யார்? யோவான் ஸ்நானன். அப்படியானால் பரலோகத்தின் பிரதிநிதி யார்? இப்பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர்களில் உயர்ந்தவர் யார்? பரலோகத்தின் பிரநிதிதானே.,

"விரியன் பாம்புக் குட்டிகளே! மனந்திரும்புங்கள்என்று மிகத்துணிச்சலாக அந்நாட்களின் மதத் தலைவர்களை நோக்கி கூக்குரலிட்ட யோவான் ஸ்நானன் இயேசுவின் முன்பு தாழ்மையானவனாகினான். "நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க,நீர் என்னிடத்தில் வரலாமா?”என்று கூறினான்.,

இந்நொடியில் இயேசு கூறினார்,"இப்பொழுது இடங்கொடு,இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.",இயேசு இவ்வுலகிற்கு கர்த்தரின் நீதியை நிறைவேற்ற வந்தார்,அது அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றபோது நிறைவேறிற்று.,

"அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று,ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,இதோ,வானம் அவருக்குத் திறக்கப்பட்டது;தேவ ஆவி புறாவைப்போல் இறங்கி,தன்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும்,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன்,இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது."

இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நடந்தது இதுவே. அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று உலகின் எல்லாப் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டவுடன் பரலோகத்தின் வாசல் திறக்கப்பட்டது.,

"யோவான் ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள்” (மத்தேயு 11:12).

யோவான் ஸ்நானன் காலம்வரை எல்லா தீர்க்கதரிசிகளும் கர்த்தரின் சட்டமும் தீர்க்கதரிசனம் உரைத்தன. "யோவான் ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது;பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள்",அவரின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கும் அனைவராலும் பரலோக ராஜ்யத்தினுள் செல்லமுடியும்.,

"நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை"

  • இயேசு ஏன் சிலுவையில் தீர்க்கப்பட்டார்?
  • அவர் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக்கொண்டதால்.

இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு உலகின் எல்லாப் பாவங்களையும் தம்மீது ஏற்றார். அதன் பிறகே அவர் அப்பெண்ணிடம் "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை"என்றார். அவர் அப்பெண்ணை ஆக்கினைக்குள்ளாக தீர்க்காததற்கான காரணம் யோர்தானில் அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டதே. ஆகவே,அப்பெண்ணல்ல, இயேசுவே அப்பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்படவேண்டியவர்.,

,இயேசு இவ்வுலகின் பாவங்களையெல்லம் சுமந்து தீர்த்தார். ‘பாவத்தின் சம்பளம் மரணம்'என்பதால் அவர் சிலுவையில் படப்போகும் பாடுகளை எண்ணி பயந்ததை நாம் பார்க்கலாம். இத்தீர்ப்பினைத் தன்னிடமிருந்து எடுத்துப்போடும்படி ஒலிவ மலையில் மூன்று முறை கர்த்தரிடம் ஜெபித்தார். இயேசு மனித சரீரத்தினாலே ஆனவரால் அவர் வலியை குறித்து பயந்தார் என்பது புரிந்துகொள்ளக்கூடியது. நியாயத் தீர்ப்பை நிறைவேற்ற இயேசு இரத்தஞ் சிந்த வேண்டியிருந்தது.,

பழைய ஏற்பாட்டின் பாவ பலியானது எப்படி தன் இரத்தத்தை பாவக்கிரயமாக சிந்த வேண்டியிருந்ததோ,அது போலவே அவர் சிலுவையில் பலியிடப்பட வேண்டியவராயிருந்தார். உலகின் பாவங்களையெல்லாம் அவர் ஏற்கெனவே தன் மீது ஏற்றுக்கொண்டார். இப்பொழுது அதற்கு அவர் தம் உயிரை நம்மை விடுவிக்கும்படி கொடுக்க வேண்டியிருந்தது. கர்த்தருக்கு முன் தான் தீர்க்கப்பட வேண்டியதைக் குறித்து அவருக்குத் தெரியும்.,

இயேசுவின் இருதயத்தில் எந்த பாவங்களுமிருக்கவில்லை. ஆனால் அவரின் ஞானஸ்நானம் மூலம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதால்,இப்பொழுது கர்த்தர் தம் சொந்த குமாரனையே தீர்க்கவேண்டியிருந்தது. இப்படியாக முதலில் கர்த்தரின் நீதி நிறைவேற்றப்பட்டது,இரண்டாவதாக நம் இரட்சிப்பிற்காக அவரின் அன்பை நம்மீது பொழிந்தார். ஆகவே,சிலுவையில் இயேசு தீர்க்கப்படவேண்டியிருந்தது. ,

"நானும் உன்னை ஆக்கினைக்குட்படுத்துவதில்லை,நானும் உன்னை நியாயந் தீர்ப்பதில்லை."வேண்டுமென்றோ இயல்பாகவோ,தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்த எல்லாப் பாவங்களும் கர்த்தரால் தீர்க்கப்படவேண்டியவை.,

கர்த்தர் நம்மைத் தீர்க்கவில்லை,ஆனால் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொண்ட இயேசுவை நியாயந்தீர்த்தார். அவர் பாவிகள் மீது அன்பும் நேசமும் உள்ளவராதலால் அவர்களை நியாயந்தீர்க்க விரும்பவில்லை. ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் நமக்கான அவரின் விடுதலையின் அன்பாகும். "தேவன்,தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு,அவரைத் தந்தருளி,இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).

இப்படியாகவே அவரின் அன்பை அறிகிறோம். விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணை இயேசு தண்டிக்கவில்லை.,

அவள் விபசாரத்தில் பிடிபட்டதால் தானொரு பாவி என்று அவளுக்குத் தெரியும். அவள் தன்னிருதயத்தில் மட்டும் பாவத்துடனிருக்கவில்லை,அதனை அவள் சரீரத்திலும் சுமந்தாள். தன்னுடைய பாவத்தை மறுக்க அவளிடம் எந்த வழியும் இல்லை. ஆயினும், இயேசு அவளின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார் என்று அவள் விசுவாசித்ததால்,அவள் இரட்சிக்கப்பட்டாள். இயேசு அளிக்கும் விடுதலையை நாம் விசுவாசித்தால்,நாம் இரட்சிக்கப்படுவோம். அதனை விசுவாசி! அது நம் நன்மைக்கானதாகும்.,

  • அதிகமாக ஆசீர்வதிக்கப் பட்டது யார்?
    • எந்தப் பாவமுமில்லாத மனிதன்.

எல்லா மனிதர்களும் பாவஞ்செய்கிறார்கள். எல்லா மக்களும் விபசாரம் செய்கிறார்கள். ஆனால் எல்லா மக்களும் தம் பாவங்களுக்காக தீர்க்கப்படுவதில்லை. நாமெல்லாம் பாவஞ் செய்தவர்களே, ஆனால் இயேசுகிறிஸ்துவின் பாவ விடுதலையை விசுவாசிப்பவர்கள் தம் இருதயத்தில் பாவமில்லாதவர்கள். இயேசுவின் இரட்சிப்பை விசுவாசிப்பவர்களே சந்தோஷமான மக்கள். தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெற்றவர்களும், இயேசுவினுள் நீதியாயிருப்பவர்களும் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.,

ரோமர் 4:7 இல் சந்தோஷத்தைக் குறித்து கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்,"எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ,எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ,அவர்கள் பாகியவான்கள்.கர்த்தர் முன்பு நாம் மரியாதைப் பெற தகுதியில்லாதவர்களும்,குறைவானவர்களாகவும் இருக்கிறோம். அவரின் சட்டத்தைக் குறித்து அறிந்திருந்தும் நாம் தொடர்ந்து பாவஞ் செய்து கொண்டேயிருக்கிறோம். நாம் அத்தனை பலவீனமுள்ளவர்கள்.,

ஆனால் கர்த்தர் நம்மை ஞானஸ்நானத்தினாலும் அவரின் ஒரேகுமாரனுடைய இரத்தத்தினாலும் விடுவித்ததுடன், நமக்கு,உனக்கும் எனக்கும்,நாம் இப்போது பாவிகளில்லை,அவர் முன் நாம் நீதிமான்கள் என்றும் கூறுகிறார். நாம் அவரின் பிள்ளைகளென்று அவர் நம்மிடம் கூறுகிறார்.,

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே நற்செய்தியாகிய பாவ விடுதலையாகும். இதனை விசுவாசிக்கிறாயா? அதனை விசுவாசிப்போரை,நீதிமான்களென்றும், விடுவிக்கப் பட்டவர்களென்றும்,அவரின் பிள்ளைகளென்றும் அவர் அழைக்கிறார். உலகின் சந்தோஷமான மனிதன் யார்?விசுவாசிப்பதால் விடுதலையானவனே அவன். நீ விடுவிக்கப் பட்டாயா?

இயேசு உன்னுடையப் பாவங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லையா?அவருடைய ஞானஸ்நானத்துடன் உன் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். அதனை விசுவாசி. விசுவாசித்து உன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப் படுவாயாக. யோவான் 1:29 ஐ வாசிப்போம்.,

துடைப்பத்தால் பெருக்கியதைப் போன்றே.,

  • எவ்வளவு பாவங்களை இயேசு சுமந்தார்?
  • உலகின் எல்லாப் பாவங்களையும்.

"மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ,உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” (யோவான் 1:29)

"இதோ,உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி."

யோர்தானில் யோவான் ஸ்நானன் உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தினான். மறுநாள், உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவர் இயேசுவே என்று சாட்சி பகன்றான். இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் அவர் தன் தோளின் மீது சுமந்தார்.,

உலகின் எல்லாப் பாவங்களையும் என்பதன் பொருள் உலகம் உருவான நாள் முதல் அது முடியும் வரை மனிதர்கள் செய்த அனைத்துப் பாவங்களும் என்பதாகும். 2000 வருடங்களுக்கு முன்,உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொண்டு இயேசு நம்மை விடுவித்தார். தேவாட்டுக் குட்டியாகிய அவர்,நம் எல்லா பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு நமக்காக நியாயந்தீர்க்கப்பட்டார்.,

மனிதர்களாகிய நாம் செய்யும் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. அவர் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியானார்.,

இயேசு இவ்வுலகிற்கு தாழ்மையான மனிதனாகவும்,உலகின் பாவிகளை இரட்சிக்கவும் வந்தார். நாம் பலவீணர்களாகவும்,கபடர்களாகவும், அறிவில்லாதவர்களாகவும்,முக்கியம் இல்லாதவர்களாகவும்,குறைவு உள்ளவர்களாகவும் இருப்பதால் பாவஞ்செய்கிறோம். இப்பாவங்களெல்லாம் பெருக்கப்பட்டு யோர்தானில் அவர் பெற்ற ஞானஸ்நானம் மூலம் இயேசுவின் தலையில் அது சுமத்தப்பட்டது. சிலுவையில் அவர் சரீர சம்பந்தமாக மரித்ததினால் அவற்றையெல்லாம் முடிவிற்கு கொண்டு வந்தார். அவர் அடக்கம் பண்ணப்பட்டாலும் 3 நாட்களுக்குப் பிறகு உயிரோடெழுந்தார்.,

பாவிகளின் இரட்சகராகவும்,வெற்றி வேந்தனாகவும்,நியாயாதிபதியாகவும், கர்த்தரின் வலது பாரிசத்தில் அவர் இப்போது அமர்ந்திருக்கிறார். அவர் மீண்டும் மீண்டும் நம்மை விடுவிக்க வேண்டியதில்லை, நாம் இரட்சிப்படைய செய்யவேண்டியதெல்லாம் அதனை விசுவாசிப்பதே. அதனை விசுவாசிப்பவர்களுக்கு நித்திய வாழ்வு காத்திருக்கிறது, விசுவாசிக்காதவர்களுக்கு அழிவு காத்திருக்கிறது. தேர்ந்தெடுக்க வேறெதுவுமில்லை.,

இயேசு உங்களனைவரையும் விடுவித்தார். இவ்வுலகில் நீங்களே சந்தோஷமான மக்கள். உங்களுடைய பலவீனத்தினால் நீங்கள் வருங்காலத்தில் செய்யப்போகும் பாவங்கள் அனைத்தையும் கூட அவர் எடுத்துப்போட்டார். ,

உன்னிருதயத்தில் பாவங்களெதுவும் மிச்சமிருக்கிறதா? -இல்லை - ,

இயேசு அவற்றை எடுத்துப்போட்டாரா? -ஆம்,அவர் எடுத்துப்போட்டார் -,

எல்லா மக்களும் ஒரே மாதிரியானவர்களே,ஒருவனும் தன் அயலானைவிட பரிசுத்தனில்லை. ஆனால் அதிகமான மக்கள் கபடர்கள்,அவர்கள் தாம் பாவிகளில்லையென்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களும் பாவிகளே. இவ்வுலகமானது பாவங்களை உருவாக்கும் பசுமை இல்லமாகும்.,

பெண்கள் தம் வீட்டைவிட்டு வெளியேறும் போது,சிகப்பு லிப்ஸ்டிக்கை பூசி, முகத்திற்கு பவுடர் போட்டு,தம் முடியை சுருள்படுத்தி,அழகிய ஆடையணிந்து, ஹீல் வைத்த காலணி அணிந்து.... ஆண்களும் அப்படியே பார்பரிடம் சென்று முடிவெட்டி, தம்மைச் சுத்தப்படுத்தி,சுத்தமான ஆடையணிந்து, நவீனமான டை கட்டி, தம் காலணிகளை பிரகாசிக்கச் செய்கிறார்கள்.,

அவர்கள் வெளியரங்கமாக அரசகுமாரனையும்,அரச குமாரியைப் போல் தெரிந்தாலும்,உள்ளே குப்பையின் குவியலாகவே காணப்படுகிறார்கள்.,

பணம் மனிதனை சந்தோஷமுள்ளவனாக்குகிறதா?ஆரோக்கியம் மனிதனை சந்தோஷமுள்ளவனாக்குகிறதா?இல்லை. விடுதலை மட்டுமே மனிதனை உண்மையிலேயே சந்தோஷமுள்ளவனாக்குகிறது. ஒரு மனிதன் வெளியில் எத்தனை சந்தோஷமுள்ளவனாகத் தெரிந்தாலும்,அவன் இருதயத்தில் பாவமிருந்தால் அவன் துன்பத்தில் ஆழ்ந்தவனே. நியாயத் தீர்ப்பைக் குறித்த பயத்திலேயே அவன் வாழ்கிறான்.,

விடுவிக்கப்பட்ட ஒருவன் கந்தையிலிருந்தாலும் சிங்கத்தைப் போல் துணிச்சலுள்ளவனாக இருக்கிறான். அவன் இருதயத்தில் பாவங்களில்லை. "நன்றி கர்த்தாவே, என்னைப் போன்ற பாவிகளை நீர் இரட்சித்தீர்,என்னுடைய எல்லாப் பாவங்களையும் துடைத்தீர். என்னிடம் பெரிதாக எதுவுமில்லை என்று அறிந்திருக்கிறேன். ஆயினும் நீர் என்னை இரட்சித்தமைக்கு உம்மைத் துதிக்கிறேன். நான் நிரந்தரமாக என் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!"

விடுவிக்கப்பட்ட ஒருவன் உண்மையிலேயே சந்தோஷமுடையவன். அவரின் விடுதலையின் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒருவன் உண்மையாகவே சந்தோஷமுடையவன். ,

 "உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றபடி இயேசு நம் பாவங்களையெல்லாம் எடுத்துப்போட்ட படியால் நாம் பாவமற்றவர்கள். அவர் சிலுவையில் நமது இரட்சிப்பை "நிறைவேற்றினார்.” “உலகத்தின் பாவம்” என்பதில் நம்முடைய,உங்களதும் எனதும், பாவங்களும் உள்ளதால் நாம் இரட்சிக்கப்பட்டோம்.,

கர்த்தரின் சித்தப்படியே,

  • இயேசுகிறிஸ்துவினுள் நம் இருதயத்தில் பாவமிருக்கிறதா?
    • இல்லை. நம்மிடமில்லை.

அன்பு நண்பர்களே,விபசாரத்தில் பிடிபட்ட பெண் இயேசுவின் வார்த்தைகளை விசுவாசித்தமையால்,அவள் இரட்சிக்கப்பட்டாள். அவள் பாவ விடுதலையினால் ஆசீர்வதிக்கப் பட்டதால் வேதாகமத்தில் அவள் கதை பதியப்பட்டுள்ளது. ஆனால் கபட்டு வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவைவிட்டு ஓடினார்கள்.,

,இயேசுவை நீ விசுவாசித்தால் அங்கே பரலோகம்,ஆனால் இயேசு நீ விட்டுவிட்டால் நரகம். அவருடைய செய்கைகளை நீ விசுவாசித்தால் அங்கே பரலோகம்,அவருடைய செய்கைகளை நீ விசுவாசிக்காவிட்டால் நரகம். பாவ விடுதலை ஒருவனின் முயற்சிகளைப் பொருத்ததல்ல,அது இயேசுவின் இரட்சிப்பினால் ஆனது.,

எபிரேயர் 10ஐ வாசிப்போம். "இப்படியிருக்க நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல்,அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால்,வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. பூரணப்படுத்துமானால்,ஆராதனை செய்கிறவர்கள் ஒரு தரம் சுத்தமாக்கப்பட்டபின்பு,இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால்,அந்த பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? அப்படி நிறுத்தப்படாதபடியால் பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவு கூறுதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும்,காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்தி செய்யமாட்டாதே. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை,ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்;சர்வாங்க தகன பலிகளும்,பாவ நிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்போழுது நான்: தேவனே,உம்முடைய சித்தத்தின்படி செய்ய,இதோ வருகிறேன்,புஸ்தகச் சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டு வருகிற பலிகளைக் குறித்து மேற்சொல்லியபடி: பலியையும்,காணிக்கையையும்,சர்வாங்கத் தகன பலிகளையும்,பாவ நிவாரண பலிகளையும் நீர் விரும்பவில்லை,அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்ன பின்பு: தேவனே,உம்முடைய சித்தத்தின்படி செய்ய,இதோ,வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே,அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்” (எபிரெயர் 10:1-10).

"அந்தச் சித்தத்தின்படி” நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொள்ளவும் அதற்கு ஒரே தரம் நியாயந்தீர்க்கப்படவும் தம் ஜீவனை அர்ப்பணித்து புதிதாக்கினார்.,

,ஆகவே நாம் பரிசுத்தரானோம், ‘நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம்’ (எபிரெயர் 10:10) என்பது இறந்த காலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் பாவ விடுதலையைக் குறித்து மீண்டும் குறிப்பிடத் தேவையில்லை என்பதாகும். நீங்கள் பரிசுத்தமாக்கப் பட்டுள்ளீர்கள். ,

,"அன்றியும்,எந்த ஆசாரியனும் நாடோறும்,ஆராதனை செய்கிறவனாயும்,பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்தி செய்யக்கூடாத ஒரே வித பலிகளை அநேகந்தரம் செலுத்தி வருகிறவனாயும் நிற்பான். இவரோ,பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி,என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து,இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப் படுத்தியிருக்கிறார்.” (எபிரேயர் 10:11-14)

நீங்கள் நிரந்தரமாக பரிசுத்தமாக்கப்பட்டுள்ளீர்கள். நாளை நீ ஒரு பாவஞ்செய்தால் நீ மறுபடியும் பாவியாகிவிடுவாயா?அப்பாவங்களையும் இயேசு எடுத்துக்கொள்ளவில்லையா?அவர் எடுத்துக்கொண்டார். எதிர்காலப் பாவங்களையும் அவர் எடுத்துப் போட்டார்.,

"இதைக் குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சி சொல்லுகிறார்; எப்படியெனில்;அந்த நாட்களுக்குப் பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது;நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து,அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்த பின்பு,அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால்,இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப் படுவதில்லையே.” (எபிரேயர் 10:15-18).

‘இனிப் பாவத்தினிமித்தம்’ என்பதன் பொருள் அவர் உலகின் பாவங்களையெல்லாம் ஒழித்து விட்டார் என்பதாகும். இயேசுவே நம் இரட்சகர். என்னுடைய இரட்சகரும் உன்னுடைய இரட்சகருமாவார். இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டோம். இதுவே இயேசுவினுள் கிட்டும் விடுதலை,இதுவே மிகப்பெரும் கிருபை மற்றும் கர்த்தரின் மிகப்பெரும் பரிசு. எல்லாப் பாவங்களினின்றும் விடுதலைப் பெற்ற நீயும் நானும்,அனைவரிலும் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!,*






இயேசுவின் ஞானஸ்நானமும் பாவப்பரிகாரமும்

【3-2】<மத்தேயு 3:13-17>



<மத்தேயு 3:13-17>

அப்போழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க,நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு,இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று,ஜலத்திலுருந்து கரையேறினவுடனே,இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி,தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும்,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன்,இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

இன்னமும் பாவத்தினால் துன்புறும் யாரும் இருக்கிறார்களா?

  • நம்முடைய பாவக்கட்டுகள் முடிவடைந்ததா?
  • ஆமாம்

மக்களின் பாவச் சங்கிலியை நம் கர்த்தராகிய தேவன் துண்டித்துப் போட்டார். பாவத்தின் கீழ் பாடுபடும் அனைவரும் அடிமைகள். அவருடைய பாவ விடுதலையின் மூலம் தெளிவாக அவற்றைத் துண்டித்தார். நம் பாவங்களை எல்லாம் அவர் அகற்றிவிட்டார். இன்னமும் பாவத்தினால் துன்புறும் யாரும் இருக்கிறார்களா?

பாவத்தினுடனான நம் போர் முடிந்தது என்பதை நாம் உணரவேண்டும். பாவத்தினால் நாம் துன்புறத் தேவையில்லை. இயேசு நம்மை விடுவித்தபோது நம் பாவக்கட்டு முடிவிற்கு வந்தது: எல்லாப் பாவங்களும் முடிவிற்கு வந்துவிடுகின்றன. நம்முடைய எல்லாப் பாவங்களும் அவருடைய குமாரனால் ஒழிக்கப்பட்டன. இயேசுவின் மூலம் நம் எல்லாப் பாவங்களுக்கும் கர்த்தர் கிரயஞ்செலுத்தி,நித்தியமாக நம்மை விடுவித்தார்.

மக்கள் பாவங்களினால் எத்தனையாய் துன்புறுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?அது ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து தொடங்கியது. ஆதாமிடமிருந்து பெற்ற பாவங்களினால் மனித குலம் துன்புறுகிறது.

ஆயினும் நம் கர்த்தர் ஓர் உடன்படிக்கைச் செய்தார். அது ஆதியாகமம் 3:15 இல் எழுதப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையானது பாவிகளை விடுவிப்பதைப் பற்றினதாக இருந்தது. நீர் மற்றும் ஆவியினாலான இயேசுகிறிஸ்துவை பலியிடுதலின் மூலமாக எல்லா மனிதர்களும் தம் பாவத்தினின்று விடுவிக்கப்படுவர் என்று அவர் கூறினார். சமயம் வந்தபோது,நமது இரட்சகராகிய இயேசுவை,நமக்குள் வாழும்படியாக அனுப்பினார்.

இயேசுவின் பிறப்பிற்கு முன் யோவான் ஸ்நானனை அனுப்புவதாக உறுதியளித்த அவர் தம் வாக்குத்தத்தத்தின் படிச் செய்தார்.

மாற்கு 1:1-8 இல் எழுதப்பட்டுள்ளது, “தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ,நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்,அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்,அவருக்குப் பாதைகளைச் செவ்வை பண்ணுங்கள் என்று வனாந்திரத்திலே,கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும்,தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும்,அவனிடத்திற்குப் போய்,தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு,யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து,தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக் கொண்டவனாயும்,வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான். அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப் பின் வருகிறார்,அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.

நற்செய்தியின் சாட்சியும் முன்னோடியுமான யோவான் ஸ்நானன்

  • யோவான் ஸ்நானன் யார்?
    • அவன் தலைமை ஆசாரியனும் மனிதகுலத்தின் பிரதிநிதியுமாவான்.

இயேசுவை விசுவாசிப்போர் ஞானஸ்நானம் பெறுகிறார்கள். ஞானஸ்நானம் என்பதன் பொருள்; ‘கழுவுதல்,அடக்கம் செய்வது, முழுக்கப்படுவது,கடத்தப்படுவதுஎன்பதாகும். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது கர்த்தரின் நீதி நிறைவேற்றப்பட்டது. நீதிஎன்பது கிரேக்கத்தில் டிகாய்சூன்என்றழைக்கப்படுகிறது. அதன் பொருள் நியாயமானதுஎன்பதாகும். அது மிகப்பொருத்தமான” “மிகவும் பொருந்தக்கூடியஎன்றும் பொருள்படும்.

இயேசு ஞானஸ்நானம் பெறுவதானது மிகவும் சரியானதும் பொருந்தக் கூடியதுமான முறையில் அவர் இரட்சகராகவே. ஆகவே,இயேசுவை விசுவாசிப்போர்,அவரின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவையான,நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போர் கர்த்தரிடமிருந்து பாவ விடுதலைப் பரிசைப் பெறுவார்கள்.

புதிய ஏற்பாட்டில்,பழைய ஏற்பாட்டின் படியான கடைசித் தலைமை ஆசாரியன் யோவான் ஸ்நானன் ஆவான். மத்தேயு 11:10-11 ஐப் பார்ப்போமாக., வேதவசனம் யோவான் ஸ்நானனை மனிதர்களின் பிரதிநிதி என்று கூறுகிறது. புதிய ஏற்பாட்டு சகாப்தத்தின் தலைமை ஆசாரியனாக,அவன் இயேசுவின் மீது உலகின் பாவங்களைச் சுமத்தினான்; இப்படியாக பழைய ஏற்பாட்டின் தலைமை ஆசாரித்துவத்தை ஆராதித்தான்.

யோவானைக் குறித்து இயேசுவே சாட்சி கூறுகிறார். மத்தேயு 11:13-14 இல் அவர் கூறினார். நியாயப் பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.ஆகவே இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்த,யோவான் ஸ்நானன்,தலைமை ஆசாரியனான ஆரோனின் சந்ததியினனும் கடைசித் தலைமை ஆசாரியனுமாவான். பழைய ஏற்பாட்டு ஆரோனின் சந்ததியன் என்று யோவானைக் குறித்து வேதாகமும் சாட்சி கூறுகிறது. (லூக்கா 1:5, 1 நாளாகமம் 24:10).

அப்படியானால் ஒட்டகமயிரினால் நெய்யப்பட்ட ஆடையைத் தரித்துக் கொண்டு, யோவான் ஏன் வனாந்திரத்திலே தனியாக வாழ்ந்தான். தலைமை ஆசாரியத்துவத்தை ஏற்றுக்கொள்ளவே. மனிதர்களின் பிரதிநிதியான யோவான் ஸ்நானனால் மனிதர்கள் மத்தியில் வாழக்கூடாததாக இருந்தது. ஆகவே அவன் மக்களிடம் மனந்திரும்புங்கள்,விரியன் பாம்புக் குட்டிகளே!என்று கூக்குரலிட்டு மனம் வருந்துதலுக்கான கனியை பெறும்படி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்,அது மக்களின் எல்லாப் பாவங்களையும் எடுத்துபோடும் இயேசுவிடம் மக்களைத் திருப்பியது. நம்முடைய இரட்சிப்பிற்காக யோவான் ஸ்நானன் உலகின் பாவங்களை இயேசுவின் மீது சுமத்தினான்.

இரண்டு வகையான ஞானஸ்நானங்கள்

  • யோவான் ஏன் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்?
  • மக்களை அவர்களின் பாவத்தைக் குறித்து மனம் வருந்தச் செய்து இரட்சிப்படைய இயேசுவின் ஞானஸ்நானத்தை நோக்கி வழி நடத்தவே.

யோவான் ஸ்நானன் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து பிறகு இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்தான். முதலாவது வகை மனம் வருந்துதலுக்கான ஞானஸ்நானமாகவும்அது பாவிகளை கர்த்தரிடம் திரும்ப அழைப்பதுமாகவும் இருந்தது. யோவானின் மூலமாக கர்த்தரின் வார்த்தையைக் கேட்ட அநேக மக்கள் தம் சிலைகளை விட்டுவிட்டு கர்த்தரிடம் திரும்பினர்.

இரண்டாவது ஞானஸ்நானம் இயேசுவின் ஞானஸ்நானமாகும், அது உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தும் ஞானஸ்நானமாகும். கர்த்தரின் நீதியை நிறைவேற்றும் பொருட்டு யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்தான். எல்லா மக்களையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் பொருட்டு யோவான் ஸ்நானனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார். (மத்தேயு 3:15).

யோவான் ஏன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்விக்கவேண்டும்? உலகின் பாவங்களையெல்லாம் துடைக்கும்படியாக யோவானை இயேசுவின் மீது எல்லாப் பாவங்களையும் சுமத்த அனுமதித்தார். ஆகவே,இயேசுவை விசுவாசிக்கும் மக்களால் இரட்சிக்கப்படமுடியும்.

யோவான் ஸ்நானன் கர்த்தரின் ஊழியன். அவனுடைய வேலை மனிதகுலம் தம் பாவங்களைக் கழுவிப்போட உதவுதாக இருந்தது. அவன் மனிதகுல பிரதிநிதியாகவும் விடுதலையின் நற்செய்தியைக் குறித்து சாட்சி கூறுபவனாகவும் இருந்தான். ஆகவே அவன் வனாந்தரத்திலே தனியாக வாழ வேண்டியிருந்தது. யோவான் ஸ்நானனின் காலத்தில்,இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் ஊழல் நிறைந்தவர்களாகவும் அடிவரை அழுகிப்போனவர்களாகவும் இருந்தனர்.

ஆகவே,கர்த்தர் பழைய ஏற்பாட்டில் கூறினார்,மல்கியா 4:5-6 கூறுகிறது, “இதோ,கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு,அவன் பிதாக்களுடைய இருதயத்தை பிள்ளைகளிடத்திற்கும்,பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.

கர்த்தரின் கண்களுக்கு,யெகோவாவை ஆராதித்த எல்லா இஸ்ரவேல் மக்களும் ஊழல் நிறைந்தவர்களாய் இருந்தனர். அவர் முன் யாரும் நீதிமானில்லை. ஆசாரியர்,நியாயசாஸ்திரிகள் மற்றும் வேதபாரகர் போன்ற ஆலயத்தின் மதத் தலைவர்கள் அடிவரை அழுகிப் போயிருந்தனர். கர்த்தரின் சட்டப்படி இஸ்ரவேலரும் ஆசாரியர்களும் பலி காணிக்கையைக் கொடுக்கவில்லை.

பாவ மன்னிப்பிற்காக கர்த்தர் போதித்த கைவைப்பதையும் இரத்தக் காணிக்கைச் செலுத்தும் சடங்கையும்,ஆசாரியர்கள் விட்டொழித்தனர். மல்கியாவின் காலத்தில் உள்ள ஆசாரியர்கள் சடங்கிலுள்ள பலியையும், கைவைத்தலையும் இரத்தக் காணிக்கையையும் விட்டொழித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே யோவான் ஸ்நானனால் அவர்களுடன் தங்கியிருக்க முடியவில்லை. ஆகவே யோவான் ஸ்நானன் வனாந்திரத்திற்குச் சென்று கூக்குரலிட்டான். அவன் என்ன கூறினான்?

தீர்க்கதரிசியான ஏசாயாவின் வார்த்தைகளில் மாற்கு 1:2-3 இல் எழுதப்பட்டுள்ளது. இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்,அவன் உமக்கு முன்னே போய்,உமக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்,அவருக்குப் பாதைகளை செவ்வைப் பண்ணுங்கள்,என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்”.

வனாந்திரத்தின் சத்தம் மனந்திரும்புதலின் ஞானஸ்நானத்தைக் குறித்து மக்களிடம் கூக்குரலிட்டது. வேதாகமம் கூறும் மனம் வருந்துதலின் ஞானஸ்நானம் என்ன? யோவான் ஸ்நானன் கூக்குரலிட்ட ஞானஸ்நானம் இதுவே; அது மக்களை இயேசுவிடம் திரும்ப அழைக்கும் ஞானஸ்நானம்,இதனால் அவர்களின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவை அவர்கள் விசுவாசிப்பதால் இரட்சிக்கப்படுவர். மனம் வருந்துதலின் ஞானஸ்நானம் அவர்களை இரட்சிப்பை நோக்கி வழி நடத்தியது.

மனம் வருந்தி ஞானஸ்நானம் பெறுங்கள், இதுபோலவே இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று உங்கள் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொள்வார்யோவான் ஸ்நானனின் கூக்குரலானது இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு மக்களை இரட்சிக்க அவர் சிலுவையில் நியாயந்தீர்க்கப்படுவார் என்பதாயிருந்தது,ஆகவே அவர்கள் கர்த்தரிடம் திரும்புவர்.

நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்என்பதன் பொருள் உங்களின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போடுவார் என்பதாகும். ஞானஸ்நானம் என்பது கழுவுதல்என்று பொருள்படும். யோர்தானில் இயேசுவின் ஞானஸ்நானமானது தேவ புத்திரன் இப்படியாக ஞானஸ்நானம் பெற்று நாம் இரட்சிக்கப் படும்படியாக நம் பாவங்களை ஏற்றுக் கொண்டார் என்று நம்மிடம் கூறுகிறது.

ஆகவே நாம் பாவத்திலிருந்து திரும்பி அவரை விசுவாசிக்க வேண்டும். மக்களின் அனைத்துப் பாவங்களையும் சுமந்து தீர்க்கும் ஆட்டுக்குட்டியானவர் அவரே. யோவான் ஸ்நானன் சாட்சி கூறிய விடுதலையின் நற்செய்தி இதுவே.

பாவ விடுதலைக்காக தலைமை ஆசாரியன் செய்யவேண்டியவை

  • இரட்சிப்பிற்கான பாதையை அமைத்தது யார்?
  • யோவான் ஸ்நானன்.

ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தான், “எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி,அதின் போர் முடிந்தது என்றும் அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும்,அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும்,அதற்கு கூறுங்கள்” (ஏசாயா 40:2).

யாரையும் விட்டுவிடாமல் உங்கள் பாவத்தையும் எனது பாவத்தையும்,எல்லோரின் பாவத்தையும் இயேசுகிறிஸ்து எடுத்துபோட்டார். மூலப்பாவம்,நிகழ்கால பாவங்கள்,மற்றும் எதிர்கால பாவங்களும் கூட அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் கழுவப்பட்டது. அவர் நம் எல்லோரையும் விடுவித்தார். இந்த விடுதலையைக் குறித்து நம் அனைவருக்கும் தெரியவேண்டும்.

நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்ட நாம்,யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் மூலம் இயேசுவின் மீது எல்லாப் பாவங்களையும் சுமத்தினான் என்பதை அறிந்து விசுவாசிக்க வேண்டும்.

நாம் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது, “கர்த்தர் அன்பானவராக இருப்பதினாலே,நம் இருதயத்தில் பாவம் இருந்தாலும் கூட, இயேசுவை விசுவாசித்தால் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்கலாம்என்று நினைக்கலாகாது.

நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட அவரின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிக்கவேண்டும்,அதன் மூலம் யோவான் ஸ்நானன் உலகின் பாவங்களையெல்லாம் இயேசுவின் மீதும் சிலுவைக்கும் செலுத்தினான். நீரினாலேயேயோவான் ஸ்நானன் மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தினான்.

நம்மை இரட்சிக்கும்படி கர்த்தர் செய்த முதல் காரியம் அவர் யோவானை இவ்வுலகிற்கு அனுப்பியதே. கர்த்தரின் தூதனாகிய,யோவான் ஸ்நானன் அரசனின் தூதுவனைப் போல் அனுப்பப்பட்டான்,அவன் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் சகலப் பாவங்களையும் இயேசுவின் மீது செலுத்தினான். அவன் மனிதர்களின் தலைமை ஆசாரித்துவத்தை ஆசரித்தான்.

கர்த்தர் தம்முடைய தூதனை நம்மிடம் அனுப்பியதாக அவர் நம்மிடம் கூறினார். நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்”. உமக்கு முன்பாக என்பதன் பொருள் இயேசுவுக்கு முன்பாக என்பதாகும். இயேசுவிற்கு முன்னோடியாக யோவானை அனுப்பிய காரணம் என்ன?கர்த்தரின் மகனான இயேசு மீது ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களை எல்லாம் சுமத்தவே. உமக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான்இப்படி பொருள்படவே அவர் கூறினார்.

நாம் விடுதலைப் பெற்று பரலோகம் செல்லும்படியாக வழியை ஆயத்தம் செய்தது யார்? யோவான் ஸ்நானன். உமக்குஎன்பது இயேசுவையும் நான்என்பது கர்த்தரையும் குறிக்கிறது . ஆகவே அவர் நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்,அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான்.என்று கூறியதன் பொருள் யாது?

நாம் பரலோகஞ்செல்லும்படியாக நம் வழியை ஆயத்தஞ்செய்வது யார்?யோவான் ஸ்நானன் நம் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தியதால் நம்மால் இயேசு நம் எல்லாப் பாவங்களையும் நமக்காக கழுவினார் என்று விசுவாசிக்க முடியும்; அவனின் வேலை பாவத்தை அவர் மீது சுமத்த,இயேசுகிறிஸ்துவிற்கு ஞானஸ்நானம் செய்விப்பதாகும். இயேசு மற்றும் யோவான் ஆகியவர்களே உண்மையை விசுவாசித்து விடுதலையடைவதை சாத்தியமாக்கியவர்கள்.

நம் இரட்சிப்பு எதைப் பொறுத்திருக்கிறது?அது கர்த்தரின் புத்திரரான இயேசுவின் கிரியைகளையும்,கர்த்தரின் தூதன் உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தினான் என்பதை விசுவாசிக்கிறோமா என்பதிலிருக்கிறது. நாமெல்லாரும் நற்செய்தியாகிய பாவ மன்னிப்பைக் குறித்து அறியவேண்டும். பிதாவாகிய கர்த்தர் அவரின் தூதனை முன்னோடியாக அனுப்பினார்,அவன் அவர் குமாரனுக்கு ஞானஸ்நானம் செய்விப்பான்,மேலும் அவனை மனிதகுலத்தின் பிரதிநிதியுமாக்கினார். இப்படியாக நம் விடுதலைக்கான செய்கைகளை அவர் நிறைவேற்றினார்.

கர்த்தர் தம் குமாரனை ஞானஸ்நானம் செய்விக்க தன் ஊழியனான யோவான் ஸ்நானனை அனுப்பினார். ஆகவே,அவர் குமாரனை விசுவாசிப்பவர்களுக்கு யோவான் ஸ்நானனால் இரட்சிப்பின் பாதையை அமைக்க முடிந்தது. இயேசுவுக்கு ஞானஸ்நானம் அளித்ததன் காரணம் இதுவே. யோவான் ஸ்நானன் இயேசுவுக்களித்த ஞானஸ்நானம் நம் விடுதலையாகவும் அதன் மூலம் மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதால்,மக்களால் இயேசுவை விசுவாசித்து பரலோக ராஜ்யத்திற்கு செல்லமுடியும்.

அவரின் ஞானஸ்நானம் மூலம்,மனிதர்களின் எதிர்கால பாவங்கள் கூட இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. இயேசுவும் யோவானும் ஒன்றாகச் சேர்ந்து நமக்காக பரலோகத்தின் வழியை ஆயத்தஞ்செய்தனர். இவ்வழியாக,கர்த்தர், விடுதலையின் இரகசியத்தை யோவான் ஸ்நானன் மூலம் வெளிப்படுத்தினார்.

நம் ஒவ்வொருவரின் பிரதிநிதியான யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்ததன் மூலம்,நம்முடைய பாவ விடுதலையை விசுவாசித்து பரலோகஞ் செல்லலாம். ஞானஸ்நானத்தின் மூலம் அவன் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தினான். இந்நற்செய்தியே,மிகச் சந்தோஷமான விடுதலையின் செய்தியாகும்.

யோவான் ஸ்நானன் ஏன் பிறந்தான்?

  • யாரின் மூலம் இயேசுவை நம்மால் விசுவாசிக்க முடிகிறது?
  • யோவான் ஸ்நானன்.

மல்கியா 3:1 இல், “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன்,அவன் எனக்கு முன்பாகப் போய்,வழியை ஆயத்தம் பண்ணுவான்.நீங்கள் வேதாகமத்தை கவனமாக வாசிக்கவேண்டும். கர்த்தர் ஏன் அவர் தூதனை தமக்கு முன்னோடியாக நம்மிடம் அனுப்பினார்?யோவான் ஸ்நானனை இயேசுவிற்கு 6 மாதங்களுக்கு முன்பு அனுப்பியதன் காரணம் யாது?

வேதாகமம் என்பது என்ன என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும். தலைமை ஆசாரியனான ஆரோனின் ஊழியத்தைக் குறித்து பழைய ஏற்பாட்டில் ஒரு பகுதி இருக்கிறது. ஆரோன் மோசேயின் அண்ணன். அவனையும் அவன் மகன்களையும் ஆசாரியராக கர்த்தர் அபிஷேகம் செய்தார். மற்ற லேவியர் அவர்களுக்கு கீழ் வேலை செய்தனர், ஆரோனின் மகன்கள் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தினுள் காணிக்கைச் செலுத்தியபோது,அவர்கள் வகைவகையான பாத்திரங்களை எடுத்துவருவதும்,ரொட்டிக்கான மாவு பிசைவதுமான வேலைகளில் ஈடுபட்டனர்.

ஆரோனின் குமாரர் வேலைகளைத் தமக்குள் பங்குபோட்டுக் கொள்ளும்படி அபிஷேகிக்கப்பட்டனர். ஆனால் பாவ விடுதலைத் தினமான ஏழாம் மாதம் பத்தாம் திகதியில்,தலைமை ஆசாரியனே தம்மக்களுக்காக பாவ விடுதலைக்கான பலியைச் செலுத்தினான்.

லூக்கா 1:5 இல் யோவான் ஸ்நானனைக் குறித்த கதையொன்றிருக்கிறது. இயேசுவை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டுமானால் இந்த கர்த்தரின் தூதுவனைக் குறித்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் இயேசுவைக் குறித்து அதிகம் நினைக்க விழைகிறோம், ஆனால் அவருக்கு முன்னோடியாக வந்த யோவான் ஸ்நானனை அலட்சியம் செய்கிறோம். நீங்கள் புரிந்துகொள்ள நான் உதவ விரும்புகிறேன்.

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்,இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்” (மாற்கு 1:1-2). பரலோகத்தின் நற்செய்தியானது யோவான் ஸ்நானனின் மூலமே தொடங்குகிறது.

நாம் யோவான் ஸ்நானனைக் குறித்து நன்கு புரிந்துகொள்ளும்போது, நற்செய்தியாகிய இயேசு அளிக்கும் விடுதலையையும் புரிந்து கொண்டு அதனை விசுவாசிக்க முடியும். மற்ற நாடுகளின் நிலையை நாமறிந்துகொள்ள உலகமுழுவதும் நாம் அனுப்பியுள்ள தூதர்களிடம் நாம் விசாரிப்பதை ஒத்ததாகும் இது,யோவான் ஸ்நானனை நாமறியும் போது, கர்த்தரின் விடுதலையை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

ஆயினும் இது எத்தனை இரங்கத்தக்க நிலை,இந்நாளின் அநேக கிறிஸ்தவர்கள் யோவானின் முக்கியத்துவத்தைக் குறித்து அறியாதவர்களாயுள்ளனர். கர்த்தருக்கு வேறு வேலைகள் இல்லாமலிருப்பதால் யோவான் ஸ்நானனை அவர் அனுப்பவில்லை. இயேசுவின் விடுதலையைக் குறித்து பேசும் முன்னதாக புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களும் யோவான் ஸ்நானனைக் குறித்துப் பேசுகின்றன.

ஆனால் இந்நாளின் நற்செய்தியாளர்கள் அவனை முற்றிலும் அலட்சியம் செய்து இரட்சிக்கப்பட இயேசுவை விசுவாசிப்பது மட்டும் போதுமானது என்று மக்களிடம் கூறுகின்றனர். அவர்கள் மக்களை தம் வாழ்நாள் முழுவதும் பாவிகளாகவே வாழச் செய்து நரகத்தை நோக்கி வழிநடத்துகின்றனர். யோவான் ஸ்நானனின் பாத்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் இயேசுவை வெறுமனே விசுவாசித்தீர்களென்றால் கிறிஸ்தவம் உங்களுக்கு இன்னொரு மதமாகி விடும். உண்மை உங்களுக்குத் தெரியவில்லையென்றால் நீங்கள் எப்படி உங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்?அதற்கு சாத்தியமேயில்லை.

விடுதலையின் நற்செய்தியானது அத்தனை இலகுவானதோ இலேசானதோ அல்ல. இயேசு சிலுவையில் நமக்காக மரித்ததினால் சிலுவையின் மீதுள்ள விசுவாசத்தில் பாவ விடுதலை இருப்பதாக அநேக மக்கள் நினைக்கின்றனர். பாவங்களை சுமத்தியதன் உண்மைத் தெரியாமல் சிலுவை மரணத்தை மட்டும் நீ விசுவாசித்தேயானால்,எத்தனை அளவு விசுவாசமும் முழு விடுதலையை நோக்கி உன்னை வழி நடத்தாது.

ஆகவே,இயேசு எப்படி உலகின் பாவங்களை ஏற்றுக்கொள்வார் என்றும் பாவ விடுதலை எப்படி நிறைவேற்றப்படும் என்றும் உலகம் அறிந்து கொள்வதற்காக கர்த்தர் யோவான் ஸ்நானனை அனுப்பினார். உண்மையை நாமறிந்து கொண்டதால் மட்டுமே இயேசுவானவர் தேவகுமாரனென்றும் அவர் தம்மீது எல்லாப் பாவங்களயும் ஏற்றுக்கொண்டார் என்றும் புரிந்துகொண்டோம்.

யோவான் ஸ்நானன் விடுதலையின் உண்மையைக் குறித்து நம்மிடம் கூறுகிறான். இயேசுவின் தெய்வீகத்தை சாட்சி கூற அவன் எப்படி வந்தானென்று நம்மிடம் கூறுகிறார். இவ்வுலகிற்கு ஒளி வந்தபோது மக்கள் அவரை எப்படி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யோவான் 1 இல் இயேசுகிறிஸ்துவிற்கு ஞானஸ்நானம் செய்வித்ததன் மூலம் நற்செய்தியாகிய விடுதலையை ஏற்பாடு செய்தவன் அவனே என்று அவர் சாட்சி கூறுகிறார்.

பாவ விடுதலையைக் குறித்து யோவான் ஸ்நானனின் சாட்சி நம்மிடம் இல்லையென்றால், இயேசுவை நாம் விசுவாசிப்பது எப்படி?நாம் இயேசுவைக் காணவில்லை,நாம் வேறுபட்ட கலாசாரம் மற்றும் மதங்களில் இருந்து வந்தபோது,யெகோவாவை விசுவாசிப்பது எப்படி சாத்தியமாகும்?

உலகமுழுவதும் வேறுபட்ட மதங்கள் இருக்கும்போது இயேசுவை நாமறிந்து கொள்வது எப்படி? இயேசு கர்த்தரின் குமாரனென்றும் உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்றுக்கொண்டு நம்மை விடுவித்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

ஆகவே பழைய ஏற்பாட்டில் விடுதலையைக் குறித்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க அதனை உற்று நோக்கினால்,இயேசுவே நம் இரட்சகர் என்று அறிவோம். சரியாக விசுவாசிப்பதற்கு சரியான அறிவைப் பெறவேண்டும். உண்மையான அறிவில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. இயேசுவை விசுவாசித்து இரட்சிப்படைய,யோவான் ஸ்நானன் சாட்சி கூறிய நற்செய்தியாகிய பாவ விடுதலையைக் குறித்தும் அதில் அவன் பாத்திரம் என்னவென்றும் நாம் அறியவேண்டும். இயேசுகிறிஸ்துவின் மீது முழு விசுவாசம் வைக்க,பாவ விடுதலைக் குறித்த சத்தியத்தை நாமறிந்து கொள்ளவேண்டும்.

இயேசு சத்தியத்தையும் அறிவீர்கள்,சத்தியம் உங்களை விடுதலையாக்கும்என்று கூறியது போல, நாம் இயேசுவினுள் பாவ விடுதலையின் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வேதாகமத்திலுள்ள சான்றுகள்

  • எதிலிருந்து நான்கு நற்செய்திகளும் தொடங்கின?
  • யோவான் ஸ்நானனின் வருகையிலிருந்து.

வேதாகமத்தின் விடுதலைக்கான அனைத்துச் சான்றுகளையும் குறித்து ஆராய்வோமாக. நான்கு நற்செய்திகளும் யோவான் ஸ்நானனைக் குறித்து என்ன கூறுகின்றன என்று கண்டுபிடிப்போம். யாரவன் என்றும் அவன் ஏன் மனித குலத்தின் பிரதிநிதிஅல்லது கடைசி தலைமை ஆசாரியன் என்றழைக்கப்படுகிறானென்றும் அவனால் எப்படி உலகின் அனைத்துப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்றும்,இயேசு தம்மீது எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்றும் பார்ப்போம்.

நான்கு சுவிசேஷங்களும் யோவான் ஸ்நானனுடனேயே தொடங்குகின்றன. யோவான் 1:6 நற்செய்தியின் மிக முக்கியக் குறிப்பை நமக்கு கூறுகிறது. அது யார் உலகின் பாவங்களையெல்லாம் இயேசு மீது சுமத்தியது என்பதைக் குறித்து கூறுகிறது. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான். அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்கச் சாட்சியாக வந்தான்” (யோவான் 1:6-7)

தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படிஎன்றும் அவன் அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்கச் சாட்சியாக வந்தான்என்றும் கூறுகிறது. இயேசுகிறிஸ்துவே ஒளியானவர். இதன் பொருள் என்னவெனில் அவன் மூலமாக எல்லாரும் விசுவாசிக்கும்படி யோவானே இயேசுவைக் குறித்து சாட்சி கூறவேண்டும். நாம் இப்போது மத்தேயுவை உற்று நோக்குவோமாக.

மத்தேயு 3:13-17 இல், “அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு,இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று,ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ,வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

  • யோவானின் பெருமைகளை நாமேன் புரிந்து கொள்ளவேண்டும்?
  • ஏனெனில் வேதாகமம் யோவானே மனிதகுலத்தின் தலைமை ஆசாரியன் என்று நம்மிடம் கூறுகிறது.

உலகின் எல்லாப் பாவங்களுக்குமான பாவ விடுதலையை நிறைவேற்ற யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தான். யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானமே நம் இரட்சிப்பிற்கான மிக முக்கிய நிகழ்வாகும். ஆனால் முழு உண்மையையும் முழுவிபரங்களுடன் புரிந்து கொண்டு அதனை விசுவாசிக்க,யோவான் ஸ்நானனை நாம் முதலில் நெருக்கமாக ஆராய வேண்டும்.

லூக்கா 1:1-14 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்பமுதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டபடியினால்,ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி,அவள் பேர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து,தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். எலிசபெத்து மலடியாயிருந்த படியினால்,அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். அப்படியிருக்க,அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவ சந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,ஆசாரிய ஊழிய முறைமையின் படி அவன் தேவாலயத்திற்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான். தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவனுக்கு தரிசனமானான். சகரியா அவனைக்கண்டு கலங்கி,பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே,உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்,அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

லூக்கா யோவானின் குலத்தைப் பற்றி விரிவாக நம்மிடம் கூறுகிறான். இயேசுவின் சீடனாகிய லூக்கா,யோவானின் குலத்தைத் தொடக்க முதல் விவரிக்கிறான். வேறொரு        கலாச்சாரத்தையுடையவனும் கர்த்தரைப் பற்றி எதுவும் தெரியாத தேயோப்பிலு என்ற மனிதனுக்கு லூக்கா நற்செய்தியைப் போதிக்கிறான்.

ஆகவே,பாவிகளின் இரட்சகராகிய இயேசுவைக் குறித்து அவனுக்கு போதிக்க,யோவான் ஸ்நானனின் பரம்பரையைக் குறித்து விளக்கமாக கூறவேண்டுமென லூக்கா நினைத்தான். நாமும் வெவ்வேறு இனத்தவரான புறஜாதியாரானபடியால், படிப்படியாகவும் தெளிவாகவும் இயேசுவின் இரட்சிப்பைக் குறித்து விளக்கவில்லை என்றால் அதனை நம்மால் தெளிவாக புரிந்து கொள்ளமுடியாது. விளக்கங்கள் என்னவென்று நாம் கண்டு பிடிப்போமாக.

லூக்கா 1:5-9 இல் அவன் விவரிக்கிறான். யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி,அவள் பேர் எலிசபெத்து,அவர்களிருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின் படியேயும் குற்றமற்றவர்களாய் நடத்து,தேவனுக்கு முன்பு நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். எலிசபெத்து மலடியாயிருந்த படியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். அப்படியிருக்க,அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவ சந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்து வருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.

ஆசாரிய ஊழிய முறைமையின்படி சகரியா கர்த்தருக்கு ஊழியம் செய்யும் போது ஒரு நிகழ்வு நிகழ்ந்தது. சகரியா ஆரோனின் சந்ததியினன் என்று லூக்கா தெளிவாக சாட்சியிடுகிறான். சகரியா எந்தப் பிரிவைச் சார்ந்தவன்?இது முக்கியமான ஒன்றாகும்.

அவன் விவரித்தான் அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவ சந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்து வருகிற காலத்தில்.சகரியா மற்றும் எலிசபெத்து மூலம் பாவவிடுதலையின் நற்செய்தியைக் குறித்து விவரிக்கும் அளவு சகரியாவைக் குறித்து லூக்கா அறிந்திருந்தான்.

நாமும் வெவ்வேறு இனத்தவரான புறஜாதி ஆனவர்களான படியால், படிப்படியாகவும்,விளக்கமாகவும் கூறப் படவில்லையெனில் இயேசுவின் இரட்சிப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. விபரங்கள் என்னவென்று காணுவோம். யோவான் ஸ்நானன் சகரியாவிற்கும் அவள் மனைவியான ஆரோனின் மகள்களில் ஒருத்தியாகிய எலிசபெத்திற்கும் மகனாக பிறந்தான். இப்பொழுது சகரியா மற்றும் யோவானின் குலத்தைப் பார்ப்போம்.

யோவான் ஸ்நானனின் வம்சவரலாறு

  • யோவான் ஸ்நானன் யாருடைய சந்ததியினன்?
  • தலைமை ஆசாரியனான ஆரோனின் சந்ததியினன்.

யோவான் ஸ்நானனின் வம்சவரலாறை அறிந்து கொள்வதற்கு பழைய ஏற்பாட்டின், 1 நாளாகமம் 24:1-19ஐ நாம் வாசிக்கவேண்டும்.

ஆரோனின் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர்,நாதாப்,அபியூ, எலெயாசார்,இத்தாமார் என்பவர்கள். நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால்,எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள். தாவீது சாதோக்கைக் கொண்டு எலெயாசாரின் புத்திரரையும்,அகிமெலேக்கைக் கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான். அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப் பார்க்கிலும் எலேயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமான பேர் காணப்பட்டபடியினால்,எலேயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும்,இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தஙகள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள். எலேயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும்,பரிசுத்த ஸ்தலத்துக்கும்,தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும்,இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள். லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனேயலின் குமாரன்,ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் விட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது. முதலாவது சீட்டு யோயாரீபின் பேர்வழிக்கும்,இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும்,ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும், ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும்,எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,பதினோராவது எலியாசீபின் பேர்வழிக்கும்,பன்னிரண்டாவது யாக்கீமின் பேர்வழிக்கும், பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும்,பதினான்காவது எசெபெயாமின் பேர்வழிக்கும்,பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும்,பதினாறாவது இம்மேரின் பேர் வழிக்கும், பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும்,பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும்,பத்தொன்பதாவது பெத்தகியாவின் பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும்,இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும்,இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும்,இருபத்து மூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும்,இருபத்து நான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின் பிரகாரம்,தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே.

பத்தாம் வசனத்தை மீண்டும் வாசிப்போமாக, “ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும்,எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்.பலியானது கிரமப்படி செலுத்தப்படுவதற்கு ஆரோனின் குமாரருக்கு தாவீது சீட்டு போடும் முறையை ஏற்படுத்தினான் (ஆரோன் மோசேயின் அண்ணன் என்பதும்,கர்த்தர் மோசேயை தன் பிரதிநிதியாகவும், இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தின் தலைமை ஆசாரியனாகவும் நியமித்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.)

மற்ற எல்லா லேவியரும் ஆசாரியர்களின் கீழ் பணியாற்ற ஆரோனும் அவன் மகன்களும் கர்த்தர் முன் பலியிடுவதற்கான பொறுப்பிலிருந்தார்கள். தாவீது சீட்டு போடும் முறையை ஏற்படுத்தும் முன்,ஆரோனின் சந்ததியினரான ஆசாரியர்கள் ஒவ்வொருமுறையும் சீட்டுப் போடவேண்டியிருந்தது; இது அதிக குழப்பத்தை உருவாக்கிற்று.

ஆகவே,தாவீது பிரிவுகளை உருவாக்கி ஒரு முறையை ஒழுங்குச் செய்தான். ஆரோனின் மகன்களின் பிள்ளைகளில் தொடங்கி 24 பிரிவுகள் உருவாக்கப்பட்டன,அவற்றில் எட்டாவது அபியாவாகும். ஆகவே, “அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான்என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே சகரியா அபியா பிரிவின் ஆசாரியன் ஆவான்,அவர்களிருவரும் தலைமை ஆசாரியனான ஆரோனின் சந்ததியினராயிருந்தனர்.

அபியாவின் பிரிவைச் சேர்ந்த சகரியாவே யோவான் ஸ்நானனின் தந்தையாவான். அவர்கள் தம் குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதை வேதாகமத்திலிருந்து அறிகிறோம்.

யாக்கோபு தன் தாய் மாமன் மகளை திருமணம் செய்து கொண்டதை அறிவீர்கள். இத்தகைய வம்ச வரலாற்றின் விபரம் முக்கியமானதாகும். அது கூறுகிறது, “அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான்.

ஆகவே அவன் நிச்சயமாக ஆரோனின் சந்ததியினன். யார்? யோவான் ஸ்நானனின் தந்தையாகிய சகரியா. இது இயேசுவின் பாவவிடுதலையையும், யோவான் ஸ்நானனின் ஊழியத்தையும்,இயேசுவின் மீது உலகின் பாவங்களை சுமத்துவத்தையும்,விளக்கும் முக்கியமான குறிப்பாகும்.

ஆரோனின் புத்திரர் மட்டுமே ஆசாரிய ஊழியஞ் செய்ய வேண்டும்

  • பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தலைமை ஆசாரியனாக யாரால் ஊழியஞ்செய்ய முடிந்தது?
  • ஆரோனாலும் அவன் சந்ததியினராலும்.

அப்படியானால் ஆரோனின் புத்திரரே ஆசாரிய ஊழியஞ் செய்ய வேண்டுமென வேதாகமத்தில் எங்கே கூறப்பட்டுள்ளது?அதனைப் பார்ப்போமாக.

எண்ணாகமம் 20:22-29, “இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு,ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப் பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற் போனபடியினால்,நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை. நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு,அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி,ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலேயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து,தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க,அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள். அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி,அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள். ஆரோன் ஜீவித்துப் போனான் என்பதைச் சபையார் எல்லாரும் கண்டபோது,இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங் கொண்டாடினார்கள்.

யாத்திராகமத்தில் கர்த்தரின் சட்டம் எழுதப்பட்டுள்ளது, தலைமை ஆசாரியனின் மகன்கள் வயது வரும்போது,தம் தந்தையைப் போன்று தலைமை ஆசாரியத்துவத்தைப் பொறுப்பேற்க வேண்டுமென இங்கு கூறப்பட்டுள்ளது.

யாத்திராகமம் 28:1-5. “உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு,நீ ஆரோனையும் அவனோடே கூட அவன் குமாரராகிய நாதாப்,அபியூ, எலெயாசார்,இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து,உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக. உன் சகோதரனாகிய ஆரோனுக்கு,மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு,பரிசுத்த வஸ்திரங்களை உண்டு பண்ணுவாயாக. ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும் பொருட்டு,நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக. அவர்கள் உண்டாக்க வேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும்,ஏபோத்தும், அங்கியும்,விசித்திரமான உள் சட்டையும், பாகையும்,இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி,அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ண வேண்டும். அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பர நூலும் சிவப்பு நூலும் மெல்லிய பஞ்சு நூலும் சேகரிப்பார்களாக

ஆசாரியத்துவத்துக்கு,மோசேயின் சகோதரனான ஆரோனை கர்த்தர் தெளிவாக ஏற்படுத்தினார். ஆசாரித்துவம் மற்ற மனிதர்களுக்கு திறந்து வைக்கப்படவில்லை. ஆகவே கர்த்தர் மோசேயிடம் ஆரோனை தலைமை ஆசாரியனாக நியமித்து,அவர் கட்டளையிட்டபடி பொருத்தமான ஆடைகளை அவனுக்குச் செய்யும்படி கட்டளையிட்டார். கர்த்தரின் வார்த்தைகளை நாம் எப்போதும் மறக்கக் கூடாது.

யாத்திராகமம் 29:1-9, “அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி,அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பொருட்டு,நீ அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்து கொள்வாயாக. புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும்,எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி, அவைகளை ஒரு கூடையிலே வைத்து,கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டு வந்து,ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி,அவர்களைத் தண்ணீரினால் கழுவி,அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும்,ஏபோத்தின் கீழ் அங்கியையும்,ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து,ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,அவன் தலையிலே பாகையையும் வைத்து,பரிசுத்த கிரீடத்தைப் பாகையின் மேல் தரித்து, அபிஷேக தைலத்தையும் எடுத்து,அவன் தலையின் மேல் வார்த்து,அவனை அபிஷேகஞ்செய்வாயாக. பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி,ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி,அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக. ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி,அவன் குமாரருக்கு குல்லாக்களையும் தரித்து,இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டை பண்ணுவாயாக.

ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்கு குல்லாக்களையும் தரிப்பித்து.... ஆசரித்துவம் அவர்களுக்கு நித்தியக் கட்டளையாக இருக்கட்டும். ஆகவே ஆரோனையும் அவன் குமாரரையும் நியமனம் செய்.... கர்த்தர் ஆரோனும் அவன் குமாரருமே ஆசாரித்துவத்தை நித்தியமாகச் செய்யும்படி நியமிக்கும்படி குறிப்பிட்டார். அவர் நித்திய கட்டளைஎன்று குறிப்பிட்டது இயேசு இவ்வுலகிற்கு வந்த பிறகு கூட உண்மையாகவே இருக்கிறது.

ஆகவே,சகரியா தலைமை ஆசாரியனான ஆரோனின் சந்ததியினன் என்பதை லூக்கா ஆழமாக விவரிக்கிறான். கர்த்தரின் ஆலயத்தில் சகரியா கர்த்தருக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்து கொண்டிருந்தபோது,ஒரு தேவதூதன் தோன்றி உன் ஜெபம் கேட்கப்பட்டது என்றும்; அவன் மனைவி எலிசபெத்து அவனுக்கு ஒரு மகனைச் சுமப்பாள் என்றும் கூறினான்.

சகரியாவினால் இதனை நம்பவில்லை அவன், “நான் கிழவனாயிருக்கிறேன்,என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே என்றான்அவன் இப்படிச் சந்தேகித்தமையால், அவரின் வார்த்தைகள் உண்மையானவை என்று காட்ட கர்த்தர் அவனை சிறிது காலம் ஊமையாக்கினார்.

குறிப்பிட்டக் காலத்தில்,அவன் மனைவி கர்ப்பந்தரித்தாள். சில காலத்திற்கு பிறகு கன்னியாகிய,மரியாளும் கர்ப்பந்தரித்தாள். இந்த இரண்டு நிகழ்வுகளும் கர்த்தர் நமது இரட்சிப்பிற்காகச் செய்த தொடக்கக்கட்ட வேலைகளே. அக்கிரமம் நிறைந்த மனிதர்களை இரட்சிக்க,அவர் தம் ஊழியனை அனுப்பவும் தம் ஒரே பேரான குமாரனாகிய இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பி பிறக்கவும் செய்தார்.

அவரை விசுவாசிப்போர் இரட்சிக்கப் படும் படியாக அவர் தம் மகனை யோவானால் ஞானஸ்நானம் பெறச் செய்து இவ்வுலகின் பாவங்களை அவர் மீது சுமத்தச் செய்தார்.

கர்த்தரின் சிறப்பு ஈவு

  • இயேசுவிற்கு முன்னோடியாக பாவ விடுதலைக்காக கர்த்தர் யாரை ஏற்பாடு செய்தார்?
  • யோவான் ஸ்நானன்.

கன்னிமரியாளின் சரீரத்தில் பிறந்த இயேசுகிறிஸ்து,மனிதகுலத்தின் இரட்சகராவார். யூதாவின் சந்ததியினனான யோசேப்பிற்கு மரியாள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். யோவான் ஸ்நானன் எப்படி தலைமை ஆசாரியனான ஆரோன் குடும்பத்தில் பிறந்தானோ அதுபோல கர்த்தரின் உடன்படிக்கை நிறைவேற இயேசு யூதாவின் சந்ததியின் மூலம் பிறக்க வேண்டியிருந்தது.

இயேசுவுக்கு முன்னோடியாக யோவான் பிறக்கவும் கர்த்தர் இவ்விருவரையும் இவ்வுலகில் பிறக்க ஏற்பாடு செய்தார். இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்விப்பதன் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் அவர் மீது சுமத்தும்படியாக யோவான் முதலில் பிறந்தான். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கர்த்தர் செய்த உடன்படிக்கையை நிறைவேற்ற தலமை ஆசாரியனின் சந்ததியினன் ஒருவன் பாவப்பலியை ஏறெடுக்க வேண்டியிருந்தது; இப்படிச் செய்வதால் இயேசுவின் விடுதலையின் நற்செய்தியானது விசுவாசிக்கப்படுவதோடு சரியாக நடத்தப்படும்.

யாத்திரராகமத்தில்,கர்த்தர் இஸ்ரவேலருக்கு தம் சட்டத்தையும் உடன்படிக்கையையும் கொடுத்தார்; கர்த்தரின் சட்டத்தையும் ஆசரிப்புக் கூடாரத்தில் பலியாராதனையை கட்டுப்படுத்தும் சட்டத்தையும்,ஆசாரியர்கள் உடுத்தும் ஆடைவரையிலும்,பலிகள் பற்றிய விளக்கங்களையும், ஆசாரியர்களின் பிள்ளைகளுக்கு ஆசாரியத்துவத்தை மாற்றுவதும், அவையாகும். கர்த்தர் ஆரோனையும் அவன் சந்ததியினரையும் தலைமை ஆசாரியனாக நித்தியமாக நியமித்தார்.

ஆகவே ஆரோனின் சந்ததியினராலேயே பலியிட முடிந்தது,மேலும் தலைமை ஆசாரியர்கள் ஆரோனின் குடும்பத்திலிருந்து மட்டுமே வர முடிந்தது. இது எத்தகையது என்று காண்கிறீர்களா?

ஆனால் ஆரோனின் அநேக சந்ததியினருள்,கர்த்தர் சகரியா மற்றும் அவள் மனைவி எலிசபெத்து ஆகியவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர் கூறினார், “இதோ,நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்.கர்த்தர் சகரியாவிடம் அவன் மனைவியாகிய எலிசபெத்தை மகனை பெறச் செய்யப் போவதாகவும்,அவனுக்கு யோவான் என்று பெயர் வைக்கும்படியும் கூற,இதனால் ஆச்சரியமுற்ற அவன் அவரின் கட்டளைப்படி ஊமையாகி மகன் பிறந்து பேரிடும் வரை அப்படியே இருந்தான்.

கூறியபடியே,அவன் வீட்டில் ஒரு மகன் பிறந்தான். இஸ்ரவேலின் முறைப்படி குழந்தைக்கு பேர் வைக்கும் நேரம் வந்தபோது,தகப்பனின் பெயர் சூட்டப்பட வேண்டியிருந்தது.

எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறின போது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப் பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்து ஜனங்களும் கேள்விப்பட்டு,அவளுடனே கூடச் சந்தோஷப்பட்டார்கள். எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து,அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப் போனார்கள். அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல,அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள். அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, அதன் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சர்யப் பட்டார்கள். உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு,தேவனை ஸ்தோத்திரத்துப் பேசினான். அதினால் அவர்களைச் சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக் கொள்ளப்பட்டது. அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு,இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.” (லூக்கா 1:57-66)

அந்நேரத்தில் சகரியா ஊமையாயிருந்தான். குழந்தைக்கு பேரிடும் நேரம் வந்தபோது உறவினர்கள் பிள்ளையின் பெயர் சகரியா என்றிருக்கட்டும் என்றனர். ஆனால் தாயானவள் அவனின் பெயர் யோவான் என்றிருக்கட்டும் என்று வலியுறுத்தினாள். அப்பொழுது உறவினர்கள்,இக்குடும்பத்தில் இப்பெயருடையவர்கள் யாருமில்லை ஆகவே தந்தையின் பெயரையே குழந்தைக்கு வைக்கவேண்டுமென்றனர்.

எலிசபெத்து அந்தப் பெயரையே வலியுறுத்திக் கொண்டிருக்கும் போது, உறவினர்கள் சகரியாவிடம் சென்று குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டுமென்றார்கள். இன்னமும் பேச முடியாத சகரியா,எழுதும் பலகை ஒன்றைக் கேட்டு அதில் யோவான்என்று எழுதினான். வழக்கமில்லாத பேரைத் தெரிந்தெடுத்ததைக் குறித்து அனைத்து உறவினர்களும் அதிசயித்தார்கள்.

பேர் வைத்த உடனேயே,சகரியாவின் வாய் திறக்கப்பட்டது. அவன் கர்த்தரைத் துதித்ததோடு பரிசுத்த ஆவியானால் நிரம்பி தீர்க்கதரிசனம் உரைத்தான்.

சகரியாவின் குடும்பத்தில் யோவான் ஸ்நானன் பிறந்ததைக் குறித்து லூக்கா கூறுகிறான். அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான்கர்த்தரின் சிறப்பு ஈவான,யோவான் ஸ்நானன்,ஆரோனின் சந்ததியினனான சகரியாவிற்கு பிறந்து மனிதகுல பிரதிநிதியானான்.

யோவான் ஸ்நானன் மற்றும் இயேசுகிறிஸ்துவின் மூலம் மனிதகுலத்தின் இரட்சிப்பை கர்த்தர் நிறைவேற்றினார். யோவானாலும் இயேசு கிறிஸ்துவினாலும் நடத்தப்பட்ட விடுதலைக்கான செய்கைகளை விசுவாசிப்பதன் மூலம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் இரட்சிக்கப்பட்டோம்.

இயேசுவின் ஞானஸ்நானம்

  • இயேசு ஏன் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்?
  • உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துக்கொள்ளவே.

இயேசுவே தேவகுமாரனென்றும் அவர் நம் பாவங்களை எடுத்துப்போட்டாரென்றும் யோவான் ஸ்நானன் சாட்சி கூறினான். நம்முடைய இரட்சிப்பு குறித்து சாட்சி கூறியது கர்த்தரின் ஊழியனான யோவான் ஸ்நானனே. இதன் பொருள்,அவரே தாம் இரட்சகர் என்று கூறமாட்டார் என்பதல்ல. கர்த்தரின் சபையிலுள்ள அவரின் ஊழியர்கள் மூலமும் இரட்சிக்கப்பட்ட அவர் மக்களனைவரின் வாயின் மூலமும் கிரியைச் செய்கிறார்.

கர்த்தர் கூறுகிறார் புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்,அதின் போர் முடிந்தது என்றும்,அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும்,அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது” ( ஏசாயா 40:2,8 )

கிறிஸ்து பிறப்பதற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் கர்த்தர் ஏற்கனவே உறுதியளித்திருந்தார், “நீங்கள் இனி மேலும் பாவிகளில்லை. உங்கள் பாவங்களுக்காக கிரயஞ் செலுத்தினேன் ஆகவே போர் முடிந்ததுஇப்படியாக விடுதலையின் நற்செய்தியின் குரல் தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறது. இதுவே நியமிக்கப்பட்ட நற்செய்தி என்று அழைக்கப்படுகிறது.

யோவான் ஸ்நானனின் கிரியைகளை நாம் புரிந்து கொள்ளும்போதும்,யோவான் ஸ்நானனினால் இவ்வுலகின் அனைத்துப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதை உண்மையாகவே நாமறிந்துக் கொள்ளும்போது,நாமெல்லாம் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுவோம்.

நான்கு நற்செய்தி நூல்களும் யோவான் ஸ்நானனைக் குறித்து கூறுகின்றன. பழைய ஏற்பாட்டின் கடைசித் தீர்க்கதரிசியும் கர்த்தரின் ஊழியனான யோவான் ஸ்நானனைக் குறித்துச் சாட்சி கூறுகிறான். புதிய ஏற்பாடானது யோவான் ஸ்நானனின் பிறப்பு மற்றும் அவன் மூலம் பாவங்கள் செலுத்தப்பட்டதுடன் தொடங்குகிறது.

அவனை யோவான் ஸ்நானன் என்று நாமேன் அழைக்கிறோம்?அவன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்வித்ததால் அவனை அப்படி அழைக்கிறோம். ஞானஸ்நானம் என்பதன் பொருள் என்ன? அதன் பொருள் கடத்தப்படுதல், புதைக்கப்படுதல்,கழுவப்படுதல்’ -மற்றும் பழைய ஏற்பாட்டிலுள்ள கை வைத்தலுக்கும்சமமானதாக பொருள்படும்.

பழைய ஏற்பாட்டில்,ஒருவன் பாவம் செய்தால் களங்கமில்லாத பலியான,பலி மிருகத்தின் தலை மீது அப்பாவத்தைச் சுமத்தும் விதமாக அவன் தன் கைகளை அதின் தலை மீது வைத்தான். அப்பலியானது அப்பாவங்களுடன் மரித்தது. கைவைத்தல்என்பதன் பொருள் கடத்துவதற்குஎன்பதாகும். ஆகவே கைவைத்தல்என்பதும் ஞானஸ்நானம்என்பதும் வெவ்வேறு பெயர்களுடைய ஒரே காரியமாகும்.

அப்படியானால் இயேசுவின் ஞானஸ்நானம் என்பதன் பொருள் யாது?கர்த்தரின் ஏற்பாட்டின்படி அவருடைய ஞானஸ்நானமே பாவ நிவாரணத்திற்கான ஒரே வழியாக இருந்தது.

பழைய ஏற்பாட்டில்,பலியின் தலையில் தம் பாவங்களை சுமத்த பாவிகள் தம் கைகளை அப்பலி மிருகத்தின் தலையின் மீது வைக்க வேண்டியிருந்தது. பிறகு அவர்கள் அதன் கழுத்தை அறுத்து ஆசாரியர்கள் அதன் இரத்தத்தை தகன பலியிடும் மேடையிலுள்ள கொம்புகளில் ஊற்ற எடுத்து வந்தனர். அன்றாடப் பாவங்களுக்கான பாவ மன்னிப்பு முறை இதுவாக இருந்தது.

அப்படியானால்,வருடாந்தர பாவங்களிலிருந்து அவர்கள் எப்படி விடுதலைப் பெற்றனர்?

தலைமை ஆசாரியனான ஆரோன் இஸ்ரவேலின் அனைத்து மக்களுக்காகவும் பலியாராதனைச் செலுத்தினான். யோவான் ஸ்நானன் ஆரோனின் குடும்பத்தில் பிறந்ததால் அவன் தலைமை ஆசாரியனாவது சரியாக இருந்தது. மேலும் அவரின் விடுதலைக்கான வாக்குத்தத்தத்தின்படி கர்த்தர் அவனை கடைசி தலைமை ஆசாரியனாக முற்குறித்தார்.

யோவான் ஸ்நானனே மனிதகுலத்தின் பிரதிநிதி. இயேசுகிறிஸ்து பிறந்தவுடனே பழைய ஏற்பாடு முடிவடைந்ததாலே,அவனே மனிதகுலத்தின் கடைசி தலைமை ஆசாரியன். பழைய ஏற்பாட்டில் ஆரோன் தன் மக்களை பாவத்திலிருந்து விடுதலை செய்தது போல, புதிய ஏற்பாட்டில் யோவானைத் தவிர வேறு யாரால் இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்த முடியும்?பழைய ஏற்பாட்டின் கடைசி தலைமை ஆசாரியனாகவும் மனிதகுலத்தின் பிரதிநிதியாகவும்,இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் யோவான் ஸ்நானன் இயேசுவின் மீது உலகத்தின் அனைத்துப் பாவங்களையும் சுமத்தினான்.

இயேசுவின் மீது யோவான் எல்லாப் பாவங்களையும் சுமத்தியதால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் நாம் விடுவிக்கப்படலாம். பாவிகள் அனைவரையும் இரட்சிக்கும்படியாக இயேசு ஆட்டுக்குட்டியானார்,இப்படியாக கர்த்தரின் திட்டப்படி விடுதலைக்கான செய்கையை அவர் செய்தார். இயேசு யோவான் ஸ்நானன் கடைசித் தலைமை ஆசாரியன் என்றார். இந்த தலைமை ஆசாரியன் உலகின் பாவங்களையெல்லாம் அவர் மீது சுமத்தினான்.

அதனை ஏன் இயேசு தமக்குத் தாமே செய்திருக்கக் கூடாது?யோவான் ஸ்நானன் ஏன் அருக்குத் தேவைப்பட்டான்?யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வந்தமைக்கு காரணம் இருக்கிறது. அது பழைய ஏற்பாட்டின் சட்டத்தை நிறைவேற்றவும், பழைய ஏற்பாட்டை முழுமையாக்கவுமே.

இயேசுவானவர் கன்னி மரியாளிடத்தில் பிறந்தார். யோவான் ஸ்நானன் வயது சென்ற எலிசபெத்து என்பவளிடம் பிறந்தான்.

இவையெல்லாம் கர்த்தரின் செய்கைகள்,எல்லாப் பாவிகளையும் இரட்சிக்க அவர் அவற்றைத் திட்டமிட்டார். பாவத்துடனான நம் நிரந்த போரிலிருந்தும்,பாவம் நிறைந்த மனிதர்களின் துன்பத்திலிருந்தும் நம்மை இரட்சிக்க அவரின் ஊழியனான யோவானை முதலிலும்,பிறகு தன் சொந்த குமாரனையும் அவர் அனுப்பினார். யோவான் ஸ்நானனை மனிதகுல பிரதிநிதியாகவும்,கடைசி தலைமை ஆசாரியனாகவும் அவர் அனுப்பினார்.

ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் சிறந்தவன்

  • இவ்வுலகின் சிறந்த மனிதன் யார்?
  • யோவான் ஸ்நானன்.

      

மத்தேயு 11:7-14 ஐப் பார்ப்போமாக.அவர்கள் போன பின்பு இயேசு யோவானைக் குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?அல்லவென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்?மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ?மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அல்லவென்றால்,எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கத்தரிசியையோ?ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ,நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய்,உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும் பரலோக ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். யோவான் ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்கிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால்,வருகிறவனாகிய எலியா இவன் தான்.

மனந்திரும்புங்கள்,விரியன் பாம்பு குட்டிகளே!என்று கூக்குரலிட்ட யோவான் ஸ்நானனைப் பார்க்க மக்கள் வனாந்தரத்துக்குச் சென்றார்கள். இயேசு கூறினார், “அல்லவென்றால் எதைப் பார்க்கப் போனீர்கள்?மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்தவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்

யோவானின் சிறப்புகளைக் குறித்து இயேசுவே சாட்சி கூறினார். எதைப் பார்க்கப்போனீர்கள்?ஒட்டக மயிரைத் தரித்துக் கொண்டு தன் நுரையீரல் கிழியக் கத்தும் காட்டு மிராண்டியைச் சந்திக்கவோ? அவன் ஒட்டக மயிரை ஆடையாக தரித்தவனாக இருக்கக்கூடும். எதைப் பார்க்கப்போனீர்கள்?மெல்லிய உடை உடுத்திய மனிதனையா? மெல்லிய உடை உடுத்துபவர்கள் அரச மாளிகைகளில் இருக்கின்றனர். ஆனால் இவன் அரசர்களைவிடவும் உயர்ந்தவன்என்று இயேசு கூறினார். மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள், அல்லவென்றால்,எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ?ஆம் தீர்க்கத்தரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பழைய காலத்தில்,தீர்க்கதரிசிகள் அரசர்களை விடவும் உயர்ந்தவர்களாயிருந்தனர். யோவான் ஸ்நானன் அரசர்களை விடவும் உயர்ந்தவன். தீர்க்கதரிசியைவிடவும் உயர்ந்தவன். பழைய ஏற்பாட்டிலுள்ள அனைத்து தீர்க்கதரிசிகளையும் விட அவன் உயர்ந்தவன். மேலும் கூறினால்,கடைசி தலைமை ஆசாரியனும் மனிதகுல பிரதிநிதியுமான,யோவான்,முதல் தலைமை ஆசாரியனான ஆரோனை விடவும் உயர்ந்தவன். இயேசுவே யோவானைக் குறித்து சாட்சி கூறுகிறார்.

மனிதர்களின் பிரதிநிதி யார்?கிறிஸ்துவைத் தவிர்த்து பூமியின் சிறந்த மனிதன் யார்?யோவான் ஸ்நானன். ஆம்,தீர்க்கத்தரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே,இதோ,நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்,அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான்.

பாவத்தினுடனான போர் முடிந்தது என்று யோவான் ஸ்நானன் சாட்சி கூறினான். இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டிஇயேசு உலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்தார் என்று யோவான் ஸ்நானன் சாட்சி கூறுகிறான்.

மத்தேயு 11:11 இல் ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவன் எழும்பினதில்லையோவான் ஸ்நானனை விடவும் பெண்களிடம் பிறந்தவர்களில் சிறந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா?

ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில்என்பதன் பொருள் என்ன?அதன் பொருள் எல்லா மனிதர்களும் என்பதாகும். ஆதாமைத் தவிர எல்லா மனிதர்களும் பெண்களிடம் பிறந்தவர்களே. ஆம், பெண்களிடம் பிறந்தவர்களில்,யோவான் ஸ்நானனை விட உயர்ந்தவன் யாருமில்லை. ஆகவே அவனே கடைசி தலைமை ஆசாரியனும் மனிதகுல பிரதிநிதியுமாவான். யோவான் ஸ்நானனே தலைமை ஆசாரியன்,தீர்க்கதரிசி,நம் பிரதிநிதி.

பழைய ஏற்பாட்டில்,ஆரோனும் அவன் குமாரர்களும் கர்த்தருக்கு நிரந்தரமாக ஆசாரிய ஊழியஞ்செய்ய நியமிக்கப்பட்டனர். ஆரோன் மற்றும் அவனின் குமாரர்கள் மூலமாக அனைத்துப் பாவங்களும் கழுவப்படவேண்டும். அது கர்த்தரின் கட்டளையாகும்.

லேவியிலிருந்து வேறு யாரும் துணிச்சலுடன் காலடி வைத்தால்,நிச்சயமாக அவன் சாவான். அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம்,பலி பீடத்தின் மீதிருக்கும் நெருப்புக்கு விறகுகளைச் சேகரிப்பதும்,விலங்குகளின் தோலை உரிப்பதும், குடல்களைச் சுத்தப்படுத்துவதும்,கொழுப்புகளை எடுப்பதுமாகும். அவர்கள் ஆசாரியர்கள் செய்வதை தம்மாலும் செய்யமுடியும் என்று முயன்றால், அவர்கள் சாக வேண்டியது தான். அது கர்த்தரின் சட்டம். அவர்களால் கோட்டைத் தாண்ட முடியாது.

யோவான் ஸ்நானனைவிடவும் உயர்ந்த மனிதன் பூமியில் உருவானதில்லை. மானுடர்களில் அவனே சிறந்தவன். யோவான் ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்கிறார்கள்.

யோவான் ஸ்நானன் இயேசுவை ஞானஸ்நானம் செய்தபோது மனிதகுலத்தின் விடுதலையானது நிறைவேற்றப் பட்டது. ஆகவே இயேசுவை விசுவாசிப்பவர்களால் பரலோக இராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியும். அவர்கள் நீதிமான்களாவர். யோவானின் தந்தை தன் மகனைக் குறித்து எப்படி சாட்சி கூறுகிறானென்று பார்ப்போம்.

யோவானின் தந்தையான சகரியாவின் சாட்சி

  • தன் மகனைக் குறித்து சகரியா கூறிய தீர்க்கதரிசனம் என்ன?
  • யோவான் தன் மக்களுக்கு இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பதன் மூலம் அவன் கர்த்தரின் பாதையைச் செய்தான்.

லூக்கா 1:67-80 ஐ வாசிப்போமாக, “அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு,தீர்க்கதரிசனமாக: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு,உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக் கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும்,நம்மை பகைக்கிற யாருடைய கைகளினின்றும்,நம்மை இரட்சிக்கும் படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சன்யக் கொம்பை ஏற்படுத்தினார். நீயோ பாலகனே,உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணவும்,நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும்,அவருக்கு முன்னாக நடந்து போவாய். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும்,அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியிலே பலங்கொண்டு,இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்திரங்களிலே இருந்தான்.

சகரியா இரண்டு காரியங்களைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினான். மக்களின் அரசர் வந்துள்ளார் என்று தீர்க்கதரிசனம் கூறினான். 68 ஆம் வசனம் முதல் 73 ஆம் வசனம் வரை அவன் ஆனந்தத்துடன் தீர்க்கதரிசனம் உரைத்தான், கர்த்தர் தம் வாக்குத்தத்தத்தை மறவாமல் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணினபடி,இயேசு ஆபிரகாமின் சந்ததியினரை அவர்களின் எதிரியிடமிருந்து இரட்சிக்கும்படி கன்னி மரியாளிடத்தில் பிறந்தார்.

74ஆம் வசனத்தில் நம்முடைய சத்துருக்களினின்றும்,நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும்,நம்மை இரட்சிக்கும்படிக்கு.இது கர்த்தர் ஆபிரகாமிற்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் அவர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நினைவூட்டுவதாகும். அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். பயமில்லாமல் எனக்கு முன்பாக ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன்.

76 ஆம் வசனமுதல் அவன் தன் மகனைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தான். நீயோ பாலகனே,உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்கு பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும்,அவருக்கு முன்னாக நடந்து போவாய். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும்,அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருனோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.

இங்கு உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்கு பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும்என்று கூறினான். பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப் படுத்துவது யாரால் என்று அவன் கூறினான்?யோவான் ஸ்நானன். உங்களால் இதனைப் பார்க்க முடிகிறாதா?யோவான் ஸ்நானன்,கர்த்தரின் வார்த்தைகள் மூலமாக, இயேசுவே தேவகுமாரன்,அவர் உலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்தார் என்று நமக்கு அறிவைத் தரவேண்டியவனாக இருந்தான்.

மாற்கு 1ஐ இப்போது பார்ப்போமாக, “தேவனுடைய குமாரானாகிய இயேசுகிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ,நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய்,உமக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என்றும்,கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்,அவருக்கு பாதைகளைச் செவ்வைப் பண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும்,தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து,பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும்,அவனிடத்திற்குப் போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு,யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.” ( மாற்கு 1:1-5 )

மக்கள் புறஜாதியாரின் சிலைகளை வணங்குவதை விட்டுத் திரும்பி யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஆனால் யோவான் கூறினான், “நான் உங்களை நீரினாலே ஞானஸ்நானம் கொடுத்ததினால் நீங்கள் கர்த்தரிடம் திரும்பலாம். ஆனால் தேவகுமாரன் என்னிடம் ஞானஸ்நானம் பெறும்படி வருவார்,ஆகவே உங்கள் பாவங்களை அவர் மீது சுமத்த முடியும். நீங்கள் என்னால் ஞானஸ்நானம் பெற்றது போல்,நீங்கள் விசுவாசித்தால் அவரின் மீது உங்களின் எல்லாப் பாவங்களையும் பழைய ஏற்பாட்டில் கைவைத்து பாவங்களை கடத்தியது போல், அவர் மீது சுமத்த முடியும்.இதனை யோவான் சாட்சி கூறினான்.

யோர்தான் நதியில் இயேசு ஞானஸ்நானம் பெற்றார் என்பதன் பொருள் அவர் மரண நதியில் ஞானஸ்நானம் பெற்றார் என்பதாகும். ஒரு மரண ஊர்வலத்தில் நாம் பாடுகிறோம். இனிப்பானது,நாம் அழகிய கரையில் சந்திப்போம்,நாம் அழகிய கரையில் சந்திப்போம்நாம் மரிக்கும் போது யோர்தான் நதியைக் கடக்கிறோம். யோர்தான் நதி மரண நதியாகும். இயேசு மரண நதியில் ஞானஸ்நானம் பெற்றார், “பாவத்தின் சம்பளம் மரணமாகும்”.

நம் பாவங்களை இடமாற்றிய ஞானஸ்நானம்

  • புதிய ஏற்பாட்டின் கைவத்தல் யாது?
  • இயேசுவின் ஞானஸ்நானம்

மத்தேயு 3:13-17 இல் நாம் வாசிக்கிறோம். அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைச் செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க,நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு,இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று,ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ,வானம் அவருக்கு திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி,தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும்,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன்,இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

இயேசு யோர்தானுக்கு வந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். ஞானஸ்நானம் பண்ணு” “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்க,நீ என்னிடம் வரலாமா?” பரலோக ராஜ்யத்தினதும் பூமியினதும் தலைமை ஆசாரியர்கள் சந்தித்தனர்.

எபிரெயர் அதிகாரத்தின்படி,மெல்கிசேதேக்கின் கட்டளைப்படி இயேசுகிறிஸ்துவே நிரந்தர தலைமை ஆசாரியர். அவர் பரம்பரை எதுவும் இல்லாதவர். அவன் ஆரோனின் வம்சத்தவரோ அல்லது இவ்வுலக மனிதர்களின் வம்சத்தவரோ இல்லை. அவர் நம்மைப் படைத்த கர்த்தரின் குமாரன். அவர் அவரேயாவார். ஆகவே அவர் வம்சமேதுமில்லாதவர். ஆனால் அவர் பரலோகத்தின் மகிமையை விட்டு தம் மக்களைச் சேவிக்கும்படி உலகிற்கு இறங்கி வந்தார்.

இவ்வுலகிற்கு அவர் இறங்கி வந்ததன் காரணம்,சாத்தானின் வஞ்சனையினால் துன்பப்படும் எல்லாப் பாவிகளையும் இரட்சிக்கவே. அத்துடன்,யோவான் ஸ்நானனிடம் அவர் பெற்ற ஞானஸ்நானம் மூலம் இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.

இப்பொழுது இடங்கொடு”, இடங்கொடு! இயேசு மனிதகுலத்தின் பிரதிநிதிக்கு கட்டளையிட்டு தம் தலை வணங்கினார். பழைய ஏற்பாட்டில், கர்த்தருக்கு பலியானது காணிக்கையாக கொடுக்கப்பட்டபோது,பாவியோ அல்லது தலைமை ஆசாரியனோ அதன் தலைமீது கைவைத்து பாவங்களைச் சுமத்தினர். ஒருவனின் கைவைத்தல்என்பதன் பொருள் கடத்துதலாகும்.

இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். பழைய ஏற்பாட்டில் கைவைப்பது போன்றதே இது என்று பொருளாகும். கடத்துவது’, ‘அடக்கம் பண்ணுவது’, ‘கழுவுதல்’, ‘பலியிடுதல்எல்லாம் ஒன்றேயாகும். புதிய ஏற்பாடு நனவாகவும்,பழைய ஏற்பாடு அதின் நிழலாகவுமிருக்கிறது.

பழைய ஏற்பாட்டில்,பாவி ஒருவன் தன் கையை ஆட்டுக்குட்டியின் மீது வைத்த போது,அவன் பாவங்கள் ஆட்டுக் குட்டியின் மீது சுமத்தப்பட்டு அந்த ஆட்டுக்குட்டி மரித்தது. ஆட்டுக்குட்டி மரித்தபோது,அது அடக்கஞ் செய்யப்பட்டது. ஆட்டுக்குட்டியின் மீது கை வைத்தவனின் பாவங்கள் ஆட்டுக்குட்டியின் மீது இடமாற்றம் செய்யப்பட்டதால்,ஆட்டுக் குட்டியானது பாவத்துடன் மரித்தது. அந்த ஆட்டுக் குட்டியின் மீது பாவங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால்,அந்த ஆட்டுக்குட்டியை எடுத்து வந்தவன் பாவமற்றவனானா?

இந்த கைகுட்டியை பாவமாகவும் இந்த மைக்ரோபோனை ஆட்டுக்குட்டியாகவும் கொள்க. நான் இந்த மைக்ரோபோனின் மீது கைவைக்கும்போது, ஆட்டுக்குட்டியான இந்த மைக்ரோபோனின் மீது இப்பாவம் இடமாற்றம் செய்யப்பட்டது. இப்படி இருக்கவேன்டுமென கர்த்தரே திட்டமிட்டார். உன் கையை வைத்துஆகவே ஒருவன் பாவங்களிலிருந்து விடுதலையாகும்படி,ஒருவன் தன் கைகளை வைக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு,அவன் பாவமற்றவன். இயேசுவின் ஞானஸ்நானமானது கழுவுவதற்கும்,அடக்கம் செய்வதற்கும்,அவரின் மீது பாவங்களை சுமத்துவதுமாகும். அது அதின்படியே பொருள்படுகிறது.

  • எல்லா நீதியையும் நிறைவேற்றுவது என்பதன் பொருள் யாது?
  • இயேசுவின் மீது பாவங்களை சுமத்துவதன் மூலம் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போடுதலாகும்.

ஆகவே,இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொள்ள இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்றபோது,அவை எல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டதா?உலகின் எல்லாப் பாவங்களும் அவர்மீது சுமத்தப்பட்டு எல்லா மக்களும் விடுவிக்கப்பட்டார்கள். பழைய ஏற்பாட்டில் பாவங்கள் பலியின் மீது சுமத்தப்பட்டதற்கு இது ஒப்பானதாகும். இயேசு இவ்வுலகிற்கு வந்து யோர்தான் நதியில் கூறினார். இப்பொழுது இடங்கொடு,இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” ( மத்தேயு 3: 15 )

பிறகு தன்னை ஞானஸ்நானம் பண்ணும்படி அனுமதித்தார். இயேசு யோவானிடம் அவர் ஞானஸ்நானமானது எல்லா நீதியையும் நிறைவேற்றவே என்று கூறினார். எல்லா நீதியையும்என்பது மிகவும் சரியானதும் பொருந்தக் கூடியதுமானதும் என்று பொருள்படும். இப்படிஅவர்கள் எல்லா நீதியையும் நிறைவேற்றுவது பொருத்தமாயிருக்கிறது. யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வதும் யோவானால் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தும்படியாக அவருக்கு ஞானஸ்நானம் செய்வதும் சரியானது என்று இது பொருள்படும்.

இயேசுவின் ஞானஸ்நானம்,அவரின் பலி மற்றும் நம் விசுவாசத்தின் அடிப்படையில் கர்த்தர் விடுதலையை அருளுகிறார். எல்லா மனிதர்களும் பாவத்தினால் துன்புற்று,அவர்களின் பாவத்தினால் சாத்தானால் சித்திரவதைச் செய்யப் பட்டனர்.ஆகவே அவர்கள் இரட்சிக்கப்படும் பொருட்டும் அவர்களை பரலோகத்திற்குள் பிரவேசிக்கச் செய்யும் பொருட்டும் மனிதகுலத்தின் பிரதிநிதியாகிய நீ, எல்லா மக்களுக்காகவும் எனக்கு ஞானஸ்நானம் செய். நான் உன்னால் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும். அப்பொழுது விடுதலைக்கான நம் செய்கைகள் முழுமையடையும்.

   புரிந்து கொண்டேன்.

ஆகவே யோவான் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அவன் தன் கைகளை இயேசுவின் தலை மீது வைத்து உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தினான். நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்ட இயேசுவே நம் இரட்சகர். அவரின் விடுதலையை விசுவாசித்து நாம் இரட்சிக்கப்பட்டோம். நீ விசுவாசிக்கிறாயா?

அவரின் பொது ஊழியத்தின் முதல் வேலையான இயேசுவின் யோர்தான் நதியில் மனிதகுல பிரதிநிதி அளித்த ஞானஸ்நானத்திற்கு பிறகு,உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது சுமந்து கொண்டு மூன்றரையாண்டுகள் நற்செய்தியைப் போதித்துக்கொண்டு பயணம் செய்தார்.

நானும் உன்னை ஆக்கினைத் தீர்பிற்குட் படுத்துவதில்லைஎன்று விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் அவர் கூறினார். அவரால் அவளை நியாயந்தீர்க்க முடியாது ஏனெனில் அவர் அவளின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு அதற்காக அவர் சிலுவையில் மரிக்கும்படியாக இருந்தார். கெத்சமனே என்ற இடத்தில் அவர் ஜெபித்தபோது, அவரிடமிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்துப்போடும்படி பிதாவிடம் மூன்று முறை கெஞ்சினார். ஆனால் சீக்கிரமாகவே, “ஆகிலும்,என் சித்தத்தின்படியல்ல,உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவதுஎன்று கூறினார்.

இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி

  • இயேசு எவ்வளவு பாவங்களை ஏற்றுக்கொண்டார்?
  • உலகின் அனைத்துப் பாவங்களையும்.

யோவான் 1:29இல் மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ,உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியோவான் ஸ்நானன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தான். மறுநாளில் இயேசு தன்னை நோக்கி வருகிறதை அவன் கண்டு மக்களிடம் இதோ,உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான். இது அவனின் சாட்சியாகும்.

தேவனுடைய குமாரன் இவ்வுலகிற்கு வந்து உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார். யோவான் 1:35-36இல், “மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டும் பேரும் நிற்கும்போது,இயேசு நடந்து போகிறதை அவன் கண்டு: இதோ,தேவ ஆட்டுக்குட்டி என்றான்.

தேவ ஆட்டுக்குட்டி என்பதன் பொருள்,பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களுக்காக மரித்த பலிக்கு அவர் சமமானவர் என்பதாகும். உனக்காகவும் எனக்காகவும், நம்மைப் படைத்தவரான தேவ குமாரன்,இவ்வுலகிற்கு இறங்கி வந்து நம் எல்லாப் பாவங்களையும் சுமந்தார்; உலகம் உருவானது முதலுள்ள பாவங்களிலிருந்து,அது முடியும் வரை,மூலப் பாவங்களிலிருந்து நம் தவறு வரை அனைத்தையும் சுமந்தார். அவர் தம் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் நம்மனைவரையும் விடுவித்தார்.

இயேசு நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்து நம்மை விடுதலையாக்கினார். இதனைப் புரிந்து கொள்கிறீர்களா? “இதோ,உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி

அது 2000வருடங்களுக்கு முந்தியது. அதன் பொருள் அவர் உலகிற்கு இறங்கி வந்து 2000வருடங்களாகிவிட்டது. கி.பி. 30இல்,உலகின் எல்லா பாவங்களையும் இயேசு தம்மீது ஏற்றுக்கொண்டார். கி.பி. 1இயேசு பிறந்த ஆண்டாகும். இயேசுவுக்கு முன் உள்ள நேரத்தை கிறிஸ்துவுக்கு முன் கி.மு. என்கிறோம். ஆகவே,இயேசு இவ்வுலகிற்கு வந்து கிட்டத் தட்ட 2000ஆண்டுகள் ஆகின்றன.

கி.பி. 30இல்,இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். மறுநாளிலே யோவான் மக்களிடம் கூறினான், “இதோ,உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டிஇதோ அவர்களின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்த இயேசுவை விசுவாசிக்கும்படி அவன் மக்களிடம் கூறினான். நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்த தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவைக் குறித்து அவன் சாட்சி கூறுகிறான்.

இயேசு நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டு பாவத்துடனான நம் நிரந்தரப் போரை முடிவிற்கு கொண்டு வந்தார். தேவகுமாரன் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டதால் நாம் இப்போது பாவமில்லாமல் இருக்கிறோம். உன் மற்றும் என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவர் எடுத்துப்போட்டதாக யோவான் ஸ்நானன் சாட்சி கூறினான். அவன் (யோவான்) தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச் சாட்சிகொடுக்கச் சாட்சியாக வந்தான் (யோவான் 1:7).

யோவானின் சாட்சி இல்லாது,இயேசு நம் பாவங்களை எடுத்துப் போட்டார் என்பதை நாமெப்படி அறிய முடியும்?அவர் நமக்காக மரித்தார் என்று வேதாகமம் அடிக்கடி கூறுகிறது,ஆனால் அவர் நம் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப்போட்டார் என்று கூறுவது யோவான் ஸ்நானனே.

  • உலகின் பாவங்களில் எத்தனைப் பாவங்களுள்ளன?
  • உலகம் தோன்றியது முதல் முடிவு வரை மனிதர்களின் அனைத்துப் பாவங்களும் உள்ளன.

அநேகர் இயேசுவின் மரணத்திற்கு பிறகு சாட்சி கூறினர். ஆனால் அவர் உயிரோடிருக்கும் போது சாட்சி கூறியது யோவான் மட்டுமே,இயேசுவின் சீடர்கள் கூட அவரின் பாவ விடுதலைக் குறித்து சாட்சி கூறினார்கள். அவர் நம் பாவங்களை எடுத்துப் போட்டாரென்றும்,அவரே நம் இரட்சகர் என்றும் சாட்சி கூறினர்.

இயேசு உலகின் பாவத்தைச் சுமந்து தீர்த்தார். இப்பொழுது நீ 100 வயதுடையவன் இல்லை. சரியா?

அவர் 30 வயதுடையவராயிருந்த போது உலகின் பாவங்களை சுமந்தார்.

 


இயேசுவின் வருகைக்கு முன் 4000 ஆண்டுகளாகிற்று என்று கொள்வோம். இயேசுவின் வருகைக்குப் பின் 2000 ஆண்டுகளாயிற்று. அதற்கு எத்தனைக் காலமாகும் என்று நமக்குத் தெரியாவிட்டாலும், முடிவு சீக்கிரமாய் உண்டு. அவர் நான் அல்பாவும், ஒமெகாவும்,ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” (வெளி 22:13) என்று கூறினார்.

ஆகவே,நிச்சயமாக முடிவு உண்டு. நாம் இப்போது 2002 ஆம் வருடம் என்ற புள்ளியில் இருக்கிறோம். இயேசு கி.பி. 30 இல் நம் பாவங்களை எற்றுக்கொண்டார். அது அவர் சிலுவையில் மரிப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகும்.

உலகின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டிஅவர் உன்னுடைய மற்றும் என்னுடைய பாவங்கள் உட்பட உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துப் போட்டார். இயேசுவின் பிறப்பிலிருந்து நாம் இத்தனைத் தொலைவிலிருக்கிறோம். அது 2000 வருடங்களாகும். இயேசு நம்முடைய பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்தபிறகு 2000 ஆவது ஆண்டில் நமது வாழ்க்கையை நடத்துகிறோம். நாம் இந்த நாளிலும் வயதிலும் கூட பாவஞ்செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற ஆட்டுக்குட்டி இயேசுவே. நாம் பிறந்த நொடியிலிருந்து இவ்வுலகில் நாம் வாழத் தொடங்குகிறோம்.

நாம் பிறந்த நொடியிலிருந்து பாவஞ் செய்கிறோமா, இல்லையா? - நாம் செய்கிறோம். - நாம் எல்லாவற்றையும் பார்ப்போமாக. நாம் பிறந்த நாளிலிருந்து 10 வயது வரை, நாம் பாவஞ்செய்கிறோமா,அல்லது நாம் செய்வதில்லையா - நாம் செய்கிறோம். அப்படியானால் இப்பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதா இல்லையா? சுமத்தப்பட்டுவிட்டன. - நம் பாவங்களெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டதால், அவர் நம் இரட்சகர். அப்படி இல்லையென்றால்,அவர் எப்படி நம் இரட்சகராயிருக்க முடியும்?எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன.

11 இலிருந்து 20 வயதுவரை,நாம் பாவஞ்செய்கிறோமா, இல்லையா?நம்முடைய இருதயத்திலும், நம்முடைய செயல்களிலும் பாவஞ்செய்கிறோம்ஸ. அதில் நாம் சிறந்தவர்கள். பாவஞ்செய்யக்கூடாது என்று நாம் போதிக்கப் பட்டிருந்தாலும் வெகு இலகுவாக பாவஞ்செய்கிறோம்.

அப்பாவங்களெல்லாம் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். நாமெப்படிப் பட்டவர்களாயிருப்போம் என்று அவருக்குத் தெரியுமாகையால்,அப்பாவங்களை முன்பே எடுத்துவிட்டார்.

வழக்கமாக நாம் எத்தனை ஆண்டுகள் இப்பூமியில் வாழ்வோம். 70 வருடங்கள் என்று கொள்வோம். இந்த 70 வருடங்களும் நாம் செய்த பாவங்களைச் சேர்த்தால் அது எத்தனை பாரமிக்கதாக இருக்கும்? 8 - டன் லாரிகளில் அவற்றை நிரப்பினால்,அது 100 லாரிகளுக்கு மேலாயிருக்கும்.

நம் வாழ்நாளில் எவ்வளவு பாவம் செய்வோம் என்று சற்று யோசித்துப்பார். அவை இவ்வுலகின் பாவங்களில்லையா,அல்லது அவை அப்படி இல்லையா? அவை உலகின் பாவங்கள். நாம் 20 மற்றும் 30வயதிற்கிடையே கூட பாவஞ்செய்கிறோம். அவையும் கூட இவ்வுலகின் பாவங்களே.

மனிதர்களின் இரட்சகராகிய இயேசுகிறிஸ்து

  • இயேசு எவ்வளவுப் பாவங்களைச் சுமந்து தீர்த்தார்?
  • நம் மூதாதையர்களின் பாவங்களையும்,நம்முடையவற்றையும் இவ்வுலகின் முடிவு வரை உள்ள நம் சந்ததியினரின் பாவங்களையும் அவர் எடுத்துப்போட்டார்.

அப்பாவங்கள் அனைத்தையும் கழுவிப்போட்டதாக இயேசு நம்மிடம் கூறுகிறார். இயேசுவால் தமக்குத்தாமே எனக்கு ஞானஸ்நானங்கொடு என்று கூறமுடியாது,ஆகவே மனிதகுலத்தின் பிரதிநிதியான அவரின் ஊழியனான இயேசுவை முன்னதாக அனுப்பினார். அவரின் நாமம் அதிசயமானவர்,ஆலோசனைக் கர்த்தா,வல்லமையுள்ள தேவன்.அவராலும் அவரின் ஞானத்தினாலும் அவரின் ஆலோசனையினாலும்,மனிதகுலத்தின் முன்னோடியை முன்னால் அனுப்பினார். மேலும் தேவகுமாரனாகிய அவரும் மாமிசமாக வந்து அவன் மூலமாக இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். அது எத்தனை அதிசயமான இரட்சிப்பு?

அது அதிசயமானது இல்லையா? ஆகவே,ஒரே ஒரு முறைமட்டும் யோவான் ஸ்நானனால் அவர் ஞானஸ்நானம் பெற்றதால்,இவ்வுலகின் அனைத்து மக்களின் சகலப் பாவங்களையும் கழுவியதுடன்,சிலுவையிலறையப் பட்டதன் மூலம் எல்லோரையும் விடுவித்தார். இதனை நினைத்துப்பார். 20 இலிருந்து 30 வரை, 30 இலிருந்து 40 வரை, 40 இலிருந்து 60 வரை, 70 வரை, 100வரை உன் எல்லாப் பாவங்களும்,உன்னுடைய பிள்ளைகளின் பாவஙகளும் உள்ளன. என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவர் துடைத்துப்போட்டார். அவரே மனிதகுல இரட்சகராகிய இயேசுகிறிஸ்து.

யோவான் ஸ்நானன் நம் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தியதாலும்,அப்படியாக கர்த்தர் திட்டமிட்டபடியாலும், இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் நம்மால் விடுதலையாக முடியும். நீயும் நானும் பாவிகளா?நம்முடைய எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதா இல்லையா?நாம் பாவிகளில்லை,நம் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டு விட்டன.

உலகில் பாவமிருக்கிறது என்று துணிச்சலுடன் யாரால் கூறமுடியும். இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். நாம் பாவம் செய்வோம் என்பது அவருக்குத் தெரியும்,ஆகவே எதிர்காலப் பாவங்களையும் கூட அவர் சுமந்தார். நம்மில் சிலர் 50 வயதாகாதவர்களாக இருக்கலாம். நானுட்பட, நாமெல்லாரும் நிரந்தரமாக வாழ்வதைப் போல் நம்மைக் குறித்து பேசுகிறோம்.

நம்மில் அநேகர் கொடூரமான முறையில் வாழலாம். இப்படி நான் விவரிக்கிறேன். மேபிளையின் அரை வாழ் நேரம் எவ்வளவு? அது 12 மணி நேரமாகும்.

என் நல்ல நேரம்! நான் இத்தகைய மனிதர்களைச் சந்தித்தேன். அவன் என் மீது நஞ்சை ஊற்றினான். நான் கிட்டதட்ட சாகுமளவிற்கு நெருக்கப்பட்டேன். ஆனால் உங்களுக்குத் தெரியுமாஸ.அது 12 மணி நேரமே வாழ்ந்திருந்தபோதும் அதனால் பேசுவதை நிறுத்த முடியவில்லை. ஆனால் அதன் வாழ்க்கையில் பாதி ஏற்கெனவே முடிந்துவிட்டது.

சாயங்காலம் 7 அல்லது 8 ஆகும்போது அது அதன் நாளின் கடைசி வெளிச்சத்தைப் பார்க்கிறது, பிறகு சிறிது நேரத்தில் மரணம். சில 20 மணிநேரம் வாழ்ந்திருக்கும்,சில 21 மணிநேரம்,சில முதிர்ந்தவயதான 24 மணி நேரமும் வாழ்ந்திருக்கும். அவை தம் வாழ்நாளின் அனுபவங்களைப் பேசும்,ஆனால் அவை நமக்கு எப்படித் தோன்றும்?நம் 70 அல்லது 80 வயது வரை வாழ்வதால் நாம் கூறலாம். என்னைச் சிரிக்கச் செய்யாதேநம் கண்களில் அவற்றின் வாழ்வு பொருளற்றது.

கர்த்தர் நிரந்தரமானவர். அவர் நித்தியமாக வாழ்பவர். தொடக்கத்தையும் முடிவையும் குறித்து முடிவெடுப்பது அவரே. அவர் நித்தியமாக வாழ்வதனால், அவர் நிரந்தரம் என்ற நேரச் சட்டத்தில் வாழ்கிறார். அவர் நம்மை அவருடைய நிரந்தரம் என்ற நிலையிலிருந்து நோக்குகிறார்.

முன்னொரு காலத்தில் உலகின் பாவங்களையெல்லாம் அவர் சுமந்து,சிலுவையில் மரித்து, “முடிந்ததுஎன்றார். அவர் 3 ஆம் நாள் உயிரோடெழுந்து,பரலோக இராஜ்யம் சென்றார். அவர் இப்பொழுது,நித்தியத்தில் வாழ்கிறார். இப்பொழுது அவர் கீழே நம் ஒவ்வொருவரையும் நோக்கிப் பார்க்கிறார்.

ஒரு மனிதன் கூறுகிறான், “ஓ அன்பானவரே,நான் இத்தனைப் பாவஞ்செய்தேன். நான் 20வருடங்களே வாழ்ந்திருந்தாலும், நான் இத்தனைப் பாவங்களைச் செய்தேன்.” “நான் 30 வருடங்கள் வாழ்ந்திருந்தேன். ஆகவே,அதிகமான பாவங்களைச் செய்தேன். அது மிகவும் அதிகமானது. நான் எப்படி மன்னிப்புப் பெற முடியும்?”

ஆனால் நித்தியத்தில் இருக்கும் நம் கர்த்தர் என்னை சிரிக்கும்படிச் செய்யாதே. நான் இதுவரை நீ செய்த பாவங்களை மட்டுமல்ல,நீ பிறப்பதற்கு முன் உன் மூதாதையர்கள் செய்த பாவங்களையும்,உன் மரணத்திற்குப் பின் வாழப்போகும் உன் சந்ததியினரின் பாவங்களையும் கூட விடுவித்து விட்டேன்அவர் தம்முடைய நித்தியமான நேரச் சட்டத்திலிருந்து உன்னிடம் இதனைக் கூறுகிறார். இதனை நீ விசுவாசிக்கிறாயா? அதனை விசுவாசி. உனக்கு இலவசமாக கொடுக்கப்பட்ட இரட்சிப்பை பெற்றுக்கொள். பிறகு பரலோக இராஜ்யத்திற்குள் செல்.

நம்முடைய சிந்தனைகளை விசுவாசிக்காது, கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசி. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறதுதேவ ஆட்டுக்குட்டியானவர் ஏற்கெனவே உலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்ததால் எல்லா நீதியும் நிறைவேற்றப்பட்டது. உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு எடுத்துபோட்டார். அப்படிச் செய்தாரா,அல்லது அப்படிச் செய்யவில்லையா?அப்படிச் செய்தார்.

  • சிலுவையின் முடிவில் இயேசு என்ன கூறினார்?
  • முடிந்தது

   இயேசு இவ்வுலகின் பாவங்களையெல்லாம் தன் மீது சுமந்து, பொந்தியு பிலாத்துவின் சபையில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார்.

அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு,எபிரேயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்கு புறப்பட்டுப் போனார். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டு பேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி,சிலுவையின் மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால்,யூதரில் அநேகர் அந்த மேல் விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரேயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது” (யோவான் 19:17-20).

அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்பு என்ன நடந்தது என்று பார்ப்போம். அதன் பின்பு,எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: வேத வாக்கியம் கூறுவதற்கிணங்க அவர் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். தாகமாயிருக்கிறேன் என்றார் காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப் பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோபுத்தண்டில் மாட்டி,அவர் வாயினிடத்தில் நீட்டிக் கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கின பின்பு,முடிந்தது என்று சொல்லி,தலையைச் சாய்த்து,ஆவியை ஒப்புக்கொடுத்தார்” (யோவான் 19:28-30).

அவர் காடியை வாங்கின பின்பு முடிந்ததுஎன்று கூறி,தலையைச் சாய்த்து தன் ஆவியை ஒப்புக்கொடுத்தார். அவர் மரித்துப்போனார். இயேசு 3 நாட்களுக்குப் பிறகு உயிரோடெழுந்து பரலோகம் ஏகினார்.

எபிரெயர் 10:1-9 இற்கு திருப்புவோமாக. இப்படியிருக்க நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல்,அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால்,வருஷந்தோறும்,இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரே விதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்த மாட்டாது. பூரணப்படுத்துமானால்,ஆராதனை செய்கிறவர்கள் ஒரு தரம் சுத்தமாக்கப் பட்டபின்பு,இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால்,அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?அப்படி நிறுத்தப்படாதபடியால்,பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவு கூறுதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும்,காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்தி செய்யமாட்டாதே. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையயும் நீர் விரும்பவில்லை. ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும்,பாவ நிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே,உம்முடைய சித்தத்தின்படி செய்ய,இதோ வருகிறேன்,புஸ்தகச் சுருளில்,என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டு வருகிற பலிகளைக் குறித்து மேற் சொல்லியபடி: பலியையும் காணிக்கையையும்,சர்வாங்க தகனபலிகளையும்,பாவ நிவாரண பலிகளையும் நீர் விரும்பவில்லை. அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்ன பின்பு: தேவனே; உம்முடைய சித்தத்தின்படி செய்ய,இதோ வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.

நிரந்தரமான பாவ விடுதலை

  • இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கிய பின் நம் தினப்பாவங்களை எப்படிச் சமாளிக்கிறோம்?
  • அவரின் ஞானஸ்நானம் மூலம் இயேசுவானவர் எல்லாப் பாவங்களையும் துடைத்துப்போட்டார் என்று உறுதிப்படுத்துவதன் மூலம்.

சட்டமானது வருகிற நன்மைகளின் நிழலாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டின் பலிகளான, செம்மறியாடுகளும்,வெள்ளாடுகளும் இயேசுகிறிஸ்து வருவார் என்றும்,அவற்றைப் போன்றே எல்லாப் பாவங்களையும் துடைப்பார் என்றும் வெளிப்படுத்தின.

தாவீது,ஆபிரகாம் மற்றவர்கள் உட்பட பழைய ஏற்பாட்டின் எல்லா மக்களும் பலியிடும் முறையை முழுமையாக அறிந்து அதனை விசுவாசித்தனர். மேசியாவாகிய கிறிஸ்து (கிறிஸ்து என்பதன் பொருள் இரட்சகராகும்) ஒரு நாளில் வந்து அவர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போடுவார் என்று இது வெளிப்படுத்திற்று. அவர்கள் தம் விடுதலையை விசுவாசித்து,நம்பிக்கையின் மூலம் இரட்சிக்கப்பட்டார்கள்.

சட்டமானது வரப்போகிற நன்மைகளின் நிழலாயிருந்தது. பாவங்களுக்காக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் பலி காணிக்கை செலுத்துவதினால் அது நம்மை முழுமையாக விடுதலையாக்காது. ஆகவே முழுமையானவரும் களங்கம் இல்லாதவருமான கர்த்தருடைய குமாரன் உலகிற்கு வரவேண்டியிருந்தது.

அவரைப் பற்றினவைகளை குறித்து எழுதப்பட்டுள்ளபடி தம் பிதாவின் சித்தத்தின் படிச் செய்ய வந்ததாக அவர் கூறினார். உம்முடைய சித்தத்தின் படி செய்ய, இதோ,வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலை நிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.பழைய ஏற்பாட்டில் கூறியுள்ளபடி இயேசுகிறிஸ்து நம் பாவங்களை சுமந்து தீர்த்தாலும்,நாம் அவரை விசுவாசிப்பதாலும் நாம் நம் பாவங்களிலிருந்து விடுவிக்கப் பட்டோம்.

எபிரெயர் 10:10 ஐ வாசிப்போம். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப் பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம்.இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம். நாம் பரிசுத்தமாக்கப் பட்டோமா இல்லையா? - பரிசுத்தமாக்கப் பட்டோம்.

இதன் பொருள் என்ன?பிதாவாகிய கர்த்தர் தம் குமாரனை அனுப்பி அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தி அதற்காக அவரை ஒரேதரமாக சிலுவையில் நியாயந்தீர்த்தார். இப்படியாக பாவத்தினால் அவதிப்படும் நம் அனைவரையும் அவர் விடுவித்தார். அது கர்த்தரின் சித்தமாயிருந்தது.

நம்மை விடுவிக்கும்பொருட்டு,இயேசு தம்மை ஒரேதரமாக பலியிட்டார். ஆகவே,நம்மால் பரிசுத்தராக முடிகிறது. நாம் பரிசுத்தராக்கப்பட்டோம். நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் இயேசு தம்மைப் பலியாகக் கொடுத்து நமக்கு பதிலாக அவர் மரித்ததினாலே நாம் தீர்க்கப்படவேண்டியதில்லை.

பழைய ஏற்பாட்டின் பலியானது ஒவ்வொரு நாளும் செலுத்தப்பட்டது. ஏனெனில் புதிய பாவங்களைக் கழுவ இன்னொரு பலி தேவைப்பட்டது.

இயேசு பேதுருவின் கால்களைக் கழுவியதற்கான ஆவிக்குரிய பொருள்

  • மனம் வருந்தி ஜெபிப்பதற்கான பாவங்கள் இன்னமும் இருக்கின்றனவா?
  • இல்லை.

யோவான் 13 இல்,இயேசுவானவர் பேதுருவின் காலைக் கழுவும் சம்பவமிருக்கிறது. அவர் பேதுருவின் கால்களைக் கழுவியதற்கான காரணம், அவன் எதிர்காலத்தில் பாவம் செய்வான்,ஆனால் அப்பாவமும் கூட மன்னிக்கப்பட்டுவிட்டது என்று போதிக்கவே. பேதுரு எதிர்காலத்தில் மீண்டும் பாவஞ்செய்வான் என்று இயேசுவுக்குத் தெரியுமாகையால்,அவர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அவன் கால்களைக் கழுவினார்.

துரு அவரைத் தடுக்க முயன்றான். ஆனால் இயேசு கூறினார். நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய்,இனிமேல் அறிவாய் என்றார்.இதன் பொருள்,இதன் பிறகும் நீ பாவம் செய்வாய். நான் உன் அனைத்துப் பாவங்களையும் கழுவிவிட்டாலும்,நீ என்னை மறுதலித்து இன்னும் பாவஞ்செய்வாய். ஆகவே,சாத்தானை எச்சரிக்கும்படியாக உன் கால்களைக் கழுவி,உன் எதிர்காலப் பாவங்களையும் ஏற்கெனவே எடுத்துபோட்டதால் அவன் உன்னை சோதிக்காதிருக்க இப்படிச் செய்கிறேன்.

நாம் தினமும் மனம் வருந்தவேண்டுமென நமக்கு கூற அவர் பேதுருவின் கால்களைக் கழுவினாரா? இல்லை. ஒவ்வொருநாளும் நாம் விடுதலை அடையும்படியாக நாம் மனம் வருந்தவேண்டுமானால்,நம் எல்லாப் பாவங்களையும் இயேசு ஒரேதரமாக எடுத்துப்போட்டிருக்க மாட்டார்.

நம்மை ஒரேதரமாக பரிசுத்தப்படுத்தியதாக இயேசு கூறினார். நாம் ஒவ்வொரு நாளும் மனம் வருந்த வேண்டுமானால்,நாம் பழைய ஏற்பாட்டுக் காலத்திற்குச் சென்று விடுவோம். அப்பொழுது யாரால் நீதிமானாக முடியும்?யாரால் முழுமையாக விடுவிக்கப்பட முடியும்?நாம் கர்த்தரை விசுவாசித்திருந்தாலும், பாவமின்றி யாரால் வாழ முடியும்?

மனம் வருந்துதலினால் யாரால் பரிசுத்தனாக முடியும்?ஒவ்வொரு நாளும் இடைவிடாது பாவஞ்செய்கிறோம். அப்படியிருக்க ஒவ்வொரு பாவத்திற்கும் நாமெப்படி பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க முடியும்?ஒவ்வொரு நாளும் நம்மை விடுவிக்க அவரைத் தொந்தரவு செய்யுமளவிற்கு நாமெப்படி தடித்த தோலுடையவர்களாயிருக்க முடியும்?

காலையில் செய்யும் பாவங்களை இரவிலும் சாயங்காலம் செய்யும் பாவங்களை அடுத்த நாள் காலையிலும் மறக்கும் சுபாவமுள்ளவர்களாக நாமிருக்கிறோம். நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும் மனம் வருந்துவது என்பது நமக்கு சாத்தியமில்லாத ஒன்று.

ஆகவே,இயேசு ஒருமுறை ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் ஒருமுறை அறையப்பட்டு,நம்மை எப்போதும் பரிசுத்தவான்களாகச் செய்தார். உங்களால் இதனைப் புரிந்துகொள்ள முடிகிறாதா? நாம் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரேதரமாக விடுவிக்கப்பட்டோம். நாம் மனம் வருந்தும் போதெல்லாம் பாவவிடுதலை நமக்கு கிடைப்பதில்லை.

உங்களுடைய,என்னுடைய மற்றும் நம் அனைவருடைய பாவங்களையும் இயேசு சுமந்து தீர்த்தார் என்று விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப் பட்டோம்.

அன்றியும்,எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும்,பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்தி செய்யக்கூடாத ஒரே வித பலிகளை அநேகந்தரம் செலுத்தி வருகிறவனாயும் நிற்பான். இவரோ,பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி,என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து,இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். இதைக் குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சி சொல்லுகிறார். எப்படியெனில்,அந்த நாட்களுக்குப் பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்த பின்பு,அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே” (எபிரேயர் 10:11-18)

இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால்என்பதன் பொருள் யாது? 10:18 இல்,பாவங்களும், எந்தப் பாவங்களும்,எதுவும் விடப்படாமல் அனைத்தும் நிரந்தரமாக ஒழிக்கப்பட்டது. கர்த்தர் அவைகளை மன்னித்தார். இதனை நீ விசுவாசிக்கிறாயா? “இவைகள் மன்னிகப்பட்டதுண்டானால்,இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.

இதுவரை நடைபெற்றவைகளையெல்லாம்,கீழ்க்கண்டவாறு சுருக்கமாக கூறுவோம். யோவான் ஸ்நானன் இயேசுவின் மீது தன் கைகளை வைக்கவில்லையென்றால்,வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,இயேசுவிற்கு அவன் ஞானஸ்நானம் கொடுத்திருக்கவில்லை என்றால்,நாம் விடுவிக்கப்பட்டிருப்போமா?விடுவிக்கப் பட்டிருக்க மாட்டோம். பின்னோக்கி யோசிப்போமாக. இயேசு யோவான் ஸ்நானனை மனித குல பிரநிதியாகத் தேர்ந்தெடுத்து அவன் மூலம் எல்லாப் பாவங்களையும் எடுத்துகொண்டிராவிட்டால்,அவரால் நம் எல்லாப் பாவங்களையும் கழுவியிருக்க முடியுமா?அவரால் முடியாது.

கர்த்தரின் சட்டம் நீதியானது. அது நல்லது. அவர் நம்முடைய இரட்சகரென்றும் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்று மட்டும் அவரால் கூற முடியவில்லை. நம்முடைய பாவங்களை கைகளினால் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. கர்த்தராகிய இயேசு,நம்மிடம் ஏன் மாமிசமாக வந்தார்?மனிதகுலத்தின் பாவங்களையும், இருதயத்தின் பாவங்களையும் சரீரத்தின் பாவங்களையும் குறித்து அவர் அறிந்திருப்பதால்,மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போடும்படியாக தேவகுமாரனாகிய அவர் மாமிசமாக நம்மிடம் வரவேண்டியிருந்தது.

இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்றிருக்கவில்லையென்றால்,நம் பாவங்கள் அப்படியே இருந்திருக்கும். நம்முடையப் பாவங்களை முதலில் எடுத்துக்கொள்ளாமல் அவர் சிலுவையில் அறையப் பட்டிருந்தால்,அதற்கு பொருள் இல்லாது போயிருக்கும். அதற்கு நம்மிடம் எந்த வேலையுமிருந்திருக்காது. இது முற்றிலும் பொருளற்றது

ஆகவே,அவர் தம் 30 ஆம் வயதில் தன் பொது ஊழியத்தைத் தொடங்கியபோது,ஞானஸ்நானம் பெறும்படியாக யோர்தான் நதியருகில் யோவான் ஸ்நானனிடம் வந்தார். அவரின் பொது ஊழியம் 30ஆம் வயதில் தொடங்கி 33ல் முடிவுற்றது. அவர் 30 வயதுடையவராக இருந்தபோது,ஞானஸ்நானம் பெறும்படியாக யோவான் ஸ்நானனிடம் வந்தார். இப்பொழுது இடங்கொடு,அப்படிச் செய்வது நமக்கு பொருத்தமாயிருப்பதினாலே,எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட்டு நீதிமான்களாவர். இப்பொழுது ஞானஸ்நானம் செய்.ஆம் மனிதர்களை விடுவிக்கவே இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார்.

இயேசு ஞானஸ்நானம் பெற்று நம் எல்லாப் பாவங்களயும் எடுத்துக்கொண்டமையாலும், யோவான் ஸ்நானனின் கைகள் மூலமாக நம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதாலும்,அவர் சிலுவையில் மரிக்கும்போது கர்த்தரே தம் முகத்தை அவரிடமிருந்து திருப்பினார். இயேசு அவரின் ஒரே பேறான குமாரனாக இருந்தாலும் அவர் தன் குமாரனை மரிக்கச் செய்ய வேண்டியவராயிருந்தார்.

கர்த்தர் அன்பானவர். ஆனால் அவர் தன் மகனைச் சாக அனுமதிக்க வேண்டும். ஆகவே, மூன்று மணிநேரம்,பூமி முழுவதும் இருள் படர்ந்தது. அவர் இறக்கும் முன் ஏலி,ஏலி, லாமா சபக்தானி?” என்று சத்தமிட்டார். அதன் பொருள் என் தேவனே,என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” இயேசு நம் பாவங்களைத் தம் தோளின் மீது சுமந்து நமக்காக சிலுவையில் நியாயந்தீர்க்கப்பட்டார். இப்படியாக அவர் நம்மை இரட்சித்தார். இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாது,அவரின் மரணம் பொருளற்றது.

  • நீ ஒரு பாவியா அல்லது நீதிமானா?
  • ஒரு நீதிமானின் இருதயத்தில் எப்பாவங்களும் இருக்காது.

நம்முடைய பாவங்களையெல்லாம் எடுத்துக் கொள்ளாது,ஞானஸ்நானம் பெறாது,இயேசு சிலுவையில் மரித்திருந்தால், அவரின் மரணமானது பாவவிடுதலையை முழுமைச் செய்திருக்காது. நம்மை விடுவிக்கும் பொருட்டு,மனிதகுலத்தின் பிரதிநிதியான யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்று,அவரை விசுவாசிப்போர் அனைவரும் இரட்சிக்கப்படும் பொருட்டு சிலுவையில் தீர்ப்பை அடைந்தார்.

ஆகவே,யோவான் ஸ்நானன் காலம் முதல் இந்நாள் வரைக்கும் பரலோக இராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறடுது. யோவான் ஸ்நானன் இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தியதால் உனது பாவங்களும் எனது பாவங்களும் மன்னிக்கப்பட்டன. ஆகவே, உன்னாலும்,என்னாலும் கர்த்தரை பிதாவே என்று அழைக்க முடிவதுடன் பரலோக ராஜ்யத்தினுள் துணிச்சலாக நுழைய முடியும்.

எபிரேயர் 10:18 இல், “இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால்,இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையேநீங்கள் எல்லோரும் பாவிகளா? உங்கள் கடன்களையெல்லாம் இயேசு ஏற்கெனவே கொடுத்துவிட்டார், அப்படியிருக்க நீங்கள் இன்னமும் கடனடைக்க வேண்டுமா?

அங்கொரு மனிதனை,அவனது பெருங்குடியானது அநேக கடன் கொடுப்பவர்களிடம் கடனாளியாக்கியது. அப்பொழுது,ஒரு நாள், அவனுடைய மகனொருவன் நிறைய பணம் பெற்று தன் தந்தையுடைய அனைத்துக் கடன்களையும் தீர்த்தான். அவன் தந்தை எத்தனைக் குடித்திருந்தாலும்,இப்போது அவன் கடனாளியல்ல.

இயேசு நமக்குச் செய்தது இதுவே. அவர் நம் எல்லாப் பாவங்களுக்கும் தேவைக்கு அதிகமாக கொடுத்தார். நம்முடைய வாழ்நாளின் பாவங்களுக்கு மட்டுமில்லாமல் உலகின் எல்லாப் பாவங்களுக்கும் கொடுத்தார். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவையெல்லாம் இயேசுவின் மீது சுமத்தப்பட்டுவிட்டது. ஆகவே நீங்கள் இன்னும் பாவிகளா?இல்லை,நீங்கள் பாவிகளில்லை.

தொடக்கத்திலிருந்தே இந்த விடுதலையின் நற்செய்தி நமக்குத் தெரிந்திருந்தால், இயேசுவை விசுவாசிப்பது,நமக்கு எத்தனை தெளிவானதாக இருந்திருக்கும். ஆனால்,இது ஏதோ புதிது போல் தெரிவதால், அநேக மக்கள் இதனைக் குறித்து ஆச்சரியப்படுகிறார்கள்.

ஆனால் இது புதிதான ஒன்றல்ல. அது தொடக்கத்திலிருந்தே இருந்தது. முன்பு அதனைக் குறித்து நாமேதும் அறியவில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எப்போதும் வேதவாக்கியத்தில் எழுதப்பட்டுள்ளதோடு அது எப்போதும் அமலில் இருக்கிறது. எப்பொழுதும் அது இருந்தது. நானும் நீயும் பிறப்பதற்கு முன்பே அது இங்கிருக்கிறது. உலகம் படைக்கப்பட்டபோதிலிருந்தே அது இருக்கிறது.

நிரந்தர விடுதலையின் நற்செய்தி

  • கர்த்தருக்கு முன்பாக நாம் என்ன செய்ய வேண்டும்?
  • நற்செய்தியாகிய நிரந்தர விடுதலையை நாம் விசுவாசிக்கவேண்டும்.

இயேசுகிறிஸ்து நமக்காக நம் எல்லாப் பாவங்களையும் கழுவினார். நீயும் நானும் பிறக்குமுன்னே அப்படிச் செய்தார். அவற்றையெல்லாம் அவர் எடுத்துப் போட்டார். நீ பாவத்துடனிருக்கிறாயா? - இல்லை - அப்படியானால் நாளை நீ செய்யப்போகும் பாவத்தைக் குறித்து என்ன? அவையும் கூட உலகின் பாவங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

நாளையின் பாவங்களை இப்போதே எடுத்துக் கொள்வோமாக. இதுவரை நாம் செய்த பாவங்களெல்லாம் உலகின் பாவங்களில் உள்ளடக்கியுள்ளதா,இல்லையா?அவை இயேசுவின் மீது சுமத்தப்பட்டதா இல்லையா?ஆம், அவை சுமத்தப்பட்டன.

அப்படியானால் நாளையப் பாவங்கள் கூட அவரின் மீது சுமத்தப்பட்டுவிட்டதா? ஆம்,அவர் எல்லாவற்றையும் சுமந்தார், எதனையும் விடவில்லை. இயேசு நம் எல்லாப் பாவங்களயும் ஒரே தரமாக ஏற்று, அவற்றிற்கெல்லாம் கிரயஞ்செலுத்தினார் என்பதை முழு இருதயத்தோடு விசுவாசிக்கும்படி நற்செய்தி நம்மிடம் கூறுகிறது.

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்” (மாற்கு 1:1). பரலோகத்தின் நற்செய்தியானது சந்தோஷமான ஒன்று. அவர் நம்மிடம் நான் உன் எல்லாப் பாவங்களயும் எடுத்துப் போட்டேன். நானே உன் இரட்சகர். நீ என்னை விசுவாசிக்கிறாயா?” என் கேட்கிறார். கணக்கிலடங்கா மக்களில் சிலர் மட்டுமே ஆம்,நான் விசுவாசிக்கிறேன். நீர் எம்மிடம் கூறியபடி நான் விசுவாசிக்கிறேன். நான் உடனே புரிந்து கொள்ளும்படி அது அத்தனை எளிதானது.இப்படிக் கூறுபவர்கள் ஆபிரகாமைப் போன்று நீதிமானாவார்கள்.

ஆனால் மற்றவர்கள் கூறுகிறார்கள், “அதனை என்னால் விசுவாசிக்க முடியாது. அது புதியதாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது

அப்பொழுது அவர் கேட்கிறார், “என்னிடம் கூறு உன் எல்லாப் பாவத்தையும் எடுத்துப் போட்டேனா இல்லையா?”

நீர் மூலப்பாவத்தை மட்டுமே எடுத்துப்போட்டீர்,என்னுடைய தினப்பாவங்களையல்ல என்று நினைத்தேன்.

நீ உன்னிடம் கூறப்பட்டதை அப்படியே விசுவாசிக்கும் அளவு புத்திசாலி. உன்னிடம் கூற என்னிடம் எதுவுமில்லாததால் நீ நரகத்திற்கு போ.

அவருடைய முழு விடுதலையை விசுவாசித்து நாம் இரட்சிக்கப்பட்டோம். ஆனால் எங்களிடம் பாவங்கள் இருக்கின்றன என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் நரகத்திற்கு செல்லட்டும். அது அவர்களின் தேர்வு.

விடுதலையின் நற்செய்தியானது யோவான் ஸ்நானனின் சாட்சியுடன் தொடங்குகிறது. இயேசு யோவான் ஸ்நானனின் மூலம் ஞானஸ்நானம் பெற்று நம் எல்லாப் பாவங்களயும் கழுவிப்போட்டதால்,அதனை விசுவாசிக்கும்போது நாம் பரிசுத்தமாக்கப்பட்டோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து தன் நிருபங்களில் அதிகம் பேசுகிறான். கலாத்தியர் 3:27 இல் உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ,அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்கள்.கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்பதன் பொருள் நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம் என்பதாகும். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது,யோவான் ஸ்நானன் மூலம் நம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதால் நம்முடைய எல்லாப் பாவங்களும் கழுவப்பட்டன.

1 பேதுரு 3:21, “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது மாமிச அழுக்கை நீக்குதலாயிராமல்,தேவனைப்பற்றும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து,இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.

யோவான் ஸ்நானனின் சாட்சி,இயேசுவின் ஞானஸ்நானம், சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்போர் மட்டுமே விடுதலையின் இரக்கத்தை தம்முள் இருக்கப்பெறுவர்.

இரட்சிப்பிற்கு ஒப்பான இயேசுவின் ஞானஸ்நானத்தை உன்னிருதயத்தில் பெற்று இரட்சிப்படைவாயாக.*






இயேசுகிறிஸ்து நீரினாலும், இரத்தத்தினாலும், ஆவியினாலும் வந்தார்

【3-3】<1 யோவான் 5:1-12>

  •  

<1 யோவான் 5:1-12>

இயேசுவானவரே கிறிஸ்து எனறு விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்பு கூறுகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்பு கூறுகிறான். நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது,தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு கூறுகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம். நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தின் அன்பு கூறுவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல,தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல,ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால்,ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர். பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா,வார்த்தை பரிசுத்த ஆவி என்பவர்களே,இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று,ஆவி, ஜலம்,இரத்தம் என்பவைகளே,இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால்,அதைப் பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ,தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால்,அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அநதச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்,தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

  • இயேசு எதினால் வந்தார்?
  • நீர், இரத்தம் மற்றும் ஆவியினால் வந்தார்.

இயேசு நீரினால் வந்தவரா?ஆம்,அவர் வந்தார். அவர் தம்முடைய ஞானஸ்நானத்தினால் வந்தார். நீரானது யோர்தான் நதியில் யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது. இந்த ஞானஸ்நான பாவவிடுதலை மூலமே அவர் இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார்.

இயேசு இரத்தத்தினால் வந்தவரா?ஆம்,அவர் அப்படித்தான் வந்தார். அவர் மனித மாமிசத்தில் வந்து உலகின் எல்லாப் பாவங்களையும் சுமக்கும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்று,சிலுவையில் இரத்தம் சிந்துவதின் மூலம் பாவக்கிரயம் செலுத்தினார்.

இயேசு ஆவியினால் வந்தவரா?ஆம்,அவர் வந்தார். இயேசுவே கர்த்தர் அவர் மனித சரீரத்தில் ஆவியாக,பாவிகளின் இரட்சகராகும் படி வந்தார்.

இயேசு நீர்,இரத்தம் மற்றும் ஆவியினால் வந்தவர் என்பதை அநேக மக்கள் நம்புவதில்லை. வெகு சிலரே இயேசுவானவர் ராஜாதி ராஜா என்றும் தேவாதி தேவன் என்றும் உண்மையிலேயே விசுவாசிக்கின்றனர். அநேக மக்கள் இன்னும் சந்தேகமுள்ளவர்களாய் உள்ளனர். இயேசு தேவகுமாரனா அல்லது மனு புத்திரனா?’ இறையியலாளர்கள் போதகர்கள் உட்பட அநேகர் இயேசுவை கர்த்தராகவோ, இரட்சகராகவோ,மகத்துவம் உள்ளவராகவோ நினைக்காமல் அவரை மனிதனாக மட்டுமே நினைக்கின்றனர்.

ஆனால் கர்த்தர் கூறினார். யாரெல்லாம் இயேசுவை இராஜாதி இராஜாவாகவும் உண்மைக் கர்த்தராகவும் இரட்சகராகவும் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் அவருடையவர்களாகிறார்கள். கர்த்தரை யார் நேசிக்கிறார்களோ அவர்கள் இயேசுவையும் விசுவாசிக்கிறார்கள். கர்த்தரை யார் உண்மையாகவே விசுவாசிக்கிறார்களோ அப்படியே அவர்கள் இயேசுவையும் விசுவாசிக்கிறார்கள்.

மனிதனால் உலகத்தை மேற்கொள்ளமுடியாது. அப்போஸ்தலன் யோவான்,உண்மைக் கிறிஸ்தவனாலேயே உலகத்தை மேற்கொள்ள முடியும் என்று கூறுகிறான். விசுவாசி ஒருவனால் உலகை மேற்கொள்ள முடிவதன் காரணம் அவனிடம் நீர்,இரத்தம் மற்றும் இயேசுவின் ஆவி மீது விசுவாசம் இருப்பதே. உலகை மேற்கொள்வதற்கான வல்லமை மனிதனின் சித்தத்தினாலோ, முயற்சிகளினாலோ,பக்தியினாலோ வருவதில்லை.

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் அன்பு எனக்கிராவிட்டால்,சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஔசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நாம் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து,சகல இரகசியங்களையும்,சகல அறிவையும் அறிந்தாலும்,மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும்,அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும்,என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும்,அன்பு எனக்கிராவிட்டால் எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை.” (1கொரிந்தியர் 13:1-3)

அன்புஎன்று இங்கு குறிப்பிடப்படுவது, நீர் இரத்தம் மற்றும் ஆவியின் மூலம் வந்த இயேசுவேயாகும். அன்புஎன்று வேதாகமத்தில் எங்கெல்லாம் குறிக்கப் படுகிறதோ அது சத்தியத்தின் அன்பைக் குறிக்கிறது’ (தெசலோனிக்கேயர் 2:10) கர்த்தரின் அன்பானது தன் ஒரே பேறான குமாரனானின் மூலம் அறிவிக்கப் பட்டிருக்கிறது (1யோவான் 4:9).

நீர் மற்றும் இரத்தத்தை விசுவாசிப்பவனால் மட்டுமே உலகை மேற்கொள்ள முடியும்

  • உலகை யாரால் மேற்கொள்ள இயலும்?
    • இயேசுவின் ஞானஸ்நானம்,அவரின் இரத்தம் மற்றும் ஆவியினால் கிட்டும் விடுதலையை விசுவாசிப்பவனால்.

1 யோவான் 5:5-6 கூறுகிறது, “இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்.

உடன் கிறிஸ்தவர்களே,உலகை மேற்கொண்டவரும், சாத்தானை மேற்கொண்டவரும்,இயேசு கிறிஸ்துவேயாகும். நீர்,இரத்தம் மற்றும் இயேசுவின் ஆவி ஆகிய வார்த்தைகளை விசுவாசிப்பவர்களும் உலகை மேற்கொள்வர். இயேசு எப்படி உலகை மேற்கொண்டார்? நீர்,இரத்தம் மற்றும் ஆவியின் விடுதலையின் மூலம்.

வேதாகமத்தில் நீர்என்று குறிப்பிடப்படுவது, ‘இயேசுவின் ஞானஸ்நானமேயாகும்’ (1 பேதுரு 3:21) இயேசு இவ்வுலகிற்கு மாமிசமாக வந்தார்; உலகின் எல்லாப் பாவிகளின் பாவங்களையும் தன் மீது எடுத்துக் கொள்வதற்காக அவர் ஞானஸ்நானம் பெற்று அப்பாவங்களிலிருந்து விடுதலையாக்க சிலுவையில் மரித்தார்.

சிலுவையின் இரத்தமானது அவர் இவ்வுலகிற்கு மனித மாமிசத்துடன் வந்தார் என்பதைக் குறிக்கிறது. அவர் பாவிகளை இரட்சிக்கும்படியாக மனித சரீரத்தில் வந்து நீரினால் ஞானஸ்நானம் பெற்றார். ஆகவே,இயேசு நீரினாலும் இரத்தத்தினாலும் நம்மிடத்தில் வந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,அவர் தம் ஞானஸ்நான நீரினாலும் அவரின் இறப்பின் இரத்தத்தினாலும் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார்.

சாத்தான் உலகை எப்படி ஆண்டான்?சாத்தான் மனிதர்களை கர்த்தரின் வார்த்தைகளைச் சந்தேகிக்கச் செய்து கீழ்ப்படியாமையின் வித்தினை அவர்கள் இருதயத்தில் விதைத்தான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,சாத்தான் அவர்களை ஏமாற்றி கர்த்தரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் செய்து மனிதகுலத்தை அவனின் பணியாட்களாக்கினான்.

ஆயினும்,இயேசு இவ்வுலகிற்கு வந்து அவரின் ஞானஸ்நான நீரினாலும் அவரின் சிலுவை இரத்தத்தினாலும் மக்களின் எல்லாப் பாவங்களையும் துடைத்தார். அவர் சாத்தானை மேற்கொண்டு உலகின் எல்லாப் பாவங்களையும் துடைத்தார்.

இயேசுகிறிஸ்து பாவிகளின் இரட்சகரானபடியால் இது நடந்தது. அவர் நீர் மற்றும் ஆவியினால் வந்ததால் நம் இரட்சகரானார்.


இயேசு தம் விடுதலையின் ஞானஸ்நானம் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார்

  • இயேசு உலகை மேற்கொண்டார் என்பதன் பொருள் யாது?
  • அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார் என்று அது பொருள்படும்

உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுகொள்ளும் பொருட்டு இயேசு ஞானஸ்நானம் பெற்றது நம் பாவங்களையெல்லாம் அழிக்க மனித மாமிசத்தில் இறந்தாலும் அவரால் நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை செய்ய முடிந்தது. எல்லா மனிதர்களின் பிரதிநிதியான யோவான் ஸ்நானனால் இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதன் மூலம் உலகின் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது. பாவத்திற்கு சம்பளமாக தன் உயிரையே சிலுவையில் விட்டார். அவர் மரித்து மீண்டும் உயிரோடு எழுந்ததினால்,அவர் சாத்தானின் வல்லமையை மேற்கொண்டார். பாவத்தின் சம்பளமாக அவர் மரணத்தை அளித்தார்.

இயேசு ஞானஸ்நான நீரின் மூலமும் சிலுவை இரத்தத்தின் மூலமும் பாவிகளிடம் வந்தார்

  • சாத்தானின் வல்லமையை அவர் எப்படி மேற்கொண்டார்?
  • அவரின் ஞானஸ்நானம் இரத்தம்,மற்றும் ஆவியின் மூலம்.

அப்போஸ்தலனாகிய யோவான்,விடுதலை நீரினால் மட்டுமல்ல, நீரினாலும்,இரத்தத்தினாலும் வந்தது என்றான். ஆகவே இயேசு எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டு நம் பாவங்களை நிரந்தரமாக அகற்றியதால், அவரை விசுவாசிப்பதன் மூலமும்,அவரின் வார்த்தைகளின் மீது விசுவாசத்துடனிருப்பதாலும் எல்லா பாவிகளும் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படமுடியும்.

இயேசு இவ்வுலகிற்கு இறங்கி வந்தபோது,அவர் நம் பாவங்களை மட்டும் எடுத்துப்போடவில்லை. அவர் சிலுவையில் மரிக்கும் படியாக இரத்தஞ்சிந்தி நம்மை இரட்சிக்கவும் செய்தார். அவர் யோர்தானில் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டதுடன் அவற்றிற்கு கிரயத்தை சிலுவையில் செலுத்தினார்; அவர் தன் மரணத்தின் மூலம் நம் பாவங்களுக்கு கிரயஞ்செலுத்தினார். பாவத்தின் சம்பளம் மரணம்’ (ரோமர் 6:23) என்று கூறிய நியாயப் பிரமாண தீர்க்கதரிசனம் இப்படியாக நிறைவேறியது.

உலகை மேற்கொள்வது என்று இயேசு என்ன பொருள்படும்படி கூறினார்?இயேசு நம்மிடம் நீர் மற்றும் இரத்தம் மூலம் எடுத்து வந்த நற்செய்தியாகிய விடுதலையின் மீதுள்ள விசுவாசத்தால் உலகை மேற்கொள்ளும் விசுவாசமே அது. அவர் மாமிசமாக வந்து நீரினாலான ஞானஸ்நானத்தினாலும் சிலுவை மரணத்தினாலும் இரட்சிப்பு உண்டாகிறது என்று சாட்சி கூறினார்.

சாத்தான் எனும் பெயர் கொண்ட உலகினை இயேசு மேற்கொண்டார். ஆதிசபையின் சீடர்கள் தியாக மரணத்திற்கு முன் ரோம சாம்ராஜ்யத்திற்கு அடிமையாகாது நின்றதுடன் உலகின் இச்சைகளுக்கு மயங்காதவர்களாகவும் இருந்தனர்.

இவையெல்லாம் இயேசு நீரினாலும் (அவர் நம் பாவங்களை எடுத்துப்போடும்படியாக ஞானஸ்நானம் பெற்றார்),அவரின் சிலுவை இரத்தத்தினாலும் (அவர் தம் மரணம் மூலம் நம் எல்லாப் பாவங்களுக்கும் கிரயஞ்செலுத்தினார்) என்பதை விசுவாசிப்பதற்கு பதிலாகும்.

இயேசு ஆவியில் வந்தார் (அவர் மனித மாமிசத்தில் வந்தார்) அவர் பாவிகளின் பாவங்களை அவர் ஞானஸ்நானத்தின் மூலமும்,சிலுவையின் இரத்தத்தின் மூலமும், ஏற்றுக்கொண்டதால் விடுதலை செய்யும் படியான நாமனைவரும் இவ்வுலகை மேற்கொள்ளமுடியும்.

அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது <பேதுரு 3:21>

  • இரட்சிப்பிற்கு ஒப்பனையாக இருப்பது எது?
  • இயேசுவின் ஞானஸ்நானம்

1 பேதுரு 3:21 இல் கூறப்பட்டுள்ளது, “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல்,தேவனைப் பற்றும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து,இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறதுஅப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுவே இரட்சகரென்றும் அவர் ஞானஸ்நான நீரிலும் இரத்தத்தினாலும் வந்தவர் என்று சாட்சி கூறினான்.

ஆகவே,நீரினாலும்,இரத்தத்தினாலும் வந்த இயேசுவை நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசுவின் ஞானஸ்நான நீரானது நமது இரட்சிப்பிற்கு ஒப்பனையாயிருந்து நம்மை இரட்சிக்கிறது என்பதை அறிய வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் ஞானஸ்நான நீரும்’, ‘இரத்தமும்’, ஆவியும் விடுதலையின் முக்கியமான அம்சங்கள் என்று நம்மிடம் கூறினான்.

இயேசுவின் ஞானஸ்நானமின்றி சிலுவை இரத்தத்தை மட்டும் எந்தவொரு சீடரும் விசுவாசிக்கவில்லை. இரத்தத்தை விசுவாசிப்பதென்பது உண்மை விசுவாசத்தின் அரைவாசியாகும். அரைவாசியான, குறையுள்ள விசுவாசம் காலப்போக்கில் மங்கி விடுகிறது. ஆனால், நற்செய்தியாகிய நீர்,இரத்தம் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களின் விசுவாசம் காலஞ் செல்லச் செல்ல அதிக உறுதியாகும்.

எப்படியாயினும்,இந்நாட்களில் நற்செய்தியாகிய இரத்தம் மட்டுமே மேலும் மேலும் உறுதியாகிறது. இது ஏன்?மக்களுக்கு சத்தியவார்த்தைகளான நீர் மற்றும் ஆவியளிக்கும் விடுதலையைக் குறித்து தெரியாததால்,அவர்களால் மறுபடியும் பிறக்க முடியாது.

ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மேற்கிலுள்ள ஆலயங்கள் மூடப்பழக்கங்களில் விழுந்து போயின. அவர்கள் செழிப்படைவதைப் போல் சிலகாலம் தோன்றினாலும்,சாத்தானின் ஊழியர்கள் விசுவாசத்தை மூடப்பழக்கமாக்க உதவினர்.

மூடப்பழக்கமானது ஒருவன் ஒரு துண்டு பேப்பரிலோ அல்லது பலகையிலோ ஒரு சிலுவையை வரைந்தால் பிசாசு ஔடும் என்பதும்,இயேசுவின் இரத்தத்தை விசுவாசிப்பதினால் சாத்தானை விரட்ட முடியும் என்பது போன்றவற்றை விசுவாசிப்பதாகும். இதனால்,மற்ற மூடப்பழக்க நம்பிக்கைகளினாலும்,மக்கள் இயேசுவின் இரத்தத்தை மட்டும் நம்பினால் போதுமானது என்று சாத்தான் ஏமாற்றினான். இயேசு பாவிகளுக்காக இரத்தஞ்சிந்தினார் என்று கூறி,சாத்தான் இரத்தத்திற்கு பயப்படுவதைப் போல் நடிக்கிறான்.

ஆயினும்,பேதுருவும் மற்ற எல்லா சீடர்களும் உண்மை நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தத்தைக் குறித்து சாட்சி கூறினர், ஆயினும்,இந்நாளின் கிறிஸ்தவர்கள் எதைக் குறித்து சாட்சி கூறுகிறார்கள்?அவர்கள் இயேசுவின் இரத்தத்தைக் குறித்து மட்டுமே சாட்சி கூறுகிறார்கள்.

ஆயினும்,நாம் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை மட்டுமே விசுவாசிக்க வேண்டும். ஆவியின் இரட்சிப்பில் இயேசுவின் ஞானஸ்நானத்தில், இரத்தத்தில் நம்பிக்கை இருக்கவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தை அலட்சியம் செய்து,இயேசு சிலுவையில் மரித்ததை மட்டும் சாட்சியாக கூறுவோமானால்,இரட்சிப்பு முழுமைப் பெறாது.

கர்த்தருடைய நீரின் இரட்சிப்பிற்கான சாட்சியின் வார்த்தை

  • கர்த்தர் நம்மை இரட்சித்தார் என்பதற்கான அத்தாட்சி என்ன?
  • நீர் இரத்தம் மற்றும் ஆவி.

1 யோவான் 5:8 இல் கர்த்தர் கூறுகிறார். பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று.முதலாவது ஆவியானவர்,இரண்டாவது இயேசுவின் ஞானஸ்நான நீர் மூன்றாவது சிலுவை இரத்தம் இவை மூன்றும் ஒன்றானவைகள். அப்பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அவரே ஞானஸ்நானம் இரத்தம் மற்றும் ஆவியின் மூலம் இதைச் செய்தார்.

சாட்சியிடுகிறவைகள் மூன்றுகர்த்தர் நம்மை இரட்சித்தார் என்று இம்மூன்றும் நிரூபிக்கின்றன. இம்மூன்று அம்சங்களாவன இயேசுவின் ஞானஸ்நான நீர், இரத்தம் மற்றும் ஆவியாகும். இவை மூன்றும் இயேசு நமக்காக இவ்வுலகில் செய்தவையாகும்.

இவற்றில் ஒன்றை விட்டாலும்,இரட்சிப்பு முழுமைப் பெறாது. பூமியிலே சாட்சியிடுகிறவைகள் மூன்று: ஆவி,நீர் மற்றும் இரத்தம் ஆகியவைகளே அவை.

மாமிசத்திலே நம்மிடம் வந்த இயேசுகிறிஸ்துவே கர்த்தரும், ஆவியானவரும்,குமாரனுமாவார். அவர் இவ்வுலகிற்கு ஆவியாக மனித சரீரத்தில் இறங்கி வந்து,இவ்வுலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொள்ளும்படி நீரினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். அவர் நம் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தில் ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரிக்கும்வரை இரத்தஞ்சிந்தி பாவிகளாகிய நம்மை இரட்சித்தார். அவர் பாவத்திற்கான முக்கியமானவற்றைச் செலுத்திவிட்டார். நீர், இரத்தம்,ஆவி ஆகியவைகளே நற்செய்தியாகிய முழுமையான விடுதலையாகும்.

இவற்றில் ஒன்றை விட்டுவிட்டாலும்,அது நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்த கர்த்தரின் இரட்சிப்பை மறுப்பதாகும். இன்றைய விசுவாசிகளின் அநேகரோடே நாம் ஒத்துப்போக வேண்டுமானால்,நாம் பூமியிலே சாட்சியிடுகிறவைகள் இரண்டு: இரத்தம் மற்றும் ஆவியானவர்என்று கூறவேண்டியிருக்கும்.

ஆனால் அப்போஸ்தலனாகிய யோவான் மூன்று காரியங்கள் சாட்சியிடுவதாக கூறுகிறான்: இயேசுவின் ஞானஸ்நான நீர்,சிலுவை இரத்தம்,மற்றும் ஆவியானவர். அப்போஸ்தலனாகிய யோவான் அவன் சாட்சியில் தெளிவாக இருக்கிறான்.

ஆவியானவர்,நீர் மற்றும் இரத்தத்தின் மீதுள்ள விசுவாசமே ஒரு பாவியை விடுவிக்கும் விசுவாசமாகும். உலகை மேற்கொள்ள மனிதனை ஏதுவாக்கும் விசுவாசம் எங்கிருக்கிறது?அது இங்கேயே இருக்கிறது. அது, நீராலும் இரத்தத்தாலும்,ஆவியாலும் வந்த இயேசுவை விசுவாசிப்பதில் இருக்கிறது. அவற்றின் மீது விசுவாசம் வைத்து இரட்சிப்பையும் நித்திய வாழ்வையும் பெற்றுக்கொள்வீர்களாக.

  • இயேசுவின் ஞானஸ்நானம் இன்றி இரட்சிப்பு முழுமையாகுமா?
  • இல்லை.

நீண்ட காலத்திற்கு முன்,மறுபடியும் பிறப்பதற்கு முன், நானும் கூட சிலுவை இரத்தத்தையும்,ஆவியையும் விசுவாசிக்கும் கிறிஸ்தவனாக இருந்தேன். அவர் ஆவியானவராக இறங்கி வந்து சிலுவையில் எனக்காக மரித்து என் எல்லாப் பாவங்களிலிருந்தும் என்னை இரட்சித்தார் என்று விசுவாசித்தேன். நான் இவையிரண்டையும் மட்டுமே விசுவாசித்த போதிலும் அவற்றை எல்லா மக்களுக்கும் போதிக்கும் அளவு அகம்பாவமுள்ளவனாக இருந்தேன்.

இயேசு செய்தது போலவே மக்களுக்கு பணியாற்றி மரிக்க மிஷனரியாகும் பொருட்டு இறையியல் படிக்கத் திட்டமிட்டேன். நான் மிகப்பெரிய காரியங்களைத் திட்டமிட்டேன்.

ஆனால்,நான் எவ்வளவு காலம் இரண்டு காரியங்களை மட்டும் விசுவாசித்துக் கொண்டிருந்தேனோ அது வரை என்னிருதயத்தில் பாவமிருந்தது. அதன் விளைவாக என்னால் உலகத்தை மேற்கொள்ள முடியவில்லை. பாவத்திலிருந்து என்னால் விடுதலையாக முடியவில்லை. நான் இரத்தத்தையும் ஆவியையும் மட்டும் விசுவாசித்திருந்தபோது என்னிருதயத்தில் இன்னும் பாவங்களிருந்தன.

நான் இயேசுவை விசுவாசித்த போதிலும் என்னிருதயத்தில் பாவமிருந்ததற்கான காரணம், எனக்கு இயேசுவின் ஞானஸ்நானமாகிய நீரைப்பற்றி தெரியாததே. நான் ஞானஸ்நானம், இரத்தம் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தினால் விடுதலையாகும் வரை, என் விடுதலை முழுமைப் பெறாததாகும்.

நான் மாமிசத்தின் பாவங்களை மேற்கொள்ள முடியாததற்கு காரணம் எனக்கு இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்த பொருள் தெரியாததே. இன்றும் கூட அநேக மக்கள் இயேசுவை விசுவாசித்தாலும் தொடர்ந்து மாமிசத்தின் பாவங்களைச் செய்து வருகின்றனர். அவர்கள் மனதில் இன்னமும் பாவமிருக்கிறது. அவர்கள் இயேசுவிடம் வைத்த முதல் நேசத்தை புதிதாக்க எல்லாவற்றையும் செய்கின்றனர்.

அவர்கள் முற்றிலுமாக தம் பாவங்களிலிருந்து நீரினால் கழுவப்படாததால், அவர்களின் முதல் ஆர்வத்தின் தீவிரத்தை புதிதாக்க முடியாது. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவர்களின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தியதை அவர்கள் அறிந்து கொள்ளாதபடியால் அவர்கள் ஒருமுறை விழுந்தால் அவர்களில் விசுவாசத்தை மறுபடியும் பெறமுடியாது.

இதனை உங்கள் அனைவருக்கும் தெளிவாக்க விரும்புகிறேன். இயேசுவை நாம் விசுவாசித்து விசுவாச வாழ்க்கை வாழும்போது நம்மால் உலகத்தை மேற்கொள்ள முடியும். நாம் எத்தனைக் குறைபாடுள்ளவர்களாக இருந்தபோதிலும்,தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்களிலிருந்து நம்மை முற்றிலும் விடுதலையாக்கிய இயேசுவை நம் இரட்சகராக விசுவாசிக்கும் வரை, நம்மால் வெற்றிகரமாக நிற்கமுடியும்.

ஆயினும்,ஞானஸ்நான நீரின்றி இயேசுவை விசுவாசித்தோமானால், நம்மால் முற்றிலுமாக விடுதலையாக முடியாது. அப்போஸ்தலனாகிய யோவான் நம்மிடம் ஞானஸ்நான நீர்,இரத்தம் மற்றும் ஆவியின் மூலம் வந்த இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமே இவ்வுலகை மேற்கொள்ளும் விசுவாசமென்று கூறுகிறான்.

ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிப்போரை இரட்சிக்க கர்த்தர் தம் ஒரே பேறான குமாரனை நம்மிடம் அனுப்பினார். அவர் தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம் அனைத்துப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார். கர்த்தரின் ஒரேகுமாரனாகிய இயேசு,நம்மிடம் ஆவியாக (மனித சரீரத்தில்) வந்தார். பாவத்திற்கு சம்பளம் கொடுக்கும் விதமாக அவர் சிலுவையில் இரத்தஞ்சிந்தினார். இப்படியாக எல்லா மனிதர்களையும் இயேசு விடுவித்தார்.

இயேசு நம்மிடம் நீராலும்,இரத்தத்தாலும் ஆவியாலும் வந்து எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை முற்றிலுமாக விடுதலையாக்கினார் என்ற உண்மையை விசுவாசிப்பதன் மூலம் இவ்வுலகை மேற்கொள்ள விசுவாசம் வழி நடத்துகிறது.

அங்கு ஞானஸ்நான நீரும் சிலுவை இரத்தமும் இல்லையென்றால் உண்மை இரட்சிப்பு அங்கிருக்காது. இவற்றில் எது ஒன்று இல்லாவிட்டாலும் உண்மை இரட்சிப்பை நம்மால் பெறமுடியாது. நீர், இரத்தம் மற்றும் ஆவியானவரின்றி உண்மை இரட்சிப்பை நம்மால் வெற்றிக்கொள்ள முடியாது. ஆகவே,நாம் நீர் இரத்தம் மற்றும் ஆவியானவரை விசுவாசிக்க வேண்டும். இதனை அறிந்து உண்மை விசுவாசத்தைப் பெறுவீர்களாக.

       நீர் இரத்தம் மற்றும் ஆவியானவர் ஆகியவற்றின் சாட்சியில்லாமல் அது உண்மை இரட்சிப்பு இல்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்

  • இரட்சிப்பைக் குறித்து சாட்சி சொல்லும் மூன்று முக்கியமானவைகள் எவை?
  • நீர்,இரத்தம் மற்றும் ஆவியானவர்.

மேற்கண்ட கேள்வியை ஒருவன் இவ்வாறு நினைக்கலாம். இயேசு என் இரட்சகர். இயேசுவின் சிலுவை மரணத்தை நான் விசுவாசிக்கிறேன். நான் தியாகியாக மரிக்க விரும்புகிறேன். என்னிருதயத்தில் பாவங்கள் இருந்தாலும் கூட நான் இயேசுவை விசுவாசிக்கிறேன். நான் உண்மையாக மனம் வருந்தி,நல்லவைகளைச் செய்ய கடின வேலகளைச் செய்து நீதியாகவும் பெருந்தன்மையாகவும் தினமும் இருக்கிறேன். நான் என் வாழ்வையும் என் உலகச் சொத்துக்களையும் உம்மிடம் கொடுத்தேன். நான் திருமணம் கூடச் செய்யவில்லை. கர்த்தர் என்னை எப்படி அறியாமலிருப்பார்?இயேசு எனக்காகச் சிலுவையில் மரித்தார். நம்முடைய பரிசுத்தமான கர்த்தர் மனிதனாக இறங்கி வந்து சிலுவையில் நமக்காக மரித்தார். நான் உம்மை விசுவாசித்தேன். உமக்கு பலியிட்டேன். உமது வேலையை விசுவாசத்துடன் செய்தேன். நான் பெறுமானமில்லாதவனாக இருந்தாலும்,அதற்காக இயேசு என்னை நரகத்திற்கு அனுப்புவாரா? இல்லை. அவர் அனுப்பமாட்டார்.

இம்மனிதனைப் போன்ற அநேக மக்கள் இருக்கின்றனர். அவர்களே,இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொள்ள இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்றார் என்பதை நம்ப மறுப்பவர்கள். இந்த இயேசுவை விசுவாசிக்கும் இன்னமும் பாவமுள்ளவர்கள் எங்கே போவார்கள்? அவர்கள் நரகத்திற்கு போவார்கள். அவர்கள் பாவிகள்!

தமக்குத் தோன்றுவதை நினைத்து கர்த்தரும் அப்படியே நினைக்க வேண்டுமென நினைப்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். மேலும் சிலர்,இயேசு சிலுவையிலறையப்பட்டபோது எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டதால் உலகில் இப்போது பாவங்களில்லை என்று கூறுகிறார்கள். ஆயினும் இது இரத்தத்தையும் ஆவியையும் மட்டுமே பேசுகிறது. இது முழு விடுதலையை நோக்கி மக்களை வழி நடத்தும் விசுவாசமில்லை.

இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, நியாயந் தீர்க்கப்பட்டு,நமக்காக சிலுவையிலறையப்பட்டு,அவரின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு பிறகு உயிரோடெழுந்தார் என்பதை விசுவாசிக்கவேண்டும்.

அத்தகைய விசுவாசமில்லாமல்,முழு விடுதலைக்கு வாய்ப்பே இல்லை. இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டு,சிலுவையில் மரித்து, மறுபடியும் உயிரோடெழுந்தார். இயேசுகிறிஸ்து நீரினாலும், இரத்தத்தினாலும்,ஆவியினாலும் நம்மிடம் வந்தார். அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார்.

இங்கு மூன்று முக்கியக் காரிங்கள் பூமியிலே சாட்சியிடுகின்றன: ஆவியானவர், நீர் மற்றும் இரத்தம்.

முதலாவது,இயேசுவே கர்த்தர் அவர் மனித சரீரத்தில் உலகிற்கு இறங்கி வந்தார் என்று பரிசுத்த ஆவியானவர் சாட்சி கூறுகிறார்.

இரண்டாவது சாட்சி நீராகும்அது யோவான் ஸ்நானன்,யோர்தான் நதியில் இயேசுவிற்கு அளித்த ஞானஸ்நானத்தின் நீராகும்; இதன் மூலம் நம் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன. அவர் ஞானஸ்நானம் பெற்றபோது நம் எல்லாப் பாவங்களும் அவரின் மீது சுமத்தப்பட்டது (மத்தேயு 3:15).

மூன்றாவது சாட்சி இரத்தமாகும்’. இது புதிய வாழ்க்கையையும் நமக்காக இயேசு நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொன்டதையும் குறிக்கிறது. இயேசு நமக்காக தம் தந்தையின் நியாயத் தீர்ப்பை ஏற்று மரித்து 3 நாட்களுக்குப் பிறகு உயிரோடெழுந்தார்.

அவர் குமாரனின் ஞானஸ்நானத்தையும்,இரத்தத்தையும் விசுவாசிப்பவர்களின் இருதயத்திற்குள் பிதாவாகிய தேவன் ஆவியானவரை,விடுதலையின் சாட்சியாக அனுப்புகிறார்.

மறுபடியும் பிறந்த ஒருவனிடம் உலகை மேற்கொள்வதற்கான வார்த்தை இருக்கிறது. விடுதலையானவர்கள் சாத்தானையும்,கள்ளத் தீர்க்கதரிசிகளின் பொய்களையும், தடைகளையும்,அவர்களை இடைவிடாது தாக்கும் அழுத்தங்களையும் மேற்கொள்வர். நம்மிடம் இந்த வல்லமை இருப்பதற்கான காரணம் நம்மிருதயத்தில் மூன்று காரியங்கள் இருப்பதுவே: அவை இயேசுவின் நீர்,அவரின் இரத்தம் மற்றும் ஆவியானவர்.

  • நாம் உலகையும் சாத்தானையும் எவ்வாறு மேற்கொள்வோம்?
  • மூன்று சாட்சிகளையும் விசுவாசிப்பதன் மூலம்.

நாம் ஆவியையும்,நீரையும்,இரத்தத்தையும் விசுவாசிப்பதால்,நாம் சாத்தானையும் உலகையும் மேற்கொண்டோம். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிப்பவர்களுக்கு கள்ளத்தீர்க்கத்தரிசிகளின் அனைத்து செய்கைகளையும் மேற்கொள்ள முடியும். நம்முடைய விசுவாசமும் இவற்றை மேற்கொள்ளும் வல்லமையும்,நீர்,இரத்தம், மற்றும் ஆவியின் மீதுள்ளது. நீ இதனை விசுவாசிக்கிறாயா?

நீ இயேசுவின் ஞானஸ்நானம்,அவரின் இரத்தம், இயேசுவே தேவனின் குமாரன் மற்றும் அவரே நம் இரட்சகர் என்பதை விசுவாசிக்கவில்லையெனில் உன்னால் மறுபடியும் பிறப்பதோ இவ்வுலகை மேற்கொள்வதோ முடியாது. இது உன்னிருதயத்திலிருக்கிறதா?

உன்னிருதயத்தில் ஆவியும் நீரும் இருக்கிறதா?உன் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டுவிட்டது என்று விசுவாசிக்கிறாயா? உன்னிருதயத்தில் சிலுவை இரத்தம் இருக்கின்றதா?

இயேசுவின் இரத்தமும் நீரும் உன்னிருதயத்தில் இருந்தால் இயேசு உனக்காக சிலுவையில் மரித்தார் என்றும் உனக்கு கிடைக்கவேண்டிய தீர்ப்பை அவர் பெற்றார் என்றும் விசுவாசித்தால், நீ உலகை மேற்கொள்வாய்.

இம்மூன்று முக்கியமான அம்சங்களும் அப்போஸ்தலனாகிய யோவானிடமிருந்ததால் அவன் உலகை மேற்கொண்டான். அவன் தம் செயல்களில் தொடர்ந்து வரும் தடைகளையும் பயமுறுத்துதல்களையும் எதிர்கொண்டுள்ள தன் எல்லா விசுவாச சகோதரர்களிடமும் விடுதலையைக் குறித்து பேசினான். அவன் சாட்சி கூறினான், இப்படியாகவே நீங்களும் உலகை மேற்கொள்ள முடியும். இயேசு இவ்வுலகிற்கு ஆவியினாலும்,நீராலும்,இரத்தத்தினாலும் வந்தார். அவர் உலகை மேற்கொண்டது போலவே,விசுவாசமுள்ளவர்களும் உலகை மேற்கொள்வர். இதுவே விசுவாசமுள்ளவர்களால் உலகை மேற்கொள்ளும் ஒரே வழியாகும்.

1 யோவான் 5:8 இல் கூறப்பட்டுள்ளது, “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று,ஆவி, ஜலம்,இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.நிறைய பேர் இரத்தத்தையும் ஆவியையும் குறித்து பேசினாலும் இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டுவிடுகின்றனர். அவர்கள் நீரைஎடுத்துப்போட்டால், அவர்கள் இன்னும் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் தம்முடைய சுய வஞ்சனையின் பின்னாலிருந்து வெளியே வந்து மனந்திரும்ப வேண்டும்; அவர்கள் மறுபடியும் பிறத்தலுக்கான இயேசுவின் நீரைவிசுவாசிக்கவேண்டும்.

நீரையும் இரத்தத்தையும் விசுவாசிக்காமல் யாராலும் உலகை மேற்கொள்ள முடியாது. நான் மீண்டும் உங்களிடம் கூறுகிறேன். யாராலும் முடியாது! நீரையும் இயேசுவின் இரத்தத்தையும் நம் ஆயுதங்களாகக் கொண்டு போர்ச் செய்யவேண்டும். அவருடைய வார்த்தை வெளிச்சமாகவும் ஆவியின் பட்டயமுமாயிருக்கிறது.

அவர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவிய இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காதவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இரண்டு அம்சங்களை மட்டுமே விசுவாசிக்கும் அநேகர் இன்னமும் இருக்கின்றனர். இயேசு அவர்களிடம் எழுந்து பிரகாசிஎன்று கூறினாலும் அவர்களால் பிரகாசிக்க முடியாது. அவர்கள் இருதயத்தில் இன்னமும் பாவமிருக்கிறது. அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் கூட நரகத்திலே முடிவடைவார்கள்.

நற்செய்தியாகிய ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தத்தைக் குறித்து நாம் சாட்சி கூறுவதன் மூலம் மக்கள் அதனைக் கேட்டு,விசுவாசித்து இரட்சிக்கப்படமுடியும்

  • ஞானஸ்நானத்திலுள்ள விசுவாசம் வெறும் மறுக்க முடியாத கொள்கையா?
  • இல்லை. அது கொள்கையல்ல. அதுவே உண்மையாகும்.

நாம் நற்செய்தியைக் குறித்து சாட்சி கூறும்போது,அது சரியானதாக இருக்க வேண்டும். இயேசு ஆவியாலும்,ஞானஸ்நானத்தினாலும் (அது நம் பாவங்களை எடுத்துப்போட்டது) இரத்தத்தினாலும் (அது நம் பாவக்கிரயமாக செலுத்தப்பட்டது) வந்தார். நாம் இந்த மூன்றையும் விசுவாசிக்கவேண்டும்.

அப்படியில்லையென்றால்,நாம் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு பதிலாக மதத்தைப் பிரசங்கிக்கிறோம். இவ்வுலகின் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை ஒரு மதமாக அழைக்கின்றனர். கிறிஸ்தவத்தை ஒரு மதமாக வரையறுக்க முடியாது. அது விடுதலையின் விசுவாசத்தை உண்மையின் மீது கட்டி,கர்த்தரை நோக்கி பார்ப்பதாகும்.

மதமானது மனிதனால் படைக்கப்பட்ட ஒன்று,ஆனால் விசுவாசம் என்பது கர்த்தர் நமக்கருளிய இரட்சிப்பை நோக்கிப் பார்ப்பதாகும். அதுவே வேறுபாடு. இந்த உண்மையை அலட்சியம் செய்தால்,நீ கிறிஸ்தவத்தை நல்லவற்றையும், முறைகளையும் போதிக்கும் இன்னொரு மதமாக நினைப்பதைக் குறிக்கின்றது.

இயேசுகிறிஸ்து இவ்வுலகில் ஒரு மதத்தை ஏற்படுத்த வரவில்லை. அவர் கிறிஸ்தவம் என்ற மதத்தை ஏற்படுத்தவேயில்லை. அதனை ஒரு மதமாக ஏன் விசுவாசிக்கிறாய்?எல்லாம் ஒன்றானால்,அதற்கு பதிலாக பெளத்த மதத்தை ஏன் விசுவாசிக்க கூடாது?இதனை நான் கூறுவது தவறு என்று நீ நினைக்கிறாயா?

சில மனிதர்கள் இயேசுவை மதமாக விசுவாசித்து என்ன வித்தியாசம்?பரலோகம், நிர்வானம்,மோட்சம்ஸ. அவையெல்லாம் ஒன்றே, அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன. எப்படியாயினும் நாமெல்லாம் ஒரே இடத்தில் முடிவடைவோம்.என்று கூறுவதில் முடிவடைவர்.

உடன் கிறிஸ்தவர்களே,நாம் உண்மையை சந்திக்க வேண்டும். நாம் எழுந்து பிரகாசிக்கவேண்டும். உண்மையை வெட்கமின்றி கூறவேண்டும்.

சிலர் அது மட்டுமே ஒரே வழியாக இருக்க முடியாது”, என்று கூறினால் நீங்கள் உறுதியான குரலில், “ஆம்! அதுவே ஒரே வழி. நீங்கள் நீர்,இரத்தம்,மற்றும் ஆவியினால் வந்த இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே பரலோகம் செல்லமுடியும்என்று கூறவேண்டும். மற்ற ஆத்துமாக்கள் விடுதலையின் சொற்களைக் கேட்டு மறுபடியும் பிறந்து,பரலோகம் செல்லும் அளவிற்கு நீங்கள் மிகவும் பிரகாசமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

சரியான விசுவாசம் கொள்க: இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தின் விடுதலையை அறியாத தேவையில்லாத இயேசுவை நேசிப்பவர்கள் அழிவர்

  • இயேசுவை அவன் விசுவாசித்தாலும் அழிந்போகிறவன் யார்
  • இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காதவர்கள்.

இயேசுவை ஏனோ தானோ என்று விசுவாசிப்பதாக கூறுவது தேவையில்லாத நேசமாகும். அது உண்மையை வெறும் மதமாக பாவிக்கிறது.

பசிபிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று கவிழ்ந்தது. அங்கு ஒரு இரப்பர் பலகையைப் பிடித்துக் கொண்ட சிலர் மட்டும் உயிருடன் விடப்பட்டனர். அவர்கள் அபாய ஒலியை அனுப்பினர். ஆனால் கொந்தளிக்கும் கடல் மற்றக் கப்பல்கள் உதவிக்கு வருவதைத் தடுத்தது. அப்பொழுது ஒரு ஹெலிகாப்டர் வந்து ஒரு கயிறை இறக்கியது.

அவர்களில் ஒருவன் தன்னைச் சுற்றி அக்கயிறைக் கட்டாது,கைகளால் அதனைப் பற்றிக்கொண்டால் அது இயேசுவின் மீது தேவை இல்லாமல் அன்பு செலுத்துவதற்கேற்றதாகும்; அது அவன் நினைத்தபடி கர்த்தரை நம்புவதாகும். அவன் பாதுகாப்பாக இல்லாவிட்டாலும் நான் விசுவாசிக்கிறேன். என்னை இரட்சியும், விசுவாசிப்பதால் நான் இரட்சிக்கப்படுவேன்என்று கூறுகிறான்.

இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் உண்மையைப் புரிந்து கொள்ளாத ஒருவன் தானொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பதால் இரட்சிக்கப் படுவேன் என்று நம்புகிறான்.

ஆனால் அவனை மேலிழுக்கும்போது,அவன் கரங்களின் பிடி தளர்ந்து போகும். அவன் தன்னுடைய சொந்த பலத்தினால் மட்டுமே அந்தக் கயிறைப் பற்றிக் கொண்டிருப்பான். அந்த பலம் தீரும்போது,அவனின் பிடி தளர்ந்து மீண்டும் கடலினுள் விழுவான்.

தேவையில்லாமல் இயேசுவின் மீது அன்பு செலுத்துவதும்,இதனைப் போன்றதே. அநேகர் கர்த்தரையும் இயேசுவையும் விசுவாசிப்பதாக கூறுவர்; அவர்கள் ஆவியினால் வந்த இயேசுவை விசுவாசிப்பதாகக் கூறுவர். ஆனால் இது சமன்பாட்டின் ஒரு பகுதி மட்டுமே. அவர்களால் உண்மையில் விசுவாசிக்கவோ,சரியான நற்செய்தியில் சஞ்சரிப்பதோ இயலாது. ஆகவே அவர்கள் மீண்டும் மீண்டும் தாம் விசுவாசிப்பதாக தம்மைத் தாமே வலியுறுத்துகிறார்கள்.

விசுவாசிப்பதும் விசுவாசிக்க முயல்வதும் ஒன்றாகாது. அவர்கள் இயேசுவைத் தம் முடிவுப் பரியந்தமும் பின்பற்றுவதாக கூறினாலும் அவர்கள் இருதயத்தில் பாவமிருப்பதால் அவர்கள் கடைசி நாளில் தூக்கி எறியப்படுவர். இயேசு ஞானஸ்நானத்தினாலும்,இரத்தத்தினாலும், ஆவியினாலும் வந்தவர் என்பது தெரியாமலேயே அவர்கள் இயேசுவை நேசிக்கின்றனர். அவர்கள் இயேசுவின் இரத்தத்தினிமித்தம் அவரை நேசித்தால் அவர்கள் நரகஞ்செல்வர்.

உன் ஆத்துமாவை ஞானஸ்நான நீரிலும்,சிலுவை இரத்தத்தின் வார்த்தையிலும் கட்டு,இயேசுவானவர் இரட்சிப்பின் கயிறை கீழே வீசும்போது, நீர்,இரத்தம் மற்றும் ஆவியினால் தம்மைக் கட்டிக்கொள்கிறவர்கள் இரட்சிக்கப்படுவர்.

ஹெலிகாப்டரில் வந்த தப்புவிப்போன் ஒலி பெருக்கி மூலம் கத்துகிறான். தயவு செய்து கவனமாக கேள். நான் கயிற்றைக் கீழே வீசும்போது, அதனை உன்னைச் சுற்றி கைகளுக்கடியில் கட்டிக்கொள். பிறகு இப்போது எப்படி இருக்கிறாயோ அப்படியே இரு. உன் கைகளினால் கயிற்றைப் பிடித்து தொங்காதே. உன் நெஞ்சில் அதனைக் கட்டி சும்மாயிரு. அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்.

அவன் இந்த குறிப்புகளைக் கொடுத்தபிறகு,அந்த குறிப்புகளைப் பின்பற்றி தன்னை அக்கயிறால் கட்டிக்கொண்ட ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டான். ஆனால் மற்ற மனிதன் கூறினான், “கவலைப்படாதே நான் மிகவும் உறுதியானவன். நானொரு உடற்பயிற்சி கிளப்பில் பயிற்சி செய்கிறேன். என்னுடைய தசையைப் பார்க்க முடிகிறதா? என்னால் பல மைல் தூரம் தொங்கமுடியும்.அவன் அக்கயிறை அது மேலிழுக்கப்படும்போது இருகப் பற்றிக்கொண்டான்.

இரண்டு மனிதர்களும் மேலே இழுக்கப்பட்டனர். ஆனால் அங்கே வித்தியாசமிருக்கிறது. குறிப்புகளைக் கேட்டு கயிறைத் தன்னைச் சுற்றிக்கொண்டவன் எந்த சிக்கலுமில்லாமல் மேலிழுக்கப்பட்டான். வழியில் அவன் மயங்கிப்போனாலும் கூட அவன் மேலே இழுக்கப்பட்டான்.

தன் பலத்தை குறித்து பெருமைப் பாராட்டினவன் தன் பலம் இழந்ததால் பிடி தளர்ந்தது. அவன் குறிப்புகளைக் கேட்டும் அதனை அலட்சியம் செய்தமையால் மரித்தான்.

முழு விடுதலையைப் பெறவேண்டுமானால்,ஒருவன் அவரின் விடுதலையளிக்கும் ஞானஸ்நான நீரையும் இரத்தத்தையும் அவை எல்லா ஆத்துமாக்களையும் பாவத்திலிருந்து இரட்சித்தது என்பதையும் விசுவாசிக்க வேண்டும். வார்த்தையை முழு இருதயத்தோடு விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கும்,அவ்வார்த்தையானது: நான் உன்னை யோவான் ஸ்நானன் எனக்களித்த ஞானஸ்நானம் மூலமும் சிலுவையில் மரிக்கும் வரை இரத்தஞ்சிந்தியும் முழுமையாக இரட்சித்தேன்.

இரத்தத்தை மட்டுமே விசுவாசிக்கிறவர்கள் கூறுகின்றனர், “கவலைப்படாதே,நான் விசுவாசிக்கிறேன். இயேசுவின் இரத்தத்திற்கு என் வாழ்வின் முடிவு வரை நன்றி கூறுவேன். இயேசுவை என் முடிவுவரை பின்பற்றுவேன்,மேலும் இரத்தத்தின் மீதுள்ள எனது விசுவாசம், உலகை மேற்கொள்வதற்கும் என் மீதி வாழ்வின் பாவங்களும் போதுமானது.

ஆயினும்,இது போதாது,கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் என்று சாட்சி கூறுபவர்கள் மூன்று அம்சங்களையும் விசுவாசிப்பவர்கள்: அந்த அம்சங்களாவன,இயேசு ஆவியால் வந்து ஞானஸ்நானம் பெற்றார். (யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் இயேசு எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார்.) பிறகு அவர் எல்லாப் பாவங்களுக்கும் கிரயம் செலுத்த சிலுவையில் மரித்து, மரித்தவர்களில் இருந்து உயிரோடெழும்பினார்.

எல்லா மூன்று அம்சங்களையும் விசுவாசித்து அவற்றிற்கு சாட்சி கூறுபவர்களின் மீதே ஆவியானவர் வருகிறார். ஆம்,நான் உன் இரட்சகர். நான் உன்னை நீராலும் இரத்தத்தாலும் இரட்சித்தேன். நான் உன் தேவன்.

ஆனால் இந்த மூன்றையும் விசுவாசிக்காதவர்களுக்கு,கர்த்தர் இரட்சிப்பை அளிப்பதில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் விட்டுவிட்டாலும்,கர்த்தர் கூறுகிறார், “இல்லை,நீ இரட்சிக்கப்படவில்லை.அவரின் எல்லா சீடர்களும் இம்மூன்றையும் விசுவாசித்தனர். அவரின் ஞானஸ்நானம் இரட்சிப்பின் சாட்சி என்றும்,அவர் இரத்தம் தீர்ப்பு என்றும் இயேசு கூறுகிறார்.


அப்போஸ்தலனாகிய பவுலும் பேதுருவும் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்திற்கு சாட்சி கூறுகின்றனர்

  • இயேசுவின் சீடர்கள் எதற்கு சாட்சி கூறுகிறார்கள்?
  • இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்திற்கு.

அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து எதுவும் கூறுகிறானா? அவன் எத்தனை முறை இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து கூறுகிறான் என்று நாம் பார்ப்போம். அவன் ரோமர் 6:3 இல், “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாகரோமர் 6:5 இல், “ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.என்றும் கூறினான்.

கலாத்தியர் 3:27 இலும் அவன் கூறுகிறான். உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ அத்தனைப் பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே.இயேசுவின் அப்போஸ்தலர்கள் இயேசுவின் ஞானஸ்நானமாகிய நீரைக்குறித்து சாட்சி கூறுகிறார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,இப்பொழுது நம்மையும், இரட்சிக்கிறது” (1 பேதுரு 3:21).


நீர் மற்றும் இயேசுவின் இரத்தத்தினால் கர்த்தரின் விடுதலையான இரட்சிப்பு வந்தது

  • கர்த்தர் யாரை நீதிமான் என்றழைக்கிறார்?
  • தன்னிருதயத்தில் எந்தப் பாவமுமில்லாத ஒரு மனிதனை.

இயேசுவின் ஞானஸ்நான நீரும் அவரின் சிலுவை இரத்தமுமே இயேசு மனிதர்களுக்களித்த பாவ விடுதலையாகும். அந்த விடுதலையினால் நாம் எப்படி எழும்பிப் பிரகாசிக்க வேண்டும்? இம்மூன்று அம்சங்களையும் சாட்சியாக அறிவிப்பதன் மூலம்.

எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.” (ஏசாயா 60:1) கர்த்தர் நம்மை ஒளியால் பிரகாசிக்கச் செய்து நம்மையும் பிரகாசிக்கும்படி கூறுகிறார். நாம் அக்கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டும்.

அநேக மக்கள் அதனைக் கேட்பதில்லை. நற்செய்தியை முழு விசையுடன் பிரசங்கிக்க வேண்டும். இயேசுவை விசுவாசி அப்போது நீ விடுதலையாவாய். உன்னிருதயத்தில் இன்னும் பாவங்களிருந்தால், நீ இன்னும் நீதிமானாகவில்லை. நீ இவ்வுலகின் பாவங்களை இன்னும் மேற்கொள்ளவில்லை.

இயேசுவின் நீரை (இயேசுவின் ஞானஸ்நானம்) நீ விசுவாசிக்காவிட்டால் உன்னிருதயத்தில் இருக்கும் பாவத்தை உன்னால் தீர்த்துக்கட்டவே முடியாது. இயேசுவின் இரத்ததத்தை நீ விசுவாசிக்கவில்லை என்றால் நியாயத்தீர்ப்பை உன்னால் தவிர்க்கவே முடியாது. ஆவியினால் வந்த இயேசுகிறிஸ்துவை நீ விசுவாசிக்கவில்லை என்றால் நீ எப்பொழுதும் இரட்சிக்கப் படமாட்டாய். நீ இம்மூன்று சாட்சிகளையும் விசுவாசிக்காவிட்டால் நீ முழுமையான நீதிமானாகவே முடியாது.

குறைவான நீதி நீதி என்றழைக்கப்படும்ஒன்றிற்கு வழி நடத்துகிறது. ஒருவன் தன்னில் இன்னும் பாவமிருக்கிறது என்று கூறிக்கொண்டு தன்னை நீதிமான் என்று கருதினால்,அவன் இயேசுவிற்குள் இல்லை. சில மனிதர்கள் இந்நாளில் நீதி என்றழைக்கப்படும்ஒன்றில் விடுதலை என்று தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் டன் கணக்கில் உபயோகமில்லாத கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளனர்.

ஒருவனின் இருதயத்தில் பாவமிருக்குபோது கர்த்தர் அவனை பாவமற்றவன் என்று கூறுகிறாரா? அவர் அதைச் செய்வதில்லை. அவர் எதைக் காண்கிறாரோ அப்படியே அழைக்கிறார். அவர் மகத்துவமுள்ளவர் ஆனால் அவர் எப்போதும் பொய் கூறுவதில்லை. நீதி என்பதன் உண்மைப் பொருளை மக்கள் புரிந்துக் கொள்வதில்லை. ஒன்று சுத்தமாக இருந்தால் மட்டுமே சுத்தமானதுஎன்கிறோம். அங்கு பாவமிருக்கும் போது சுத்தமானதுஎன்று நாம் கூறுவதில்லை.

உஙகள் இருதயத்தில் பாவமிருந்தாலும் இயேசு உங்களை நீதிமான் என்றழைத்தார் என்று எண்ணலாம். இது சரியல்ல.

நாம் இயேசுவை ஆவியால் வந்தவரென்றும்,நீரினால் வந்தவரென்றும் (அவர் ஞானஸ்நானம் பெற்றபோது நம் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார்), இரத்தத்தினால் வந்தவரென்றும் (அவர் மாமிசமாக வந்து நமக்காக மரித்தார்), விசுவாசித்தால் இயேசு நம்மை நீதிமான் என்கிறார்.

உடன் கிறிஸ்தவர்களே, ‘நீதியென்று அழைக்கப் படும் ஒன்றுக்கும்நற்செய்தியாகிய நீர் மற்றும் இரத்தத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அழைக்கப்படும் ஒன்றுஅல்லது நீதியென்று அழைக்கப்படும் ஒன்றுமனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கொள்கை. உன்னிருதயத்தில் பாவமிருக்கும்போது கர்த்தர் உன்னை நீதிமான் என்றழைக்கிறாரா?அவன் எத்தனை தீவிரமாக இயேசுவை விசுவாசித்தாலும் அவனின் இருதயத்தில் பாவங்களிருந்தால் கர்த்தர் அவனை நீதிமான் என்றழைப்பதில்லை. இயேசு பொய் சொல்வதில்லை.

இருந்தாலும்,அவனின் இருதயத்தில் பாவமிருந்தால் அவர் ஒருவனை நீதிமான் என்றழைப்பார் என்று இன்னும் நீ நினைக்கிறாயா?அதுதான் மக்கள் நினைப்பது,கர்த்தரல்ல. கர்த்தர் பொய் சொல்வதை வெறுக்கிறார். நீ ஆவியானவரையும்’ ‘இரத்தத்தையும்மட்டும் விசுவாசிக்கும் போது உன்னை நீதிமான் என்று அழைத்துக் கொள்வாயா? முடியாது.

கர்த்தரால் நீதிமான் என்றழைக்கப்படுவது ஒரேயொரு வகையான மனிதனை மட்டுமே. இருதயத்தில் பாவமில்லாமல் இருக்கும் ஒருவனே அது. அவர் மூன்று அம்சங்களையும் விசுவாசிப்பவர்களையே அறிந்து கொள்கிறார். கர்த்தராகிய இயேசு மனித சரீரத்தில் உலகிற்கு இறங்கி வந்து,யோர்தானில் ஞானஸ்நானம் பெற்று,நம்முடைய அனைத்துப் பாவங்களையும் துடைப்பதற்கு சிலுவையில் இரத்தஞ்சிந்தினார்.

விடுதலையின் நற்செய்தியை விசுவாசிப்பவர்களை மட்டுமே கர்த்தர் அறிந்து கொள்கிறார். அவர்களே சரியான விசுவாசம் உடையவர்கள். அவர் நமக்கு செய்த எல்லாவற்றையும் அவர்கள் முழுமையாக விசுவாசிக்கிறார்கள். இயேசு அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு,ஞானஸ்நானம் பெற்று,சிலுவையில் மரித்ததன் மூலம் அவர் நமக்காக நியாயந் தீர்க்கப்பட்டு,மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள்.

இவையெல்லாம் கர்த்தருடைய அன்பின் மூலமாகச் செய்யப்பட்டது. இயேசு பரலோகத்தினின்று இறங்கி வந்து வருத்தப்பட்டு பாவஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று கூறினார். அவர் நம் பாவங்களைச் சுமந்ததன் மூலம் இதைச் செய்தார்.

இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்களை கர்த்தர் ஏற்றுக்கொள்வதில்லை. இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்களின் இருதயத்தில் இன்னமும் பாவமிருக்கிறது.

யாரை விடுதலையானவர்களாக இயேசு கருதுகிறார்? “நான் இவ்வுலகிற்கு இறங்கி வந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றதால் உன் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டேன். உலகின் எல்லாப் பாவங்களும் என் மீது சுமத்தப்பட்டது என்று நான் சாட்சி கூறுகிறேன். பாவத்திற்கான கூலியை சிலுவையில் செலுத்தினேன்,இப்படியாக உன்னை இரட்சித்தேன்.இயேசுவின் ஞானஸ்நானம்,அவரின் இரத்தம், மற்றும் அவர் கர்த்தர் என்ற குறிப்பு ஆகியவை விசுவாசமாகும். இவையெல்லாம் இரட்சிப்பிற்கு அவசியமானவை.

இவை மூன்றையும் விசுவாசிப்பவர்களிடம் இயேசு கூறுகிறார், “ஆம்,நீ இரட்சிக்கப்பட்டாய். நீ நீதிமானும் கர்த்தரின் பிள்ளையுமாவாய்.இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் மற்றும் ஆவி ஆகிய மூன்றையும் ஒன்றாக விசுவாசித்தால் நீ இரட்சிக்கப்படுவாய். இரத்தத்தையும் ஆவியையும் விசுவாசிப்பவர்களின் இருதயத்தில் பாவம் இன்னமுமிருக்கிறது.

தேவனுடைய இராஜ்யத்திலிருப்பது ஒரேயொரு சத்தியமே. அங்கே நியாயமும், நேர்மையும்,அன்பும் இரக்கத்தன்மையும் உள்ளன. அங்கு ஒரு துரும்பளவு பொய்யுமில்லை. பொய்யும் கபடும் பரலோகத்திலில்லை.

  • அநியாயச் செய்கைக்காரர் யார் ?
  • இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காதவன்.

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா?உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா?உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?என்பார்கள்.” (மத்தேயு 7:22)

கர்த்தர் அவர்களுடைய செய்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அப்பொழுது,நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக் காரரே,என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:23)

உமக்கு இரண்டு வீடுகளைக் கொடுத்தேன். உமக்காக என் உயிரைக் கொடுத்தேன். நீர் என்னைக் காண்கிறதில்லையா?நான் யாலு என்னும் நதியினால் உம்மை மறுக்காது என் உயிரை விட்டேன். நீர் என்னைக் காண்கிறதில்லையா?”

அப்படியானால் உன்னிருதயத்தில் இன்னமும் பாவமிருக்கிறதா?”

ஆம் கர்த்தரே,சிறிது இருக்கிறது.

அப்படியானால் வெளியே போ. எந்தப் பாவிக்கும் இங்கு வர அனுமதியில்லை.

ஆனால் நான் இரத்த சாட்சியாக மரித்தேன்.

நீ என்ன கூறுகிறாய்,இரத்த சாட்சியாக மரித்தாயா?உன் பிடிவாதத்தால் நீ மரித்தாய். நீ என் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் ஒப்புக்கொண்டாயா?நீங்கள் என் மக்களென்று எப்போதாவது சாட்சி கூறினேனா?நீ எனது மக்களிலொருவன் என்று உன்னிருதயத்தில் எப்போதாவது சாட்சி கூறினேனா?நீ என் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காததால்,நீ என்னுடைய மக்களிலொருவன் என்று சாட்சி கூறவில்லை,மேலும் நீ உன் சொந்த விசுவாசத்தைப் பற்றிக்கொண்டு அதற்காக மரித்தாய். உனக்காக எப்போது சாட்சி கூறினேன். நீயாகவே அதனை வரவழைத்துக் கொண்டாய். நீ உன் சொந்த விடுதலையை நேசித்து முயற்சித்தாய். இதனைப் புரிந்து கொண்டாயா? இப்பொழுதும்,உன் வழியிலேயே செல்.

நம்மை எழுந்து பிரகாசிக்கும்படி இயேசு கூறினார். விடுதலையான மக்கள் போலி கிறிஸ்தவர்களுக்கு முன்பும் கள்ளத் தீர்க்கத்தரிசிகளுக்கு முன்பும் பயந்து ஒதுங்குவதால் நன்கு பிரகாசிக்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் ஒரு பொறி நெருப்பால் மிகப்பெரிய தீயை உருவாக்க முடியும். ஒருவன் எழுந்து நெஞ்சுரத்துடன் சாட்சி கூறினால் முழு உலகமும் பிரகாசிக்கும்.

ஏசாயா 60:1-2 இல், “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது,கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ,இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும். ஆனாலும் உன் மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

பொய்யான காரிருளும் தவறான நற்செய்தியும் உலகை மூடிக்கொண்டிருப்பதால் எழுந்து பிரகாசிக்கும் படி இது கட்டளையிடுகிறது. இயேசுவை விசுவாசிப்பவர்களாலேயே அவரை நேசிக்க முடியும். விடுதலையடையாதவர்களால் இயேசுவை நேசிக்க முடியாது. அது அவர்களுக்கு எப்படியாகும்?அவர்கள் வெறும் அன்பைக் குறித்து பேசுகிறார்கள்,ஆனால் அவர்கள் விசுவாசிக்காவிட்டால் உண்மையாகவே அவரை நேசிக்க அவர்களால் முடியாது.


பாவிகளின் இரட்சிப்பைக் குறித்து மூன்று காரியங்கள் சாட்சி கூறுகின்றன

  • நம்மிருதயத்தின் இரட்சிப்பைக் குறித்து சாட்சி கூறுவது எது?
    • இயேசுவின் ஞானஸ்நானம்.

பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி,ஜலம், இரத்தம் என்பவைகளே,இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.இயேசு இவ்வுலகிற்கு வந்து நீர் மற்றும் இரத்தம் மூலம் தம் செய்கைகளைச் செய்தார். இதனைச் செய்ததின் மூலம் நம்மை இரட்சித்தார்.

நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப் பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக் குறித்து கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ,தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன்,ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.” (1 யோவான் 9-12)

மறுபடியும் பிறந்தவர்கள் மனிதர்களின் சாட்சியைப் பெறுகிறார்கள். நாம் நீதிமான்களென அங்கீகரிக்கப் பட்டுள்ளோம். விடுதலையாக்கப் பட்ட மறுபடியும் பிறந்தவர்கள் விடுதலையின் உண்மையைக் குறித்து பேசும் போது,மக்களால் அதனை எதிர்த்து வாதிட முடியாது. அவர்கள் அதை ஏற்றுக்கொள்வர். நாம் நம் விசுவாசத்தில் சரியாக இருப்பதால்,அவர்கள் நாம் சரியாக விசுவாசிப்பதாக கூறுவார்கள். நாமெப்படி மறுபடியும் பிறந்தோமென்று அவர்களிடம் கூறினால், அதிலுள்ள உண்மைக்கு எதிராக யாரும் வாதிடுவதில்லை. அவர்கள் நம்மைச் சரியானவர்கள் என்று கூறுவர். நாம் மக்களின் சாட்சியைப் பெற்றோம்.

இந்த வசனம் கூறுகிறது, “அது கர்த்தரின் சாட்சியாக இருப்பதால்,அது மிகப்பெரிய சாட்சி.கர்த்தரின் சாட்சி அவரின் குமாரனே,சரியா? அவருடைய குமாரனின் சாட்சி யார்?இயேசு ஆவியால் வந்ததும்,அவர் விடுதலையின் நீரினால் வந்ததும்,அவர் சிலுவையின் இரத்தத்தினால் வந்ததும் கர்த்தர் நம்மை இரட்சித்தமைக்கான அத்தாட்சியாகும். கர்த்தர் நம்மை இப்படியாக இரட்சித்ததாக சாட்சி கூறுவதுடன்,நாம் அதனை விசுவாசிப்பதால் அவர் மக்களுமானோம் என்று சாட்சி கூறுகிறார்.

தேவனுடைய குமரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ,தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால்,அவரைப் பொய்யராக்குகிறான்.

இவ்வசனம் விடுவிக்கப்பட்டவர்கள் யாரென்று தெளிவாகக் கூறுகிறது. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான் என்று இது கூறுகிறது. உன்னிருதயத்தில் சாட்சி இருக்கிறதா?அது உன்னிலும் என்னிலும் இருக்கிறது. இயேசு நமக்காக உலகத்திற்கு இறங்கி வந்தார். (மரியாளின் சரீரத்தின் மூலம் மாமிசமாக அவர் வந்தார்) அவர் 30 வயதினராக இருக்கும்போது எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொள்ளும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்றார். நம் எல்லாப் பாவங்களுடனும் அவர் சிலுவையில் நியாயந் தீர்க்கப்பட்டார். நமக்கு அழியாத வாழ்வைக் கொடுக்க மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார். இப்படியாக இயேசு நம்மை இரட்சித்தார்.

அவர் உயிரோடெழும்பியிருக்காவிட்டால் என்னவாகி இருக்கும்? கல்லறையில் அவர் எப்படி எனக்கு சாட்சி கொடுக்க முடியும்? அதனாலேயே அவர் என் இரட்சகர். இதனைத் தான் நாம் விசுவாசிக்கிறோம்.

அவர் கூறியது போலவே,அவர் தம் ஞானஸ்நானத்தினாலும்,இரத்தத்தினாலும் நம்மை இரட்சித்தார். அதனை நாம் விசுவாசிப்பதால் உன்னையும் என்னையும் அவர் இரட்சித்தார். இந்த சாட்சி உன்னிலும் இருக்கிறது,என்னிலும் இருக்கிறது. விடுதலையானவன் அவரின் ஞானஸ்நான நீரைஅலட்சியம் செய்யமாட்டான். அவர் நம்மை இரட்சிக்க செய்த காரியங்களை நாம் விட்டுவிடமாட்டோம்.

இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” (மத்தேயு 3:15) யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவர் நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் மறுக்கவே மாட்டோம். விடுதலையானவர்களால் இயேசுவின் ஞானஸ்நான நீரைமறுக்கவே முடியாது.

விசுவாசித்தும் விடுதலையாகாதவர்கள் கடைசி வரை இயேசுவின் ஞானஸ்நானத்தை மறுக்கிறார்கள்

  • கர்த்தரைப் பொய்யராக்குவது யார்?
  • இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காதவர்கள்.

அப்போஸ்தலனாகிய யோவான், “தேவன் தம்முடைய குமாரனைக் குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால்,அவரைப் பொய்யராக்குகிறான்என்று எத்தனைத் துல்லியமாக கூறுகிறான். இப்பொழுது அப்போஸ்தலனாகிய யோவான் இங்கு ஜீவித்தால் கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் அவன் என்ன கூறுவான்? ‘இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டாராஎன்று கேட்பான்.

இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் நம்மை விடுவித்தார் என்ற நற்செய்தியை யோவான் ஸ்நானனும் சாட்சி கூறவில்லையா? “இயேசுவின் தலையில் உன் பாவங்கள் சுமத்தப்பட்டு என்னால் அவர் ஞானஸ்நானம் பெற்றபோது உன் பாவங்களை அவர் சுமக்கவில்லையா?” ‘உன்னை இரட்சிக்கவே அவர் ஞானஸ்நானம் பெற்றார்என்று அவன் சாட்சி கூறுவான். (யோவான் 1:29, 1யோவான் 5:4-8).

கர்த்தரை விசுவாசிக்காதவனும்,அவர் நம்மை இரட்சிக்க செய்த அனைத்தையும் விசுவாசிக்காதவனும்,அவரை பொய்யராக்குகிறான். அவர் ஞானஸ்நானம் பெற்றபோது இயேசு நம் அனைத்து பாவங்களையும் எடுத்துப்போட்டார் என்று கூறும்போது அவர்கள் கூறுவர். ,அன்பானவரே! அவர் நம் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்! அவர் நம்முடைய மூலப் பாவங்களை மட்டும் சுமந்ததால் நம் தினப் பாவங்கள் அப்படியே இருக்கின்றன.

அவர்கள் விடுதலையாகும் பொருட்டு ஒவ்வொரு நாளும் மனம் வருந்தி தற்போதுள்ள எல்லாப் பாவங்களையும் அறிக்கைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதைத்தான் அவர்கள் விசுவாசிக்கின்றனர். நீங்களும் அதைத்தான் கூறுகிறீர்களா?அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்கள் கழுவப்பட்டன என்று விசுவாசிக்காதவர்கள் கர்த்தரைப் பொய்யராக்குகின்றனர்.

இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இரத்தம் சிந்தியதால் நம்மை ஒரே தரமாக விடுவித்தார்

  • பொய்ச்சொல்லுவது யார்?
  • இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காதவன்.

அவர் ஞானஸ்நானம் பெற்று ஒரேதரமாக எல்லாப் பாவங்களையும் எடுத்துபோட்டார். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் நம்புகிறவர்களையோ கர்த்தர் இரட்சிக்கிறார். விசுவாசிக்காதவர்களையோ விட்டுவிடுகிறார். அவர்கள் நரகத்திற்கு செல்வர். ஆகவே நாம் எதனை விசுவாசிக்கிறோம் என்பதில்,நாம் இரட்சிக்கப்பட்டோமா இல்லையா என்பது இருக்கிறது. இயேசு உலகத்தை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்தார். அதனை விசுவாசிப்பவர்கள் இரட்சிக்கப்படுவர். ஆனால் விசுவாசியாதவர்கள் கர்த்தரை பொய்யராக்கியதால் அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள்.

மக்கள் தாம் பலவீனர்களாக இருப்பதால் நரகத்திற்கு போவதில்லை,ஆனால் அவர்களின் குறைபாடுள்ள விசுவாசத்தினாலேயே நரகம் செல்லுகின்றனர். தேவனை விசுவாசியாதவனோ,அவரைப் பொய்யராக்குகிறான்.” (1யோவான் 5:10) அவர்களின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்று விசுவாசிக்காதவர்களின் இருதயங்களில் இன்னமும் பாவமிருக்கிறது. அவர்களால் தம்மிடம் பாவமில்லை என்று கூறமுடியாது.

ஒரு முறை டீக்கன் ஒருவரைச் சந்தித்துக் கேட்டேன், “டீக்கன்,நான் இயேசுவை விசுவாசித்தால் என் பாவங்கள் போய்விடுமா?”

ஆம் அவைப் போய்விடும்.

அப்படியானால்,இயேசு இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு எல்லாம் முடிந்தது என்று கூறியதால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள், இது சரியா?”

ஆம்,நான் இரட்சிக்கப்பட்டேன்.

அப்படியானால் உங்களிடம் பாவங்களில்லை

ஆம்,என்னிடம் பாவங்களில்லை.

நீங்கள் மீண்டும் பாவம் செய்தால் என்னவாகும்?”

நாமெல்லாம் மனிதர்கள். நாம் எப்படி மீண்டும் பாவஞ்செய்யாதிருப்போம்? ஆகவே ஒவ்வொரு நாளும் மனம் வருந்தி நம் பாவங்களைக் கழுவ வேண்டும்.

இந்த டீக்கனுக்கு விடுதலையின் முழு உண்மையும் தெரியாததால் அவர் இருதயத்தில் இன்னமும் பாவமிருக்கிறது.

அவரைப் போன்றவர்களே கர்த்தரைக் கேலி செய்து அவரைப் பொய்யராக்குகின்றனர். கர்த்தராகிய இயேசு உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொள்வதில் தோல்வியுற்றாரா?இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இயேசு அப்பாவங்களை மேற்கொள்ளவில்லையெனில் அவர் எப்படி இரட்சிப்பின் தேவனாயிருக்க முடியும்?அவரை விசுவாசிக்கும்படி அவர் எப்படி நம்மிடம் கூறமுடியும்?நீ அவரைப் பொய்யராக்கப் பார்க்கிறாயா? நீ அப்படி செய்ய வேண்டாமென்று உனக்கு நான் கூறுகிறேன்.

அவரைக் கேலி செய்யவேண்டாம் என்று வேதாகமம் கூறுகிறது. அவரைப் பொய்யராக்கி அவரை வஞ்சிக்க முயல வேண்டாமென்று இது பொருள் படுகிறது. அவர் நம்மைப் போன்றவரல்ல.

அப்போஸ்தலனாகிய யோவான் விடுதலையின் நற்செய்தியைக் குறித்து தெளிவாக நம்மிடம் கூறுகிறான். கர்த்தர் நமக்காக செய்த அனைத்தையும் மக்கள் விசுவாசிக்க வேண்டாமென்றிருக்கிறார்கள். (இயேசுகிறிஸ்து நீராலும்,இரத்தத்தாலும்,ஆவியாலும் வந்தவர் என்பதை).

அவர்களுக்கு கூறப்பட்டதைப் போன்று விசுவாசிக்காதவர்களும்,நமக்காக கர்த்தர் செய்த எல்லாவற்றையும் விசுவாசிப்பவர்களுக்கும் (கர்த்தருக்கு முன்பு நான் நீதிமான்என்பவர்களுக்கும், “நான் பாவிஎன்று கூறுபவர்களுக்கும்) நடுவே, உண்மையைக் கூறுவது யார்?

கர்த்தர் நமக்கு செய்த காரியங்களான நீர்,இரத்தம் மற்றும் ஆவி ஆகியவற்றை விசுவாசிக்காதவர்கள் பொய்யர்கள். அவர்களிடமிருப்பது போலி நம்பிக்கை. விசுவாசம் வைக்காதவர்கள் யாரோ அவர்கள் கர்த்தரைப் பொய்யராக்குகின்றானர்.

அவரைப் பொய்யராக்க வேண்டாம். இயேசு யோர்தான் நதிக்கு வந்து இப்படியாக (ஞானஸ்நானம் பெற்றது) நீதியையும் (உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்தார்) நிறைவேற்றினார்.

இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் பரிசுத்தத்தையும் உண்மையில்லாத ஆத்துமா மறுக்கிறது

  • சாத்தானும் பிசாசும் எதனை மறுக்கின்றனர்?
  • இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் பரிசுத்தத்தையும்

அவரின் குமாரனை விசுவாசிக்கிறவனின் உள்ளே சாட்சியிருக்கிறது. விடுதலையான ஒரு மனிதன், இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவனின்/அவளின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்றும் அவன்/அவள் இயேசுவின் நீர் மற்றும் இரத்தத்தில் விடுதலையாயினர் என்றும் விசுவாசிக்கின்றனர். மரியாளின் சரீரத்தின் மூலம் இயேசு இவ்வுலகில் பிறந்தாரென்றும்; அவர் சிலுவையில் மரிக்கும் முன் யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றார் என்றும்; அவர் மரித்து மீண்டும் உயிரோடெழுந்தார் என்றும் அவன் விசுவாசிக்கிறான்.

நீதிமானிடம் சாட்சியிருக்கிறது. நீரினாலும்,இரத்தத்தினாலும் ஆவியினாலும் வந்த இயேசுவின் மீதுள்ள நம் விசுவாசத்தின் மீது நம் இரட்சிப்பின் அத்தாட்சி இருக்கிறது. உன்னுள்ளேயே சாட்சி இருக்கிறது. உனக்குள்ளேயே சாட்சியைப் பெற்றுக்கொள்.நான் உன்னிடம் கூறுகிறேன். அங்கு இரட்சிப்பின் அத்தாட்சியாகிய சாட்சி உன்னிடம் இல்லையென்றால் அது இரட்சிப்பல்ல.

அப்போஸ்தலனாகிய யோவான் கூறினான். தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்த சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்” (1யோவான் 5:10). இது சிலுவை இரத்தத்தின் மீது மட்டுமே விசுவாசம் வைத்து சாட்சி பெறுவதாகுமா?நீரை விசுவாசித்து இரத்தத்தை விசுவாசியாமலிருப்பதா?கர்த்தரால் நீ அங்கீகரிக்கப் படவேண்டுமானால் நீ இம்மூன்றையும் விசுவாசிக்கவேண்டும்.

அப்பொழுது மட்டுமே நீ இரட்சிக்கப்பட்டாய்என்று இயேசு சாட்சி கூறுகிறார். இரண்டு அம்சங்களை மட்டும் விசுவாசித்துச் சாட்சியைப் பெறுவேன் என்று நீ கூறுகிறாயா?அது உன் சொந்த வழியில் கர்த்தரை விசுவாசிப்பதாகும். அது உனக்கு நீயே சாட்சிகூறுவதாகும்.

இதுபோன்றவர்கள் அநேகம் இருக்கிறார்கள். மூன்றில் இரண்டை மட்டுமே விசுவாசிக்கும் அநேகர் இவ்வுலகிலிருக்கின்றனர். அவர்கள் தாம் இரட்சிக்கப் பட்டதாக சாட்சி கூறி அதைப்பற்றி புத்தகங்கள் எழுதுகிறார்கள். எத்தனை இலகுவாக அவர்களுக்கு வருகிறது! அது வேதனையளிக்கிறது. அவர்கள் தம்மை நற்செய்தியாளர்கள் என்றழைக்கின்றனர். அவர்கள் தாமொரு நற்செய்தியாளர்கள்மட்டுமில்லை என்று உணருகிறார்கள்,ஆனால் அவர்கள் மதவாதிகள். அவர்கள் நீரைவிசுவாசிக்காவிட்டாலும் இரட்சிப்பைக் குறித்து பெருமைப் பாராட்டுகிறார்கள்! எத்தனை தர்க்கவாதிகளாக அவர்களுள்ளனர்! அவர்களிடம் கர்த்தரின் சாட்சி இல்லை. அது ஒரு கோட்பாடேயாகும்.

அதனை இரட்சிப்பு என்று எப்படி அழைப்பாய்?ஆவி, நீர்,மற்றும் இரத்தத்தினால் வந்த இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே கர்த்தரின் சாட்சியும் மனிதர்களின் சாட்சியுமிருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான், “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல,வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும்,முழு நிச்சயத்தோடும் வந்தது” (1 தெசலோனிக்கேயர் 1:5). இயேசுவின் இரத்தத்தை மட்டும் மக்கள் விசுவாசிப்பதைக் கண்டு சாத்தான் பூரித்துப் போகிறான்.  ,முட்டாள்களே, நீங்கள் என்னால் வஞ்சிக்கப் பட்டீர்கள்ஸ. ஹா....இயேசுவின் இரத்தத்தைப் புகழ்ந்தால் சாத்தான் ஓடிப்போவான் என்று விசுவாசிக்கும் அநேக மக்கள் இருக்கின்றனர். சாத்தானுக்கு சிலுவையிடம் பயம் என்று அவர்கள் எண்ணுகின்றனர். சாத்தான் வெறுமனே நாடகமாடுகிறான். அதனால் நாம் முட்டாள்களாகக் கூடாது.

பிசாசு ஒருவனில் நுழைந்தால் அவன் பேதையாகி,அவன் வாயிலிருந்து நுரைத் தள்ளுகிறது. அது சாத்தானுக்கு கடினமான வீரச் செய்கையாகாது. ஒரு மனிதனை எதையும் செய்யக் கூடியவனாக்கும் அளவு பிசாசிடம் வல்லமை இருக்கிறது. சாத்தான் தன்னுடைய மூளையில் சிறிது உபயோகிக்க வேண்டும் அவ்வளவே. கர்த்தர் சாத்தானுக்கு கொல்வதைத் தவிர மீதி அனைத்து அதிகாரங்களையும் கொடுத்துள்ளார். பிசாசினால் ஒருவன் இலையைப் போல் ஆடவோ, கூச்சலிடவோ,வாயில் நுரைத்தள்ளச் செய்யவோ முடியும்.

இது நடக்கும் போது இயேசுவின் நாமத்தினால் ஓடிப்போ சாத்தானே! ஓடிப்போ! என்று விசுவாசிகள் சத்தமிடுகின்றனர். அம்மனிதன் தன் உணர்வுகளைப் பெற்று தன் நிலைக்கு மீண்டும் வரும்போது, அது இயேசுவின் இரத்தத்தின் வல்லமையால் நடந்தது என்று கூறுகிறார்கள். இது இயேசுவின் இரத்தத்திலுள்ள வல்லமை அல்ல. சாத்தான் நாடகமாடுவதே இது.

சாத்தானும் பிசாசும்,நம்மைத் தம் ஞானஸ்நானத்தால் சுத்தமாகக் கழுவி,அவரின் இரத்தத்தின் மூலம் நமக்காக நியாயத்தீர்ப்பை ஏற்று மூன்றாம் நாள் உயிரோடெழுந்த இயேசுவை விசுவாசிப்பவர்களிடம் அதிகம் பயப்படுவர். இயேசுவின் ஞானஸ்நானம் இரத்தத்தின் இரட்சிப்பு ஆகியவற்றின் சாட்சியின் அருகில் சாத்தான் இருப்பதில்லை.

கத்தோலிக்க ஆசாரியர்கள் பேய்விரட்டுவதை நீங்கள் அறிவீர்கள். சில திரைப்படங்களில் அதைப் பார்த்துள்ளோம். தி ஓமென்என்ற படத்தில்,ஆசாரியன் ஒரு சிலுவையைப் பிடித்துக்கொண்டு அதனை ஆட்டுகிறான். ஆனால் அந்த ஆசாரியன் இறந்து போகிறான். மறுபடியும் பிறந்த ஒருவன் இது போல் தோல்வி அடைவதில்லை.

அவன் இயேசுவின் இரத்தம் மற்றும் நீரைக் குறித்து மட்டுமே பேசுகிறான். பிசாசு அவனைத் துன்புறுத்த முயலும்போது, “இயேசு என் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று பிசாசிடம் அவன் கேட்பான். பிசாசு அப்போது ஔடிப்போகும். மறுபடியும் பிறந்தவர்களின்அருகில் வருவதை பிசாசு வெறுக்கிறது. மறுபடியும் பிறந்த ஒருவன்அங்கே உட்கார்ந்தால்,பிசாசு தப்பிக்க முயலும். கர்த்தரை விசுவாசிக்காதவர்கள் அவரைப் பொய்யராக்குகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் இயேசுவின் சாட்சியையோ,நீர் மற்றும் இரத்தத்தின் சாட்சியையோ விசுவாசிப்பதில்லை.

  • தேவகுமாரனின் சாட்சிகள் என்ன?
    • அவரின் ஞானஸ்நானம்,அவரின் இரத்தம் மற்றும் ஆவியானவர்.

தேவகுமாரனின் சாட்சிகள் என்ன?அவர் ஆவியினால் வந்து நீரினால் நம் பாவங்களை எடுத்துப்போட்டார் என்பதே. அவர் உலகின் அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொன்டு நமக்காக சிலுவையில் இரத்தஞ்சிந்தினார். அது நீர், இரத்தம் மற்றும் ஆவியினால் வந்த விடுதலை இல்லையா?

மக்கள் விடுதலையின் நற்செய்தியான, நீர்,இரத்தம் ஆகியவற்றின் நற்செய்தியை விசுவாசிக்காததால் கர்த்தர் முன் பொய் கூறுகின்றனர். அவர்கள் நம்பிக்கைத் தவறானது,அவர்கள் தம் தவறுகளை பரப்புகின்றனர்.

1 யோவான் 5 இற்கு திரும்புவோமாக, 11 ஆம் வசனம் கூறுகிறது, “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.கர்த்தர் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார் என்று கூறுகிறது. அதனைப் பெற்றுக்கொள்ளும் மனிதனிடம் ஜீவன் இருக்கிறது. மேலும் அந்த ஜீவன் அவர் குமாரனில் இருக்கிறது.

     இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்ததன் மூலம் விடுதலைப் பெற்றவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டவர்கள். விடுதலையானவர்கள் அழியாத வாழ்வைப் பெற்று என்றென்றும் வாழ்வர். நீ அழியாத வாழ்வைப் பெற்றுக் கொண்டாயா?

12 ஆம் வசனத்தில், “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்,தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு இவ்வுலகில் செய்தவற்றை விசுவாசிப்பவன்: அவர் ஞானஸ்நானம் பெற்றதையும் சிலுவையில் மரித்ததையும்,அவரின் உயிர்த்தெழுதலையும், விசுவாசிப்பவன் அழிவில்லாத வாழ்வைப் பெறுவான். இவற்றில் ஒன்றை விட்டாலும் கூட அவன் விடுதலையாவதோ நித்திய ஜீவனைப் பெறுவதோ இல்லை.

அப்போஸ்தலனாகிய யோவான் கர்த்தரின் மக்களை அவர்கள் இயேசு செய்தவைகளான: நீர்,இரத்தம் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் பிரித்தறிகிறான். இக்காரியங்கள் அவர்களிடம் வார்த்தை இருக்கிறதா இல்லையா என்று கூறுகிறது. இயேசுவின் ஞானஸ்நான நீர்,அவரின் இரத்தம்,மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் விடுதலையானவர்களை அவன் கண்டு கொள்கிறான்.

மறுபடியும் பிறக்காதவர்களால் செம்மறியாட்டையும் வெள்ளாட்டையும் பிரித்துணர முடியாது

  • விடுதலையானவர்களையும் விடுதலையாகதவர்களையும் யாரால் பிரித்துணரமுடியும்?
  • மறுபடியும் பிறந்த ஒருவனால்.

அப்போஸ்தலனாகிய யோவான் விடுதலையான நீதிமான்களை தெளிவாக கண்டு கொண்டான். அப்போஸ்தலனான பவுலும் கூட அப்படியே. கர்த்தரின் ஊழியன் செம்மறியாட்டையும் வெள்ளாட்டையும் எப்படி பிரித்துணர்வான்?உண்மையான கர்த்தரின் ஊழியர்களிலிருந்து போலிகளை அவர்கள் எப்படி பிரித்துணருகிறார்கள்?நீர் மற்றும் இயேசுவின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசத்தினால் மீட்கப்பட்டவர்களுக்கு அதனைக் காணும் வல்லமை இருக்கிறது.

ஒருவன் போதகனாகவோ,நற்செய்தியாளனாகவோ, மூப்பராகவோ இருந்து,அவனால், விடுதலையானவர்களை அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலோ, செம்மறியாட்டையும்,வெள்ளாட்டையும் பிரித்துணர முடியாவிட்டாலோ,அவன் கூட விடுதலையானவனில்லை, அவனுக்குள் வாழ்வு இல்லை. ஆனால் உண்மையாகவே மீட்கப்பட்டவர்களால் வேறுபாட்டை காணமுடியும். தன்னுள் ஜீவன் இல்லாத ஒருவனால் அதனை வேறுபடுத்தி காணவோ அதனை ஒப்புக்கொள்ளவோ முடியாது.

அது வெவ்வேறு நிறங்களை இருளில் பிரித்துணர்வது போன்றதாகும். பச்சையானது பச்சை நிறம்,வெள்ளையானது வெள்ளை நிறம். நீ உன் கண்களை மூடிக்கொண்டால்,உன்னால் பார்க்கவோ நிறங்களை அங்கீகரிக்கவோ முடியாது.

ஆனால் கண்களைத் திறந்து கொண்டிருப்பவர்களால் நிறங்களில் உள்ள சிறிய வேறுபாட்டைக் கூட கண்டு கொள்ள முடியும். எது பச்சை எது வெள்ளை என்று அவர்களால் கூற முடியும். அது போலவே மீட்கப்பட்டவர்களுக்கும் மீட்கப் படாதவர்களுக்கும் தெளிவான வேறுபாடு உண்டு.

நாம் விடுதலையின் நற்செய்தியான,நீர், இரத்தம் ஆவியாகிய நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். நாம் எழுந்துப் பிரகாசிக்க வேண்டும். விசுவாசத்தைப் பரப்ப நம்மைச் சுற்றி மக்களைக் கூட்டினால், மனிதர்களுடைய வார்த்தைகளினால் பேச மாட்டோம். வேதாகமத்தில் 1 யோவான் 5 அதன் பொருளை விளக்குகிறது. அவற்றை நாம் படிப்படியாக விளக்கினால் அங்கே குழப்பமிருக்காது.

நாம் பரப்பும் வார்த்தைகள்,நீர், இரத்தம்,இயேசுவின் ஆவி குறித்த மீட்பின் ஒளியாக இருக்கின்றன. இயேசுவின் நீரைமக்கள் தெரிந்து கொள்ளும்படிச் செய்ய நாம் பிரகாசமாக ஒளிரவேண்டும். இயேசுவின் இரத்தத்தைதெரிந்து கொள்ளும்படிச் செய்யச் செய்வதால்,இதனை இவ்வுலகில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

மீட்கப்பட்டவர்கள் எழுந்துப் பிரகாசிக்கவில்லை என்றால், அநேக மக்கள் மீட்கப்படாமலேயே மரிப்பர். இதனில் கர்த்தர் பிரியமாயிரார். அவர் நம்மை சோம்பேறி ஊழியர்கள் என்றழைப்பார். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் இயேசுவின் இரத்தத்தை பரப்பவேண்டும்.

இதனை ஏன் மீண்டும் மீண்டும் நான் கூறுகிறேனென்றால் இயேசுவின் ஞானஸ்நானமானது நாம் இரட்சிப்படைய அத்தனை முக்கியமானது. நாம் பிள்ளைகளிடம் பேசும்போது மீண்டும் மீண்டும் விளக்கவேண்டும். அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்று நிச்சயிக்கும் விதமாக ஒவ்வொரு அம்சத்தினுள்ளும் செல்லவேண்டும்.

கல்வி அறிவில்லாத ஒருவனுக்கு நாம் கற்றுக் கொடுக்க முயன்றால், முதலில் எழுத்துக்களைக் கற்றுக் கொடுப்பதில் தொடங்குவோம். பிறகு எழுத்துக்களினால் எப்படி சொற்களை எழுதுவது என்று மெதுவாக கற்றுக்கொடுப்போம். அவனால் தண்டனைபோன்ற சொற்களை எழுத முடியும்போது அந்த சொல்லின் பொருளை விளக்கத் தொடங்குகிறோம். அவர்கள் உண்மையாகவே இயேசுவை புரிந்து கொண்டார்கள் என்று நிச்சயிக்கும் வகையில் இப்படியே மக்களிடம் அவரைக் குறித்து பேச வேண்டும்.

நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து தெளிவாக விளக்கவேண்டும். அவர் இவ்வுலகிற்கு நீரினாலும்,இரத்தத்தினாலும், ஆவியினாலும் வந்தார். நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராக விசுவாசித்து விடுதலையடைவீர்கள் என்று ஜெபிக்கிறேன்.

இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீதுள்ள நம்பிக்கை, சிலுவை இரத்தம்,இயேசுவே தேவன்,நம் இரட்சகர் என்ற விசுவாசம் ஆகியவற்றிலிருந்து நீர் மற்றும் ஆவியான விடுதலை ஊற்றெடுக்கும்.*






இயேசுவின் ஞானஸ்நானமானது பாவிகளின் இரட்சிப்பிற்கு ஒப்பனையாக இருக்கிறது

【3-4】<1 பேதுரு 3:20-22>

 

<1 பேதுரு 3:20-22>

அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல்,தேவனைப் பற்றும் நல்மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து,இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; அவர் பரலோகத்திற்குப் போய்,தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவ தூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

  • நாம் எதனால் நீதிமானாக்கப் பட்டோம்?
    • கர்த்தரின் கிருபையின் மூலம்.

நாம் இவ்வுலகில் பிறக்கு முன்பே. கர்த்தர் நம்மை அறிந்திருக்கிறார். அவருக்கு நாம் பிறவியிலேயே பாவிகள் என்று தெரியுமாகையால்,இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்ட அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் நம் விசுவாசிகள் அனைவரையும் இரட்சித்தார். அவர் எல்லா விசுவாசிகளையும் இரட்சித்ததுடன் அவர்களைத் தமது மக்களுமாக்கினார்.

இவையெல்லாம் கர்த்தருடைய கிருபையின் விளைவு. சங்கீதம் 8:4 இல் கூறிய படி, “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும்,மனுஷ குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டு விடுதலையானவர்கள் அவரின் சிறப்பு அன்பைப் பெற்றவர்கள். அவர்கள் அவரின் பிள்ளைகள்.

நாம் நீர் மற்றும் ஆவியை மட்டும் விசுவாசிப்பதற்கு முன்,நாம் கர்த்தரின் பிள்ளைகளாவதற்கு முன்,நாம் நீதிமான்களாவதற்கு முன்,நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன் அவரைப் பிதாவே என்று அழைக்கும் உரிமைப் பெறுவதற்கு முன்,என்னவாக இருந்தோம்? நாம் வெறும் பாவிகளாயிருந்தோம். நாம் ஆரோக்கியமாக இருந்தால் 60-70 வருடங்களோ, 70-80 வருடங்களோ வாழப் பிறந்த வெறும் பாவிகள்.

நாம் நம்முடையப் பாவங்கள் கழுவப்படுவதற்கு முன்பும்,நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மீது விசுவாசம் வைக்கும் முன்பும், நாம் நிச்சயமாக அழிந்துபோகக் கூடிய நீதியில்லாதவர்களாக இருந்தோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் தான் அவனாகவே இருப்பது அவரின் கிருபையினால் என்றான். நாம் நாமாகவே இருப்பது அவருடைய கிருபையானதால் அதற்கு நன்றி கூறுகிறோம். அவருடைய கிருபைக்கு நன்றி கூறுகிறோம். படைத்தவர் இவ்வுலகிற்கு இறங்கி வந்து நம்மை இரட்சித்து,நம்மை அவர் பிள்ளைகளாகவும்,அவரின் மக்களுமாக்கினார். நீரினாலும் ஆவியினாலும் அருளிய இரட்சிப்பின் கிருபைக்காக அவரிற்கு நன்றி செலுத்துகிறோம்.

அவர் நம்மை அவரின் பிள்ளைகளாகவும்,நீதிமான்களாகவும் அனுமதித்ததற்கான காரணம் யாது?நாம் அழகானவர்கள் என்பதாலா?நாம் பெறுமதியானவர்கள் என்பதாலா?அல்லது நாம் மிகவும் நல்லவர்கள் என்பதாலா?அதனை நினைத்து எங்கே நன்றி கூறவேண்டுமோ அங்கு நன்றி கூறுவோம்.

நாம் அவரின் மக்களாக இருக்கும்படி கர்த்தர் நம்மைப் படைத்ததற்கான காரணம் அவருடன் பரலோக இராஜ்யத்தில் வாழச் செய்வதே. அவருடன் நித்தியமாக வாழ கர்த்தர் நம்மை அவர் மக்களாக்கினார். அழிவில்லாத வாழ்வு மூலம் கர்த்தர் நம்மை ஆசீர்வாதத்திற்கு வேறு காரணங்களில்லை. நாம் அழகானவர்களாக இருப்பதாலோ,பெறுமதியானவர்களாக இருப்பதாலோ, அவரின் மற்றப் படைப்புகளை விட நாம் சுத்தமான வாழ்வு வாழ்வதாலோ அவர் நம்மைத் தம் மக்களாக்கினார் என்பது உண்மையல்ல.

அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது இப்பொழுது நம்மையும் இரட்சிக்கிறது (1 பேதுரு 3:21). “அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள் (1 பேதுரு 3:20).

சிலர் மட்டுமே,ஒரு ஊரிலிருந்து ஒருவனோ,ஒரு குடும்பத்திலிருந்து இருவரோ மட்டும் இரட்சிக்கப்பட்டனர். நாம் மற்றவர்களை விட சிறந்தவர்களா?இல்லவே இல்லை. நாம் அத்தனைச் சிறப்பானவர்களாக இல்லாவிட்டாலும்,நீர் மற்றும் ஆவியில் நாம் விசுவாசம் வைத்ததன் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டோம்.

நாம் இரட்சிக்கப்பட்டது அற்புதத்திலும் அற்புதம்,நம் கர்த்தராகிய அவரை நாம் பிதாவே என்றழைக்கும்படியாக அவர் ஆசீர்வதித்தது நிபந்தனையற்ற ஈவாகும். இதனை நாம் மறுக்கவே முடியாது. நாம் இன்னமும் பாவிகளாகவேயிருந்தால்,நம்மால் அவரை எப்படி நம் பிதா என்றும் நம் கர்த்தரென்றும் அழைக்க முடியும்?

நாம் இரட்சிக்கப்பட்டோம் என்பதைக் குறித்து சிந்தித்தால்,நாம் கர்த்தரால் நேசிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்வோம். நான் அவருக்கு நன்றி கூறமுடியாதா?அவரின் அன்பும் ஆசீர்வாதமும் இல்லையென்றால் எந்த ஒரு பொருளும் இல்லாமல் நாம் பிறந்து இறந்து போயிருப்போம். நரகத்திற்கே நாமனைவரும் போயிருப்போம். நம்மை அவரின் பிள்ளைகளாகவும் அவர் கண்களுக்கு பெறுமதியானவர்களாகவும் மாற்றிய அவரின் ஆசீர்வாதத்திற்கும் அன்புக்கும் மீண்டும் மீண்டும் நாம் கர்த்தருக்கு நன்றி கூறவேண்டும்.

இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நமக்குக் கொடுக்கப்பட்ட விலையேறப்பட்ட இரட்சிப்பு

  • நோவாவின் காலத்தில்  மக்கள் அழிந்து போனதேன்?
  • அவர்கள் நீரை (இயேசுவின் ஞானஸ்நானம்) விசுவாசிக்காததால்.

அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது இப்பொழுது நம்மையும் இரட்சிக்கிறது' 1 பேதுரு எட்டு ஆத்துமாக்கள் மட்டுமே நீரினால் இரட்சிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. நோவாவின் காலத்தில் எத்தனை மக்கள் இருந்திருப்பர்?அங்கு எத்தனைப் பேர் இருந்தார்கள் என்று நம்மால் அறிய முடியாது. ஆனால் ஒரு மில்லியன் மக்கள் இருந்ததாக கொள்வோம். ஒரு மில்லியன் மக்களில் நோவாவின் குடும்பத்திலுள்ள 8 மக்கள் மட்டுமே இரட்சிக்கப்பட்டனர்.

இன்னும் கூட இந்த விகிதம் அது போன்றதாகவே இருக்கலாம். இப்பொழுது 6 பில்லியன் மக்களுக்குமேல் உலகத்தில் வாழ்வதாக கூறுகின்றனர். இன்று இயேசுவை விசுவாசிப்பவர்களில் எத்தனை மக்கள் தம் பாவங்கள் கழுவப்பெற்றனர்?நாம் ஒரே ஒரு நகரத்தை மட்டும் பார்த்தோமானால்,அங்கிருப்பது வெகு சிலரே.

என் நகரில் 250,000 மக்களிருந்தால்,எத்தனை மக்கள் தம் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்றிருப்பர் - 200 இருக்குமா?அப்படியானால் அதன் விகிதம் என்னவாயிருக்கும்? ஆயிரம் பேரில் ஒருவனுக்கும் குறைவானவனே விடுதலையின் ஆசீர்வாதத்தை பெற்றான் என்று இது பொருள் படும்.

கத்தோலிக்கர் உட்பட கொரியாவில் 12 மில்லியன் கிறிஸ்தவர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்கள் எத்தனை பேர் இருப்பர்?நோவாவின் காலத்தில் உலகிலிருந்த அத்தனை மக்களிலும் 8 பேர் மட்டுமே இரட்சிக்கப்பட்டனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்ட ஞானஸ்நானத்தை விசுவாசிப்போரின் பாவங்களை அவர் கழுவிவிட்டார் என்பதை நாமறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும்.

இயேசு நம்மை அவரின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் விடுவித்தார் என்பதை விசுவாசிக்கும் மக்கள் அநேகர் இல்லை. இயேசு உயிரோடெழும்பும்' உலகப்புகழ் பெற்ற படத்தைப் பாருங்கள். எத்தனை உயிரோடெழும்பிய மக்கள் அதில் வரையப்பட்டுள்ளனர்?அவர்கள் எருசலேம் கோட்டையிலிருந்து இயேசுவின் உருவத்தை நோக்கி இறங்கி வருவது போலவும், இயேசு அவர்களுக்கு முன் தம் கைகளை விரித்தபடி இருப்பதையும் நாம் காணலாம். அவர்களில் எத்தனைப் பேர் இறையிலாளர்கள்?

இன்று உலக முழுவதும் அநேக இறையியலாளர்கள் இருக்கின்றனர்,ஆனால் விடுதலையின் ஞானஸ்நானத்தை அறிந்து விசுவாசிப்பவர்கள் சிலரை மட்டுமே நாம் காண்கிறோம். இயேசு ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணம் அவர் தாழ்மையானவர் என்று சில இறையியலாளர்களும் அவர் மற்ற மனிதர்களைப் போலாவதற்கே ஞானஸ்நானம் பெற்றார் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் வேதாகமத்தில்,அவரின் ஞானஸ்நானம் மூலமாக நம் பாவங்களெல்லாம் இயேசுவின் மீது மாற்றப்பட்டது என்று பேதுரு,யோவான் உட்பட அனைத்து அப்போஸ்தலர்களும் சாட்சி கூறியதாக எழுதப்பட்டுள்ளது,நாமும் அதனை விசுவாசிக்கிறோம்.

அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்று அப்போஸ்தலர்கள் வேதவசனங்களில் சாட்சி கூறுகின்றனர். நாம் அதனை விசுவாசிப்பதன் மூலம் மீட்கப்படும் அளவு அது கர்த்தரின் கிருபைக்கான அதிசயமான சாட்சியாகும்.

விடுதலையின் ஞானஸ்நானத்தில் இருக்கலாம் என்பது இல்லை

  • கர்த்தரின் எல்லையில்லா அன்பைப் பெற்றுக்கொள்வது யார்?
  • இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிக்கும் ஒருவன்.

            

வெறுமனே இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்படுவோம் என்று நாம் நம்ப முயற்சிக்கிறோம். எல்லா பிரிவினரும் அவர்கள் நம்பிக்கையின் இரட்சிப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவைகளில் ஞானஸ்நானமும் ஒன்று என அநேகர் நினைக்கின்றனர். அது உண்மையல்ல. நான் வாசித்த ஆயிரக்கணக்கான நூல்களில்,ஞானஸ்நானத்தினால் வரும் விடுதலையும் இயேசுவின் இரத்தத்தின் இரட்சிப்பின் தொடர்பு இன்னதென கூறும் எந்த நூலையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நோவாவின் காலத்தில் 8பேர் மட்டுமே இரட்சிக்கப்பட்டனர். எத்தனைப் பேர் இப்போது இரட்சிக்கப்படுவர் என்று எனக்குத் தெரியாது,ஆனால் அநேகமாக அதிகமானோரில்லை. ஞானஸ்நானத்தையும் இயேசுவின் இரத்தத்தையும் விசுவாசிப்பவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவர். நான் அநேக ஆலயங்களுக்குச் சென்றதில்,உண்மையின் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நான நற்செய்தியைப் பிரசங்கிப்பது மிகவும் குறைவானது என்பதை மீண்டும் மீண்டும் அறிந்தேன்.

விடுதலைக்கான ஞானஸ்நானத்தையும் இயேசுவின் இரத்தத்தையும் நாம் விசுவாசிக்கவில்லையென்றால்,நாம் இன்னும் பாவிகளே. (நாம் எத்தனை பக்தியாக ஆலயத்திற்குச் சென்றிருந்தாலும் கூட) நாம் நம் வாழ்வு முழுவதும் ஆலயத்திற்கு செல்லலாம். ஆனால் நம்மிருதயத்தில் பாவங்களிருந்தால்,நாம் பாவிகளே.

நாம் 50 வருடங்களாக ஆலயம் சென்றிருந்தும் நம் இருதயத்தில் இன்னமும் பாவங்களிருந்தால், 50 வருடங்களாக நாம் கொண்டிருந்த நம்பிக்கை தவறானதாகும். ஒரே ஒரு நாள் மட்டும் உண்மை விசுவாசத்துடனிருப்பது எத்தனையோ நல்லது. இயேசுவை விசுவாசிப்பவர்களில்,இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தின் சரியான பொருளை விசுவாசிப்பவர்கள் மட்டுமே பரலோக இராஜ்யத்தினுள் அனுமதிக்கப்படுவர்.

தேவகுமரன் உலகிற்கு இறங்கி வந்து உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும்படியாக ஞானஸ்நானம் பெற்றார் என்பதை விசுவாசிப்பது உண்மை விசுவாசமாகும். இந்த விசுவாசமே நம்மை பரலோக இராஜ்யத்தை நோக்கி வழிநடத்துகிறது. இயேசு உனக்காகவும் எனக்காகவும் சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பதையும் விசுவாசிக்க வேண்டும். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இதனை அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் யார்?நாம் அவரால் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தால் இரட்சிக்கப்பட்ட மனிதகுமாரர்கள். நாமெப்படி அவருக்கு நன்றி கூறாமல் இருக்க முடியும்? இயேசுவிற்கு 30 வயதாகும்போது நம்மை இரட்சிக்கும் பொருட்டு அவர் யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றார். இதனால்,அவர் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டு நமக்காக சிலுவையில் தீர்க்கப்பட்டார்.

இதனை நாம் நினைக்கையில்,நாம் தாழ்மையுடன் அவருக்கு நன்றி கூறுவதைத் தவிர வேறு எதுவும் தோன்றுவதில்லை. இயேசு இவ்வுலகில் செய்தவைகளெல்லாம் நமது இரட்சிப்பிற்கே என்று நாமறிய வேண்டும். முதலில் அவர் இவ்வுலகிற்கு இறங்கி வந்தார். அவர் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் அறையப்பட்டு, 3 நாட்களுக்குப் பிறகு உயிரோடெழுந்து இப்போது கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

யாரும் தவிர்க்கப்படாமல் கர்த்தரின் விடுதலை நம் ஒவ்வொருவருக்குமானது. இயேசுவின் இரட்சிப்பு உங்களனைவருக்கும் எனக்குமானது. அவரின் அன்பிற்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும் கர்த்தரைப் புகழுவோமாக.

நமக்குத் தெரிந்த நற்செய்தி கீதமொன்று இப்படிப் போகிறது ஒரு அழகிய கதை உண்டு. உலகில் இருக்கும் அநேக மக்களில்,நான் மட்டுமே அவர் அன்பையும் இரட்சிப்பையும் பெற்றேன். ஓ அவரின் அன்பு எத்தனை அதிசயமானது! அவரின் அன்பு எனக்கே,அவரின் அன்பு எனக்கே,ஒரு அழகிய கதை உண்டு. உலகில் உள்ள அநேக மக்களில்,நாம் மட்டுமே இரட்சிக்கப்பட்டவர்கள், நம் அவரின் மக்களானோம். நாம் அவரின் அன்பை அணிந்துள்ளோம். ஓ கர்த்தரின் அன்பு,கர்த்தரின் கிருபை. ஓ அவரின் அன்பு எத்தனை அதிசயமானது! அவரின் அன்பு எனக்கே.

இயேசு உனக்காகவும் எனக்காகவும் இறங்கி வந்தார். அவரின் ஞானஸ்நான விடுதலைக் கூட எனக்கும் உனக்குமாகும். நற்செய்தியானது வெறும் கதையல்ல,இந்த உண்மையே நம்மை நம் பாவ வாழ்விலிருந்து தூக்கி கர்த்தரின் அழகிய இராஜ்யத்திற்குள் விடுகிறது. விசுவாசமானது உனக்கும் கர்த்தருக்கும் உள்ள தொடர்பாகும்.

நம்மை இரட்சிக்கும்படியாக அவர் இவ்வுலகிற்கு இறங்கி வந்தார். நம் பாவங்களைக் கழுவும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்று அதற்காக சிலுவையின் தீர்ப்பையும் பெற்றார்.

விசுவாசிகளால் கர்த்தரைப் பிதா என்று அழைக்க முடிவது எப்படிப்பட்ட ஆசீர்வாதமாகும்! நாம் இயேசுவை நம் இரட்சகரென்று எப்படி நம்புவது,மேலும் நம் நம்பிக்கையின் மூலம் எப்படி இரட்சிக்கப்படுவது?நம் மீதுள்ள அவரின் எல்லையில்லா அன்பினால் அது சாத்தியமாயிற்று. நம்மை முதலில் நேசித்த அவரினால் நாம் இரட்சிக்கப்பட்டோம்.

இயேசு நம் எல்லாப் பாவங்களையும் ஒரே தரமாக கழுவினார்

கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் பாவங்களினிமித்தம் ஒரு தரம் பாடுபட்டார் (1 பேதுரு 3:18). இயேசுகிறிஸ்து நம் மீட்பிற்காக ஞானஸ்நானம் பெற்றார். நீதியில்லாத உன்னையும் என்னையும் இரட்சிக்க சிலுவையில் ஒரு தரம் மரித்தார்.

நாம் ஒரேதரம் இரட்சிக்கப்பட்டோமா அல்லது தொடர்ந்து இரட்சிக்கப்பட்டோமா?

ஒரே தரமாக.

நாம் கர்த்தருக்கு முன்பாக நியாயத் தீர்ப்பிற்கு நிற்பதை அகற்றுவதற்காக, அவர் இவ்வுலகில் ஒரேதரம் மரித்தார். நாம் கர்த்தருக்கு முன் பரலோக இராஜ்யத்தில் வாழ அவர் இவ்வுலகிற்கு மாமிசமாக வந்து அவரின் ஞானஸ்நானம்,அவரின் சிலுவை மரணம்,அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவை மூலம் நம் எல்லாப் பாவங்களையும் ஒரே தரம் கழுவினார்.

இயேசுகிறிஸ்து தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் நம்மை முற்றிலும் இரட்சித்தார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா?நற்செய்தியாகிய அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தை நீ விசுவாசிக்கவில்லையென்றால்,நீ இரட்சிப்படைய மாட்டாய். நாம் மிகவும் பலவீனர்களாக இருப்பதால்,அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தால் இயேசு நம் எல்லாப் பாவங்களையும் முற்றிலும் கழுவினார் என்பதை விசுவாசிக்காவிட்டால், நம்மால் மறுபடியும் பிறக்கவே முடியாது.

நம் எல்லாப் பாவங்களையும் சுமக்கும்படியாக அவர் ஞானஸ்நானம் பெற்று நமக்காக சிலுவையில் ஒரே தரம் தீர்க்கப்பட்டார். அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் விடுதலையினால் பாவிகளின் எல்லாப் பாவங்களையும் இயேசு கழுவிவிட்டார்.

நாம் மனிதர்களாக இருப்பதால் நாம் பாவஞ்செய்யும்போதெல்லாம் மனம் வருந்துவதும் நாம் நல்லவர்களாகவும் எந்நேரமும் சிறந்தவர்களாகவும் அநேகவற்றை ஆலயத்திற்கு கொடுப்பது சாத்தியமில்லாத ஒன்று.

ஆகவே இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை மீதுள்ள நம்பிக்கை நம் இரட்சிப்பிற்க்கு மிகவும் அவசியமானதாகும். நாம் நீர் மற்றும் இரத்தத்தை விசுவாசிக்க வேண்டும். நாம் மறுபடியும் பிறப்பதற்காக வெறுமனே நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்க முடியாது.

ஏழைகளுக்கு நல்ல ஆடைகளை வாங்கிக் கொடுப்பதோ,போதகர்களுக்கு சுவையான உணவு பரிமாறுவதோ எந்த நன்மையும் செய்யாது. அவரின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்ததையும் விசுவாசிப்பவர்களை மட்டுமே அவர் இரட்சிக்கிறார். கர்த்தர் நம்மை இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகியவற்றினால்,இயேசு மூலமாக ஒரேதரம் இரட்சித்தார் என்பதை விசுவாசித்தால் நாம் இரட்சிக்கப்படுவோம்.

கர்த்தர் இப்படியாகவே வேதாகமத்தில் கூறியிருந்தாலும் அதனைக் குறித்து மேலும் யோசிக்க வேண்டுமென்று சிலர் யோசிக்கிறார்கள். இதனை அவர்களிடமே விட்டுவிடலாம். ஆனால் நாம் எழுதப்பட்டுள்ளபடியே அவர் வார்த்தைகளை விசுவாசிக்கவேண்டும்.

எபிரெயர் 10:1-10 இல்,அவர் நம்மை ஒரேதரம் இரட்சித்தார் என்று கூறுகிறது. ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்போரை கர்த்தர் ஒரேதரம் இரட்சித்தார் என்பது உண்மையாகும். நாமும் இதனை விசுவாசிக்க வேண்டும். அவர் ஒருமுறை மரித்தார்,நம்மெல்லாரையும் ஒரே தரம் இரட்சித்தார். ஔ சகோதரரே,விசுவாசித்து விடுதலையாவீர். இயேசுவின் ஞானஸ்நானத்தின் கீழ் உங்கள் பாவங்களை விடவும். அவர் ஒரு முறை ஞானஸ்நானம் பெற்றதாலும்,ஒரு முறை இரத்தஞ் சிந்தியதாலும் நம்மை அநீதியிலிருந்தும் பாவத்திலிருந்தும் இயேசு நம்மை இரட்சித்தார்.

அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் (1 பேதுரு 3:18) இயேசு எப்போதும் பாவம் செய்யாத,பாவமில்லாத கர்த்தர். அவர் சரீரமாக மேலிருந்து நம்மிடம் இறங்கி மக்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும் படி வந்தார். அவர் ஞானஸ்நானம் பெற்று அநீதியுள்ளவர்களின் பாவங்களைச் சுமந்து தீர்த்தார்.

பிறப்பிலிருந்து இறப்பு வரையான மக்களின் எல்லாப் பாவங்களும் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவரின் மீது சுமத்தப்பட்டது,அவர் சிலுவையில் இரத்தஞ் சிந்தி மரித்ததினால் நாம் நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிக்கப்பட்டோம். பாவிகளுக்காக ஞானஸ்நானம் செய்யப்பட்டு பாவிகளுக்கு பதிலாக அவர் மரித்தார்.

அவர் ஞானஸ்நானத்தின் விடுதலை இதுவே. பாவிகளான நம்மை இயேசு ஒரேதரமாக இரட்சித்தார். நாம் எத்தனை பலவீனர்களாக இருக்கிறோம்! நாம் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்து தன்னையே சிலுவையின் தீர்ப்பிற்கு காணிக்கையாக்கினார். இயேசுவை விசுவாசிப்பவர்கள்,அவர் தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் நம்மை ஒரே தரம் இரட்சித்தார் என்பதை விசுவாசிக்க வேண்டும்.

நாமோ பலவீனர்கள்,ஆனால் இயேசு அப்படிப்பட்டவர் அல்ல. நாம் நம்பத்தக்கவர்கள் அல்ல. ஆனால் இயேசு அப்படிப்பட்டவர் அல்ல. கர்த்தர் நம்மை ஒரேதரமாக இரட்சித்தார். தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு,அவரைத் தந்தருளி,இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் (யோவான் 3:16). கர்த்தர் தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்காக கொடுத்தார். உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தும்படியாக அவர் தம் மகனுக்கு ஞானஸ்நானம் செய்வித்தார். இதனால் அவர் எல்லா மனிதர்களுக்காகவும் நியாயத்தீர்ப்பை பெறமுடியும்.

எத்தனை ஆச்சர்யமான இரட்சிப்பு! எத்தனை ஆச்சர்யமான அன்பு இது! அவரின் அன்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். நீரையும் இயேசுவின் இரத்தத்தையும் விசுவாசிப்போரை கர்த்தர் இரட்சிக்கிறார். அது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இயேசு தேவகுமாரன் என்ற குறிப்பில் இருக்கிறது.

ஆகவே,இயேசுவை விசுவாசிப்பவர்கள்,உண்மையான ஞானஸ்நானத்தையும் இயேசுவின் இரத்தத்தையும் விசுவாசித்து இரட்சிக்கப்பட்டு அழியாத வாழ்வைப் பெறவும்,நீதிமானாகவும் முடியும். நாம் அனைவரும் இதனை விசுவாசிக்க வேண்டும்.

நம்மை இரட்சித்தது யார்?கர்த்தர் நம்மை இரட்சித்தாரா அல்லது அவரால் படைக்கப்பட்ட ஒன்றினால் நாம் இரட்சிக்கப்பட்டோமா?கர்த்தராகிய இயேசுவே,நம்மை இரட்சித்தவர். நாம் கர்த்தர் அளிக்கும் விடுதலையை விசுவாசிப்பதால் இரட்சிக்கப்பட்டோம்,இதுவே விடுதலையின் இரட்சிப்பாகும்.

இயேசுவே இரட்சிப்பின் தேவன்

  • கிறிஸ்து என்பதன் பொருள் என்ன?
  • ஆசாரியர், இராஜா மற்றும் தீர்க்கதரிசி.

இயேசுவே கர்த்தர். இயேசு என்பதன் பொருள் இரட்சகர் என்றும்,கிறிஸ்து என்பதன் பொருள் அபிஷேகம் செய்யப்பட்டவர்' என்பதுமாகும். பழைய ஏற்பாட்டில் சாமுவேல் சவுலை அபிஷேகம் செய்ததைப் போன்று, அரசர்கள் அபிஷேகிக்கப்பட்டனர். ஆசாரியர்கள் அபிஷேகிக்கப்பட்டனர். மேலும் தீர்க்கதரிசி தீர்க்கதரிசன ஊழியம் செய்யவேண்டுமானால் அதற்காக அபிஷேகம் பெறவேண்டும்.

இயேசு இவ்வுலகிற்கு வந்த போது மூன்று வேலைகளுக்காக அபிஷேகிக்கப்பட்டார்; ஆசாரியர்,அரசர் தீர்க்கதரிசி. பரலோக ஆசாரியராக, படைக்கப்பட்டவைகளுக்கு பதிலாக,மனிதர்களின் பாவங்களை ஏற்றுக்கொள்ளும்படி ஞானஸ்நானம் பெற்றார்.

தன் தந்தையின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து,தன்னைத் தானே பாவ பலியாக தன் தந்தையின் முன் ஒப்புவித்தார். நானே வழியும்,சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்,என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.இயேசு தம் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணம் மூலம் தம்மை விசுவாசிப்பவர்களின் எல்லாப் பாவங்களையும் ஏற்று அவர்களை இரட்சித்தார்.

 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது (லேவியராகமம் 17:11).இயேசு தம் ஞானஸ்நானத்திற்கு பிறகு இரத்தஞ்சிந்தினார்; விசுவாசிகளாகிய நாம் இரட்சிக்கும்படியாக அவர் தம் உயிரை நம் பாவங்களின் கூலியாக கர்த்தருக்கு காணிக்கையாகப் படைத்தார்.

சிலுவையில் மரித்து மூன்று தினங்களுக்கு பிறகு உயிரோடெழுந்தார் மேலும் காவலிலிருந்த ஆவிகளுக்கும் நற்செய்தியைப் பிரசங்கித்தார். இன்னமும் மீட்கப்படாதவர்கள் பாவச்சிறையிலுள்ள ஆவிக்குரிய கைதிகள். அவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் இரத்தமாகிய,உண்மை நற்செய்தியை இயேசுவானவர் பிரசங்கிக்கிறார். நம்மை இரட்சிக்கும்படியாக கர்த்தர் நமக்கு நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் கொடுத்தார். அதனை விசுவாசிப்பவர்கள் யாவரும் மறுபடியும் பிறந்தவர்கள்.

ஞானஸ்நானமும் இயேசுவின் இரத்தமும் பாவிகளை இரட்சிக்கிறது

இயேசுவே நம் இரட்சகர், 1 பேதுரு 3:21 இதனை சாட்சி கூறுகிறது. அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல்,தேவனைப் பற்றும் நல்மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து,இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. இயேசுவின் ஞானஸ்நான நீரானது பாவிகளின் இரட்சிப்பிற்கு மிகவும் முக்கியமானது.

கர்த்தர் முன் நல் மனச் சாட்சியுடையவர்களாக இருப்பது எப்படி?

ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தம் மீது விசுவாசம் வைப்பதன் மூலம்.

ஞானஸ்நானம் மூலம் இப்பாவங்களை இயேசு தன் மீது ஏற்றுக்கொண்டு எல்லாப் பாவிகளையும் பாவங்களிலிருந்து கழுவினார். இயேசுவின் ஞானஸ்நானத்தை நீ விசுவாசிக்கிறாயா?இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் இருதயங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் சுத்தமாக கழுவப்பட்டுவிட்டது என்று விசுவாசிக்கிறாயா?நம்முடைய இருதயங்கள் சுத்தமாகக் கழுவப் பட்டாலும்,நம் மாமிசம் தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருக்கிறது.

 ஒருவன் விடுதலைப் பெற்றான்' என்பதன் பொருள் அவன் மீண்டும் பாவம் செய்யமாட்டான் என்பதல்ல. நாம் மீண்டும் பாவம் செய்வோம். ஆனால் நாம் அவர் ஞானஸ்நானத்தின் மீது வைத்திருக்கும் விசுவாசத்தினால் நம் இருதயம் சுத்தமாகவே இருக்கிறது. மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல் தேவனைப் பற்றும் நல் மனச் சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து (1பேதுரு 3:21) என்று கூறப்பட்டுள்ளது போல் பொருளாகிறது.

இயேசு என் பாவங்களை கழுவியதாலும்,எனக்காக என் தேவன் நியாயத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டிப்பதாலும்,அவரை நான் விசுவாசியாமல் இருப்பது எப்படி? கர்த்தராகிய இயேசு தம் ஞானஸ்நானத்தினாலும்,இரத்தத்தினாலும் என்னை இரட்சித்தார் என்று நான் அறிந்திருக்க அவரை நான் விசுவாசியாமல் இருப்பதெப்படி? நாம் கர்த்தருக்கு முன்பாக இரட்சிக்கப்பட்டதால் நம் மனச்சாட்சி சுத்தமாயிருக்கிறது. நாம் கர்த்தரிடம் இயேசு என் பாவங்களை முற்றிலும் கழுவவில்லையென்றும் கர்த்தர் நம்மில் அன்பு கூறவில்லை என்றும் கூற முடியாது.

நம்முடைய மனசாட்சி அதிக அளவு உணர்ச்சி உடையதால் நாம் தவறு செய்யும்போது அது உணர்த்துகிறது. நம்முடைய மனசாட்சி சிறிது உணர்த்தினாலும்,இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசியாமல் நம்மால் பாவங்களிலிருந்து முற்றிலும் விடுதலையாக முடியாது. இதுவே நாம் நல் மனச்சாட்சியுடன் வாழ்வதற்கான ஒரே வழியாகும்.

நம்முடைய மனசாட்சி நம்மைக்குத்தும் போது,ஏதோ தவறு இருக்கிறது என்று பொருள்படும். இயேசு நம் எல்லாப் பாவங்களையும் அவரின் ஞானஸ்நானம் மூலம் ஏற்றுக்கொண்டு நம்மைச் சுத்தமாக கழுவினார். இதனை நாம் உண்மையாகவே விசுவாசிக்கும்போது நம் மனச்சாட்சியும் சுத்திகரிக்கப்படுகிறது. நம்முடைய மனசாட்சி எப்படி சுத்திகரிக்கப்படுகிறது?ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தத்தை விசுவாசிப்பதன் மூலம் ஒவ்வொருவரிடமும் தீயதும் அழுக்கானதுமான மனசாட்சி பிறப்பிலிருந்தே இருக்கிறது. ஆனால் நாம் நம் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதை விசுவாசித்தால்,நம்மால் அக்கறையைத் துடைத்து விட முடியும்.

இதுவே மறுபடியும் பிறந்தவர்களின் விசுவாசம். அது நீ மனசாட்சியின் படி ஏற்றுக்கொள்ளும் ஒன்றல்ல. உன்னுடைய மனசாட்சி சுத்தமாக இருக்கிறதா?அது நீ நல்வாழ்க்கை நடத்தியதால் சுத்தமாக இருக்கிறதா?அல்லது உன் பாவங்கள் எல்லாம் இயேசுவின் மீது சுமத்தப்பட்டு அவரை நீ விசுவாசிப்பதினால் சுத்தமாக இருக்கிறதா?

வார்த்தைகளில் ஜீவனுள்ளவைகளும் இருக்கின்றன. ஜீவன் இல்லாதவைகளும் இருக்கின்றன. எல்லா மக்களின் மனசாட்சியையும் சுத்தம் செய்வது எப்படி?நாம் நீதிமான்களாகவும் நல்ல மனசாட்சியுடன் இருப்பதற்கான ஒரே வழி இயேசுவின் மூலம் முழு விடுதலையும் விசுவாசிப்பதே.

அவரின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து நாம் பரிசுத்தமடையும் போது,அது மாமிச அழுக்கை நீக்குதலாயிராமல் தேவனைப் பற்றும் நல் மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருக்கிறது. அதற்காகவே அவர் வந்து ஞானஸ்நானம் பெற்று,சிலுவையில் மரித்து, மீண்டும் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து இப்போழுது கர்த்தரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

சமயம் வரும்போது,அவர் இவ்வுலகிற்கு மீண்டும் வருவார். தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமானவர் (எபிரெயர் 9:28). அவரின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசிக்கும் நாம் அவர் வருகைக்காக காத்திருக்கும் நம்மை எடுத்துக் கொள்ளும்படி வருவார் என்று விசுவாசிக்கிறோம். 



பரிசோதனை

  • இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாமல் நாம் இரட்சிக்கப்படமுடியுமா?
  • முடியவே முடியாது.


எங்களுடைய டேஜோன் ஆலயத்தில் தற்செயலாக ஒரு பரிசோதனைச் செய்தோம்.

டேஜோன் ஆலயத்தின் ஆயர் பார்க் ஒரு தம்பதியினரிடம் இவ்வுலகில் எப்பாவங்களும் இல்லை என்றார். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானத்தின் பொருளை கூறத் தவறிவிட்டார். மற்ற ஆலய ஆராதனைகளில் பங்கேற்ற போது கணவன் தூங்குவது வழக்கம். அதற்கு காரணம் எல்லா போதகர்களும் இயேசுவின் ஞானஸ்நான விடுதலையைத் தவிர்த்து நற்செய்தியைப் பிரசங்கித்து அவனை அனுதினமும் மனம் வருந்தச் செய்தனர்.

ஆனால் இந்த டேஜோன் ஆலயத்தில் பிரசங்கத்தை விழித்தக் கண்களுடன் கேட்டான் இதற்கு காரணம் அவனின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டுவிட்டது என்பதே. இது அவன் தன் மனைவியுடன் ஆலயத்திற்கு வர அவன் மனைவிக்கு அவனை இசையச் செய்வது இலகுவாயிற்று.

ஒருநாள் அவன் ஆலயத்தில் அமர்ந்திருக்கும் போது ரோமர் 8:1 கேட்டான். கிறிஸ்து இயேசுவுக்குட் பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின் படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை.அவன் உடனே நினைத்தான். ஆ,ஒருவன் இயேசுவை விசுவாசித்தால், அவன் பாவமற்றவன். நானும் இயேசுவை விசுவாசிப்பதால்,நானும் கூட பாவமற்றவன்.

உடனே அவன் தன் மனைவியின் சகோதரர்களையும் அநேக நன்பர்களையும் தொலைபேசி மூலம் ஒவ்வொருவராக அழைத்து, ‘உன்னிருதயத்தில் பாவமிருக்கிறதா? அப்படியானால் உன் விசுவாசம் தவறானது' என்றான். இதில்,ஆயர் பார்க் இழந்து போவாராயிருந்தார். கணவனுக்கு இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து தெரியாது. ஆனால் எல்லோரிடமும் தன்னில் பாவமில்லை என்று வலியுறுத்தி வந்தான்.

அந்தத் தம்பதியினருள் பிரச்சினை உருவாயிற்று. மனைவி அதிக பக்தியுடையவளாக இருந்தாலும் அவளிருதயத்தில் இன்னமும் பாவங்களிருந்தன. ஆனால் அவள் கணவன் தான் பாவமற்றவன் என்று கூறி வந்தான். கணவன் சில முறைகளே ஆலயத்திற்குச் சென்றிருந்தாலும் அவன் ஏற்கெனவே பாவமற்றவன்.

இருவர் இருதயத்திலும் பாவங்களிருக்கின்றன என்பதில் மனைவி மிகவும் உறுதியாயிருந்தாள். அவர்கள் அதைக் குறித்து வாதாடத் தொடங்கினர். கிறிஸ்து இயேசுவுக்குட் பட்டவர்களாயிருந்து,மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை' என்பதிற்கிணங்க தான் பாவமற்றவனாக இருப்பதாக கணவன் வலியுறுத்தினான். மனைவியோ தன்னுள் இன்னும் பாவங்களிருப்பதாக வாதிட்டாள்.

அப்பொழுது ஒரு நாள்,மனைவியானவள் அதிக விசனத்திற்குள்ளாகியதால் மீண்டும் போதகரிடம் சென்று எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதன் பொருள் என்ன என்று கேட்கத் தீர்மானித்தாள்.

ஆகவே,ஒருநாள் மாலை ஆராதனை முடிந்த பிறகு, அவள் தன் கணவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஆயர் பார்க்கை கேள்வியுடன் சந்தித்தாள். அவள் கூறினாள், “நீங்கள் சிலவற்றை எங்களிடம் கூற முயற்சிக்கிறீர்கள் என்றறிவேன். ஆனால் அதில் ஏதோ ஒரு முக்கியமான பாகம் மறைந்துள்ளது. அது என்னவென்று தயவுசெய்து கூறுங்கள்.ஆயர் பார்க் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பதைக் குறித்து கூறினார்.

கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து,மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை என்று ரோமர் 8:1 இல் ஏன் எழுதப்பட்டுள்ளது என்று ஒரு நொடியில் புரிந்துகொண்டாள். அவள் அதனை விசுவாசித்து உடனே இரட்சிக்கப்பட்டாள். இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதால் கிறிஸ்துவுக்குள்ளாக இருப்பவர்கள் ஆக்கினைத் தீர்ப்பிற்குள்ளாவதில்லை என்று இறுதியாக அறிந்து கொண்டாள்.

எழுதப்பட்ட வார்த்தைகளை அவள் புரிந்து கொள்ளத்தொடங்கினாள். இயேசுவின் ஞானஸ்நானமே விடுதலையின் திறவுகோல் என்றும் ஞானஸ்நான விடுதலையின் மூலம் நாம் நீதிமான் ஆகமுடியும் என்பதையும் கடைசியில் அறிந்து கொண்டாள்.

கணவன் வீட்டிற்குள் போகாமல் அவளுக்காக வெளியே காத்திருந்தான். நீ இப்போது விடுதலை அடைந்தாயா?என்று கேட்டான்.

அவன் மனைவியிடம் போதகர் கூறியவற்றை அவன் கேட்டறிந்து குழப்பத்திற்குள்ளானான். அவன் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தை முன்பு எப்பொழுதும் கேட்டதில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாமலேயே தன் இருதயத்தில் எந்தப் பாவங்களுமில்லை என்பதில் மிகவும் நிச்சயமாக இருந்தான். ஆகவே வீட்டில் மீண்டும் அவர்கள் வாதிட்டனர்.

இப்பொழுது நிலைமை தலைகீழானது. மனைவி கணவனிடம் அவனிருதயத்தில் பாவமிருக்கிறதா இல்லையா என்று கேட்கத் தொடங்கினாள். இயேசுவின் ஞானஸ்நானத்தை அவன் விசுவாசிக்காத போது அவன் எப்படி பாவமின்றி இருக்கமுடியும் என்று அவள் கேட்டாள். அவனைத் அவனின் மனசாட்சியை கூர்ந்து நோக்கும்படி வேண்டினாள். அவன் தன் மனசாட்சியை ஆராய்ந்து பார்க்கும்போது தன்னிருதயத்தில் இன்னமும் பாவங்களிருப்பதை அறிந்து கொண்டான்.

ஆகவே,அவன் மீண்டும் ஆயர் பார்க்கிடம் வந்து தன்னிருதயத்தில் இன்னமும் பாவமிருப்பதாக அறிக்கையிட்டான். அவன் கேட்டான், “அவர்கள் ஆட்டின் தலை மீது கைவைத்தபோது,அதனைக் கொல்வதற்கு முன் அப்படிச் செய்தார்களா அல்லது கொன்றபிறகு அப்படிச் செய்தார்களா?அவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேள்விப்பட்டதேயில்லை. ஆகவே, அவன் பயங்கர குழப்பத்திற்குள்ளானான்.

இந்த ஆவிக்குரிய பரிசோதனையின் குறிப்பு இதுவே. இயேசுவின் மீது உலகின் எல்லாப் பாவங்களையும் சுமத்த வேண்டுமானால் இயேசு ஞானஸ்நானம் பெறவேண்டியிருந்தது. அப்பொழுது மட்டுமே அவரால் சிலுவையில் அறையப்படமுடியும் ஏனெனில் பாவத்தின் சம்பளம் மரணமாகும்.

அவர்கள் தம் கைகளை அதின் தலையின் மேல் அது கொல்லப்பட்ட பின்னால் வைத்தார்களா அல்லது கொல்லப்படாததற்கு முன் வைத்தார்களா? இயேசுவின் ஞானஸ்நானம் கைவைக்கும் முறை ஆகியவற்றைக் குறித்து குழப்பமுற்றதால் அவன் இதனைக் கேட்டான். ஆயர் பார்க் இயேசுவின் ஞானஸ்நான விடுதலையைக் குறித்து அவனுக்கு விளக்கினார்.

அந்நாளில்,கணவன் முதன் முதலாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து மீட்கப்பட்டான். அவன் நற்செய்தியை ஒரே ஒரு முறைக் கேட்டு விடுவிக்கப்பட்டான்.

இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டுவிடுவதன் பரிசோதனை இதுவாகும். நாம் நம்மிடம் பாவமெதுவும் இல்லையென்று கூறலாம். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாவிட்டால் நிச்சயமாக நம்மிருதயங்களில் இன்னமும் பாவங்களிருக்கின்றன. மக்கள் பொதுவாக இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் எல்லாப் பாவங்களையும் கழுவினார் என்று கூறுவர்,ஆனால் ஞானஸ்நானத்தையும் இயேசுவின் இரத்தத்தையும் விசுவாசிப்பவர்களால் மட்டுமே கர்த்தர் முன் பாவமில்லை என்று கூறமுடியும்.

ஆயர் பார்க்,இந்த தம்பதியினரின் மூலமாக, இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீதுள்ள நம்பிக்கையின் மூலம் கிட்டும் விடுதலையின்றி நம்மால் முற்றிலுமாக விடுதலையாக முடியாது என்று நிருபித்தார்.


இயேசுவின் ஞானஸ்நானம் இரட்சிப்பிற்கு ஒப்பனையானது

  • இரட்சிப்பிற்கு ஒப்பனையானது யாது?
  • இயேசுவின் ஞானஸ்நானம்.

அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது இப்பொழுது நம்மையும் இரட்சிக்கிறது.உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவவும்,நம் மனசாட்சியை பனியைப் போன்று வெண்மையாக்கவும் இயேசு நம் உலகிற்கு இறங்கி வந்தார். அவர் தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து தீர்த்ததால் நாம் அவற்றிலிருந்து சுத்தமானோம். அவர் நம்மைத் தன் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் இரட்சித்தார். ஆகவே படைக்கப்பட்ட எல்லாம் அவருக்கு முன்பு முழங்கால் படியிட வேண்டும்.

இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டோம். நாம் இயேசுவை விசுவாசித்ததால் நாம் கர்த்தரின் பிள்ளைகளானது மட்டுமின்றி நாம் பரலோகத்திற்கும் செல்வோம். இயேசுவை விசுவாசித்ததன் மூலம் நாம் நீதிமான்களானோம். நாம் அரச ஆசாரிகள். நாம் நம் கர்த்தரை பிதாவே என்று அழைக்க முடியும். நாம் இந்த உலகில் வாழ்ந்தாலும் நாம் அரசர்களே.

நீர் மற்றும் ஆவியின் விடுதலையை விசுவாசிக்கும் நம்மை கர்த்தர் இரட்சித்தார் என்று உண்மையாகவே நீ நம்புகிறாயா?இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாது விடுதலை முழுமை அடையாது. கர்த்தரும் இயேசுவும் அங்கீகரிக்கும் உண்மை நம்பிக்கையானது,அவரின் ஞானஸ்நானம்,அவரின் சிலுவை,ஆவி மூலமாக இயேசு நம்மை இரட்சிக்கிறார் என்ற நற்செய்தியை விசுவாசிப்பதேயாகும். இது மட்டுமே உண்மை நம்பிக்கையாகும்.

இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நம் பாவங்கள் கழுவப்பட்டன,அவர் சிலுவையில் மரித்தபோது நம் எல்லாப் பாவங்களுக்கும் கிரயம் செலுத்தியாயிற்று. கிறிஸ்து இயேசு நீராலும் ஆவியாலும் நம்மை இரட்சித்தார். ஆம்! நாம் விசுவாசிக்கிறோம். *






நற்செய்தியாகிய மறுபடியும் பிறப்பது என்பதன் பொருள் என்ன?

【3-5】< யோவான் 3:1-6 >



< யோவான் 3:1-6 >

“யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவிடத்தில் வந்து; ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக; ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு; ஒரு மனுஷன் முதிர்வயதாய் இருக்கையில் எப்படி பிறப்பான்? அவன் தன் தாயின் கர்பத்தில் இரண்டாம் தரம் பிரவேசித்து பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக; ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாமிசத்தில் பிறப்பது மாமிசமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்”

வேதாகமத்தைப்பொருத்தவரை மறுபடியும் பிறப்பது என்பதன் பொருள் என்ன?

இவ்வுலகின் பெரும்பாலானவர்கள் இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே மறுபடியும் பிறக்க விரும்புகிறார்கள். ஆயினும், உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். இரட்சிப்பு நம்முடைய நடத்தையினால் மட்டுமே கிடைக்கும் ஒன்றல்ல.

  • மறுபடியும் பிறப்பது உடம்பின் உணர்வுகளுக்கும் மாறுபாடுகளுக்கும் சம்பந்தப்பட்டதா?
  • இல்லை. மறுபடியும் பிறப்பது என்பது ஆவிக்குரிய மாற்றம். இது பாவி ஒருவன் பாவமில்லாமல் மீண்டும் பிறப்பதாகும்.

நிறைய கிறிஸ்தவர்கள் இதனைத் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளார்கள். அவர்கள் நிச்சயமாக மறுபடியும் பிறப்போம் என்று நம்புகிறார்கள். கீழ்வரும் காரணங்கள் அவற்றில் சில. சிலர் இரட்சிப்படைய நிறைய புதிய தேவாலயங்களைக் கட்டுகிறார்கள். நற்செய்தி அறிவிக்கப்படாத மனிதர்களிடம் இயேசுவைப்பற்றி பிரசங்கிக்க சிலர் அர்பணித்துக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் விவாகம் செய்துகொள்ளாது அவர்களின் சக்தியையெல்லாம், ‘கர்த்தரின் பணி' என்றெண்ணி காரியமாற்றுகிறார்கள்.

இது மட்டுமில்லை. சில மனிதர்கள் நிறைய பணத்தை தேவாலயத்திற்கு கொடுக்கிறார்கள். இல்லையென்றால் அவர்கள் தேவாலயத்தை துப்புரவு செய்கிறார்கள். எல்லாம் சேர்த்து அவர்களின் நேரத்தையும் செல்வத்தையும் தேவாலயத்திற்கு அர்பணிக்கிறார்கள். இவையெல்லாம் ஜீவ கிரீடத்தை அவர்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறார்கள். கர்த்தர் அவர்களுடைய சேவையை ஒப்புக்கொண்டு, அவர்களை மீண்டும் பிறக்கச்செய்வார் என்று எண்ணுகிறார்கள்.

முக்கிய பொருள் யாதெனில், நிறைய அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் மீண்டும் பிறக்க விரும்புகிறார்கள். இத்தகைய மனிதர்களை எவரும் காணலாம், அவர்கள் மிகவும் கடினமாக வேலை செய்வதனைக் கர்த்தர் கண்டு, அவர்களை என்றாவது மீண்டும் பிறக்கச் செய்வார் என்று நம்புகிறார்கள். அவர்கள் எல்லா மத நிறுவனங்களிலும், அமைதி நல்கும் இடங்களிலும், பள்ளிகளிலும் இருக்கிறார்கள். அவர்களின் நிலை மோசமானது. அவர்கள் எப்படி மறுபடியும் பிறப்பது என்ற உண்மை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் நடத்தையை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர். “இதனைச் சரியாக செய்தால் நான் மறுபடி பிறப்பேன் என்றென்னுகிறார்கள். “ஆயர் வெஸ்லியைப் போன்று, நானும், ஒரு நாளில் மீண்டும் பிறப்பேன் என்றெண்ணி அவர்களின் எல்லா முயற்ச்சிகளையும் இக்காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்கள் மீண்டும் பிறப்பதற்கு இவையெல்லாம் அஸ்திவாரம் என்று நம்புகிறார்கள். யோவான் 3:8 படித்து அதனை மறுபடியும் பிறப்பது எங்கிருந்து வருகிறது? எங்கே போகிறது? என்று யாராலும் கூற முடியாது என்று அர்த்தம் கற்பிக்கின்றனர்.

ஆகவே அவர்கள் தொடர்ந்து கடின வேலைகளை, இயேசு என்றாவது மறுபடியும் பிறக்கச் செய்வார் என்றென்னி தொடர்ந்து செய்ய வேண்டியதுதான். நிறைய பேர் “இதனைத் தொடர்ந்து முயற்சி செய்தால் இயேசு மறுபிறப்பை அருளிச்செய்வார் என்று நினைக்கிறார்கள். மறுபிறப்பை பற்றி எதுவும் தெரியாமலேயே மீண்டும் பிறக்க முடியும். ஒரு காலை வேளையில் தூக்கத்திலிருந்து எழும்பும்போது மறுபடியும் பிறந்தவனாக எழுவேன். அப்பொழுது எனக்கு பரலோக ராஜ்ஜியம் செல்ல நான் தெரிந்துக் கொள்ளப்பட்டவன் என்று தெரியும்.” இது போன்ற நம்பிக்கைகள் ஒன்றுக்கும் உதவாது.

நாம் இப்படி மறுபடியும் பிறக்க முடியாது. நாம் மதுபானம் மற்றும் சிகரெட்டிலிருந்து தூர இருப்பதாலோ, ஆலயத்திற்கு ஒழுங்காக போவதாலோ மீண்டும் பிறக்க முடியாது. இயேசு கூறினார், பரலோக ராஜ்ஜியம் செல்ல ஒரே வழி நாம் ‘நீர் மற்றும் பரிசுத்த ஆவியினால் மீண்டும் பிறப்பதேயாகும்.' மறுபடியும் பிறப்பதற்கான இறைவனின் ஒரே நிர்பந்தம் நீர் மற்றும் பரிசுத்த ஆவியே ஆகும்.

ஒருவன் நீரினாலும், ஆவியினாலும் மறுபடியும் பிறக்காவிட்டால் அவனின் நியாயமான செய்கைகள் யாவும் இயேசுவின் முன் விருதா. ஒருவன் காணிக்கை கொடுப்பதன் மூலமாகவோ, அன்பளிப்பு கொடுப்பதாலோ, அர்பணிப்பதாலோ மறுபடியும் பிறக்கமுடியாது. சிலர் நாம் மறுபடியும் பிறந்தவர்களா என்பது கர்த்தருக்குத்தான் தெரியும், நமக்குத் தெரியாது என்றெண்ணலாம்.

இப்படி எண்ணுவது மிகவும் வசதியானது. ஆனால் மறுபிறப்பை மேசையினடியில் ஒளித்து வைக்க முடியாது. மறுபடியும் பிறந்தது, அவருக்கு மிக நிச்சயமாகத் தெரியும். அடுத்தவர்களும் அதனை உணருவார்கள். மாமிசத்தினால் இதனை உணர முடியாது. ஆனால் ஆவிக்குள் இதனை உணர முடியும். உண்மையில் மீண்டும் பிறந்தவர்கள் வேதவாக்கு மூலமாக, நீரினாலும், இரத்தத்தினாலும், ஆவியாலும் மறுபடியும் பிறந்தவர்கள் ஆவர். நிக்கொதேமு எப்படி மறுபடியும் பிறந்ததை உணரவில்லையோ, அதுபோல மறுபடியும் பிறக்காதவர்கள் மறுபடியும் பிறந்ததை அறியமுடியாது.

ஆகவே நாம் உண்மையான வார்த்தைகளைக் கேட்கவேண்டும். பாவ விடுதலை - ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தம் மூலமே கிடைக்கும். கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்டுப் படிப்பதன் மூலம், அவற்றிலுள்ள உண்மைகளைக் கண்டு கொள்ள முடியும். ஆகவே நமது மனதை திறந்து கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்பது மிகவும் முக்கியமானதாகும்.

காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்திற்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.” (யோவான் 3:8)

மறுபடியும் பிறக்காத ஒருவன் இந்த வசனத்தை படிக்கும்போது “ஆ! இயேசுவே கூறியிருக்கிறார் என்னால் மறுபடி பிறந்தேனா என்று அறிய முடியாது என்று! யாருக்கும் தெரியாது!” இவ்வெண்ணம் அவனுக்கு மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நமக்கு எங்கிருந்து காற்று வருகிறது? அது எங்கே போகிறது என்று தெரியாது. ஆனால் கர்த்தருக்கு எல்லாம் தெரியும்.

மறுபடியும் பிறந்தவர்கள் முதலில் அவர்களின் மறுபிறப்பை உணர்வதில்லை. இது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் அப்படிப்பட்டவரின் இருதயத்தில் நற்செய்தியிருக்கிறது; இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் குருதியினால் விடுதலை என்ற வார்த்தை இருக்கிறது.

இதுவே மறுபடியும் பிறந்ததற்கான அடையாளம். யாரெல்லாம் நற்செய்தியைக் கேட்கும்போது “ஓ! அப்படியானால் நான் பாவமற்றவன். ஆகவே நான் இரட்சிக்கப்பட்டவன். நான் மறுபடியும் பிறந்தவன் என்பதை புரிந்துகொள்கிறார்களோ அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள். யார் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்பிக்கையுடன் இருதயத்தில் வைக்கிறார்களோ அவர்கள் நீதிமான்களாகவும் கர்த்தரின் பிள்ளைகளும் ஆகிறார்கள்.

சிலர் “நீங்கள் மறுபடியும் பிறந்தவரா?” என்று கேட்கப் பட்டிருக்கலாம். அவர் “இன்னும் இல்லை என்கிறார். “நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா?” “ஆமாம் இங்கே எதிரும் புதிருமாக இந்த நபர் இருக்கிறார் இல்லையா? இவர் ஏன் இப்படி இருக்கிறார் என்றால் ஒருவர் மறுபடியும் பிறந்தால் அவர் மாமிசத்திலும் மாறுதலிருக்கும் என்று இவர் நம்புவதேயாகும்.

இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் பிறப்பது என்பது முற்றிலும் மாற்றப்பட்ட வாழ்க்கை முறை என்று நம்புகிறார்கள். உண்மை யாதெனில் இவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறத்தலை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை.

மறுபடியும் பிறப்பதை அநேகர் சரிவர அறிந்துகொள்வதில்லை. மிகவும் இரங்கத்தக்க நிலை. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, ஆலயத்தலைவர்கள் கூட ஒரு மாய நிலையிலேயே கடமையாற்றுகிறார்கள். மறுபடி பிறந்த நம்மின் இருதயம் அவர்களுக்காக துக்கப்படுகிறது.

நாமே இப்படி துக்கமடையும்போது நம் கர்த்தர் இயேசுவிற்கு எவ்வளவு வலியை இது தோற்றுவிக்கும்? நாம் எல்லோரும் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் நம்புவதன் மூலமாக மறுபடியும் பிறப்போமாக.

மறுபடியும் பிறப்பது, இரட்சிக்கப்படுவது, இரண்டும் ஒன்றே. ஆனாலும் நிறையபேரிற்கு இந்த உண்மைத் தெரியாது. மறுபடியும் பிறப்பதென்பது, ஒருவரின் இருதயம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்புவதினால் முற்றிலுமாக கழுவப்படுவதாகும். இதன் பொருள் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவைப்பலி ஆகியவற்றை நம்புவதால் நீதிமான்களாகிறோம் என்பதாகும்.

மறுபடியும் பிறப்பதற்கு முன், அவர்கள் பாவிகள். அதன் பிறகு, அவர்கள் முற்றிலும் பாவமற்றவர்கள். சரியாகக் கூறுவதானால் அவர்கள் மீண்டும் புதிய மனிதனாக பிறந்தவர்கள். அவர்கள் இரட்சிப்பின் நற்செய்தியை நம்புவதால் கர்த்தரின் பிள்ளைகளானார்கள்.

மறுபடியும் பிறப்பதென்பது இயேசுவின் ஞானஸ்நானம் என்ற ஆடையை அணிந்துகொண்டு, இயேசுவுடன் சிலுவையில் மரித்து, அவருடன் மீண்டும் உயிருடன் எழும்புவதாகும். இதன் பொருள் ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் சிலுவை ஆகிய வார்த்தைகளினால் ஒருவன் நீதிமானாகிறான்.

ஒருவன் தாயின் கர்ப்பத்திலிருந்து பிறக்கும் போதே பாவியாக பிறக்கிறான். அவன் உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் கிடைக்கும் மறுபிறப்பை கேட்டு அதனை நம்பும்போது நீதிமானாகவும், மீண்டும் பிறந்தவனாகவும் ஆகிறான்.

வெளியே எந்த மாறுதலும் இல்லாதவனாக காட்சியளித்தாலும், உள்ளே, ஆவியில் அவன் மீண்டும் பிறந்தவன். ஆனால் இந்த உண்மை வெகு சிலருக்கே தெரியும். பத்தாயிரம் பேரில் ஒருவனுக்கு கூட தெரியாது. நீங்கள் வெகு சிலருக்குத்தான் மறுபிறப்பைப்பற்றிய உண்மை தெரியும் என்ற என் கருத்துடன் ஒத்துப் போகிறீர்களா?

நீரினாலும் ஆவியினால் கிட்டும் நற்செய்தியை நம்பி மறுபடியும் பிறந்தவர்களால் மட்டுமே உண்மையாக மீண்டும் பிறந்தவர்களை சாதரண கிறிஸ்தவர்களிடமிருந்து பிரித்துணர முடியும்.

காற்றினைக் கட்டுப்படுத்துவது இயேசுவே

  • இரட்சிக்கப்பட்டது யார் என்று யாருக்குத் தெரியும்?
  • மறுபடியும் பிறந்தவர்களுக்குமட்டுமே.

“காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்திற்கு போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.” இயேசு மறுபடியும் பிறக்காதவர்களைப் பற்றி இங்கே கூறுகிறார். மறுபடியும் பிறந்த ஒருவருக்கு மறுபடியும் பிறப்பதைக் குறித்து தெரியும். ஆனால் நிக்கொதேமுக்கு அது தெரியாது. கர்த்தருக்கு யார் மறுபடியும் பிறந்தவர் என்பது தெரியும். மறுபடியும் பிறந்தவர்களுக்கும் இது தெரியும்.

ஆயினும், காற்று எங்கிருந்து வருகிறது? அது எங்கே போகிறதென்று ஒருவனுக்கு எப்படித் தெரியாதோ, அதுபோல் மறுபடி பிறக்காத ஒருவனுக்கு ஒருவன் மறுபடி பிறப்பது எப்படி என்பது தெரியாது?

இதனை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? காற்றை அசைப்பது யார்? கர்த்தர். காற்றை படைத்தது யார்? பரலோகத்தின் கர்த்தர். உலகின் வெப்பதட்ப நிலையை கட்டுப்படுத்துவது, காற்றை ஒருவழிப்படுத்துவது, நீரை வழிப் படுத்துவது யார்? உயிருள்ளவற்றிற்கு ஜீவ சுவாசத்தைக் கொடுத்தவர் யார்? வேறு வார்த்தைகளில் கூறினால் யார் இந்த உலகின் ஜீவராசிகளை உருவாக்கியது? யார் அவற்றை வாழச் செய்தது? வேறுயாருமல்ல, இயேசுவே இதனைச் செய்தார், இயேசுவே கர்த்தர்.

நமக்கு நற்செய்தியின் வாக்குகளான நீர், இரத்தம் மற்றும் ஆவியைப் பற்றி தெரியாவிட்டால், நம்மால் மறுபடி பிறக்கவோ, மற்றவர்களுக்கு ஆன்மீக காரியங்களை கற்றுக்கொடுப்பதோ இயலாது, இயேசு கூறினார். ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் அவன் மறுபடி பிறக்க முடியாது.

நாம் கண்டிப்பாக நீர் மற்றும் ஆவியைப் பற்றிய நற்செய்தியை நம்பவேண்டும். இந்த வல்லமையான நற்செய்தி நம்மை மறுபடி பிறக்கச் செய்கிறது. யாரெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்புகிறார்களோ பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் வந்து, அவர்கள் மனதில் வாசம் செய்வார்.

உலகின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொள்ள, இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் செய்யப்பட்டார். இந்த பாவங்களுக்கு பரிகாரமாக சிலுவையில் இரத்தம் சிந்தினார். அவர் மனித குலத்திற்கு இரட்சிப்பான, மறுபடியும் பிறத்தலை மனிதர்களின் இருதயத்தில் நியமித்தார். இந்த நற்செய்தியை நாம் நம்பும்போது பரிசுத்த ஆவியானவர் நம் ஆன்மாவிற்குள் வருகிறார். இதுவே மறுபடியும் பிறத்தலுக்கான இரட்சிப்பாகும். நாம் இயேசுவின் ஞானஸ்நானம் மூலமாகவும் அவரின் குருதிதியினாலும் நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டன, என்பதை நம்பும்போது நாம் உண்மையிலேயே மறுபடியும் பிறந்தவராகிறோம்.

ஆதியாகமம் 1:2 இல் இப்படி கூறப்பட்டுள்ளது. “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.” தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. தேவ ஆவியானவர் பூமியின் பரப்பிற்கு வெளியாக உலவிக்கொண்டிருந்தார்.

இதன் பொருள் யாதெனில் ஆவியானவரால், பாவிகளின் இருதயத்திற்குள் வர முடியாது. மறுபடி பிறக்காத ஒருவனின் இதயமானது ஒழுங்கின்மையும் பாவ இருளில் மூழ்கியதாகவும் இருக்கிறது. ஆன படியால் தேவ ஆவியானவரால் அப்படிப்பட்டவர்களின் இருதயத்தில் வாசம் செய்ய இயலாது.

பாவிகளின் இருதயத்தைப் பிரகாசிப்பதற்கு நற்செய்தியாகிய ஒளியைக் கர்த்தர் உலகிற்கு அனுப்பினார். கர்த்தர் சொன்னார். “வெளிச்சம் உண்டாகக்கவது”. அங்கே வெளிச்சம் உண்டாயிற்று. அப்பொழுது மாத்திரமே, தேவ ஆவியானவரால் மனித இருதயங்களில் வாசம் செய்ய முடியும்.

ஆகவே, மறுபடியும் பிறந்தவர்களின் இருதயத்திலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்புகிறவர்களிடமும் தேவ ஆவியானவர் வாசம் செய்கிறார். இதுவே மறுபடியும் பிறத்தல் என்பதற்கான பொருள் ஆகும். அவர்கள் இரட்சிப்படைவதற்கான வழியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றிய வார்த்தைகளைக் கேட்டு விசுவாசித்ததால் அவர்கள் இருதயத்திலும் மறுபடியும் பிறந்தவர்களானார்கள்.

ஒருவன் மறுபடியும் எப்படி பிறக்க முடியும்? பரிசேயனாகிய நிக்கொதேமுவிற்கு இயேசு விளக்குகிறார். “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தை காண மாட்டான்.” நிக்கொதேமு மீண்டும் கேட்டான் “நாம் எப்படி நீரினாலும், ஆவியினாலும் மறுபடியும் பிறக்க முடியும்? தாயின் கர்ப்பத்தில் நுழைந்து மீண்டும் பிறக்கக் கூடுமோ?” அவன் நேரடி அர்த்தத்தை எடுத்துக்கொண்டான். அவனால் மறுபடி பிறத்தலின் உள்ளர்த்தத்தை தெளிவாக புரிந்துக் கொள்ள இயலவில்லை.

இயேசு அவனை நோக்கி: “நீ இஸ்ரவேலின் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?” என்றார். இயேசு கூறினார் ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசியான் - அதனைக் காணவும் மாட்டான். இயேசு நிக்கொதேமுவிற்கு மறுபடியும் பிறப்பதைக் குறித்த உண்மைகளை போதித்தார். உண்மையாகவே நிறைய கிறிஸ்தவர்கள் மறுபடியும் பிறக்காமல், இயேசுவை விசுவாசிக்கிறார்கள். நிக்கொதேமு போன்ற கிறிஸ்தவர்கள் உண்மையில் மறுபடி பிறந்தவர்களில்லை.

இந் நாட்களின் தேவாலயத் தலைவர்களைப் போன்று நிக்கொதேமுவும் ஒரு ஆன்மீகத்தலைவன். நவீனச் சொற்களில் கூறினால் அவன் ஒரு மாநில பிரதிநிதி போன்றவன். மதத்தினைப் பொருத்தவரை அவனொரு ஆசிரியன். எபிரேயரின் ரபீ. யூதர்களின் மதத்தலைவன். அவன் ஒரு நன்கு கற்ற அறிவாளி.

இன்றைய நாட்களில் கல்வி பாடசாலைகளைப் போன்று இஸ்ரவேலில் அந்நாட்களில் கல்வி நிறுவனங்கள் இருந்ததில்லை. மக்கள் கோயில்களுக்கு “படித்தவர்களிடமிருந்து” கற்றுக்கொள்வதற்குச் சென்றனர். அவர்கள் மக்களின் ஆசிரியர்கள். இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் போலி ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் மறுபடியும் பிறந்தவராகாமலேயே மக்களுக்குப் போதித்து வந்தனர்.

இக்காலத்தில் நிறைய மதத்தலைவர்கள், ஆலய அலுவலர்கள், பிரசங்கிப்போர், மூப்பர்கள், டீக்கன்கள் மறுபடி பிறக்காதவர்களாகவே இருக்கிறார்கள், நிக்கொதேமுவைப் போன்று அவர்களுக்கு மீண்டும் பிறப்பதைக் குறித்த உண்மை தெரியாது. நிறைய பேர் மறுபடி பிறக்கவேண்டும் என்றால் இரண்டாம் முறை தாயின் கர்ப்பத்திற்குள் நுழைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு மறுபடியும் பிறக்க வேண்டியதின் அவசியம் தெரியும். ஆனால் எப்படி மறுபடியும் பிறப்பது என்று தெரியாது.

குருடன் யானையைத் தொட்டு, வீனாக அதனை அடையாளம் காண முயற்சி செய்வதுபோல், அவர்களுடைய அறிவீனத்தால், தவறாக போதிக்கிறார்கள். அவர்களுடைய போதனை அவர்களின் சொந்த உணர்வுகளையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டது, உலகின் முக்கியத்தைக் குறித்து ஆலயங்களில் போதிக்கிறார்கள். இதனைக் கேட்பதால் நம்பிக்கையுள்ள மனிதர்கள் மீண்டும் பிறப்பதிலிருந்து தடுக்கப் படுகிறார்கள்.

மீண்டும் பிறப்பதற்கும், நாம் செய்யும் நல்லக் காரியங்களுக்கும் சம்பந்தம் இல்லை. கர்த்தர் அருளிய நீர் இயேசுவின் இரத்தம், தேவ ஆவி ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்வதன் மூலம் மட்டுமே நாம் மறுபடி பிறக்க முடியும். இந்த கர்த்தரின் நற்செய்தி நம்மை பாவங்களிலிருந்து நீதிமான்களாக மாற்றுகிறது.

இயேசு கூறினார்; “பூமிக்கடுத்த காரியங்களை உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே; பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?” இயேசு ஞானஸ்நானம் பெற்றதன் மூலமாக நம்முடைய பாவங்கள் யாவும் கழுவப்பட்டன. இயேசு இந்த பாவ மண்ணிப்பைக் குறித்து கூறியபோது யாரும் நம்பவில்லை.

அவர்கள் எதனை நம்பவில்லை? அவர்கள் பாவ மண்ணிப்பு இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும், அவருடைய சிலுவை மரணத்தினாலும் கிட்டும் என்பதை நம்பவில்லை. இயேசு இது குறித்தே, பரம காரியங்களை மக்கள் நம்பப்போவதில்லை என்றார்.

நம்முடைய பாவங்களைக் கழுவும் பொருட்டே அவர் யோவான் ஸ்நானகன் மூலம் ஞானஸ்நானம் பெற்றார். சிலுவையில் மரணமடைந்தார். மறுபடியும் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்து பாவங்கள் மறுபடியும் பிறக்க பாதை அமைத்தார்.

ஆகவே இயேசு பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டி நிக்கொதேமுவிற்கு விளக்கமளித்தார். “பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பலோகத்தில் இருக்கிறவருமான மனுஷகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை. சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும்.” (யோவான் 3:13-15) மோசேயினால் சர்ப்பம் வணாந்தரத்திலே உயர்த்தப் பட்டது போல் அவரை விசுவாசிப்போர் நித்திய ஜீவனை அடையும் படிக்கு மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.

இயேசுவின் “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்” என்ற வாக்கியங்களின் பொருள் யாது? அவருடைய ஞானஸ்நானமும், இரத்தமும் மனிதகுலத்திற்கு எப்படி பாவ மன்னிப்பை அளிக்கும் என்று பழைய ஏற்ப்பாட்டின் இந்த வாக்கியங்கள் மூலம் விளக்குகிறார்.

அவர் சிலுவையில் மரணமடையும் முன்பாகவும், அவர் உயர்த்தப்படுவதற்கு முன்னும், யோவான் ஸ்நானகனால், உலகின் பாவங்களை ஞானஸ்நானம் மூலம் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் எந்தப் பாவங்களுமில்லாமல், அவர் சிலுவையில் மரிக்க இயலாது. சிலுவையில் மரிக்கும் பொருட்டு, உலகின் பாவங்களை எல்லாம் யோவான் ஸ்நானகன் மூலம், ஞானஸ்நானம் பெற்று முதலில் அவர்மீது ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நம்முடைய பாவங்களை எல்லாம் அவர் ஏற்றுக் கொண்டு, அதற்கு கூலியாக தம்முடைய இரத்தத்தைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே பாவிகளை நாசத்திலிருந்து காப்பாற்ற முடியும். இந்தப்படியேநீரினாலும் ஆவியினாலும் கிடைக்கும் இரட்சிப்பாகிய மறுபடி பிறத்தலை இயேசு அருளினார்.

ஆகவே, இயேசுவை நம்பும் யாரும், ஞானஸ்நானம் எனும் ஆடையை உடுத்து, அவருடன் மரித்து, அவருடன் மீண்டும் உயிருடன் எழும்ப வேண்டும். பிற்காலத்தில் நிக்கொதேமு இது குறித்து புரிந்துக் கொண்டான்.

சர்ப்பம் உயர்த்தப்படும்போது

  • இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்?
    • ஏனெனில் எல்லா பாவங்களையும் ஞானஸ்நானம் மூலம் அவர் ஏற்றுக்கொண்டார்.

மோசே எப்படி வென்கலச்சர்பத்தை வனாந்தரத்திலே உயர்த்தினான் என்று உங்களுக்குத் தெரியுமா? இச்சம்பவம் எண்ணாகமம் 21-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்திலிருந்து குடிபெயரும்போது மன உறுதி இழந்து, கர்த்தருக்கும் மோசேயிற்கும் எதிராக பேசலானார்கள்.

இதன்பலனாக, கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பத்தை அவர்கள் மத்தியில் அனுப்பினார். அது அவர்களின் கூடாரங்களுக்குள் நுழைந்து அவர்களைக் கடித்துக் கொன்றது. அது அவர்களைக் கடித்தவுடன், அவர்கள் உடல் வீக்கம் கண்டு இறந்தார்கள். இதனால் நிறைய பேர் மரித்தனர்.

இம்மக்களின் தலைவனான மோசே, தன் மக்கள் சாகத் தொடங்கிய போது, கர்த்தரிடம் பிரார்த்தனைச் செய்தான். கர்த்தர் மோசேயிடம் கூறினார். வெண்கலத்தில் ஒரு கொள்ளிவாய்ச் சர்பத்தைச் செய்து ஒரு கம்பத்தில் கட்டி உயர்த்து என்று. கர்த்தர் மோசேயிடம் மேலும் கூறினார், யாரெல்லாம் இதனைப் பார்க்கிறார்களோ அவர்கள் வாழ்வடைவார்கள். மோசே கர்த்தர் கூறியபடிச்செய்து, மக்களிடம் கர்த்தரின் வார்த்தைகளை தெரிவித்தான். அவரின் வார்த்தைகளை நம்பி, வெண்கலச் சர்ப்பத்தை பார்த்தவர்கள் சுகமடைந்தனர். அதுபோல் நாமும் சாத்தானின் கொடிய விஷக்கடியிலிருந்து தப்பவேண்டும். இஸ்ரவேல் மக்கள் மோசேயிற்கு செவிசாய்த்து, கம்பின் உச்சியிலிருக்கும் வெண்கலச் சர்ப்பத்தை நோக்கினார்கள். இப்படியாக அவர்கள் சுகமடைந்தனர்.

இச்சர்ப்பம் வெளிப்படுத்திய செய்தி யாதெனில், மக்களின் மரணம் இயேசு கிறிஸ்துவின் மீது, அவரின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணம் மூலமாக வந்தது என்பதாகும். உலக மக்கள் எல்லோரின் பாவங்களுக்கும் கிரயமாக சிலுவை மரணத்தை அவர் தன் மீது ஏற்றுக்கொண்டார். இப்படியாக நம்முடைய தண்டனைளை ஒரு முடிவிற்கு கொண்டு வந்தார்.

சர்பத்தின் விஷம் போன்ற சாத்தானின் இச்சைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். நம்முடைய பாவங்களிற்குப் பிராயச்சித்தமாக, அவர் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து மீண்டும் அவரை விசுவாசிப்போரை இரட்சிக்கும்படியாக உயிருடன் எழ வேண்டியிருந்தது.

யாரெல்லாம் இயேசு நம்முடைய பாவங்களுக்குப் பிராயச்சித்தத்தை, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமும், இரத்தம் மூலமும் செலுத்தி நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு, மறுபடியும் பிறக்கலாம் என்பதை நம்புகிறார்களோ, அவர்கள் பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலர்கள் வென்கலப் பாம்பைப் பார்த்து தப்பியது போல், இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறப்பார்கள்.

அவருடைய யோவான் ஸ்நானகன் யோர்தான் நதியில் செய்வித்த ஞானஸ்நானத்தினாலும், அவர் சிலுவையில் மரித்ததனாலும், மரித்தோரிலிருந்து மறுபடியும் எழுந்ததன் மூலமும், நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான முழுக்கூலியையும் கொடுத்துவிட்டார். இப்பொழுது அவரை நம்புகிறவர்கள் அவருடைய இரத்ததினால் ஆசிர்வதிக்கப்பட்டு இரட்சிப்படைவார்கள்.

பரலோகத்தில் இருந்திறங்கினவரும், பரலோகத்தில் இருக்கிறவருமான மனுஷ குமாரனேயல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13). நம்முடைய பாவங்களுக்கு தம்முடைய ஞானஸ்நானம் மூலமும், சிலுவையில் சிந்திய இரத்தம் மூலமும் இயேசுவானவர் கிரயம் செலுத்தியதின் மூலம் பரலோகத்தின் கதவுகளை நமக்குத் திறந்தார். இயேசு கூறினார் “நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6 )

இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டதால், பரலோகக் கதவுகள் திறக்கப்பட்டன. இயேசுவின் மூலம் இரட்சிப்பு என்பதை நம்புகிறவர்கள் எல்லாம் இரட்சிக்கப்படுவார்கள். இயேசு ஏற்கெனவே பாவத்திற்கான விலையை கொடுத்துவிட்டார். ஆகவே யாரெல்லாம் நீர், இரத்தம் மற்றும் ஆவியைப் பற்றிய உண்மைகளை நம்புகிறார்களோ, அவர்கள் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கலாம்.

இயேசு நம்மை நீர் மற்றும் ஆவியின் நற்செய்தியின் மூலம் இரட்சித்தார். மறுபடியும் பிறத்தல் என்பது ஞானஸ்நானத்தையும் இயேசுவின் இரத்தத்தையும் அவர் கர்த்தர் என்பதையும் நம்புவதால் வரும்.

சர்ப்பமானது மேசேயினால் வனாந்திரத்திலே உயத்தப்பட்டது போல மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும் (யோவான் 3:14). இந்த வசனத்தின் பொருள் யாது? இயேசு ஏன் சிலுவையில் அறையப்படவேண்டும்? நம்போல் அவர் பாவியா? நம்போல் அவர் பலவீனமானவரா? நம்மைப் போல் அவர் குறை உள்ளவரா? இல்லை அவர் அப்படி இல்லை.

அப்படியானால் அவர் ஏன் சிலுவையில் அறையப்பட வேண்டும்? நம்மை இரட்சிக்கவும், நம்முடைய பாவங்களுக்கு கிரயத்தைக் கொடுக்கவுமே அவர் சிலுவையில் அறையப்பட்டார். அவர் நம்மை பாவங்களிலிருந்து இரட்சிக்கும் பொருட்டே ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டார்.

இரட்சிப்பின் சத்தியம் இதுவே. நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறப்பதே அது. பாவத்தின் கிரயமாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவருடைய சிலுவை மரணத்தையும் யாரெல்லாம் நம்புகிறார்களோ, அவர்களுக்கு இயேசு புதிய வாழ்வைக் கொடுத்தார்.

நீர் மற்றும் ஆவி என்பதன் பொருள்.

  • நீர் மற்றும் ஆவி என்பதன் பொருள் யாது?
  • நீர் இயேசுவின் ஞானஸ்நானத்தையும், ஆவி அவர் கர்த்தர் என்பதையும் குறிக்கிறது.

வேதம் கூறுகிறது. நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் நம்பினால் மறுபடியும் பிறப்போம் என்று. கர்த்தரின் பிள்ளைகளாவது மற்றும் மறுபடியும் பிறப்பது என்பது வேத வாக்குகளினால் சாதிக்கப்படுகிறது. நற்செய்தியானது, நம்முடைய பாவங்களுக்கு கொடுக்கப்பட்ட கிரயமாகிய நீர், இயேசுவின் இரத்தம் மற்றும் ஆவியாகும்.

வேதாகமத்தைப் பொறுத்தவரை நீர் என்பது இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது (1 பேதுரு 3:21) ஆவி என்பது இயேசு கர்த்தர் என்பதைக் குறிக்கிறது. இயேசு உலகத்திற்கு மனிதனாக, மாமிசத்துடன் பிறந்து, அவருடைய ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும், கிரயம் செலுத்தினார் என்பது மறுபடி பிறத்தலுக்கான உண்மையாகும்.

அவர் நம்முடைய பாவங்கள் யாவற்றையும் ஞானஸ்நானம் மூலம் தம்மீது ஏற்றுக்கொண்டு அதற்கான விலையை சிலுவை மரணம் மூலம் கொடுத்தார். ஞானஸ்நானம் பெற்றதனாலும், சிலுவையில் இரத்தம் சிந்தியதாலும், அவரை நம்புபவர்களை இரட்சித்தார்.

ஞானஸ்நானமும், அவரின் இரத்தமும், நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பதைக் குறிக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். நீராலும் ஆவியாலும் மறுபடி பிறந்தவர்களால் மட்டுமே பரலோகத்தைக் காணவோ அதனுள் பிரவேசிக்கவோ இயலும். இயேசு நம்மை ஞானஸ்நானமாகிய நீராலும், அவர் இரத்ததினாலும், அவர் ஆவியாலும் இரட்சித்தார். நீங்கள் இதனை நம்புகிறீர்களா?

இயேசுவே பரலோகத்தின் உயர்ந்த ஆசாரி. அவர் இவ்வுலகிற்கு நம் பாவங்களுக்கு கூலி கொடுப்பதற்காக வந்தார். அவர் ஞானஸ்நானம் பெற்றார். சிலுவையில் இரத்தம் சிந்தினார். மறுபடியும் எழுந்தார். இப்படியாக அவரை நம்புவோருக்கு இரட்சகரானார்.

 இயேசு யோவான் 10:7 இல் இவ்வாறு கூறுகிறார். “நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இயேசு பரலோக கதவண்டையில் நிற்கிறார். யார் நமக்காக கதவைத் திறப்பது? அது இயேசுவாகும்.

அவரின் இரட்சிப்புக்குறித்த உண்மை தெரியாத அவரின் விசுவாசிகளுக்கு முகத்தைத் திருப்புகிறார். அவர் அவருடைய ஞானஸ்நானத்தையும், இரத்ததையும், ஆவியையும் நம்பாதவர்களை மறுபடி பிறக்க அனுமதியளியார். அவருடைய வேத வாக்குகளையும், அவருடைய பரிசுத்தத்தையும் நம்பாதவர்களையும் அவர் கர்த்தர் என்பதை ஏற்க மறுப்பவர்களையும், காணும்போது முகத்தை திருப்பிவிடுகிறார்.

எழுதப்பட்ட உண்மை யாதெனில் அவர் இவ்வுலகிற்கு மாமிசமாக வந்து, ஞானஸ்நானம் பெற்று, நம்முடைய உலகின் பாவங்களுக்கு பலியாக சிலுவையில் மரித்தார். நமக்காகவே அவர் சிலுவையில் மரித்தார். சிலுவை மரணத்திற்கு பிறகு மூன்றாம் நாள் உயிருடன் எழும்பினார். இந்த உண்மைகளை நம்ப மறுப்பவர்கள் கர்த்தரால் சபிக்கப்பட்டு நாசமடைவார்கள். “பாவத்தின் சம்பளம் மரணம் என்று எழுதப்பட்டுள்ளது.

ஆயினும், அவருடைய ஞானஸ்நானத்தையும், இரத்தத்தையும் நம்பியதால் ஆசீர்வாதமான பாவ மன்னிப்பை கிடைக்கப்பட்டவர்களும் இருதயம் பரிசுத்தமானதாக மாற்றப்பட்டவர்களும். பரலோகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுவர். இதுவே மறுபடியும் பிறப்பதைக் குறித்த உண்மையான நற்செய்தி. இந்நற்செய்தி நீர், இரத்தம் மற்றும் ஆவியினால் வந்தது. யாரெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் இரத்தத்தையும் நம்புகிறார்களோ அவர்கள் மட்டுமே மறுபடியும் பிறக்க முடியும். யாரெல்லாம் நற்செய்தியாகிய நீர், குருதி மற்றும் ஆவியை நம்புகிறார்களோ அவர்கள் பாவமற்றவர்கள். அவர்களே உண்மையில் மறுபடியும் பிறந்தவர்கள்.

நிக்கொதேமு எப்படி இந்த உண்மையைப் பற்றி எச்சரிக்கை இல்லாதிருந்தானோ, அவ்வாறே இன்றும் பலர் உண்மையான நற்செய்தி தெரியாமல் இயேசுவை நம்புகிறார்கள். நிக்கொதேமுவின் சமூகம் முரட்டாட்டம் பிடித்தது. ஆயினும் உண்மையான நற்செய்தியை இயேசுவினிடமிருந்து அவன் கேட்டான். இயேசு சிலுவயில் அறையப்பட்ட போது அவரை அடக்கம் பண்ண வந்தவர்களில் அவனும் ஒருவன். அப்பொழுது அவன் நம்பிக்கைக்குள் வந்திருந்தான்.

இந்நாட்களில் பெரும்பாலான நமக்கு இயேசுவின் நீர் மற்றும் ஆவியைக் குறித்த உண்மைத் தெரியவில்லை. மேலும் பெரும்பாலானவர்கள் நற்செய்தியைக் கேட்கும்போது அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இரங்கத்தக்க நிலை இது.

நாம் மறுபடி பிறப்பதற்கான வாய்ப்பை இயேசு ஏறபடுத்தினார். எது நம்மை மறுபடியும் பிறக்கச் செய்கிறது? நீர், இரத்தம் மற்றும் ஆவி. இயேசு ஞானஸ்நானம் பெற்றதால் நமது பாவங்களை எடுத்துப் போட்டார். அவர் சிலுவையில் மரித்து, மீண்டும் மரித்தோரிலிருந்து உயிருடன் எழும்பினார்.

யாரெல்லாம் அவரை நம்புகிறார்களோ அவர்களுக்கு மறுபிறப்பை அருளிச்செய்து ஆசீர்வதிக்கிறார். இயேசுவே இரட்சகர்; அவரே, அவரை நம்புவோரை மறுபடியும் பிறக்கச் செய்கிறார். வானத்தையும் பூமியையும், இடையிலுள்ள யாவையும் படைத்த இயேசுவுடன் எப்போதும் இருக்க ஜெபம் செய்யவும்.

யோவான் 3:16 கூறுகிறது. “தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” இயேசுவை நம்புவதன் மூலம், நிரந்தர வாழ்வை பெற்றுக்கொண்டோம். நீரையும் ஆவியையும் நம்பியதால் நாம் மறுபடியும் பிறந்தோம். உண்மை யாதெனில், இரட்சிப்பைக்குறித்த நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் குருதியை நம்புவதோடு இயேசுவே இரட்சகர், அவரே கர்த்தர் என்பதையும் நம்புகிறவர்கள் இரட்சிக்கப் படுவார்கள்.

இந்த நற்செய்தியை நாம் நம்ப மறுத்தால், பாதாளத்திற்குள் நிரந்தரமாக வீசப்படுவோம். அதனால் தான் இயேசு நிக்கொதேமுவிற்கு கூறினார். “பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?”

கர்த்தர் நமக்காக என்ன செய்தார்? இயேசுவினால் கிடைக்கப்பட்ட இரட்சிப்பு நம்மை மறுபடியும் பிறக்கச் செய்தது. இயேசு நம்மை இவ்வுலகத்தினின்றும், சாத்தானிடமிருந்தும் உலகின் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சித்தார். பாவத்தின் மூலம் கிடைக்கும் தண்டனையிலிருந்து உலக மக்களை காப்பாற்றுவதற்காக, இயேசு நம்முடைய பாவங்களை ஞானஸ்நானம் மூலம் தன்மீது ஏற்றுக்கொண்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினார்.

இரட்சிப்படைய வேண்டுமா? இல்லையா? என்பது நமது விருப்பம். மறுபடியும் பிறப்பதற்கான இரட்சிப்படைதல் இயேசுவின் ஞானஸ்நானம், மற்றும் இயேசுவின் இரத்தம் ஆகியவற்றால் வரும் இரட்சிப்பு, ஆகியவற்றை நம்புவதால் கிடைக்கிறது.

கர்த்தர் நமக்கு இரண்டு விதமான ஆசீர்வாதங்களைக் கொடுத்துள்ளார். முதலாவது பொதுவான ஆசீர்வாதம். இது இயற்கையின் எல்லாவற்றையும், சூரியன், காற்று முதலியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இது பொது ஆசீர்வாதம் எனப்படுவதற்கான காரணம், இது பாவிகள், நீதிமான்கள் உட்பட எல்லோருக்கும் கொடுக்கப் பட்டிருக்கிறது.

அப்படியானால் சிறப்பு ஆசீர்வாதம் என்பது என்ன? நம்முடைய பாவங்களினால் கிடைக்கும் மரணத்திலிருந்து நம்மை இரட்சிக்கும், நீர் மற்றும் ஆவியினால் கிடைக்கும் மறுபடியும் பிறத்தல் என்பதே சிறப்பு ஆசீர்வாதமாகும்.

சிறப்பான ஆசீர்வாதம்

  • கர்த்தர் நமக்கருளின ஆசீர்வாதம் என்ன?
  • தம்முடைய ஞானஸ்நானம், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம் நம்மை மீண்டும் பிறக்கச் செய்ததே.

யோவான் 3:16 இல் எழுதப்பட்டுள்ளது. “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” இது சிறப்பு ஆசீர்வாதத்தைப் பற்றி விவரிக்கிறது; இயேசு மனித உடலில் இவ்வுலகிற்கு வந்து நம்முடைய பாவங்களை கழுவினார். இதன் பொருட்டு ஞானஸ்நானம் பெற்று நமக்காக சிலுவையில் அறையப்பட்டார். ஆகவே உண்மையில் நம்முடைய பாவங்களில் இருந்து இரட்சிக்கப்பட்டோம். இதுவே சிறப்பான ஆசீர்வாதம் ஆகும்.

இயேசு நம்மை இரட்சித்து, பாவிகளாயிருந்த நம்மை, நீதிமான்களாக மாற்றினார் என்பது உண்மை. கர்த்தரின் சிறப்பான ஆசீவாதத்தை, இந்த உண்மையை நம்புவதால் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நீங்களனைவரும் இதனை நம்புகிறீர்களா?

உங்கள் வாழ்வு முழுவதும் எத்தனை நம்பிக்கையுடன் நீங்கள் இருந்தாலும், இந்தச் சிறப்பு ஆசீர்வாதம் வேண்டாம் என்றால் உங்கள் நம்பிக்கைகள் வீண்போகும்.

இதனை எப்பொழுதும் பிரசங்கிக்கிறேன். மறுபடி பிறப்பதற்கான ஒரே வழி இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையையும் நம்புவதுதான் என்பதை நான் போதிக்க மறக்கவில்லை. வேதாகமத்தில் உள்ள எல்லா நூல்களும் இயேசுவின்மூலம் மறுபடியும் பிறப்பதற்கான ஆசீர்வாதமே சிறப்பு ஆசீர்வாதம் என்று கூறுகின்றன. இதுவே நாம் பேசிக்கொண்டிருக்கும் பொருள் ஆகும். “கர்த்தரின் எந்த ஒரு ஆசீர்வாதமும் பாவிகள் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் ஆகியவற்றின் மூலம் பெறும் இரட்சிப்பை விட பெரிதாகக் கூறப்படவில்லை.

இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை மரணமுமே கர்த்தர் அருளிய சிறப்பு ஆசீர்வாதமாகும். இவ்வுலகின் கள்ளப் போதகர்களுக்கு இது குறித்து எதுவும் கூறமுடியாது. இந்தக் கள்ளப் போதகர்கள் தேவதூதர்களின் வெளிச்சத்தை ஒத்த ஆடையை அணிந்துள்ளனர். அவர்கள் கிறிஸ்தவம் கூறும் நல்லொழுக்கத்தையும், மனிதாபிமானத்தையும் பட்டயமாக தரித்திருக்கிறார்கள், ஆம், இது உண்மை. அவர்கள் கர்த்தரின் இந்த சிறப்பு ஆசீர்வாதத்தை அலட்சியம் செய்வதால், அற்புதங்களைச் செய்வது, சுகமில்லாதவர்களை குணமாக்குவது எல்லாம் மோசமான செயல்கள்.

கர்த்தரின் இந்த சிறப்பு ஆசீர்வாதமே, பாவிகளாகிய நமக்கு, கர்த்தர் அருளிய நற்செய்தியாகிய பாவமன்னிப்பு. இந்த சிறப்பு ஆசீர்வாதம் மூலம் கர்த்தர் நாம் மறுபடியும் பிறக்க அனுமதி அளித்தார். அவர் தம்முடைய ஞானஸ்நானம், இரத்தம், மரணம், உயிர்த்தெழுதல் மூலமாக நம்மை புதிதாக்கினார். நம்மை அவரின் பாவமற்ற பிள்ளைகளாக்கினார்.

இதனை நம்புகிறீர்களா? - ஆம் - நீங்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவரா? - ஆம் - இயேசுவின் ஞானஸ்நானம், அவர் இரத்தம், அவர் மரணம், அவர் உயிர்த்தெழுந்தது இதுவே கர்த்தர் நீர் மற்றும் ஆவி மூலம் நமக்கு கொடுத்த சிறப்பு ஆசீர்வாதமாகும். இதுவே சிறப்பு ஆசீர்வாதம் குறித்த நற்செய்தியாகும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் - அவர் நம்மை இந்த சிறப்பு ஆசீர்வாதம் மூலம் இரட்சித்தார்.

நிறைய கிறிஸ்தவ விசுவாசிகள் கர்த்தரின் சிறப்பு ஆசீர்வாதம் பற்றி எதுவும் தெரியாமலிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. அவர்களுக்கு நற்செய்தியாகிய ஞானஸ்நானம் மற்றும் குருதியை குறித்தோ, நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பது குறித்தோ தெரியாது. குருட்டுத்தனமாக அவர்களின் சொந்த வழிகளிலும் மதத்தின் நல் வழிகளிலும் அவர்கள் பாதை தேடுகிறார்கள். மிகுந்த அறிவீனர்களாக அவர்கள் இருக்கின்றனர்.

கிறிஸ்தவ மதம் வெகு காலமாக நம்முடன் இருக்கிறது, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக அது செப்பம் செய்யப்பட்டது. ஆனால் இன்றும் கொரியா மற்றும் உலகம் முழுவதும் கர்த்தரின் சிறப்பு ஆசீர்வாதத்தையும், மறுபடியும் பிறத்தலைப்பற்றிய உண்மையையும் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஆயினும், நாம் உலகத்தின் கடைசி காலங்களில் வாழ்வதால், இந்த உண்மைகளை கர்த்தர் அவர்களுக்கு வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

பரலோக ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்கு நீதிமான்களாக வேண்டும். பாவிகள் மறுபடியும் பிறக்க வேண்டும். இது நீர் மற்றும் ஆவியைப்பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்வதால் வருகிறது. நிறைய கிறிஸ்தவர்கள் மறுபடியும் பிறக்க கடும் முயற்சிகளைச் செய்கின்றனர்.

ஆயினும், அவர்கள் மறுபடியும் பிறப்பதன் உண்மையான கருத்தை புரிந்துகொள்ளாவிட்டால், அவர்கள் நம்பிக்கை வீண். அவர்கள் பரலோக ராஜ்ஜியத்திற்குச் செல்ல மறுபடியும் பிறக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மறுபடியும் பிறத்தலுக்கான உண்மையின் சிறிய அளவும் தெரியாது.

அவர்கள் தங்களுக்குள்ளே கீழ் கண்டவாறு தீர்மானிக்கிறார்கள். நாம் முழு நம்பிக்கையுடன் விசுவாசிக்கிறோம். நமது இருதயம் நெருப்பாய் இருக்கிறது, இதுவே மறுபடியும் பிறப்பதாகும். ஆனால் சொந்த அனுபவங்கள் மூலம் மறுபடியும் பிறக்க முயற்சி செய்வதோ, மத சடங்காச்சாரியங்களில் ஆர்வம் காட்டுவதோ தவறான நம்பிக்கைக்கு வழி நடத்தும்.

மறுபடியும் பிறக்கச் செய்வதற்கு வழி காட்டும் வேதவாக்கு

  • நம்பிக்கைக்கும் மதத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
  • இயேசு நம்மை இரட்சிக்க செய்தவற்றை நம்புவது நம்பிக்கையாகும். அதே சமயம் மதம் ஒருவரின் சொந்த யோசனைகளையும் அவர்கள் காரியங்களையும் சார்ந்துள்ளது.

மறுபடியும் பிறத்தலைப் பற்றி 1 யோவான் 5:4-8 இல் வெகுத்தெளிவாக நீர், இரத்தம் மற்றும் ஆவியை நம்புவதால் மட்டுமே மறுபடியும் பிறக்க முடியும் என்பதைக் கூறுகிறது. நாம் மறுபடியும் பிறக்கவேண்டுமானால் கீழ்கண்டவற்றை தெளிவாக மனதில் கொள்ளவேண்டும். மறுபடியும் பிறப்பது சத்தியமான வேத வாக்குகளின் மூலம் மட்டுமே சாத்தியாமாகும். சில காட்சிகள், பல பாஷைகளில் பேசுதல், ஒரு சில உணர்ச்சியூட்டும் அனுபவங்கள் நம்மை மறுபடியும் பிறப்பதற்கு வழி நடத்தாது.

இயேசு யோவான் மூன்றாம் அதிகாரத்தில் கூறுகிறார். ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான். ஒருவன் மறுபடியும் பிறக்கவேண்டும் என்றால், பொதுவாக அவன் இயேசுவை இரண்டு முறை நம்பவேண்டும். முதலாவது மதம் கூறும் வழிகளினாலும், கர்த்தரின் கட்டளைகள் மூலமாக தான் பாவி என்பதை உணர்வதாலும் அவன் இயேசுவை நம்புகிறான். கர்த்தரின் கட்டளைகள் மூலம் தான் எப்படிப்பட்ட பாவி என்பதை உணர்ந்து அவன் இயேசுவை விசுவாசிக்கிறான்.

உலகின் மதங்களுடன் சம்பந்தப்படுத்தி, இயேசுவிடம் நாம் நம்பிக்கை வைக்கலாகாது. கிறிஸ்தவம் இன்னும் ஒரு வெறும் மதமல்ல. அதுவே நம்பிக்கையின் மூலம் ஜீவ வாழ்வை பெறுவதற்கான ஒரே வழி.

யாரேனும் இயேசுவை ஒரு மதமாக கருதி நம்பினால் அவன் வெறுங்கையன் ஆவான். அவன் வெறுமையானதும், ஒழுங்கீனம் உள்ளதும், பாவம் நிறைந்ததுமான இருதயத்துடன் இருப்பான். இது உண்மையில்லையா? நீங்கள் பரிசேயர் போன்ற வேஷக்காரர்களாக வேண்டாம்.

எல்லோரும் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக விரும்புகிறார்கள், ஆயினும் ஒருவன் கிறிஸ்தவத்தை ஒரு மதம் என்றென்னினால், அவன் வேஷக்காரனாகவும், இருதயம் முழுவதும் பாவத்திலுமாக முடிவடைவான். நாம் மறுபடியும் பிறப்பதன் சத்தியத்தை கட்டாயமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் கிறிஸ்தவத்தை ஒரு மதமாக நம்பி, மறுபடியும் பிறக்காதவர்களாகிறார்களோ, அவர்கள் பெரும் குழப்பத்திற்கும் ஒரு வெறுமையான இருதயத்தை பெறும் நிலைக்கும் ஆளாகிறார்கள். ஒருவன் மறுபடியும் பிறக்காமல் இயேசுவை நம்பினால் அவன் நம்பிக்கை தவறானது, ஆகவே அவன் மாய்மாலக்காரனாகிறான். அவன் வெளியரங்கமாக எல்லார் கண்களுக்கும் பரிசுத்தமாகத் தெரிகிறான். ஆனால் அவன் படுதோல்வியை அடைகிறான்.

கிறிஸ்தவத்தை நீங்கள் ஒரு மதமாக நினைக்கும்வரை நீங்கள் ஒரு பாவி. ஒரு கபடவேஷதாரி. மிஞ்சியிருக்கும் நாட்களை புலம்பலில் கழிப்பீர்கள். உங்கள் பாவத்தில் இருந்து விடுதலை பெற விரும்பினால், எழுதப்பட்டிருக்கும் உண்மைகளை நம்பவேண்டும். அது நற்செய்தியாகிய நீர், குருதி மற்றும் ஆவியாகும்.

இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கிடைக்கும் பாவ மன்னிப்பின் இரகசியத்தை தேடல்

  • நம்மை மறுபடியும் பிறக்கச் செய்வது எது?
  • இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல்.

என்றும் மாறாத வேத வாக்கின் மூலம் எவராலும் மறுபடியும் பிறக்கமுடியும் என்பதை வேதம் கூறுகிறது. நாம் அப்போஸ்தலர்களின் வாக்குகளை இப்பொழுது பார்ப்போமாக. 1 பேதுரு 3:21 இவ்வாறு கூறுகிறது. “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது மாமிச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.”

வேதாகமத்தில் இயேசுவின் ஞானஸ்நானமானது நம் இரட்சிப்பின் குறியீடு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசுவை விசுவாசிப்போர் எல்லாம் நமது ஞானஸ்நானத்தை மட்டும் பற்றியல்ல, இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். இயேசுவின் ஞானஸ்நானம் பாவிகளாகிய நமக்கு புது வாழ்வை அளித்தது. இதனை நம்புங்கள், ஆகவே நீங்கள் மறுபடி பிறப்பீர்கள், இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை சம்பாதிப்பீர்கள்.

இரட்சிப்பு இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்புவதன் மூலம் கிடைக்கிறது. இதனால் நாம் இரட்சிக்கப்படுகிறோம். நீதிமான்களாக நித்திய வாழ்வினை சம்பாதிக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் வேத வாக்கின் மூலம் இரட்சிப்பின் சத்தியத்தை நம்பும்போது, நம்முடைய பாவங்கள் எல்லாக் காலங்களிலும் சுத்திகரிக்கப் பட்டவைகளாக இருக்கும்.

மறுபடியும் பிறப்பதற்கு இரண்டாம் முறை பிறக்கவேண்டும். நாமெல்லாம் மத கண்ணோட்டத்தின் மூலமே இயேசுவை விசுவாசிக்கத் தொடங்குகிறோம், பிறகு உண்மயை அறிந்து, விசுவாசத்தின் மூலம் மறுபடியும் பிறக்கிறோம். இயேசு என்பதன் பொருள் “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத்தேயு 1:21).

நாம் இயேசுவை விசுவாசித்து, அவர் மனித குலத்திற்கு என்ன செய்தார் என்பதை அறிந்தால் நம்முடைய பாவங்களிலிருந்து, நாம் கழுவப்பட்டு புத்தம் புதிய மக்களாகிறோம். முதலில் இயேசுவை ஒரு மதமாக நம்புகிறோம். பிறகு நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தம் ஆகியவற்றைக் கேள்விப்பட்டு விசுவாசிக்கும்போது நாம் மறுபடியும் பிறக்கிறோம்.

எந்த சத்தியம் நம்மை மறுபடியும் பிறந்தவர்களாகச் செய்கிறது? முதலாவது இயேசுவின் ஞானஸ்நானம், பிறகு அவர் சிலுவையில் சிந்திய இரத்தம், கடைசியாக அவர் மரித்தோரிலிருந்து உயிருடன் எழும்பியது. மறுபடியும் பிறந்தோம் என்பது இயேசுவை நம் கர்த்தராகவும், நம்முடைய இரட்சகராகவும் நம்புவதாகும். பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் எப்படி பிறந்தார்கள் என்று பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தின் பாவ பரிகார முறை; கைகளை வைப்பதும், இரத்தப் பலி கொடுப்பதும்

பழைய ஏற்பாட்டின் மறுபடியும் பிறப்பதைக் குறித்த நற்செய்தி என்ன? முதலில் லேவியராகமம் முதல் அத்தியாயத்தை படிப்போம். மறுபடியும் பிறப்பதைக் குறித்து அது என்ன கூறுகிறது? லேவியராகமம் 1:1-5 இல் “கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டியது என்னவென்றால் உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலி செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தை தெரிந்தெடுத்து பலி செலுத்தவேண்டும். அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகன பலியானால், அவன் ஒரு பழுதற்ற காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கீகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து அது தன் பாவ நிவர்த்திக்கென்று அங்கீகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அந்த காளையை கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புகூடார வாசலில் இருக்கிற பலி பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவீர்கள்.”

இஸ்ரவேலர்கள் எப்படி தம்முடன் பலியிடும் முறைகளின் மூலமாக ஐக்கியமாக முடியும் என்பதை லேவியராகமத்தில் கர்த்தர் கூறுகிறார். இதுவே சத்தியம், இதனைத் தெளிவாக நாம் அறிந்துக் கொள்ளவேண்டும். இந்த வார்த்தைகளை ஆராய்வோமாக.

ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து கர்த்தர் மோசேயை அழைத்துப் பேசினார். அது இஸ்ரவேலர்களின் பாவப் பரிகாரத்தைக் குறித்ததாய் இருந்தது. கர்த்தரின் கட்டளைகளை மீறி இஸ்ரவேலர்கள் பாவம் செய்யும்போது, அதற்கு பாவ பரிகாரமாக அவர்கள் மந்தையிலிருந்து களங்கமில்லாத ஒரு மிருகத்தைக் கர்த்தருக்கு பலியாக கொடுக்கவேண்டும்.

பலியிடப்படும் விலங்கானது கர்த்தர் கூறிய விலங்காகவும், எந்த ஒரு பழுதுமில்லாததாகவும் இருக்க வேண்டும். அதேபோல் கர்த்தர் கூறிய முறைப்படி அவை பலியிடப்பட வேண்டும். பலியிடும் முறைகள் பின் வருமாறு.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் யாரேனும் பாவம் செய்தால் பாவ விடுதலைக்காக கர்த்தரின் முன்பாக அவன் பலிகொடுக்க வேண்டும். முதலில் பலியாகும் மிருகம் களங்கமில்லாததாக இருக்கவேண்டும். இரண்டாவதாக, அவன் பாவங்களை மிருகத்திற்கு இடமாற்றம் செய்யும்பொருட்டுத், தன் கைகளை அம்மிருகத்தின் தலைமீது வைக்கவேண்டும்.

அம்மிருகம் கொல்லப்பட்டவுடன், அதன் இரத்ததை பலிபீடத்திலுள்ள கொம்புகளில் இட வேண்டும். மீதி இரத்ததைத் தரையில் கொட்ட வேண்டும். விடுதலைக் கிடைப்பதற்கான கர்த்தர் ஆசீர்வதித்தருளிய ஆசரிப்புக்கூடார முறைமை இதுவேயாகும்.

கர்த்தருடைய கட்டளைகளும், பிரமானங்களும் 613 பகுதிகளாக உள்ளன. இவற்றில் எதைச்செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தர் இக்கட்டளைகளையும், சட்டங்களையும் இஸ்ரவேலருக்கு கொடுத்தார். அவர்களுக்கு கர்த்தரின் இக்கட்டளைகளும் சட்டங்களும் சரியென தெரிந்திருந்தாலும், அதன்படி அவர்களால் வாழ முடியவில்லை. ஏனெனில் எல்லோரும் ஆதாமின் மூலமாக 12 வகையான பாவங்களை சொந்தமாக்கியுள்ளோம்.

எனவே, கர்த்தருக்கு முன்பாக சரியானதைச் செய்யும் திறமையை அவர்கள் இழந்தார்கள். இஸ்ரவேலர்கள் நீதிமான்களாகும் திறமையையும் இழந்தார்கள். ஆனால் தொடர்ந்து பாவம் செய்வதிலிருந்து அவர்களால் தப்பமுடியவில்லை. எவ்வளாவு கடினமாக பாவங்களிலிருந்து விலக முயன்றும் அவர்களால் அது முடியவில்லை. மனித குலம் பாவிகளாக பிறப்பதும், பாவிகளாக சாவதும், முன்கூட்டியே எழுதப்பட்ட ஒன்றாக இருந்தது.

கர்த்தர் தன்னுடைய அளவுகடந்த இரக்கத்தினால் அவர் ஜனத்திற்கு பலியிடும் முறை மூலமாக பாவ மன்னிப்பு பெற ஒரு வழியைக் கொடுத்தார். ஆசரிப்புக்கூடார முறைகளை அவர் கொடுத்ததன் மூலமாக இஸ்ரவேல் மற்றும் உலகின் எல்லா மக்களும் பாவ விடுதலை பெறமுடிந்தது. பலியிடும் முறையினால் கர்த்தர் மனிதகுலம் மீது எத்தனை நீதியான அன்பு வைத்தார் என்று தெரிகிறது, அவர் உலகம் இரட்சிக்கப்படும் வழியைக் காட்டினார்.

கர்த்தர் மக்களுக்கு பலியிடும் முறையைக் கொடுத்ததுடன் லேவியின் குடும்பத்தாரை இவ்வாராதனையை நடத்த நியமித்தார். இஸ்ரவேலின் கோத்திரத்தில் லேவியின் குடும்பத்தார் மட்டுமே பலியாராதனையை, இஸ்ரவேலருக்காக நடத்துவதற்கு நியமிக்கப்பட்டனர்.

மோசேயும் ஆரோனும் லேவியின் குடும்பத்தார். வேதம் ஆசரிப்புக் கூடாரத்தில் பலியிடுவதற்கான ஒழுங்கு முறைகள் மற்றும் சட்டங்கள், நற்செய்தியாகிய கைவைப்பதன் மூலம், கிடைக்கும் பாவ விடுதலைக் குறித்து பதிவு செய்துள்ளது.

ஆகவே, லேவியரின் பலியிடும் முறைகளை நாம் அறிந்தால், நாமே மறுபடியும் பிறக்கமுடியும். இதனாலேயே ஆசரிப்புக்கூடார பலியிடும் முறைகளைப் பற்றிய, தேவ வார்த்தைகளை நாம் கற்கவேண்டும். இதுவே பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான பகுதியாகும். இறுதியாக நாம் புதியஏற்பாட்டிற்கு வரும்போது, நீர் மற்றும் ஆவியால் கிடைக்கும் மறு பிறப்பு ஆசீர்வாதமாக இருக்கிறது.

பழைய ஏற்பாட்டின்படி பாவ மன்னிப்பு

  • கர்த்தரின் குணங்கள் என்ன?
  • நியாயம் மற்றும் அன்பு.

லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த மோசேயைக் கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திற்கு அழைத்து, மோசேயின் சகோதரனான ஆரோனை தலைமை ஆசாரியனாக நியமித்தார். ஆரோனின் வேலை மனிதர்களின் பாவங்களை பலி மிருகங்கள் மீது கடத்துவிப்பதாக இருந்தது,

லேவியராகமம் 1:2 இல் கர்த்தர் மோசேயிடம் இவ்வாறு கூறுகிறார். “நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டியது என்னவென்றால் உங்களில் ஒருவன் கர்த்தருக்கு பலி செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலாவது ஆட்டு மந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலி செலுத்தவேண்டும். கர்த்தர் இங்கே பலி காணிக்கையைப் பற்றி குறிப்பிடுகிறார். எவனொருவன் பாவ மன்னிப்பை வேண்டுகிறானோ, அவன் தன்னுடைய மந்தையிலிருந்து ஆட்டையோ, மாட்டையோ பலி கொடுக்க வேண்டியதாயிருந்தது.

கர்த்தர் அவர்களிடம் கூறினார். “அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கீகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டு வந்து,” (லேவியராகமம் 1:3).

மனிதனின் பாவங்கள் நிமித்தம் மனிதன் பெறக்கூடிய மரணத் தண்டனையிலிருந்து தப்பிக்க அவன் செலுத்தும் இப்பலிகளை கர்த்தர் ஏற்றார். இஸ்ரவேலர்கள் தம் கைகளை பலி மிருகங்களின் தலை மீது வைத்து தம் பாவங்களை இடமாற்றம் செய்தனர். பலி மிருகங்கள் ஒருவனின் சொந்த சித்தத்தினால் அளிக்கப்பட வேண்டும். 4-ஆம் வசனம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

அது தன் பாவ நிவர்த்திக்கென்று அங்கீகரிக்கப் படும்படி தன் கையை அதின் தலையின் மேல் வைத்து.” இத்தகைய பலிகள் கர்த்தர் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருந்தது. ஒரு பாவி பலி மிருகத்தின் தலை மீது அவன் கைகளை வைக்கும்போது, அவன் பாவங்கள் மிருகத்தின் தலைமீது இடமாற்றம் செய்யப்பட்டன. ஆகவே ஒரு பாவி, கர்த்தரின் முன்பாக அவன் கைகளை பலி மிருகத்தின் தலைமீது வைக்கவேண்டும். அப்போது அதனைக் கர்த்தர் ஏற்று அவனுக்கு பாவ மன்னிப்பை அருளுவார்.

இப்பலியைச் செலுத்துபவன் அம்மிருகத்தைக் கொன்று பலி பீடத்தின் மீதிருக்கும் கொம்புகளில் இரத்தத்தை ஊற்றவேண்டும்; மீதி இரத்தத்தை பலி பீடம் முன்பு தரையில் கொட்டவேண்டும். பாவத்திற்கு கூலியாகவும் அதிலிருந்து விடுபடவும் கர்த்தரின் கட்டளைப்படி, இப்பலிகளை அவர்கள் காணிக்கையாக செலுத்தவேண்டும்.

லேவியராகவும் 1:5 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடார வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்க கடவர்கள்.” நாலு மூலைகளிலும் கொம்புகள் வைக்கப்பட்டுள்ள தகன பலிபீடம் ஆசரிப்புக் கூடாரத்தினுள், கதவருகினில் இருந்தது.

ஒருவன் பலி மிருகத்தின் தலையின்மீது அவன் கைகளை வைத்து அவன் பாவங்களை இடமாற்றம் செய்யவேண்டும். பிறகு அவன் அம்மிருகத்தினைக் கொல்லவேண்டும். பிறகு ஆசாரியர் அம்மிருகத்தின் இரத்தத்தை கொம்புகளின் மீது தெளித்தனர். பலிபீடத்திலுள்ள இக்கொம்புகள் நியாயத்தீர்ப்பினைக் குறிக்கின்றன. ஆகவே, இக்கொம்புகளில் இரத்தமிடுவது, பாவிக்காக அம்மிருகம் இரத்தம் சிந்தி, பாவ மன்னிப்பு அடைவதைக் குறிக்கிறது. கர்த்தர் பலி பீடத்திலுள்ள இக்கொம்புகளில் இருக்கும் இரத்தத்தைக் கண்டு, பாவியிடமிருந்த பாவங்களை எடுத்துப்போட்டார்.

எதற்காக இப்பலிகள் இரத்தம் சிந்த வேண்டும்? ஏனெனில் “பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23)” அதே சமயம் இரத்தம் மாமிசத்தின் ஜீவனாய் இருக்கிறது. அதனால் எபிரேயரில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது (எபிரேயர் 9:22) ஆனபடியால், பலி மிருகத்தின் இரத்தம் சிந்துதலினால், பாவத்தின் சம்பளம் மரணம் என்ற கர்த்தரின் கட்டளை நிறைவேற்றப் பட்டது.

நியாயமாக, பாவியிடமிருந்து இரத்தம் வந்திருக்க வேண்டும். ஆனால் பலி மிருகம் அந்தப் பாவிக்காய் இரத்தம் சிந்தி அவனை பாவமற்றவனாக்கியது. ஆசாரியன் அப்பலி மிருகத்தின் குருதியை அக் கொம்புகளில் ஊற்றியதானது பாவத்திற்கான சம்பளம் செலுத்தப்பட்டதைக் குறிக்கிறது.

நாம் புதிய ஏற்பாட்டின் வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 மூலம் இக்கொம்புகள் நியாயப் புத்தகத்தை குறிப்பிடுவதை அறிந்து கொள்ளலாம். ஆகவே இக்கொம்புகளில் இரத்தத்தை ஊற்றுவது நியாயப் புத்தகத்திற்கு அதனை அளிப்பதற்கு ஒத்ததாகும். இது பாவத்திற்கு பலிமீது கைவைத்ததாலும், அப்பலி இரத்தம் சிந்தியாதாலும் நியாயத் தீர்ப்புக் கிட்டியதைச் சுட்டிக்காட்டுகிறது.

பாவம் இரண்டு இடங்களில் பதிவு செய்யப் படுகிறது.

கர்த்தருக்கு முன்பாக மனிதர் செய்யும் பாவங்கள் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்படுகின்றன. ஒன்று அவர்களின் இருதயப் பலகை. மற்றது கர்த்தரின் முன்பாக விரிக்கப்பட்டிருக்கும் அவரின் ஜீவ புத்தகம்.

எரேமியா 17:1 இல் எழுதப்பட்டுள்ளது. “யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும், உங்கள் பலி பீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.”

லேவியராகமம் 17:11 இவ்வாறு கூறுகிறது “மாமிசத்தின் உயிர் இரத்தத்திலிருக்கிறது.” மாமிசத்தின் உயிர் இரத்தம். நம்முடைய பாவங்களுக்கு இரத்தம் மூலமாகவே கூலி கொடுக்க முடியும். ஆகவே, பலிபீடக் கொம்புகளில் இரத்தம் இடப்பட்டது. சட்டத்தின்படி, எல்லாமே இரத்தத்தினால் சுத்திகரிக்கப் படுகின்றன. மேலும், இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை (எபிரேயர் 9:22).

பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகன பலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன். அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின் மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின் மேல் கட்டைகளை அடுக்கி, அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும், கொழுப்பையும் பலி பீடத்திலுள்ள அக்கினியிலிருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கி வைக்கக்கடவர்கள். அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின் மேல் சர்வாங்க தகன பலியாகத் தகனிக்ககடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகன பலி.” (லேவியராகமம் 1:6-9)

அதன்படி, ஆசாரியர்கள் தகனபலியை துண்டுதுண்டாக வெட்டி, அதனை பலிபீடத்தின் மேலுள்ள தீயில் வைத்தார்கள். இம்முறை எதனைக் குறிக்கிறது என்றால், கர்த்தருக்கு முன்பாக பாவம் செய்தவன், கொல்லப்பட்டு, இரத்தஞ்சிந்தி, நரகத்திலிருக்கும் தீயினுள் தூக்கி எறியப்படுவதைக் குறிக்கிறது. ஆனால் நியாயத்தீர்ப்பு பலியிடுவதன் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆகவே மக்களால் பாவமன்னிப்பு பெற முடிந்தது.

நீதியின் தேவனுக்கு சர்வாங்கத் தகனப்பலியே நியாயச் சடங்காகும். கர்த்தர் இரண்டு விதிகளைச் செயல்படுத்தினார். ஒன்று நீதியின் விதி மற்றது அன்பின் விதி. இதுவே மனிதகுலம் பாவமன்னிப்பு பெற அனுசரிக்க வேண்டியச் சடங்காகும்.

கர்த்தர் நீதிமானாயிருப்பதனால், அவரே தீர்ப்பெழுதி மரணத்தண்டனை அளிக்கிறார். ஆனால், அவர் மனிதர்களை நேசிப்பதால், அவர்கள் தம் பாவங்களை, பலி மிருகங்கள் மீது இடமாற்றம் செய்ய அனுமதி அளித்தார். புதிய ஏற்பாட்டில்; அவர் நம்மை வெகுவாக நேசித்ததால், அவர் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து பாவிகளாகிய நமக்காக பலியானார். இயேசுவின் ஞானஸ்நானமும், அவரின் சிலுவை மரணமும் இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் கழுவின.

பழைய ஏற்பாட்டின் படி தினமும் நாம் செய்யும் பாவத்திற்கு பரிகாரம் என்ன?

  • பழைய ஏற்பாடு கூறும் களங்கமில்லா பலி யாரைக் குறிப்பிடுகிறது?
  • இயேசுகிறிஸ்துவைக் குறிக்கிறது.

லேவியராகமம் 4:27 இலிருந்து படிப்போமாக “சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால், தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரிய வரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளின் பழுதற்ற ஒரு பெண் குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து, பாவ நிவாரண பவியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகன பலியிடும் இடத்தில் அந்தப் பாவ நிவாரண பலியைக் கொல்லக்கடவன். அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகன பலிபீடத்துக் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலேயே ஊற்றிவிட்டு, சமாதான பலியிலிருந்து கொழுப்பை எடுப்பது போல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்கு பாவ நிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும் (லேவியராகமம் 4:27-31).

ஆதாமின் சந்தியினர், இஸ்ரவேல் மக்கள் உட்பட இவ்வுலகின் மக்கள் யாவரும் இவ்வுலகில் பிறக்கும் போதே பாவிகளாகப் பிறந்தனர். ஆகவே, நம் இருதயமானது பாவம் நிரம்பியதாக உள்ளது. தீயச் சிந்தனைகள், கள்ளத்தொடர்பு, கொலை, களவு, இச்சை, முட்டாள்தனம் போன்ற எல்லா பாவங்களும் ஒருவனின் இருதயத்தை நிரப்பியுள்ளன.

ஒருவன் தன் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற விரும்பினால், அவன் பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்திற்கு களங்கமில்லாத ஒரு மிருகத்தைக் கொண்டு வரவேண்டியதாக இருந்தது. பிறகு அவன் கைகளை அம்மிருகத்தின் தலை மீது வைத்து அவன் பாவங்களை இடமாற்றம் செய்ய வேண்டும். அதனைக் கொன்று அதன் இரத்தத்தை கர்த்தருக்கு காணிக்கையாக கொடுக்கும்பொருட்டு, ஆசாரியரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆசாரியர் நீதி நியமனங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் அந்தப் பாவியின் பாவம் நிவர்த்திக்கப் படுகிறது.

கர்த்தருடைய கட்டளைகளும் நியமனங்களும் இல்லாமல், மக்களால், அவர்கள் பாவம் செய்கிறார்களா, இல்லையா, என்பதை அறிய முடியாது. கர்த்தருடைய கட்டளைகளினாலும் அவர் நியமனங்களினாலும் நம்மை ஆராய்ந்து பார்த்தால் நம் பாவங்களைக் கண்டுகொள்ளமுடியும். நம்முடைய பாவங்களுக்கு நமது அளவுகோளினால் தீர்ப்பளிக்கப்படுவதில்லை. அவை கர்த்தரின் கட்டளைகளினாலும், நியமனங்களினாலும் வழங்கப் படுகின்றன.

சாதாரண இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்தனர் - அவை வேண்டுமென்றே செய்யப்படவில்லை; அவர்கள் பிறக்கும் போதே எல்லா வகையான பாவங்களையும் தம் இருதயத்தில் கொண்டிருந்தனர். மனிதன் அவன் பலவீனத்தினால் செய்யும் பாவங்கள் மீறுதல் என்றழைக்கப்படுகிறது. மனிதனின் பாவங்கள், மீறுதல்களையும், பாவச் செயல்களையும் உள்ளடக்கியுள்ளது.

எல்லோரும் முழுமையடையாத மனிதர்களே. இஸ்ரவேலர்களும் முழுமை அடையாதவர்கள் ஆதலால், அவர்கள் பாவிகளாக, பாவம் செய்தனர். நம்முடைய பாவச்செயல்களைக் கீழ்க் கண்டவாறு வகுக்கலாம். நம் மனம் மோசமான சிந்தனைகளில் ஈடுபடுவது பாவமாகும். அச்சிந்தனைகளை நடைமுறைப் படுத்தும்போது, அது மீறுதல் ஆகிறது. இவ்வுலகின் பாவங்கள் இவ்விரண்டையும் உள்ளடக்கியுள்ளன.

பழைய ஏற்பாட்டின்படி, பலி மிருகத்தின் மீது கை வைப்பதன் மூலம், பாவங்கள் இடமாற்றம் அடைந்தன. அதன் பிறகு பாவி, பாவமில்லாதவனானான். ஆகவே, அவன் மரிக்கவேண்டியதில்லை. இந்த பலிகொடுக்கும் முறை, நியாயத்தினதும், கர்த்தருடைய அன்பினதும் நிழலாகும்.

கர்த்தர் நம்மை மண்ணிலிருந்து படைத்ததால், முதலில் நாம் வெறும் புழுதியே. இரத்தத்தை பலி பீடத்திலுள்ள கொம்புகளில் ஊற்றுவதாலும், மீதி இரத்தத்தை பலி பீடத்தைச் சுற்றிலும் ஊற்றுவதாலும், இஸ்ரவேலர்கள் அவர்களுடைய பாவங்களுக்கு நிவர்த்திச் செய்தனர். அவர்களுடைய இருதயப் பலகையிலிருந்த பாவங்கள் அழிக்கப்பட்டன.

அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின் மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனயாகத் தகனித்து,” வேதாகமத்தில் கொழுப்பு எனப்படுவது, பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. ஆகவே, பாவ நிவர்த்தி வேண்டுமென்றால், கர்த்தர் நியமித்த வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். கர்த்தர் சரியென்று கூறிய வழிகளில் பாவ மன்னிப்பை நமது இருதயங்களில் பெற வேண்டும்.

கர்த்தர் இஸ்ரவேலிடம் பலி கொடுக்கவேண்டிய மிருகங்களாக ஆட்டுக்குட்டியையோ, ஆட்டையோ, கன்றையோ தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். பழைய ஏற்பாட்டின் பலி மிருகங்கள் தெரிந்தெடுக்கப்பட்டவை. ஆட்டுக்குட்டி களங்கமில்லாத ஒரு மிருகம். பலி மிருகங்கள் ஏன் களங்கமில்லாதவைகளாக தேர்ந்து எடுக்கப் பட்டனவென்றால், அவை பரிசுத்த ஆவியினால் தோற்றுவிக்கப்பட்ட மனிதர்களுக்காக பலியிடப்படும் இயேசுவை குறிக்கின்றன.

பழைய ஏற்பாட்டு மனிதர்கள் தம் பாவங்களை களங்கமில்லாத பலி மிருகங்களின் தலையில் கைகளை வைப்பதன் மூலம் இடமாற்றம் செய்தார்கள். ஆசாரியர்கள் பலி ஆராதனையை நடத்தி அவர்கள் பாவத்திற்கு பரிகாரம் செய்தார்கள். இப்படியாகவே இஸ்ரவேல் மக்கள் பாவ விடுதலை பெற்றார்கள்.

பாவ விடுதலை நாளின் அனுசரிப்பு முறைகள்

  • பாவ விடுதலை நாளில் இஸ்ரவேலர்கள் ஏன் பலியிடவேண்டும்?
    • ஏனெனில் அவர்களின் ஜீவ நாட்கள் முடியும்வரை பாவம் செய்தார்கள். தினமும் செலுத்தப்படும் பலி அவர்களை கர்த்தர் முன் பரிசுத்தவான்கள் ஆக்கவில்லை.

ஆயினும், எப்போதெல்லாம், பாவம் செய்கிறார்களோ அப்பொதெல்லாம் அவர்கள் பலி செலுத்தவேண்டும். பாவ நிவர்த்திக்கென்று பலியிடப்படும் மிருகங்களைப் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. ஆகவே, மக்கள் மெதுவாக இதைக் குறித்து கவலை அற்றவர்கள் ஆனார்கள். தினமும் பாவ நிவர்த்தி செய்வது ஒரு நிரந்தர வேலைப் போலாகி விட்டதால், அவர்கள் இந்த பலியிடும் முறைகளிலிருந்து ஒரேயடியாக விலகி நடக்கத் தலைப்பட்டனர்.

நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் நம்முடைய பாவங்களுக்கெல்லாம் நம்மால் பலி செலுத்த முடியாது. அதற்கு முழு மாற்று யாதெனில் கர்த்தர் நியமித்த இரட்சிப்பின் விதி முறைகளை இதயப் பூர்வமாக விசுவாசிப்பதேயாகும்.

நாம் பலவீனர்களாக இருப்பதனால் கர்த்தரின் கட்டளைகளை கைக்கொண்டு நடக்க எத்தனை கடும் முயற்சி செய்தாலும், நாம் எவ்வளவு முழுமை அடையாதவர்கள் என்பதையும், எத்தனை பலவீனமுள்ளவர்கள் என்பதையும் மட்டுமே உணர்வோம். ஆகவே இஸ்ரவேல் மக்கள் முழு வருட பாவத்திற்கான பாவ நிவர்த்தி செய்ய கர்த்தர் ஒரு வழியை ஏற்படுத்தினார். (லேவியராகமம் 16:17-22 )

மேலும் லேவியராகமத்தில் எழுதப்பட்டுள்ளது. “ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களை தாழ்மைபடுத்துவதுமன்றி ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக் கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவ நிவர்த்தி செய்யப்படும். உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வு நாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை (லேவியராகமம் 16:29-31).

பாவ நிவர்த்தி தினமான ஏழாம் மாதம் பத்தாம் தேதியில் தலைமை ஆசாரியர் பலியாராதனையை நடத்தியபோது, இஸ்ரவேல் மக்கள் அவ்வருடம் முழுவதிலும் செய்த பாவங்கள் நிவர்த்திக்கப் பட்டதால் அவர்கள் மன அமைதிப்பெற்றார்கள். அவர்கள் பாவங்கள் கழுவப்பட்டதால், அந்நாளில் அவர்கள் மனம் அமைதிப்பெற்றது.

ஏழாம் மாதம் பத்தாம் தேதியில் இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதியாக தலைமை ஆசாரியரான ஆரோன், பாவ நிவர்த்திக்கான பலியாராதனையை நடத்த வேண்டும். இவ்வேளையில் மற்ற ஆசாரியர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழையக்கூடாது. முதன்முதலில் ஆரோன் அவனிற்காகவும் அவன் குடும்பத்திற்காகவும் பாவ நிவர்த்திக்கென பலியிட வேண்டும். அதன் பிறகே, இஸ்ரவேல் மக்களுக்காக ஆராதனையை ஏறெடுக்க முடியும், ஏனெனில் ஆரோனும் அவன் வீட்டாரும் பாவம் செய்திருந்தார்கள்.

அவன் பலியாராதனையை இப்படி நடத்தினான். “அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்து கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கு என்று ஒரு சீட்டும் போட்டு, கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவ நிவாரணப்பலியாகச் சோரப்பண்ணி, போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக் கொண்டு பாவ நிவர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போக விடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி (லேவியராகமம் 16:7-10).

ஆரோன் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் பாவ நிவர்த்திக்கான முறைகளை செய்துவிட்டு “இரண்டு ஆடுகளுக்காகவும் சீட்டு போட்டான் ஒரு ஆடு கர்த்தருடையது. மற்றது போக்காடாகும்.

முதலில் இரண்டு ஆடுகளும் கர்த்தருக்கு படைக்கப்பட்டன. இங்கு தலைமை ஆசாரியன், அவ்வருடம் முழுவதும் இஸ்ரவேலர் செய்த பாவங்களை, தன் கையை ஆட்டின் தலை மீது வைத்து இடமாற்றம் செய்தான்.

மிகுந்த பரிசுத்த தலத்திலுள்ள கிருபாசனத்திற்கு, இரத்தம் எடுத்துச் செல்லப்பட்டு ஏழு முறை இரத்தம் தெளிக்கப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் கடந்த ஒரு வருடமாகச் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன. இஸ்ரவேலரின் பாவங்களினால் அவர்கள் சாகிறதற்கு பதிலாக, ஆரோன் அவர்கள் பாவங்களை பலி மிருகத்தின் தலை மீது கை வைத்து, இட மாற்றம் செய்து அதனை அவர்களுக்காக தீர்ப்பிற்கு உட்படுத்தினான். பிறகு மற்ற ஆட்டை கர்த்தர் முன் பலியிட்டான். இப்பலி மக்களுக்காக ஏறெடுக்கப்பட்ட பலியாகும்.

மக்களுக்காக

எல்லா மக்களுக்கு முன்பாகவும், ஆரோன் தன் கைகளை இரண்டாம் ஆட்டின் தலைமீது வைத்து கர்த்தர் முன் பாவ அறிக்கைச் செய்தான். “கர்த்தரே, இஸ்ரவேல் மக்கள் கொலை செய்தார்கள், கள்ளத்தொடர்பு வைத்தார்கள். திருடினார்கள், இச்சையடைந்தார்கள், அவர்கள் விக்கிரகங்கள் முன் தலை வணங்கினார்கள். ஔய்வு நாளை அவர்கள் பரிசுத்தமாக ஆசரிக்கவில்லை. உம்முடைய நாமத்தை அவர்கள் வீனில் வழங்கினார்கள். உம்முடைய கட்டளைகளையும் நியமனங்களையும் உடைத்துப் போட்டனர் இதன் பிறகு அவன் கைகளை எடுத்தான். இதன் மூலம் மக்களின் அவ்வருட பாவங்கள் முழுவதும், பலி மிருகத்தின் மீது இடமாற்றம் செய்விக்கப்பட்டது.

லேவியராகமம் 16:21 படிப்போமாக. “அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின் மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.”

போக்காடு இஸ்ரவேல் மக்களின் பாவங்களைத் தலைமேல் சுமந்து, வனாந்தரத்திலே திரிந்து சாகவேண்டும். போக்காடு எபிரேய மொழியில் “அசாசேல் என்றழைக்கப்படுகிறது. இதன் பொருள் “வெளியில் போடுவது என்பதாகும். இதன் கருத்து யாதெனில், கர்த்தர் முன்பாக, இஸ்ரவேலருக்கு பதிலாக சீட்டுப் போடப்பட்டது என்பதாகும்.

ஆகவே இஸ்ரவேலரின் பாவங்கள் போக்காடு மீது ஆரோன் கைவைத்ததால் இடமாற்றம் செய்யப்பட்டது. இப்படியாக இஸ்ரவேலரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. அவர்கள் தலைமை ஆசாரியன் அவன் கையை ஆட்டின் தலையின் மீது வைத்ததையும், அந்த ஆடு வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்டதையும் கண்டபோது, இம்முறைமை மீது நம்பிக்கை வைத்ததால், அவர்கள் பாவநிவர்த்தியினை நிச்சயமாய் அறிந்துக் கொண்டார்கள். பழைய ஏற்பாட்டின் எல்லா முறைகளும், புதிய ஏற்பாட்டின் ‘மறுபடியும் பிறத்தலுக்கான நற்செய்தியின்' நிழலாகும்.

பழைய ஏற்பாட்டின்படி, பலிமிருகம் மீது கை வைத்தலும், இரத்தஞ்சிந்துதலும் பாவ இரட்சிப்பின் நற்செய்தியாகும். புதிய ஏற்பாட்டில் கூட அடிப்படையில் அது ஒன்றே.

புதிய ஏற்பாட்டின் பாவ மன்னிப்பு நற்செய்தி

புதிய ஏற்பாட்டின் படி எல்லா பாவங்களும் எப்படி எடுத்துப் போடப்பட்டது?

மத்தேயு 1:21-25 இல் எழுதப்பட்டுள்ளது. “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது. நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்து கொண்டு; அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.”

மனிதர்களைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படி கர்த்தராகிய இயேசு, இம்மானுவேல் என்ற பெயருடன் இவ்வுலகிற்கு வந்தார். ஆகவே அவருக்கு இயேசு என்று பெயரிடப்பட்டது. உலகின் பாவங்களை எடுத்துப் போடும்படி மனித மாமிசமாக அவர் வந்தார். அவர் நம்முடைய இரட்சிப்பை முழுமைசெய்து நம்மை பவங்களிலிருந்து நிரந்தரமாக விடுதலையாக்கினார்.

மறுபடியும் பிறத்தலின் நற்செய்தி.

இயேசு நம்மை நம் பாவங்களில் இருந்து எப்படி விடுதலையாக்கினார்? அவர் ஞானஸ்நானம் மூலமாகவே. மத்தேயு 3:13 ஐ நோக்குவோமாக.

அப்போழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத்தேயு 3:13-17)

புதிய ஏற்பாட்டின்படி, இயேசு 30 வயதாகும்போது, யோர்தான் நதியிலிருந்த யோவான் ஸ்நானகனிடம் வந்தார். அவர் ஞானஸ்நானம் பெற்று, பாவிகளிடமிருந்து எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். இப்படிச் செய்ததினால், கர்த்தரின் நீதியை அவர் முழுமைச்செய்தார்.

இயேசு யோர்தானில் ஏன் ஞானஸ்நானம் பெற்றார்?

  • நற்செய்தியில் வெளிப்படுத்தப்பட்டது என்ன?
  • கர்த்தரின் நீதி.

பரலோகதலைமைஆசாரியர், மனிதகுலத்தின்கடைசி தலைமைஆசாரியனைச் சந்தித்துபோதுநடந்த காட்சிகளைநாம் காண்போமாக. இங்கு ஞானஸ்நானம்மூலம் கர்த்தரின்நீதியை உணரலாம். ஞானஸ்நானம் உலகின்பாவங்களுக்கு பாவநிவர்த்தியைப் பெற்றுத்தந்தது.

இயேசுவிற்குஞானஸ்நானம்நல்கிய யோவான்ஸ்நானகன் ஸ்திரீகளில்பிறந்தவர்களில் சிறந்தவன். இயேசு மத்தேயு 11:11 இல் இவ்வாறுசாட்சி பகருகிறார். “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில்யோவான் ஸ்நானகனைப்பார்க்கிலும் பெரியவன்ஒருவனும் எழும்பினதில்லை. பழையஏற்பாட்டில்பாவ மன்னிப்புநாளில்தலைமை ஆசாரியனானஆரோன் பலிமிருகத்தின்தலைமீது கைவைத்தபோதுபாவங்கள் எப்படிக்கழுவப்பட்டதோ, அதுபோலபுதிய ஏற்பாட்டில்,உலகின் பாவங்கள்யாவும்யோவான் ஸ்நானகன்இயேசுவிற்கு ஞானஸ்நானம்கொடுத்தபோது கழுவப்பட்டது.

நம்கடந்தகால,நிகழ்கால, எதிர்காலப்பாவங்கள் அனைத்திற்குமானமுழு பாவநிவிர்த்தியாவது நற்செய்தியாகியமறுபடியும் பிறத்தலாகும். ஆகவே இயேசுவின்ஞானஸ்நானம் மூலம்கிட்டும் நற்செய்தியாகியவிடுதலையானது கர்த்தரின்நீதியை முழுமையாக்கும்பொருட்டு கர்த்தர்நியமித்த, இவ்வுலகின்எல்லா மக்களையும்இரட்சித்த நற்செய்தியாகும். இயேசு உலகின்சகலப் பாவங்களுக்கும்பரிகாரமாக மிகவும்பொருந்தத்தக்க வகையில்ஞானஸ்நானம் செய்யப்பட்டார்.

எல்லா நீதிகளையும் முழுமையாக்குதல்என்றால் என்ன?அதன்பொருள் உலகின்பாவங்களை எல்லாம்சிறந்த முறையினால்அவர் கழுவினார்என்பதாகும். இயேசுமனிதர்களின் பாவங்களைகழுவும் பொருட்டுஞானஸ்நானம் பெற்றார். விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப் படுத்தப்படுகிறது.” (ரோமர் 1:17)

தேவநீதி,அவருடையஒரே குமாரரானஇயேசுவை யோவான்ஸ்நானன்அளித்த ஞானஸ்நானம்மூலமும், இயேசுவின்சிலுவைமரணம் மூலமும்,உலகின் பாவங்களைக்கழுவுவதற்கு கொடுத்ததின்மூலம் விளங்குகிறது.

புதியஏற்பாட்டில்,தேவநீதி இயேசுவின்ஞானஸ்நானம் மூலமும்அவரின்இரத்தம் மூலமும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம்வருடங்களுக்கு முன்பாகயோர்தான் நதியில்இயேசுநம் பாவங்களைஎடுத்துப் போட்டதால்நாம் நீதிமான்களானோம். நம்முடைய இருதயங்களில்கர்த்தரின் இரட்சிப்பைஏற்றுக்கொள்ளும்போது, தேவநீதிஉண்மையில் முழுமையடைகிறது.

இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு,இப்படி எல்லாநீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசுஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ,வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவஆவி புறாவைப்போல இறங்கி,தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒருசத்தம் உண்டாகி; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்றுஉரைத்தது.” (மத்தேயு 3:15-17)

இவ்வசனங்கள்கர்த்தரே இரட்சிப்பின்நீதியை அவர்குமாரனின் ஞானஸ்நானம்மூலம் சாட்சிபகன்றதை தெரிவிக்கின்றன. அவர் நம்மிடம்கூறுகிறார். “யோவான்ஸ்நானகனால் ஞானஸ்நானம்பெற்ற இயேசு,இப்பொழுது உண்மையாகஎனதுகுமாரன். எல்லா மனிதர்களும்பாவமன்னிப்பு பெரும்பொருட்டு,இயேசு ஞானஸ்நானம்பெற்றார் என்பதைகர்த்தர்சாட்சி கூறுகிறார். இயேசுவின் இப்பரிசுத்தசெயல்கள் வீணாகதப்படிக்குஅவர் இப்படிச்செய்தார்.

இயேசுதேவகுமாரன். அவரே இவ்வுலகபாவிகளின் இரட்சகர். “இவரில் பிரியமாயிருக்கிறேன்என்று கர்த்தர்கூறினார். இயேசுஅவர்தந்தையின் சித்தத்திற்குகீழ்ப்படிந்து, அவர்ஞானஸ்நானம்மூலம் மனிதர்களின்பாவங்களை எடுத்துப்போட்டார்,என்பது உண்மையாகும்.

ஞானஸ்நானம்என்பதன்பொருள்கழுவப்படுதல்,இடமாற்றம் செய்தல்,அடக்கம் செய்தல் என்பதாகும். இயேசு ஞானஸ்நானம்பெற்றபோது நம்முடையபாவங்களெல்லாம் அவர்மீதுஇடமாற்றம் செய்யப்பட்டதினால்,நாம் செய்யவேண்டியதெல்லாம்,நற்செய்தியை நம்பிஉலகின் பாவங்களில்இருந்து இரட்சிக்கப்படுதலேயாகும்.

 பழையஏற்பாட்டின் இரட்சிப்பைக்குறித்த தீர்க்கதரிசனங்கள், புதியஏற்பாட்டின் இயேசுஞானஸ்நானம் பெற்றதன்மூலம் முழுமையடைந்தன. ஆகவே பழையஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் கடைசியாகபுதிய ஏற்பாட்டில்அவற்றை ஒத்தவற்றைக்கண்டன. பழையஏற்பாட்டின் இஸ்ரவேல்மக்கள், வருடத்தில்ஒருமுறை பாவமன்னிப்பு பெற்றதுபோலபுதிய ஏற்பாட்டில்மனிதர்களின் பாவங்கள்இயேசுவின் மீதுஇடமாற்றம் செய்யப்பட்டு,அவை நிரந்தரமாககழுவப்பட்டன.

லேவியராகமம் 16:29, மத்தேயு 3:15 ஒத்ததாகும். இவ்வுலகின் பாவங்களைஎடுத்துக் கொள்ளும்படிஇயேசு ஞானஸ்நானம்செய்விக்கப்பட்டார். அவருடையஞானஸ்நானத்திற்கு நன்றிகள். அவருடைய நிரந்தரபாவமன்னிப்பை நம்புபவர்கள்பாவங்களிலிருந்து இரட்சிப்படைவார்கள். அவர்களுடைய இருதயபலகையிலிருந்து அவர்கள்பாவங்கள் அழிக்கப்பட்டன.

நீங்கள்இயேசுவின் ஞானஸ்நானத்தையும்,அவரின் சிலுவைமரணத்தையும் அறிந்துஉங்கள் இருதயத்தில்அதனை விசுவாசிக்கவில்லைஎன்றால், நீங்கள்எவ்வளவு பக்தியாகவாழ்ந்தாலும், உங்கள்பாவங்களை சுத்திகரிக்கமுடியாது. இயேசுவின்ஞானஸ்நானம் மூலம்மட்டுமே வேதவாக்குமுழுமைப் பெற்றுநமதுபாவங்கள் கழுவப்பட்டன. உண்மையான இரட்சிப்புபாவ விடுதலையில்இருந்து கிடைக்கிறது. வேறு வார்த்தைகளில்கூறுவதானால், அதுஇயேசுவின் ஞானஸ்நானம்மூலம் கிடைக்கிறது.

இதனைமனதில்கொண்டு நீங்கள்என்ன செய்வீர்கள்?இந்த இரட்சிப்பைஉங்கள் இருதயத்தில்ஏற்றுக் கொள்வீர்களா?இல்லையா? இதுமனிதவாக்குகள் அல்ல. இவைதேவனுடையவை. இயேசுசிலுவையில் மரித்ததுஏனெனில்அவர் உங்களுடையபாவங்களைதம் ஞானஸ்நானம்மூலம் எடுத்துக்கொண்டார் என்பதையும்அவர் ஞானஸ்நானம்பெற்றதினாலேயே அவர்சிலுவையில் அறையப்பட்டார்என்பதையும் ஒத்துக்கொள்கிறீர்களா?

ரோமர் 8:3-4 இல்இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “அதெப்படியெனில், மாம்சத்தினாலேபலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத்தேவனே செய்யும்படிக்கு,தம்முடைய குமாரனைப்பாவ மாம்சத்தின்சாயலாகவும், பாவத்தைப்போக்கும் பலியாகவும்அனுப்பி, மாம்சத்திலேபாவத்தை ஆக்கினைக்குள்ளாகத்தீர்த்தார். மாம்சத்தின்படிநடவாமல் ஆவியின்படிநடக்கிற நம்மிடத்தில்நியாயப்பிரமானத்தின் நீதிநிறைவேறும்படிக்கே அப்படிச்செய்தார்.”

நாம்உலகிற்குரியவர்களாகவும், மாமிசம்பலவீனமுள்ளதாக இருப்பதனாலும்கர்த்தரின் கட்டளைகளையும்நியாயப் பிரமானங்களையும்நாம் தொடர்ந்துகைப்பற்ற முடியாது; ஆகவேஇயேசு மாமிசத்தின்பாவங்களை தம்மீதுஏற்றுக்கொண்டார். இதுஇயேசுவின் ஞானஸ்நானத்தைக்குறித்த சத்தியமாகும். இயேசுவின் சிலுவைமரணம்அவரின் ஞானஸ்நானத்தின்மூலம் முன்கூட்டியேஅறிவிக்கப்பட்டது. இதுவேஞானமாகிய கர்த்தரின்மூல நற்செய்தியாகும்.

நீங்கள்இயேசுவின்சிலுவை மரணத்தைமட்டும் விசுவாசித்துக்கொண்டிருந்தீர்களானால், இயேசுவின்ஞானஸ்நானம் மூலமேநற்செய்தியாகிய இரட்சிப்புகிட்டியது என்பதையும்உங்கள் இருதயத்தில்ஏற்றுக்கொள்வீர்களாக. அப்பொழுதுமாத்திரமே உண்மையில்நீங்கள் கர்த்தரின்பிள்ளைகளாக முடியும்.

மூல நற்செய்தி

  • மூல நற்செய்தி என்ன?
  • நீர் மற்றும் ஆவியைப் பற்றிய நற்செய்தி.

மூல நற்செய்தியாவது, பாவங்களிலிருந்து விடுதலையடையச் செய்யும் நற்செய்தியாகும். இதுவே கர்த்தர் கூறிய நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் மரணம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவையாகும். இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரே தடவையில் கழுவினார், இதனை விசுவாசிப்போரிற்கு இரட்சிப்பை நல்கினார். நம்முடைய நம்பிக்கையின் படி, நம்முடைய வருங்கால பாவங்களையும் அவர் கழுவினார்.

இப்பொழுது, யாரெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நம்புகிறார்களோ, அவர்கள் இவ்வுலக பாவங்களிலிருந்து நிரந்தரமாக இரட்சிக்கப்படுவர். இதனை நம்புகிறீர்களா? உங்கள் பதில் “ஆம் நம்புகிறேன் என்றிருந்தால் உண்மையில் நீங்கள் நீதிமானானீர்கள்.

இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு நடைபெற்றச் சம்பவங்களை சுருக்கமாக பார்ப்போம். யோவான் 1:29 இல் இவ்வாறு எழுதபட்டுள்ளது. “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”

யோவான் ஸ்நானன் இயேசுவே இவ்வுலகத்தின் பாவங்களை எடுத்துப்போடுபவர் என்று சாட்சி கூறினான். யோர்தான் நதியில் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தபோது, உலகின் பாவங்களை யோவான் ஸ்நானனே அவருக்கு ஞானஸ்நானம் மூலம் கொடுத்ததால், அவனால் “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ



ஆட்டுக்குட்டி என்று சாட்சி கூறமுடிந்தது. இயேசு ஞானஸ்நானம் பெற்றதன் மூலம், இவ்வுலகின் பாவங்களை எடுத்துப்போட்டார். இதுவே மீண்டும் பிறப்பதான நற்செய்தியாகும்.

“இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை நீக்கினார்.

நீங்கள் பிறந்த நாளிலிருந்து பத்து வயதுவரைச் செய்த பாவங்களும் இந்த உலகின் பாவங்களில் உள்ளடங்கியிருந்தன. நீங்கள் இப்பாவங்கள் இயேசுவின் மீது இடமாற்றம் அடைந்ததை நம்புகிறீர்களா? ஆமாம் நம்புகிறேன். 11 இலிருந்து 20 வயது வரை உங்கள் மீறுதல்கள் என்னவாயிற்று? இப்பாவங்களும் இயேசுவின் மீது இடமாற்றம் செய்யப்பட்டன என்பதை நம்புகிறீர்களா? ஆமாம் நம்புகிறேன்.

வருங்காலத்தில் நீங்கள் செய்யப்போகும் பாவங்களும் இவ்வுலக பாவங்களில் உள்ளடங்கியுள்ளதா? ஆம், அவை உள்ளடக்கியுள்ளன. அப்படியானால் அவை உண்மையில் இயேசுவின் மீது இடமாற்றம் செய்யப்பட்டதை நம்புகிறீர்களா? - ஆம் நம்புகிறேன்.

இவ்வுலகின் பாவங்களிலிருந்து உண்மையில் உங்களுக்கு இரட்சிப்பு வேண்டுமா? அப்படியானால் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தைப் பற்றிய நற்செய்தியையும் நம்புங்கள். இதனை நம்பும்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இதனை நம்புகிறீர்களா? இதுவே மறுபடியும் பிறத்தலின் சத்தியமான இரட்சிப்பாகும். இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் குருதியுமே மறுபடியும் பிறத்தலின் மூல நற்செய்தியாகும். இதுவே தேவன் உலகின் பாவிகளுக்கருளிய ஈவு.

இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் நல்கும் மறுபடி பிறத்தல் அளிக்கும் இரட்சிப்பை பெற, அவரின் அன்பை தெரிந்துகொள்ள அவரின்மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும். மறுபடியும் பிறத்தலுக்கான குறியீடுகள் நீரும், இயேசுவின் இரத்தமுமாகும். வேதாகமம் கூறும் சத்தியத்தை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மதமும் நம்பிக்கையும்

  • மறுபடி பிறந்தவர்களாகிய நம்மிருதயத்திலிருக்கும் சாட்சியம் என்ன?
  • இயேசு தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் நமது அனைத்து பாவங்களையும் துடைத்தார் என்பது.

மதம் என்பதன் பொருள், வேதவாக்கைப் புறக்கணித்து ஒருவனின் சொந்த அறிவுப்படி இயேசுவை நம்புவதாகும். ஆனால் பாவத்திலிருந்து இரட்சிப்பு ஒருவனின் சொந்த யோசனைகளிலிருந்து தூரமாயிருக்கிறது. நம்பிக்கை என்பது சொந்த யோசனைகளை விலக்கி, பழைய மற்றும் புதிய ஏற்படுகளின் வாக்குகளை நம்புவதாகும். வேதாகமம் கூறுவதை அப்படியே எடுத்துக்கொண்டும், நீர் மற்றும் இரத்தத்தின் இரட்சிப்பை ஏற்று, இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவர் சிலுவை மரணத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் மூல நற்செய்தியின் ஞானத்தை தன் இருதயத்தில் ஏற்பதன் மூலம் இரட்சிக்கப்படுவான்.

ஞானஸ்நானம் இல்லாது நம் பாவங்கள் இயேசுவின் மீது இடம் மாறாது. இரத்தஞ்சிந்தாமல் பாவத்திற்கு கூலி கொடுக்க இயலாது. இயேசு சிலுவைக்குச் சென்று இரத்தம் சிந்து முன்பாகவே நம்முடைய எல்லாப் பாவங்களும் அவர் மீதிருந்தன. இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும், நற்செய்தியின் மூலம் மறுபடி பிறத்தலை நம்புவதன் மூலமாக, உலகின் பாவங்களிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம்.

உண்மையான நம்பிக்கை என்னவென்றால் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நமது பாவங்களைப் பரிபூரணமாக கழுவிவிட்டார் என்பதேயாகும். நம்முடைய பாவங்களின் தீர்ப்பை அவர் சிலுவையில் எடுத்துச் சென்றார் என்பதை நம்பவேண்டும். கர்த்தர் நம்மீது எந்த அளவு அன்பு கூர்ந்தார் என்றால், அவர் நம்மை இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலும் இரட்சித்தார். இந்த நற்செய்தியை நாம் நம்பும்போது, நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை அடைகிறோம். தீர்ப்பிலிருந்து விடுதலை கிடைக்கிறது. கர்த்தரின் முன்பாக நீதிமான்களாகிறோம்.

கர்த்தரே நான் விசுவாசிக்கிறேன். நான் இரட்சிக்கப்பட தகுதியானவன் அல்ல, ஆனால் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நம்புகிறேன்.” நம்மை மறுபடி பிறக்கச் செய்த நற்செய்தியை நல்கியதால், நாம் கர்த்தருக்கு மாத்திரமே நன்றி செலுத்தவேண்டும். மறுபடியும் பிறத்தலான மூல நற்செய்தியை நம்புவதே உண்மை நம்பிக்கையாகும்.

மறுபடியும் பிறப்பதன் சத்தியம் இது; “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் (ரோமர் 10:17) “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார் (யோவான் 8:32). நாம் சத்தியத்தை தெளிவாக அறியவேண்டும். மேலும் அதற்குச் சாட்சியாக விளங்கும், நீர், இரத்தம் மற்றும் ஆவியை நம்ப வேண்டும். (1 யோவான் 5:5-8)

சத்தியம் உங்களை விடுதலையாக்கும் இதுவே நீர் மற்றும் இரத்தம் குறித்த இயேசுவின் வார்த்தைகளாகும். நீங்கள் விடுவிக்கப்பட்டீர்களா? நாம் மதம் சார்ந்தவர்களாக இருக்கிறோமா? அல்லது விசுவாசிகளா? இயேசுவிற்கு வேண்டியதெல்லாம் நீர் மற்றும் ஆவியின் மூலம் மறுபடி பிறக்கும் நற்செய்தியை நம்புகிறவர்கள் மாத்திரம் தான்.

நீங்கள் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகியவற்றை நம்பினால் நீங்கள் இருதயத்தில் பாவமில்லாதவர்களாக இருப்பீர்கள், ஆனால் இயேசுவை மதத்தின் ஒரு அங்கமாக கருதினால் நீங்கள் இன்னும் பாவத்தில் ஜீவிக்கிறீர்கள். ஏனென்றால் இயேசு இரட்சிக்கும் முறையில் உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை. மதச் சார்புடையவர்கள் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கிறார்களோ, அதற்கு பரிகாரமாக அப்பொழுது பாவமன்னிப்பு வேண்டி ஜெபிக்கிறார்கள்.

ஆகவே, இப்படிப்பட்டவர்கள் பாவங்களிலிருந்து முழுவதுமாக இரட்சிக்கப்பட முடியாது. அவர்கள் வாழ் நாள் முழுவதும் பாவ மன்னிப்பு வேண்டினாலும், அது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் மூலம் அளித்த பாவ மன்னிப்புக்கு ஈடாகாது. இயேசுவின் நற்செய்தியை நம்பி இரட்சிக்கப்படுவோமாக, அது உலகின் பாவங்கள் யாவையும், எதிர்கால பாவங்கள் உட்பட கழுவிவிட்டது.

நான் மீண்டுமாகச் சொல்லுகிறேன், தினமும் பாவ மன்னிப்பு வேண்டுவது, மறுபடியும் பிறப்பதற்கு ஈடாகாது. எல்லாக் கிறிஸ்தவர்களும் மறுபடியும் பிறத்தல் மூலம் பாவப் பரிகாரம் செய்யப்படுகிறது என்பதை இப்பொழுது நம்பவேண்டும்.

நம்முடைய எல்லா பாவங்களுக்கும் நம்மால் புலம்ப முடியாது. தவறான புலம்பல் கர்த்தரிடம் கொண்டு சேர்க்காது. அது ஆத்துமாவை மட்டும் தேற்றுகிறது. தவறான புலம்பல் ஒருதலைப் பட்சமான பாவ அறிக்கையாகும் - அது கர்த்தருடைய சித்தத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இது கர்த்தர் நம்மிடமிருந்து விரும்பும் ஒன்றல்ல.

உண்மையான புலம்பல் யாது? அது கர்த்தரிடம் திரும்புதலாகும். மறுபடியும் இயேசுவின் இரட்சிப்பு பற்றிய வார்த்தைகளுக்கு வருவதும் எழுதப்பட்ட வார்த்தைகளை அப்படியே நம்புவதும், இயேசுவிடம் அழைத்து வரும். நம்மை இரட்சிக்கும் நற்செய்தி யாதெனில் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவையே ஆகும். இந்த நற்செய்தியை முழுவதுமாக நம்பினால் நாம் இரட்சிக்கப்படுவது மட்டுமின்றி நித்திய வாழ்க்கையும் பெறுவோம்.

இதுவே நற்செய்தியாகிய மறுபடியும் பிறத்தலின் ஞானமாகும்; அதனால் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் குருதி, கர்த்தரின் ராஜ்ஜியத்தைப் பற்றிய நற்செய்தி ஆகியவை நம்மை மறுபடி பிறக்க அனுமதி அளிக்கிறது.

இயேசு நம்மிடம் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்கவேண்டும் என்றபோது அவர், நாம் அவரின் ஞானஸ்நானத்தயும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் நம்புவதால் மறுபடியும் பிறக்கவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். அப்பொழுது நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தினுள் நுழைந்து அங்கே வாழ முடியும். நாம் அவருடைய வார்த்தைகளை நம்ப வேண்டும். இரண்டு காரியங்கள் நம் பாவத்தின் பரிகாரத்திற்கு சாட்சியாக இருக்கின்றன. இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகிய வார்த்தைகள் நம்மை மறுபடி பிறக்க அனுமதியளிக்கின்றன.

இப்பொழுது பாவ பரிகாரத்தையும், நற்செய்தியாகிய மறுபடி பிறத்தலையும் நம்புகிறீர்களா? இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவையில் சிந்திய குருதி மீது நாம் வைக்கும் நம்பிக்கை உலகின் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கிறது. இந்நம்பிக்கையின் மூலம் நாம் மறுபடியும் பிறக்க முடியும். வேதாகமம், இயேசு இவ்வுலகின் பாவிகளின் பாவங்களை எல்லாம் எப்படி கழுவினார் என்று கூறுகிறது. அதை நம்பி நாம் ஏன் மறுபடியும் பிறக்க கூடாது?

யாரெல்லாம் மறுபடியும் பிறத்தலுக்கான இரண்டு சாட்சிகளாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தயும் அவர் சிலுவை மரணத்தையும் நம்புகிறார்களோ அவர்கள் உண்மையாகவே மறுபடியும் பிறந்தவர்கள். தேவ குமாரனை விசுவாசிக்கிறவனும் சாட்சியாக இருக்கிறான். (1 யோவான் 5:3-10). நீங்கள் இயேசுவை விசுவாசிக்கும் போது, நற்செய்தியாகிய நீர் இரத்தம் மற்றும் ஆவியை புறம்பே தள்ளக்கூடாது.

படைத்தலைவன் நாகமான் ஏழு முறை யோர்தானில் முழுகி குஷ்ட ரோகத்திலிருந்து விடுதலைப் பெற்றது போல (2 ராஜாக்கள் 5 ஆம் அதிகாரம்), இயேசு உலகின் பாவங்களை நிரந்தரமாக கழுவினார் என்பதயும் நிரந்தர இரட்சிப்பை நமக்கு நல்கினார் என்பதையும் நாம் நம்பவேண்டும்.

இயேசு நம்மை நேசித்ததால் நாம் உலகின் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு, நித்திய ஜீவனை பாவ நிவர்த்தியான நற்செய்தியை நம்புவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். நாமெல்லாம் மறுபடியும் பிறப்பதான நற்செய்தியை நம்பி, கர்த்தரின் இரட்சிப்பை பெறுவோமாக.*






உண்மையான ஆவிக்குரிய விருத்த சேதனம்

【3-6】< யாத்திராகமம் 12:43-49 >


 

< யாத்திராகமம் 12:43-49 >

மேலும் கர்த்தர்மோசேயையும் ஆரோனையும்நோக்கி: பஸ்காவின்நியமமாவது, அந்நியப்புத்திரன்ஒருவனும் அதைப்புசிக்கவேண்டாம். பணத்தினால் கொள்ளப்பட்டஅடிமையானவன் எவனும்,நீ அவனுக்குவிருத்த சேதனம்பண்ணின பின்,அவன் அதைப்புசிக்கலாம். அந்நியனும் கூலியாளும்அதிலே புசிக்கவேண்டாம். அதை ஒவ்வொருவீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாமிசத்தில்கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்துவெளியே கொண்டுபோகக்கூடாது. அதில்ஒரு எலும்பையும்முறிக்கக்கூடாது. இஸ்ரவேல்சபையாரெல்லாரும் அதைஆசரிக்கக்கடவர்கள். அந்நியன்ஒருவன் உன்னிடத்திலேதங்கி, கர்த்தருக்குபஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்றுஇருந்தால், அவனைச்சார்ந்த ஆண்பிள்ளைகள்யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். பின்புஅவன் சேர்ந்துஅதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல்இருப்பான்; விருத்தசேதனம் இல்லாதஒருவனும் அதில்புசிக்கவேண்டாம். சுதேசிக்கும்உங்களிடத்தில் தங்கும்பரதேசிக்கும் ஒரேபிரமாணம் இருக்கக்கடவதுஎன்றார்.”

  • பழைய ஏற்பாட்டின்படி, இஸ்ரவேலர்கள் கர்த்தரின் பிள்ளையாகுவதற்கு இருந்த மாற்றமுடியாத நிபந்தனை யாது?
  • அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.

கர்த்தரை நம்பும் நமக்கு பழைய ஏற்பாட்டில் உள்ளதும், புதிய ஏற்பாட்டில் உள்ளதுமான தேவவாக்கு முக்கியமும் விலையேறப்பட்டதுமாக இருக்கிறது, வேதவாக்கு நமது ஜீவ வாக்காக இருப்பதால், ஒரு வார்த்தையையும் நாம் இழந்து போகலாகாது.

இன்றைய வசனங்கள், பஸ்கா பண்டிகயை ஒருவன் கடைப்பிடிக்கவேண்டுமானால் அவன் முன்பே விருத்தசேதனம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று கூறுகின்றன. கர்த்தர் இதை ஏன் கூறுகிறார் என்று நாம் யோசிக்கவேண்டும். ஒருவன் விருத்தசேதனம் செய்யாவிட்டால் அவனால் பஸ்கா பண்டிகையை ஆசரிக்கமுடியாது.

இயேசுவை நாம் நம்பவேண்டுமானால், இந்தக் கட்டளைக்கு கர்த்தர் வைத்திருக்கும் திட்டம் என்ன என்று நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். விருத்தசேதனம் என்பது ஒரு மனிதனின் நுனித்தோலை வெட்டி விடுவதாகும். கர்த்தர் ஏன் ஆபிரகாமிடமும், அவன் வம்சத்தாரிடமும் விருத்தசேதனம் பண்ணும்படிக் கூறினார்? அதற்கு காரணம் என்னவெனில், கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தப்படி, பாவத்திலிருந்து தம்மை துண்டிப்பவர்கள் மட்டுமே அவரின் மக்களாகமுடியும்.

அதனாலேயே, பழைய ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ரவேல் மக்களிடம் விருத்தசேதனம் செய்யும்படிக்கு அவர் கூறுகிறார். கர்த்தரின் மக்களாக வேண்டுமானால் அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். இது அவரின் கட்டளையாகும். பரிசுத்தத்தின் அஸ்திவாரமாகவும் இருக்கிறது. யாரெல்லாம் விருத்தசேதனம் மூலமாக விசுவாசித்து தம் பாவங்களைத் துண்டித்து போடுகிறார்களோ அவர்களுக்கு அவர் கர்த்தராகிறார். அத்துடன் புதிய ஏற்பாட்டில் விசுவாசத்தினால் பாவத்தை எவனொருவன் துண்டிக்கிறானோ அவனுக்கு அவர் கர்த்தராகிறார்.

பஸ்கா பண்டிகை

  • பஸ்கா என்றால் என்ன?
  • இந்நாள் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதைக் குறித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.

இஸ்ரவேலர்களின் மிக முக்கியமான பண்டிகை பஸ்காவாகும். இந்நாள் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதைக் குறித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் நாளாகும். எகிப்தில் 400வருடங்களாக இஸ்ரவேலர்கள் அடிமைகளாயிருந்தனர். பாரோனின் இதயத்தை அசைக்கும்படியாக கர்த்தர் பத்து கொடிய வாதைகளை கொண்டுவந்தார். இந்தப்படியாகவே கர்த்தர் இஸ்ரவேலர்களை காணான் தேசத்திற்கு வழி நடத்தினார்.

பலியான ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், விருத்த சேதனத்தினாலும், எகிப்திற்கு வந்த கடைசி வாதையான தலைப் பிள்ளைகளின் சாவிலிருந்து இஸ்ரவேல் மக்கள் இரட்சிக்கப்பட்டனர். ஆகவே, கர்த்தர் தம் கிருபையை இஸ்ரவேல் மக்கள் தம் சந்ததியினர் நினைவுகூறும் வகையில் பஸ்காவை அனுசரிக்கும்படி கூறினார்.

பஸ்காவை அனுசரிக்கும் பொருட்டு இஸ்ரவேலர்கள் என்ன செய்ய வேண்டும்?

  • பஸ்காவை அனுசரிக்கும்பொருட்டு இஸ்ரவேலர்கள் என்ன செய்யவேண்டும்?
  • அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.

பஸ்கா பண்டிகையை நாம் ஆவிக்குள் அனுசரிக்க வேண்டுமானால் நமது இதயத்தில் விருத்தசேதனம் செய்ய வேண்டுமென்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவை கொண்டாட வேண்டுமானால் அவர்கள் கூட விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நியப்புத்திரன் ஒருவனும் அதைப்புசிக்கவேண்டாம். பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்த சேதனம் பண்ணின பின், அவன் அதைப்புசிக்கலாம். அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம். அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாமிசத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது. அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. இஸ்ரவேல் சபையாரெல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள். அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்கு பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சார்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்த சேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம். சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.” இப்படியாக அவர் இஸ்ரவேலர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டபின் பஸ்காபண்டிகைய ஆசரிக்கவேண்டும் என்றார்.

யாருக்கு பஸ்காவின் ஆட்டுக்குட்டியின் இறைச்சியை சாப்பிடவும் பஸ்காவை ஆசரிக்கவும் அனுமதியளிக்கப் பட்டிருந்தது? விருத்தசேதனம் பண்ணப் பட்டவர்களால் மட்டுமே பஸ்காவை ஆசரிக்கமுடியும்.

நமக்குத் தெரிந்த பஸ்காவின் ஆட்டுக்குட்டி, உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்த இயேசுகிறிஸ்து ஆவார்.

அப்படியானால் பழைய ஏற்பாட்டினதும், புதிய ஏற்பாட்டினதும் விருத்தசேதனம் என்ன? விருத்தசேதனம் என்பது நுனித்தோலை துண்டித்துவிடுவதாகும். இயேசுகிறிஸ்துவும் கூட இவ்வுலகில் பிறந்த எட்டாவது நாள் விருத்தசேதனம் பண்ணப்பட்டார். கர்த்தர் பஸ்கா பண்டிகையில் பங்கேற்கும் அனைவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் என்று கட்டளையிட்டார். யாரெல்லாம் விருத்தசேதனம் பண்ணப்படவில்லையோ, அவர்கள் பஸ்காவில் பங்கேற்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.

ஆகவே, கர்த்தரின் கட்டளைப்படி எல்லோரும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் புதிய ஏற்பாடு கூறும் விருத்தசேதனத்தின் பொருளை புரிந்துகொள்ளவேண்டும்.

கர்த்தர் ஆபிரகாமிடம் கட்டளையிட்ட விருத்த சேதன முறைமை யாது?

  • ஆபிரகாமும் அவன் சந்ததியினரும் எப்படி கர்த்தரின் பிள்ளைகளாக முடிந்தது?
  • விருத்தசேதனம் பண்ணிக்கொண்டதால்.

ஆதியாகமத்தில் கர்த்தர் ஆபிரகாமிடம் தோன்றி அவனிடமும் அவன் சந்ததியாரிடமும் ஒரு பொருத்தனைச் செய்துக்கொண்டார். 15ஆம் அதிகாரத்தில் கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியினர் வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகுவார்கள் என்றும் அவர்களுக்கு கானான் தேசத்தை சொந்தமாகக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

மேலும் 17ஆம் அதிகாரத்தில், கர்த்தர் ஆபிரகாமிடம் கூறினார். அவனும் அவன் சந்ததியாரும் அவர் பொருத்தனைக்குட்பட்டு விருத்தசேதனம் பண்ணிக்கொண்டால் அவர் அவர்களின் கர்த்தராகவும் அவர்கள் அவரின் மக்களுமாவார்கள். இது ஆபிரகாமுடனும் அவன் சந்ததியாருடனும் கர்த்தர் செய்துக்கொண்ட உடன்படிக்கையாகும். யாரெல்லாம் அவரின் உடன்படிக்கையை நம்பி விருத்தசேதனம் செய்துக் கொள்கிறார்களோ அவர்கள் அவரின் பிள்ளைகளாகவும், அவர் அவர்களின் கர்த்தராகவும் ஆவதாக அவர் உறுதியளித்தார்.

ஆதியாகமம் 17:7-8 கூறுகிறது. “உனக்கும் உனக்குப்பின் வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாய் இருக்கும்படிக்கு எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். நீ பரதேசியாக தங்கி வருகிற கானான் தேசமுழுவதயும், உனக்கும் உனக்குப்பின் வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாய் இருப்பேன் என்றார்.”

விருத்தசேதனம் கர்த்தர் ஆபிரகாமிற்கும் அவன் சந்ததியினருக்கும் செய்த உடன்படிக்கையின் அடையாளமாகும்.

ஆவிக்குரிய விருத்தசேதனம் என்று குறிக்கப் படுவது யாது?

  • ஆவிக்குரிய விருத்தசேதனம் என்றால் என்ன?
  • இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்புவதின் முலம் பாவங்களை இதயத்திலிருந்து துண்டிப்பது.

ஆபிரகாம் தேவவாக்குத்தத்தத்தை நம்பினபடியால் கர்த்தர் அவனை நீதிமானாக்கினார். அவனைத் தன் பிள்ளையும் ஆக்கினார். விருத்தசேதனமே கர்த்தருக்கும் ஆபிரகாமிற்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடையாளமாகும்.

“எனக்கும் உங்களுக்கும், உனக்கு பின் வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.” (ஆதியாகமம் 17:10)

சரீரப்பிரகாரம் விருத்தசேதனம் என்பது நுனித்தோலைத் துண்டிப்பதாகும். ஆவிக்குரிய பிரகாரம் அது இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் நம்புவதன்மூலமாக இயேசுவின் மீது நமது பாவங்களையெல்லாம் சுமத்துவதாகும். இயேசுவின் ஞானஸ்நானத்தின் இரட்சிப்பை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலமாக நமது பாவங்களைத் துண்டிக்கும்போது நாம் ஆவிக்குரிய விருத்தசேதனம் செய்தவர்கள் ஆகிறோம். புதிய ஏற்பாட்டின் விருத்தசேதனம் என்பது இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களைத் துண்டிப்பதாகும்.

ஆகவே, பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனம் என்பது புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களைத் துண்டிப்பதாகும். இது இரண்டுமே கர்த்தரின் உடன்படிக்கைகள். இது நம்மை கர்த்தரின் மக்களாக மாற்றுகிறது. ஆகவே, பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமும் புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானமும் ஒன்றேயாகும்.

தம்முடைய நுனித்தோலினைத் துண்டித்து ஆபிரகாமின் சந்ததியினர் கர்த்தரின் மக்களானது போல நமது இதயத்திலிருந்து பாவங்களைத் துண்டித்துப் போட்டால் நாம் கர்த்தரின் பிள்ளைகள் ஆகிறோம். இயேசு யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெறும்போது அவர் உலகின் பாவங்களையெல்லாம் எடுத்துப்போட்டார் என்பதை நம்புவதன்மூலம் நாம் அவரின் பிள்ளைகளாகிறோம்.

இயேசுவின் ஞானஸ்நானம் பாவிகளின் பாவங்களைத் துண்டித்து அவர்களை நீதிமான்களாக்குகிறது. தோலின் ஒரு பாகம் விருத்தசேதன முறையில் அகற்றப்பட்டதுபோல யோர்தான் நதியில் யோவான் ஸ்நானகன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தபோது மனித குலத்தின் பாவங்கள் அவர்கள் இருதயங்களிலிருந்து துண்டிக்கப்பட்டன. இதனை நம்புகிறவர்கள் ஆவிக்குரிய விருத்தசேதனம் பெற்று அவரின் பிள்ளைகளாகவும், நீதிமான்களாகவும் ஆகிறார்கள்.

கர்த்தரிடமிருந்து மக்களைப் பிரிக்கும் பொய் நம்பிக்கைகள்

  • கர்த்தரிடமிருந்து இஸ்ரவேலரை பிரித்தது என்ன?
  • விருத்தசேதனம் இல்லாமை.

கர்த்தர் ஆபிரகாமிடம் விருத்தசேதனம் பண்ணப்படாதவன் அவன் மக்களிலிருந்து பிரிக்கப்பட வேண்டுமென்றார். அப்படியானால் விருத்தசேதனம் என்பது என்ன? மேலும் ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது என்ன? சரீரப் பிரகாரமான விருத்தசேதனம் என்பது உடலின் ஒரு பாகமாகிய சிறிய தோல் பகுதியை துண்டிப்பதானால்; ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது இயேசுவின் ஞானஸ்நானம் மூலமாக நமது எல்லா பாவங்களையும் இதயத்திலிருந்து துண்டிப்பதாகும்.

மனித குலத்தின் ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது இயேசுவின் ஞானஸ்நானம் ஆகும், இதன் மூலமாக உலகின் பாவங்கள் எல்லாம் நம்மிடமிருந்து துண்டிக்கப்பட்டு இயேசுவின்மீது இடமாற்றம் செய்யப்பட்டது. யோவான் ஸ்நானகனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணம், எல்லா மனிதர்களையும் ஆவிக்குரிய விருத்தசேதனம் பண்ணும்படியாகவும் எல்லா பாவங்களையும் எடுத்துப்போடும்படியுமாகும்.

மனிதரின் எல்லாப் பாவங்களும் இயேசுவின்மீது சுமத்தப்பட்டது. கர்த்தர் ஆபிரகாமின் கர்த்தர் ஆனதால் அவர் ஈசாக்கின் கர்த்தர். யாக்கோபின் தேவன், அவர்களின் சந்ததியாரின் கர்த்தர். அவர் ஆபிரகாமுடனும் அவன் சந்ததியாருடனும் உடன்படிக்கைச் செய்து அவர்களின் நுனித்தோலினை துண்டிக்கச் செய்தார். இப்படியாக அவர் கர்த்தரானார். விருத்தசேதனம் மூலம் தம் பாவங்களைத் துண்டித்த அனைவரின் இரட்சகருமானார்.

கர்த்தர் ஆபிரகாமிடம் பேசினார். “உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்கு கொள்ளப்பட்ட எந்த பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் பணத்திற்கு கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாமிசத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. நுனித்தோலின் மாமிசம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையாய் இருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.” (ஆதியாகமம் 17:12-14)

ஆவிக்குரிய விருத்தசேதனம் இல்லாமல் இயேசுவிடம் வர முயல்பவன் அவன் மக்களிடமிருந்து அறுப்புண்டு போவானாக. ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது புதிய ஏற்பாட்டின்படி இயேசுவின் ஞானஸ்நானமாகும். அதன் மூலமாக உலகின் பாவங்கள் யாவும், இயேசுவின் மீது இடமாற்றம் செய்யப்பட்டது.

யாரொருவன் இயேசுவை நம்புகிறானோ அவன் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தையும் புதிய ஏற்பாட்டின் ஞானஸ்நானத்தையும், அவன் ஆவியில் பெறும் பொருட்டு பாவங்களிலிருந்து இரட்சிக்கப் படும்படியாகவும், கர்த்தரின் பிள்ளைகளாகும்படிக்கும் நம்பவேண்டும். இயேசுவை நாம் விசுவாசிப்பதால் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமும் புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானமும் ஒன்றேயாகும்.

விருத்தசேதனம் என்பதன் சரியான பொருளை நாம் புரிந்துகொள்ளாவிட்டாலோ, மறுபடியும் நம்மைப் பிறக்கச் செய்யும் ஆவிக்குரிய விருத்தசேதனத்தை இதயத்தில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலோ நமது நம்பிக்கை வீன். நாம் கர்த்தரிடத்தில் விசுவாசமாக இருப்பதாக நினைக்கலாம். ஆனால் அது நம் வீட்டை மணலில் கட்டியதுபோலாகும்.

கர்த்தர் தம்மை விசுவாசிப்போர் அனைவரையும் விருத்தசேதனம் பண்ணும்படி கூறுகிறார். ஆவிக்குரிய விருத்தசேதனமாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கிடைக்கும் பாவ மன்னிப்பை நம்பச்சொல்கிறார். விருத்தசேதனமில்லாமல் நாம் அவரின் பிள்ளைகளாக முடியாது. விருத்தசேதனம் இல்லையென்றால் அவரின் மக்களிடமிருந்து துண்டிக்கபடுவோம். ஆகவே, கர்த்தர் அவன் காசுக்காக வாங்கப்பட்டவனோ, அல்லது புதிதாக வந்தவனோ, அவன் பஸ்காவில் பங்கேற்கும் முன்பதாக விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் என்ற முறையை நியமித்தார்.

விருத்தசேதனம் பண்ணப்படவில்லையென்றால், வீட்டில் பிறந்த பிள்ளைகூட தனது மக்களிடமிருந்து பிரிக்கப்படும். கர்த்தர் இஸ்ரவேலரிடம் செய்துகொண்ட இந்த உடன்படிக்கை இயேசுவை நம்பும் எல்லோருக்கும் பொதுவாய் இருக்கிறது.

யாத்திராகமம் 12 -இன் படி பஸ்காவின் இறைச்சியையும் கசப்பான இலையையும் சாப்பிடுவதற்கு முன்பாக இஸ்ரவேல் மக்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாக இருக்கவேண்டியாதாயிருந்தது. பஸ்காவின் மாமிசம், விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களுக்கு மட்டுமான ஒரு உரிமையாக இருந்தது.

நமக்கு முக்கியமாகத் தெரியவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் மக்கள் பஸ்காவின் மாமிசத்தைப் புசித்து ஆட்டிக்குட்டியின் இரத்தத்தை கதவின் நிலைமீதும், வீட்டின் உத்திரங்கள் மீதும் பூசியதன்மூலம் அவர்கள் ஏற்கெனவே விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் என்பதாகும்.

கர்த்தரின் கட்டளைப்படி ஒருவன் விருத்தசேதனம் பண்ணப் படாதவனாக இருந்தால் அவன் ஜனங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, கர்த்தரின் பிள்ளையாகும் உரிமையை இழந்துபோகிறான். இதன்பொருள் ஆவிக்குரிய விருத்தசேதனம் மீது நம்பாத பாவமானது அவர்களை அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது. “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.” (1 பேதுரு 3:21) நீ யோர்தான் நதியில் இயேசுவின் ஞானஸ்நானம் மூலமாக உன்னுடையப் பாவங்கள் மாற்றப்பட்டதை உண்மையில் விசுவாசிக்கிறாயா? நீ உண்மையாகவே இதனைப் புரிந்து சத்தியத்தை நம்புவாயானால், இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் குருதியையும் நம்புவாயானால், நீ ஆவியில் விருத்தசேதனம் அடைந்ததையும், நீதிமானாகியதையும் உணர்வாய். மேலும் ஆவிக்குரிய உண்மையில் உனக்கு நம்பிக்கை ஏற்படும். உனக்கு அவ்வுண்மை சிலுவையில் இயேசு சிந்திய இரத்தம், அவரின் ஞானஸ்நானம் இல்லாது அர்த்தமில்லை என்பது புரியும்.

ஆவிக்குரிய விருத்தசேதனமாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீது நம்பிக்கையில்லாமல் இயேசுவின் சிலுவையை மட்டும் நம்பினீர்களானால், நீங்கள் கர்த்தரின் கிருபையிலிருந்து வெளியேற்றப்பட்டதை அறிவீர்கள். நீங்கள், உங்கள் இருதயத்தில் இன்னும் பாவமிருப்பதை உணர்வீர்கள்.

கர்த்தர் நமக்கருளிய பாவமன்னிப்பு இயேசுவின் ஞானஸ்நானத்தில் தொடங்கியதையும் அது அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தில் முடிவடைந்ததுமான சத்தியத்தை நாம் விசுவாசிக்கவேண்டும். இப்படிச் செய்வதற்கு கர்த்தருடைய வார்த்தைகளை, இயேசுவின் ஞானஸ்நானத்தை, அவரின் குருதியை இரட்சிப்பாக நமது இதயத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும்.

இந்நம்பிக்கை மூலமாக இருளின் வல்லமையிலிருந்து விடுதலையாகி ஒளியின் பிள்ளைகளாக முடியும். இந்த ஆவிக்குரிய நம்பிக்கை உண்மையில் மறுபடியும் பிறந்தவர்களை சாதாரண விசுவாசிகளிடமிருந்து பிரிக்கிறது.

நம் கர்த்தர் இயேசு நம்மிடம், தம்மைச் சார்ந்திருக்கும்படி கூறினார். அவர் தம் ஞானஸ்நானம் மூலமும் அவரின் குருதியினாலும் இவ்வுலகின் பாவங்களையெல்லாம் கழுவிவிட்டார்.

ஆகவே கர்த்தரின் பிள்ளைகளானோம் என்பதற்கு அடையாளமாக இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் நம்பவேண்டும். நாம் அப்படிச் செய்யவில்லை என்றால் அவரிலிருந்து துண்டிக்கப்படுவோம்.

பாவத்திலிருந்து இரட்சிப்பு என்பது புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தையும் தவிர வேறில்லை. இரட்சிப்பு எப்போது முழுமையடைகிறதென்றால் நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் (ஆவிக்குரிய விருத்தசேதனம்) அவரின் சிலுவை இரத்தத்தை (பஸ்காவின் ஆட்டுக்குட்டியின் இரத்தம்) நம்புவதாலும் முழுமையடைகிறது.

பழைய ஏற்பாட்டில் உள்ள சரீர விருத்தசேதனமானது புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானத்துடன் தொடர்புடையது ஏசாயா 34:16 வேதாமத்திலுள்ள எல்லா வார்த்தைகளுக்கும் ஜோடியிருக்கிறது என்று கூறுகிறது. “கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.”

பழைய ஏற்பாட்டிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் புதிய ஏற்பாட்டுடன் இனைக்கப் பட்டவை. ஒரு வார்த்தையும் அதன் ஜோடியிலிருந்து குறைவுப் படாது.

தவறான வழிகளில் முட்டாள் தனமாக நம்புவோரின் கதி என்ன?

  • விசுவாசிகளுடன் யாரெல்லாம் நரகத்திற்குப் போவார்கள்?
  • ஆவிக்குரிய விருத்தசேதனத்தை நம்பாதவர்கள்.

இந்நாட்களில் பலர் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் மீது மட்டும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கேட்கிறார்கள். “விருத்தசேதனம் என்பதன் பொருள் யாது? அது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்களிடம் மட்டும் செயல்படுத்தப்பட்டது. புதிய ஏற்பாட்டின் இக்காலத்தில் நாம் நமது நுனித்தோலை துண்டிக்க தேவையில்லை.”

இது உண்மையாகும், நான் சரீர பிரகாரமாக விருத்தசேதனமடைய வேண்டுமென்று ஆலோசனைக் கூறவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் ஆவிக்குரிய விருத்தசேதனத்தை குறித்து தெளிவாகக் கூறுகிறார். நான் இப்போது குறிப்பிடுவது இருதயத்தின் விருத்தசேதனமாகும்.

நான் உங்களை சரீர பிரகாரமாக விருத்தசேதனம் செய்யும்படிக் கூறவில்லை. சரீர விருத்தசேதனம் நமக்கு அர்த்தமில்லாதது. நமக்கு நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிப்புண்டாகும்படி இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் ஆவிக்குரிய விருத்தசேதனம் பெரும்பொருட்டு இயேசுவிடம் வரவேண்டும்.

யாரெல்லாம் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர் ஆவியின் விருத்தசேதனம் பெறவேண்டும். அதுவே நம் பாவங்களை அகற்றும் ஒரே வழி. நாம் நீதிமான்களாகும் ஒரே வழி. ஆவிக்குரிய விருத்தசேதனத்திற்குப் பிறகு தான் நாம் முற்றிலும் பாவமற்றவர்களாவோம். ஆகவே இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்புவதன் மூலம் ஆவிக்குரிய விருத்தசேதனம் கிடைப்பதை நம் இதயத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஆவிக்குரிய விருத்தசேதனத்தின் முக்கியத்தை அப்போஸ்தலராகிய பவுல் நம்பினார். அவர் கூறினார் “இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம் (ரோமர் 2:29) பாவமின்றி நாமிருக்க வேண்டுமானால் நாம் ஆவிக்குரிய விருத்தசேதனம் அடைந்தவர்களாதல் வேண்டும்.

உன்னில் துண்டிக்கப்பட்ட பாவங்கள் நிச்சயமாக இயேசுவிடம் இடமாற்றம் செய்யப்பட்டதா? புதிய ஏற்பாட்டில் கூட இயேசுவை விசுவாசிப்பவர்கள், இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்புவதன் மூலமாக ஆவிக்குரிய விருத்தசேதனம் பெறவேண்டும்.

இதனைத் தன் நிருபங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவுப்படுத்துகிறார். கர்த்தர் எல்லா மனிதர்களையும் இவ்வுலகின் பாவங்களிலிருந்து இரட்சித்தார், அவர்களை அவரின் மக்களாக்கினார். இஸ்ரவேல் மக்கள் நுனித்தோலை அகற்றியதன் மூலம் கர்த்தரின் மக்களானார்கள். இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்பி நமது பாவங்களை இயேசுவின் மீது சுமத்தியதால் நாம் அவரின் பிள்ளைகளானோம்.

கர்த்தர், நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீதும் இயேசுவின் சிலுவை இரத்தம் மீதும் விசுவாசிப்பதைக் காணும்போது அவரின் மக்களாக ஏற்கிறார். இந்நம்பிக்கை நம்மை ஆவிக்குரிய விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாக மட்டுமின்றி நமது இரட்சிப்புக்கும் வழி நடத்துகிறது.

இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் குருதிமூலம் பாவிகளுக்கு இரட்சிப்புண்டு

  • இயேசுவால் இரட்சிப்பு எப்படி முழுமைப்படுத்தப்பட்டது?
  • அவருடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவை மரணம் மூலமாக.

இயேசுவின் ஞானஸ்நான நீரினாலும், அவரின் சிலுவை இரத்தத்தினாலும் பாவிகளுக்காக இரட்சிப்பை பூர்த்தியாக்கினார். ஆட்டுக்குட்டியின் இரத்தம் தீர்ப்பாகவும், இயேசுவின் ஞானஸ்நானம் ஆவிக்குரிய விருத்தசேதனமும் நம் பாவங்களை அவரின் மீது இடமாற்றம் செய்வித்ததுமாகும்.

இன்றைய கிறிஸ்தவ ஆலயங்கள் ஆவிக்குரிய விருத்தசேதனத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனம் நமக்கு முக்கியமானதாக இல்லா விட்டாலும் இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் அசட்டை செய்யக்கூடாது.

நான் உஙகளிடம், உங்கள் பாவங்கள் எல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் எடுத்துப் போடப்பட்டன என்று கூறினேன். இயேசுவின் ஞானஸ்நானம் உங்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் உங்களை இரட்சித்தது; இதனை நம்புகிறீர்களா? நீங்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை அசட்டை செய்தால் மறுபடியும் பிறத்தலான நற்செய்தி உங்களுக்கு எப்போதும் தெரியாது, அதுவே இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கிட்டிய நற்செய்தியாகிய முழு பாவ விடுதலையாகும்.

கர்த்தர் கூறும் ஆவிக்குரிய விருத்தசேதனமாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் எப்படி அசட்டைப் பண்ணலாம்? நாம் வேதாகமத்தை வாசித்தால், விருத்தசேதனமும், பஸ்கா ஆட்டுக்குட்டியும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது தெரியும். இயேசுவின் ஞானஸ்நானம் - இதுவே ஆவிக்குரிய விருத்தசேதனத்தின் இரகசியம் ஆகும்.

அப்போஸ்தலனாகிய யோவான் பிரசங்கித்த நற்செய்தியானது, இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் குறித்த நற்செய்தி தவிர வேறில்லை. 1 யோவான் 5:6 இல் அவர் கூறுகிறார். “இயேசு கிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்”.

இயேசு நீரினாலும், இரத்தத்தினாலும், ஆவியாலும் வந்ததாக அவர் கூறினார். நீரில் மட்டுமல்ல, இரத்தத்தில் மட்டுமல்ல, நீர், இரத்தம், ஆவி அனைத்திலும் வந்தவர். இம்மூன்று தனி காரியங்களும் நம்முடைய இரட்சிப்பிற்கான அத்தாட்சியாகும். அவையாவன இயேசுவின் ஞானஸ்நானம், இயேசுவின் சிலுவை இரத்தம், அவரின் உயிர்த்தெழுதல், இம்மூன்றும் ஒன்றே.

வேதாகமம் ஏன் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் குறித்துப் பேசுகிறது?

  • பஸ்கா பண்டிகையின்போது ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் மட்டுமா இஸ்ரவேல் ஜங்கள் இரட்சிக்கப்பட்டார்கள்?
  • இல்லை. பஸ்காவை ஆசரிக்கும் முன்பே அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தார்கள்.

நம்மை நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கச்செய்வது இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் குருதியுமாகும். யாத்திராகமம் 12-ஆம் அதிகாரம் கூறுகிறது “அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப்புசிக்கும் வீட்டு வாசல் நிலைகால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்.”

இதனைத் தெரிந்த பிறகும், பஸ்காவின் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை பட்டும் நாம் நம்பினால் நாம் இரட்சிக்கப்படுவோம் என்று கூறுவோமா? அப்படியானால் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானத்திற்கு அத்தனை முக்கியத்துவம் ஏன்? அப்போஸ்தலர்கள் கூறினார்கள். “ஞானஸ்நானத்தினாலே அவரோடே கூட அடக்கம் பண்ணப் பட்டவர்களாகவும் (கொலோசெயர் 2:12) “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப்பேரோ, அத்தனைப்பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே (கலாத்தியர் 3:27) ...அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது (1 பேதுரு 3: 21)

அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் பவுலும், மற்றும் எல்லா சீடர்களும் இயேசுவின் ஞானஸ்நானம் குறித்து சொல்லியுள்ளார்கள். யோர்தான் நதியில் இயேசு ஞானஸ்நானம் பெற்றதையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறத்தலுக்கான உண்மை என்னவெனில் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தை விசுவாசிப்பதே.

உங்களிடம் உண்மையைக் கூற வேண்டுமானால், நான் இயேசுவை விசுவாசித்தேன், ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அவரின் இரத்தத்தை மட்டும் நம்பினேன். அவரின் ஞானஸ்நானத்திற்கு ஒப்புதல் கூட அளிக்கவில்லை. இந்த அறிவு என் இதயத்தில் இருந்த பாவங்களை எடுத்துப்போடவில்லை. நான் இயேசுவை எனது முழு இதயத்துடனும் நம்பினேன், ஆனால் எனது இதயமுழுவதிலும் பாவம் நிறைந்திருந்தது.

10 ஆண்டுகளுக்குப் பின் ஆவிக்குரிய விருத்தசேதனத்தைக் (இயேசுவின் ஞானஸ்நானம்) கண்டுபிடித்தேன். நான் மறுபடியும் பிறந்தேன். அப்பொழுது ஒரு உண்மை எனக்குப் புலனானது. பழைய ஏற்பாட்டு விருத்தசேதனம் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானத்தை ஒத்திருக்கிறது, இதனை நம்பினேன் இன்னும் நம்புகிறேன்.

புதிய ஏற்பாட்டின் படி இயேசுவின் இரத்தம் அவர் ஞானஸ்நானம் இவை இரண்டையும் விசுவாசிப்பது சரிதானா? என்னுடைய நம்பிக்கை வேதாகமத்தைப் பொருத்தவரை சரியானது தானா?” நான் மறுபடியும் பிறந்ததும், இக்காரியங்களைக் குறித்து அதிசயித்தேன்.

நான் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றின் செய்தியை விசுவாசித்தாலும், கேள்விகள் என் மனதில் அப்படியே இருந்தன. “இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது என்னுடைய எல்லாப் பாவங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதா? இல்லை, இயேசுவின் சிலுவை மரணம் என்னை என் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்ததா? இயேசுவை என் கர்த்தரென்றும், இரட்சகர் என்றும் மட்டும் நம்பினால் போதாதா?” யாத்திராகமம் 12 ஆம் அதிகரத்தைப் படிக்கும்போது இவை மனதில் இடித்தன.

நிறைய மனிதர்கள் யாத்திராகமம் 12 ஆம் அதிகாரத்தை இந்நாட்களில் படித்திருந்த போதிலும், இயேசுகிறிஸ்து சிலுவையில் தமது இரட்சகராக மரித்தார் என்று அறிக்கைச் செய்யும்போது இரண்டாம் முறை சிந்திப்பதில்லை. அவர்கள் இரத்தத்தில் விசுவாசம் வைப்பது சரியென்றெண்ணி, அவர்கள் கண்ட உண்மையைச் சாட்சி பகருகிறார்கள். அவர்கள் மிக உறுதியான நம்பிக்கையுடன் இயேசுவே கர்த்தர், கர்த்தரின் குமாரன் என்று கூறலாம். ஆனால் அவர்கள் இன்னமும் பாவிகளே. அவர்கள் இயேசுகிறிஸ்துவை இரட்சகராக நம்பினால் அவர்களின் இதயத்தில் இன்னமும் பாவமிருந்தாலும் கூட இரட்சிக்கப்படுவோம் என்று எண்ணுகிறார்கள்.

இத்தகைய விசுவாசம் உண்மையான விசுவாசமில்லை. இந்த நம்பிக்கை மட்டும் மறுபடியும் பிறக்க உதவாது. இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் நம்மை நீதிமான்களாக்குகின்றன.

அப்படியானால் யாத்திராகமம் 12ஆம் அதிகாரம் என்ன கருத்தைக் கூறுகிறது? நாம் “இயேசுவினுடைய இரத்தத்தை மட்டும் விசுவாசித்து அவருடைய ஞானஸ்நானத்தை அசட்டை செய்வதனால் எதுவும் பிரச்சினை இருக்கிறதா என்று நினைத்து வேதாகமத்தை உற்று நோக்கினேன். யாத்திராகமத்தை படித்து முடிக்கும் முன்பே நான் உண்மையைக் கண்டு பிடித்தேன். அவ்வுண்மையானது இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமல்ல அவரின் ஞானஸ்நானத்தினாலும் வருகிறது. வேதாகமத்தின் மூலம் நாம் நமது இதயத்தில் இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலமும் அவர் இரத்தத்தினாலும் விருத்தசேதனம் செய்யப்பட்டதற்கான உறுதிமொழி கிடைத்தது.

¿¢¨È ¸¢È¢Š¾Å÷¸û þýÛõ À¡Å¢¸Ç¡ö þÕôÀ§¾ý?

«Å÷¸û þýÛõ þ§ÂÍÅ¢ý »¡ÉŠ¿¡Éò¨¾ Å¢ÍÅ¡º¢ì¸¡¾¾¡ø.

யாத்திராகமம் 12:47-49 இல் இருந்து நான் ஒருவன் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தால் மட்டுமே பஸ்காவின் இறைச்சியைச் சாப்பிட அனுமதிக்கப்பட்டான் என்பதை அறிந்தேன். இக்காரணம் பற்றி கர்த்தர் 49 ஆம் வசனத்தில் “சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.”

ஆகவே விருத்தசேதனம் செய்யப்படாதோர் பஸ்காவின் இறைச்சியை சாப்பிடக்கூடாததாக இருந்தது. இந்த உண்மையை நான் கண்டறிந்தேன், அப்படியே இயேசுவை நமது இரட்சகராக விசுவாசிக்கும்போது, யோர்தானில் இயேசுவின் ஞானஸ்நானத்தின் போது நமது பாவங்களெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்ட சம்பவத்தையும் அதன் பிறகு அந்தப் பாவங்களுக்காக இயேசுகிறிஸ்து சிலுவையில் மறித்தார் என்பதையும் விசுவாசிக்க வேண்டும்.

இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டதால் நியாயம் தீர்க்கும்பொருட்டு அவர் சிலுவையில் மரித்தார் என்பதை அறிந்துகொண்டபோது, இவ்வுலகின் எல்லா பாவங்களிலிருந்தும், எல்லா மீறுதல்களிலிருந்தும் ஆவிக்குரிய விருத்தசேதனம் இரட்சித்தது என்பதையும் அறிந்துகொண்டேன்.

அந்த நொடிப்பொழுதில், என்னுடைய எல்லா பாவங்களும் போய்விட்டன என்பதை உணர்ந்தேன். எனது மனம் பனியைப்போல் வெண்மையாயிற்று. நான் இறுதியாக எனது இதயத்திற்குள் நீர், இரத்தம் மற்றும் ஆவியைப்பற்றிய நற்செய்தியை எடுத்துச்சென்றேன்.

இரண்டு காரியங்கள் நம்மை இரட்சிப்பதை உணர்ந்தேன். பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனமும் ஆட்டுகுட்டியின் இரத்தமும்; புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அனைத்துப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதும், அவரின் சிலுவையின் இரத்தமும் நம்மை இரட்சிக்கின்றன. பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமும் புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானமும் உண்மையில் ஒன்றே.

இயேசுகிறிஸ்து தாம் எந்த பாவமும் செய்ததற்காக நியாயம் தீர்க்கப்படவில்லை. ஆனால் அவர் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் சகலப் பாவங்களையும் தம்மீது ஏற்றுக் கொண்டார். யாரெல்லாம் மனிதர்களின் பிரதிநிதியாகிய, யோவான் ஸ்நானகன் இயேசுவிடம் உலகின் பாவங்களையெல்லாம் சுமத்தி ஞானஸ்நானம் கொடுத்தான் என்பதை நம்புகிறார்களோ அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றையும் விசுவாசிக்கவேண்டும்.

வேதாகமத்தில் பல முறை இயேசுவின் ஞானஸ்நானத்தைப்பற்றிக் கூறப்பட்டிருந்தாலும் நிறைய மனிதர்கள் அதை ஏன் மறுக்கிறார்கள்? அப்படிச் செய்வதனால் அவர்கள் இயேசுவை விசுவாசித்தால் கூட இன்னமும் பாவிகளே. அவர்கள் இயேசுவை விசுவாசிக்கலாம் ஆயினும் அவகள் கர்த்தரிடமிருந்து துண்டிக்கப்படுவர். அவர்கள் இரங்கத்தக்கவர்கள், அவர்கள் இயேசுவை விசுவாசித்தாலும் கூட நரகத்திற்குத்தான் போவர்.

இயேசுவை விசுவாசித்தால் அவர்கள் எப்படி பாவியாக இருக்கமுடியும்? அவர்கள் ஏன் பாவியாக ஜீவிக்கிறார்கள்? அவர்கள் ஏன் அழிவின் பாதையில் நடக்கிறார்கள்? இது மிகவும் இரங்கத்தக்க நிலை. அவர்கள் தொடர்ந்து பாவிகளாகவே இருப்பர். ஏனெனில், அவர்கள் இயேசுவின் மீது உலகின் எல்லாப் பாவங்களும் சுமத்தப்பட்டுவிட்டன என்ற உண்மையை நம்புவதில்லை. இயேசு தம் ஆவிக்குரிய ஞானஸ்நானத்தின் மூலம் நிரந்தர இரட்சிப்பை எல்லா மக்களுக்கும் எடுத்து வந்தார்.

மக்கள் இயேசுவின் இரத்தத்தை நம்புவதன் மூலமாக பாவ மன்னிப்பு பெறலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அத்தகைய நம்பிக்கை அவர்களை முழுமையாக்காது. அது ஏன்? அது ஏனெனில் அவர்கள் தம் பாவத்தை இயேசுவின் மீது சுமத்த தவறியதேயாகும்!

கர்த்தருடைய நியமனப்படி நீரையும் (இயேசுவின் ஞானஸ்நானம்) அவரின் இரத்தத்தையும் நம்பினால் நாம் இரட்சிக்கப்படுவோம். அது ஆவிக்குரிய விருத்தசேதனம் அளிக்கும் இரட்சிப்பாகும். அப்பொழுது, அப்பொழுது மட்டுமே நாம் கர்த்தரின் உண்மை பிள்ளைகளாக முடியும்.

நாம் நம்மையே கேட்கவேண்டும். நாம் இயேசுவின் இரத்தத்தை மட்டும் ஆவிக்குரிய விருத்தசேதனமாக நம்பினால், நமது பாவங்களெல்லாம் முழுவதும் கழுவப்படுமா? இதற்கு பதில் காண இதயத்தை மிக ஆழமாக பார்க்கவேண்டும்.

நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலமும், அவரின் சிலுவை இரத்தத்தின் மூலமும் இரட்சிப்பை வெற்றியாகப்பெற்றதுபோல, பழைய ஏற்பாட்டு காலத்திலே விருத்தசேதனம் மூலமும், பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலமும் மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இப்படியாக கர்த்தரின் நியாயத்தீர்ப்பினின்றும், பாவ உலகிலிருந்தும் நாம் இரட்சிக்கப்பட்டோம். இதனை நம்புகிறவர்கள் கர்த்தரின் பிள்ளைகளாவார்கள், கர்த்தர் அவர்களின் தந்தையாவார்.

ஒருவன் இந்த இரண்டு காரியங்களை நம்புவதன் மூலம் இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் உடமையாகிறான். அவை விருத்தசேதனமும் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தமுமாகும். அதாவது இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமுமாகும். இயேசுவை பொருத்தவரை இதுவே உண்மையாகும். இதுவே நீர், இரத்தம், ஆவியினால் மறுபடியும் பிறத்தலின் உண்மைப்பொருளாகும்.

வேதாகமம் கூறும் நீரினாலும் ஆவியாலும் கிடைக்கும் பாவ விடுதலை யாது?

  • இயேசுவின் குருதியை மட்டும் நம்பிபாவிகள் நீதிமான்களாக முடியுமா?
  • முடியாது.

இயேசு தம்முடைய சிம்மாசனத்தைவிட்டு இவ்வுலகத்திற்கு இறங்கி வந்தார். இவ்வுலகின் எல்லா பாவங்களையும் சுமந்து தீர்க்கும்பொருட்டு தமது 30ஆம் வயதில் யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார்.

இயேசுவின் சிலுவை இரத்தம் உலகிலுள்ள பாவிகள் செய்த பாவங்களுக்கான கிரயமாகும். இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு இரட்சகராக வந்தார். நீராலும் இரத்தத்தாலும் எல்லா பாவிகளையும் அவர்கள் பாவத்திலிருந்து இரட்சித்தார்.

நாம் இரத்தத்தினால் மட்டுமா மறுபடியும் பிறந்தோம்? இல்லை. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலமாக நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டோம். இயேசுவின் இரத்தத்தை மட்டும் நம்புகிறவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பிகிறேன். “இயேசுவின் இரத்தத்தை மட்டும் நம்பி பாவிகள் நீதிமான்களாக முடியுமா அல்லது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தத்தினால் நீதிமான்களாகிறோமா? இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் நமது பாவங்களை அவரில் சுமத்தியதையும் அவரின் இரத்தத்தையும் நம்புவதாலா? அல்லது அவரின் இரத்தத்தை மட்டும் நம்புவதாலா? எது உண்மை? நான் உங்களைக் கேட்கிறேன். ”

நீராலும் ஆவியாலும் உண்மையாக மறுபடியும் பிறக்க கீழ்க் கண்டவற்றை பூர்த்திச் செய்ய வேண்டும். நாம் இயேசு உலகிற்கு மாமிசமாக வந்தார் என்று நம்பவேண்டும், யோர்தானில் அவரின் ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொண்டார், சிலுவையில் நமது பாவங்களுக்காக நியாயம் தீர்க்கப்பட்டார். இயேசுவை, நமது உண்மையான இரட்சகரை, இந்த வழியில் விசுவாசித்தால் நாம் உண்மையில் மறுபடி பிறக்கமுடியும்.

உங்களை மறுபடியும் கேட்கிறேன். வேதாகமம் நம்பிக்கையை எவ்வாறு வரையறுக்கிறது? இயேசுவின் இரத்தத்தை நம்புவதா? அல்லது இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் இவை இரண்டையும் நம்புவதா?

இயேசுவின் இரத்தத்தின்மீது வைக்கும் நம்பிக்கை கீழ்க்கண்டவாறு. இயேசு இவ்வுலகின் எல்லா பாவங்களுக்கும் தீர்க்கப்பட்டு ஆக்கினையடைந்தார். நம்முடைய பாவங்களினிமித்தம் அவர் நசுக்கப்பட்டு காயமடைந்ததால் நாம் கடும் தீர்ப்பிலிருந்து தப்பினோம். ஆனால் அது முழுமையான உண்மையல்ல. இந்தக் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ளுமுன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தவேண்டும். இயேசு ஏன் சிலுவையில் அறையப்படவேண்டும்?

வேதாகமம் மிகத்தெளிவாக, பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறுகிறது. இயேசு இவ்வுலகில் எந்தப் பாவங்களையும் செய்யவில்லை. மரியாளின் சரீர மூலமாக மனித மாமிசமாக அவர் வந்தார். ஆனால் அவர் பரிசுத்த தேவனின் மைந்தனாகவும், பாவிகளின் இரட்சகராகவும் மனித உருவத்தில் வந்தார். அதனாலேயே சிலுவையில் மரிக்கும் முன்பாக யோவான் ஸ்நானகனால் அவர் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டார். அவர் ஞானஸ்நானம் பெற்றபோது நம்முடைய எல்லா பாவங்களையும் தம்மீது ஏற்றுகொண்டார். ஆகவே இந்த ஞானஸ்நானம் இல்லையென்றால் சிலுவையில் இரத்தம் சிந்துவதற்கான ஆக்கினையை அவர் பெற்றிருக்க மாட்டார்.

பழைய ஏற்பாட்டின் பலியிடும் முறைமை

  • பலி செலுத்துவதற்கான தவிர்க்க முடியாத நியதிகள் என்ன?
    • (1) கலங்கமில்லாத உயிருள்ள ஒரு மிருகம்.
  • (2) பலியின் தலையில் கை வைத்தல்.
  • (3) அதன் குருதி

பரிசுத்த ஆசரிப்புக்கூடாரத்தின் பலி செலுத்தும் முறையின் மூலமாக உண்மையைப் பார்ப்போம். பழைய ஏற்பாட்டின்படி ஒருவனின் பாவத்தை இடமாற்றவோ, இஸ்ரவேலின் பாவத்தை இடமாற்றவோ அப்பாவியோ அல்லது தலைமையாசரியனோ பலியாட்டுக்குட்டியின் தலைமீது கைவைத்தனர். இக்காணிக்கைகள் கொல்லப்பட்டு பலிபீடம் முன்பாக காணிக்கையாக படைக்கப்பட்டன. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் முன்னோடியாகும், மேலும் இயேசுகிறிஸ்துவே கர்த்தர் அனுப்புவதாக உறுதியளித்த பலியாகிய ஆட்டுக்குட்டியானவர்.

நீங்கள் எல்லாம் எப்பொழுது உங்கள் பாவங்களையெல்லாம் இயேசுவின் மீது சுமத்தினீர்கள்? இதனைக் குறித்து சிந்தித்து எனக்கு பதிலளிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் பலி மிருகங்களின் தலை மீது கை வைக்காமல் இஸ்ரவேலர்கள் அதனைக் கொல்லக்கூடாததாக இருந்தது. (தலையில் கை வைப்பது என்பதன் பொருள், பலி மிருகத்தின் மீது பாவத்தை சுமத்துவது என்பதாகும்) பலிபீடத்திற்கு முன்பாக பலி காணிக்கை அழைத்து வரப்படும் முன்பு, பாவங்களை பலி மிருகங்களின் மீது சுமத்தும் பொருட்டு அதன் தலை மீது கை வைக்கும் சம்பவம் நடைபெற்றிருந்தது.

அது தன் பாவ நிவர்த்திக்கென்று அங்கீகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின் மேல் வைத்து (லேவியராகமம் 1:4) லேவியராகமத்தில் எல்லாப் பாவிகளின் மீதும் கைகளை வைப்பது தேவையென்று எழுதப் பட்டுள்ளது. பலியின் மீது தம் கையை வைப்பதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் தம் பாவங்களை அதன் மீது சுமத்தவும், கர்த்தர் முன் நம்பிக்கையுடன் அதன் இரத்தத்தையும் சதையையும் காணிக்கையாக்கியதால் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்படைய முடிந்தது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் கூட இஸ்ரவேலர்கள் நம்பிக்கையினால் இரட்சிக்கப்பட்டனர்.

கர்த்தரின் முன்பாக சர்வாங்கத் தகனப் பலியை ஏறெடுக்கும்போது, பாவி ஒருவன் தன் பாவம் அப்பலியிடம் செல்வதற்கேதுவாக அதன் தலைமீது தன் கையை வைக்கவேண்டும். அப்பலிக் காணிக்கை அப்பாவியின் சார்பாக கொல்லப்படுகிறது. அதன் குருதியானது பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் உள்ள கொம்புகளில் ஊற்றப் படுகிறது. மீதி இரத்தம் பலி பீடத்தைச் சுற்றிலும் உள்ளத் தரையில் ஊற்றப்படுகிறது. பாவிகள் இந்தப்படியே பாவ விடுதலை அடைந்தனர்.

புதிய ஏற்பாட்டின் படி நீர் மற்றும் இயேசுவின் இரத்தத்தை நம்புவதன் மூலமாக பாவிகள் அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெற முடியும். 1யோவான் 5:1-10 இவ்வாறு கூறுகிறது. ஒரு பாவி இயேசுவின் ஞானஸ்நானத்தையும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தையும் (சிலுவை) நம்பும்பொழுது அவன் பாவ விடுதலையடைகிறான்.

ஆகவே, எந்தப் பாவியும் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் இவை இரண்டையும் விசுவாசித்துகொண்டிக்கும்வரையில் பாவ விடுதலைப் பெறுவான்.

நீராலும் ஆவியாலும் பறுபடியும் பிறப்பதற்கு, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய இரண்டும் பரிசுத்த ஆவியுடன் சேர்ந்து ஒரு பிரிக்கமுடியாத காரணியாக அமைகிறது.

அன்பானவர்களே, உங்களால் இயேசுவின் இரத்தத்தை மட்டும் விசுவாசித்து பாவ விடுதலைப் பெற முடியுமா? யாரெல்லாம் இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டும் விசுவாசித்து மறுபடியும் பிறக்கமுடியும் என்கிறார்களோ அவர்கள் இதயத்தில் பாவம் இன்னமும் இருக்கிறது. ஆயினும் இயேசுவின் ஞானஸ்நானத்தை புதிய ஏற்பாட்டின் ஆவிக்குரிய விருத்தசேதனமாக நம்பினால் நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவோம். இயேசுவின் ஞானஸ்நானம் பழைய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள விருத்தசேதனத்திற்கு ஒப்பாகும்.

எல்லாப் பிரிவுகளிலும் அதற்குரிய கொள்கைகள் இருக்கின்றன. அவர்கள் தம் போலியான விசுவாசத்தை விட்டொழிக்காவிட்டால் நரகத்திற்கு போகும்படிக்கு நாசமாவார்கள். பிரஸ்பைட்டியன் சபை முற்குறிக்கப்படுதல் என்ற கொள்கையுடையது. மெதடிஸ்ட் சபை அர்மீனியக் (மனிதாபிமானம்) கொள்கையை வலியுறுத்துகிறது, பாப்டிஸ்ட் சபை ஞானஸ்நானக் கொள்கையையும் ஹோலினஸ் சபை, புனித வாழ்க்கையையும் வலியுறுத்துகின்றன. இவையெல்லாம் சத்தியவாக்கிலிருந்து விலகிச் சென்றவை.

மறுபடியும் பிறத்தலைக்குறித்து வேதாகமத்தின் சத்திய வார்த்தை என்ன கூறுகிறது? வேதம் இயேசுவின் ஞானஸ்நானத்திலும் அவரின் இரத்தத்திலும் உண்மைக் காணப்படுவதாக கூறுகிறது. யாரெல்லாம் வேதவாக்கினை விசுவாசித்து அதனைப் பின் பற்றுகிறார்களோ, யாரெல்லாம் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பதைக் குறித்து விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாவ விடுதலையைக் கண்டடைவார்கள்.

இயேசுவின் ஞானஸ்நான இரகசியம் என்ன?

  • புதிய ஏற்பாடு கூறும் ஆவிக்குரிய விருத்தசேதனம் என்ன?
  • இயேசுவின் ஞானஸ்நானம்.

இயேசுவின் ஞானஸ்நானம் ஆவிக்குரிய விருத்தசேதனமாகும். பழைய ஏற்பாட்டில் யாரேனும் விருத்தசேதனம் பண்ணப்படாதவனாக இருந்தால் அவன் தன் மக்களிலிருந்து துண்டிக்கப்படவேண்டுமென்று கர்த்தர் கூறினார்.

புதிய ஏற்பாடு கூறும் ஆவிக்குரிய விருத்தசேதனம் இயேசுவின் ஞானஸ்நானமாகும். நாம் இதனைப் புரிந்து கொண்டு நம்பவேண்டும். இயேசுவின் பொதுவான பிரசங்க ஆரம்பக்காலத்தில் யோவான் ஸ்நானகனால் அவர் ஞானஸ்நானம் பெற்றதால், அவரின் ஞானஸ்நானத்தை நம்புவதன் மூலம் நாம் ஆவிக்குரிய விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் ஆகலாம். நாம் ஏன் இயேசுவானவர் யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதற்கான காரணங்களை கவனமாக ஆராயவேண்டும்.

“அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாய் இருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா? என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடம் கொடுத்தான்.” (மத்தேயு 3:13-15)

மரண நதியான யோர்தானில் யோவான் ஸ்நானகனால் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது. யோவான் ஸ்நானகனால் இயேசுவின் தலைமீது கைவைக்கப்பட்டு அவர் முழுவதுமாக நீரினுள் ஆழ்த்தப்பட்டார். இதுவே ஞானஸ்நான முறைகளில் மிகவும் சரியானதாகும். (ஞானஸ்நானம்: நீரினுள் அமிழ்த்தப்படுதல்) உலகின் பாவங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் வகையாக, பழைய ஏற்பாட்டில் கூறியுள்ளபடி அவர் தலை மீது கைவைக்கப்பட்டு, அம்முறையால் அவர் ஞானஸ்நானம் பெறவேண்டியதாய் இருந்தது. இயேசுவை நம்புவோருக்கு இயேசுவின் ஞானஸ்நானமே ஆவிக்குரிய விருத்தசேதனமாகும். “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடம் கொடுத்தான்.” (மத்தேயு 3:15) இயேசு இவ்வுலகின் பாவங்களை எடுத்துப்போட்டு நமது கர்த்தராகவும், இரட்சகருமாக இருப்பது மிகவும் பொருத்தமாகும். ஆகவே நம்முடைய எல்லாப் பாவங்களையும் தம் தலைமீது கொண்டு சிலுவையில் மரித்தார் என்று எழுதப்பட்டிருப்பதும் பொருத்தமாகும்.

எல்லாப் பாவிகளையும் மறுபடியும் பிறக்கச்செய்யும் வல்லமை இயேசுவின் ஞானஸ்நானத்தில் இருக்கிறது. இதுவே நீர் மற்றும் ஆவியானவர் குறித்த நற்செய்தியின் இரகசியமாகும்.

அவர் தம்முடைய பொது வாழ்க்கையில் பாவிகளை அவர்களின் சகல பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும்பொருட்டு, யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார். ஞானஸ்நானம் என்பதற்கு “கழுவப்படுதல், அடக்கம் பண்ணபடுதல், மாற்றப்படுதல்” என்ற அர்த்தங்கள் உள்ளன.

கர்த்தர் கேட்டபடி ஞானஸ்நானம் பெற்றதால் இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது சுமந்தார். “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்திட தேவ ஆட்டுக்குட்டி.” (யோவான் 1:29) இயேசுவின் ஞானஸ்நானத்தின் பொருள் யாதென்றால், யாரெல்லாம் அவரை நம்புகிறார்களோ அவ்வுலக மக்கள் ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெறுகிறார்கள்.

உலகின் அனைத்துப் பாவங்களையும் சுமந்த தேவாட்டுக்குட்டியானவர் சிலுவைக்குச் சென்றார். மேலும் அவர் எல்லா மக்களுக்குமான நியாயத் தீர்ப்பை ஏற்றார். இப்படியாக மனித குலத்தை பாவங்களிலிருந்து இரட்சித்தார்.

ஆகவே, பழைய விருத்தசேதனம் போன்ற இயேசுவின் ஞானஸ்நானம், அவர் சிலுவையில் இரட்சிப்புக்காக சிந்திய இரத்தம் ஆகியவற்றை நம்புவோர் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவர். தம்முடைய ஞானஸ்நானத்தினாலும், அவரின் குருதியினாலும், இயேசுகிறிஸ்து எல்லாப் பாவிகளையும் இரட்சித்தார்.

இரட்சிப்பு இரத்தத்தினால் மட்டுமா வருகிறது? இல்லை. அப்படியில்லை.

  • இயேசு உலகிற்கு எதன்மூலம் வந்தார்?
  • நீரினாலும் ஆவியினாலும் வந்தார்.

1 யோவான் 5:4-8 கூறுகிறது. “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும், இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமானவராகையால், ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர். பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்வைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.”

அன்பான கிறிஸ்தவர்களே, உங்களுக்கு இரட்சகரான அவரைக்குறித்த சாட்சியமென்ன? நீராலும் இரத்தத்தாலும் வந்த தேவகுமாரனை விசுவாசிப்பதேயல்லாமல் வேறென்ன?

உலகினை மேற்கொள்ளும் வெற்றியென்ன? நீரையும் இரத்தத்தையும் நம்புவதால் கிடைக்கும் வல்லமையே அது, இயேசுவே நீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால் ஆவியானவரே சாட்சி கொடுக்கிறவர்.

பூமியிலே, மூன்று காரியங்கள் சாட்சி கூறுகின்றன. நீர், இரத்தம் மற்றும் ஆவி என்பவைகளே அவைகள். இவை மூன்றும் ஒன்றே. நம்மை நிரந்தர ஆக்கினையிலிருந்து தப்புவிக்கும் பொருட்டு இயேசு இவ்வுலகிற்கு மாமிசமாக வந்து, ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். நம்மை படைத்தவர் கர்த்தர், பாவிகளனைவரின் இரட்சகராயினார் என்பதற்கு அத்தாட்சியாக, நம் அனைவரையும் இரட்சிக்கும் நற்செய்தியான நீர் மற்றும் ஆவி ஆகியவை இருக்கின்றன.

இயேசு இவ்வுலகத்திற்கு மாமிசத்தில் ஆவியாக வந்தார் என்பதற்கும், நம்முடைய பாவங்களை தம்மீது சுமக்கும் பொருட்டு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றார் என்பதற்கும், நம்முடைய பாவங்களுக்குத் தீர்ப்பாக சிலுவையில் மரித்தார் என்பதற்கும் நாமே சாட்சிகள். அவரை விசுவாசிப்போரை இரட்சிக்கிறார். இதுவே நீரையும் ஆவியையும் குறித்த உண்மையான நற்செய்தியாகும்.

கர்த்தரின் இரட்சிப்பைக் குறித்து நீரும் இரத்தமும் பகரும் சாட்சியம் என்ன?

  • பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்திற்கு ஒப்பாக இருப்பது என்ன?
  • இயேசுவின் ஞானஸ்நானம்.

நீரானது இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டின்படி இயேசுவின் ஞானஸ்நானம் விருத்தசேதனமாகும். பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தின் ஜோடி புதிய ஏற்பாட்டின் இயேசுவினுடைய ஞானஸ்நானமாகும். உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சி இயேசுவின் ஞானஸ்நானத்தில் இருக்கிறது.

இதனை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் கர்த்தர் முன்பாக நின்று, நல் மனசாட்சியுடன் “நீரே என் இரட்சகர், என் தேவனே, உமது ஞானஸ்நானத்தையும், உம் இரத்தத்தையும் நம்புகிறேன். அதுவே நீர் மற்றும் ஆவியைக் குறித்த நற்செய்தியாகும். ஆகவே என்னிடம் பாவங்கள் இல்லை. நான் தேவனின் பிள்ளையாக இருக்கிறேன், நீர் என் இரட்சகர் ஆவீர்”. இதனை நாம் உண்மையான விசுவாசத்துடன் வெளிப்படையாக சொல்லுவோம். இதனை நாம் சொல்லமுடிவதற்கான காரணம் நம்முடைய விசுவாசம் இயேசுவின் ஞானஸ்நானத்திலும் அவரின் குருதியிலும் இருப்பதேயாகும்.

நம்மை மறுபடியும் பிறக்கச்செய்யும் வாக்கு யாது? அது இயேசுவின் ஞானஸ்நானமும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தமுமாகும். நம் இருதயத்தின் இரட்சிப்பிற்கான சாட்சியம் இதுவாகும். இதுவே நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பதைக் குறித்த நற்செய்தியாகும்.

அன்புள்ள கிறிஸ்தவர்களே, நான் உங்களிடம் மறுபடியும் கேட்கிறேன் “இயேசுவின் இரத்தத்தை மட்டும் நாம் விசுவாசிப்பதால் ஒரு பாவி இரட்சிக்கப்பட முடியுமா?” இல்லை. இயேசுவின் சிலுவை மரணம் மீது வைக்கும் விசுவாசம் மட்டும் இரட்சிப்பிற்கு தேவையானதல்ல. இது நீரையும் ஆவியையும் - நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்பதால் பாவிகள் மறுபடியும் பிறக்கமுடிகிறது. இப்பொழுது உங்களுக்கு வேதாகமத்தைக் காட்டுகிறேன். அது நீரைப் பற்றி கூறுகிறது. வேறுவார்த்தையில் கூறினால் இயேசுவின் ஞானஸ்நானத்தைப் பற்றிக் கூறுகிறது.

1 பேதுரு 3:21-22 கூறுகிறது. “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, (மாமிச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாய் இருந்து,) இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; அவர் பரலோகத்திற்கு போய் தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவ தூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்கு கீழ்பட்டிருக்கிறது.”

அப்போஸ்தலனாகிய பேதுரு, இயேசுவின் ஞானஸ்நானம் இரட்சிப்பிற்கு ஒப்பாக இருப்பதாகவும், பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டதற்கு அது அத்தாட்சியாகவும் இருப்பதாக சாட்சியும் கூறுகிறார். இயேசுவின் ஞானஸ்நானம் பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்திற்கு சமமாகும். பழைய ஏற்பாட்டு காலத்தில் - எப்படி இஸ்ரவேல் மக்கள் தேவ வாக்கை நம்பி அவரின் பிள்ளைகளாகும்படி தம் நுனித்தோலை வெட்டிக்கொண்டார்களோ, அப்படியே புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசுவின் ஞானஸ்நானம் நம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சிக்கிறது.

ஆகவே பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனமும், புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானம் ஆகிய இரண்டும் ஒன்றே. நீங்களெல்லாம் இப்போது இயேசுவின் ஞானஸ்நானம் விருத்தசேதனத்திற்கு ஒப்பானது என்று நம்புகிறீர்களா? 1 பேதுரு 3:21 இல் எழுதப்பட்டுள்ளபடி அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது இப்பொழுது நம்மையும் இரட்சிக்கிறது. கர்த்தரின் எழுதப்பட்ட வாக்குகளுடன் நீ வாதம் பண்ணக்கூடுமோ?

இவ்வுலகில் வாழும் நாம், பாவமில்லாமல் எப்படி இருக்கமுடியும்? பாவத்திலிருந்து இரட்சிப்பு கிடைக்கவும், நீதிகள் முழுமைப் படுத்தப்படவும், இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார். மத்தேயு 3:15 கூறுகிறது “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.”

உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதால், அவரை நம்பும் அனைவரும் இப்போது பாவமற்றவர்கள். நாம் அனைவரும் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நமது பாவங்கள் அவரின் மீது சுமத்தப்பட்டது என்பதை ஏற்பதன் மூலம் நீதிமான்களாகிறோம். நம்மை தீர்ப்பிலிருந்து இரட்சிக்கும்படியாக நம் சகல பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார்.

அன்பு நண்பர்களே, பாவிகளை சகல பாவங்களிலிருந்தும் இரண்டு காரணிகள் இரட்சிக்கின்றன. அவையாவன, நீர் மற்றும் ஆவியாகும். இயேசுவின் மூன்றாண்டுகள் பொது பிரசங்க நாட்களில் அவர் செய்த இரு முக்கிய காரியங்கள், நமது பாவங்களை தம்மீது ஏற்றுக்கொண்டதும், நமக்காக சிலுவையில் மரித்ததுமாகும்.

யோவான் 1:29 கூறுகிறது. “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” உலகின் பாவங்களை சுமந்து தீர்க்க இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார். மேலும் நமது மீறுதல்களிலிருந்து பாவ விடுதலையளிக்க சிலுவையில் மரித்தார். இயேசுவே தேவகுமாரன். நம்மைப் படைத்தவர் அவர். பழைய ஏற்பாட்டில் கர்த்தர் செய்த விருத்தசேதன உடன்படிக்கையை அவர் நிறைவாக்குவதற்காக உலகின் பாவங்களைச் சுமந்தார்.

எவனொருவன் தன் இதயத்தில் இயேசுவின் ஞானஸ்நானத்தை, நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறானோ அவன் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கிறான். யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு கர்த்தர் இரட்சகர் ஆவார். கர்த்தருக்கு நன்றி, அல்லேலூயா! இயேசு கர்த்தர் வாக்குதத்தம் செய்த இரட்சிப்பை நிறைவாக்கினார். அவர் நம்மை இவ்வுலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார்.

மாமிச அழுக்கை நீக்குவதல்ல

  • காலப்போக்கில் மாமிசம் புனிதமாகிறதா?
    • இல்லை. மாமிசம் பாவங்களைத் தொடர்ந்து சேர்க்கிறது. இது நமது மரணம்வரைத் தொடரும்.

1 பேதுரு 3:21 கூறுகிறது. “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாமிச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாய் இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது”

இயேசுகிறிஸ்துவை ஒருவன் தன் இரட்சகராக விசுவாசித்து வரும்போது, அவன் மாமிசத்தின் பாவங்களை நிறுத்துகிறான் என்று அர்த்தமாகாது. நாம் தொடர்ந்து பாவம் செய்தாலும், இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்புவதன் மூலம், நம்முடைய உலகப்பிரகாரமான பாவங்களை இயேசுவில் சுமத்துகிறோம். பாவங்களுக்கு கூலியாக சிலுவையில் அவர் இரத்தத்தைக் கொடுத்தார். மறுபடியும் பிறத்தல் என்பதன் பொருள் உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நமது இதயத்திற்குள் வரவேற்பதாகும். பாவமன்னிப்பை நமது இதயத்தில் வெற்றிப்பொருளாக கொள்கிறோம். நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் நம்பியதால், நம் இதயங்கள் மறுபடியும் பிறந்தன. ஆனாலும் நாம் மாமிசத்தின் பாவங்களையும், மீறுதல்களையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். ஆயினும் நமது மாமிசத்தின் பாவங்கள் அனைத்தும் ஏற்கெனவே மன்னிக்கப்பட்டுவிட்டன.

இரட்சிக்கப்பட்டவர்களுக்கு இயேசுவின் ஞானஸ்நானம் சாட்சியாகும். இயேசுவின் ஞானஸ்நானத்தினால் கிடைக்கும் பாவமன்னிப்பை நாம் விசுவாசிக்கும்போது, நாம் பாவங்கள் அற்றவர்களாகிறோம். இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் வரும் இரட்சிப்பைக் குறித்த உண்மையை நமது இதயத்திற்குள் எடுத்துச் செல்லும் பொழுது நாம் மறுபடியும் பிறக்கிறோம். மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நீதிமான்களும் ஆனோம்.

பழைய ஏற்பாட்டின் ஆபிரகாமின் விசுவாசம் இதுவே. அப்போஸ்தலனாகிய பவுல் நீதிமானாவதைக் குறித்து பேசியதும் இதுவே, அப்போஸ்தலனாகிய பேதுரு சாட்சி பகன்ற இரட்சிப்பை போல் உள்ளதும் இதுவே. ஆபிரகாம் வேதவாக்கை கேட்டு அதனை விசுவாசித்து நீதிமான் ஆனது போல நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் மரித்ததையும் விசுவாசிக்கும்போது நாம் இரட்சிக்கப்படுகிறோம்.

யோவான் 1:12 கூறுகிறது. “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.” நம்மை தம்முடைய ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் இரட்சித்த இயேசுவை உனது இரட்சகராக ஏற்றுக்கொள்கிறாயா? தேவகுமாரன் தம் நீர் மற்றும் இரத்தம் ஆகியவற்றால் அளித்த இரட்சிப்பை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமா இரட்சிப்பு வருகிறது? இல்லை. அது நீராலும் இயேசுவின் இரத்தத்தினாலும் வருகிறது. வேதாகமத்தில் இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தினால் மட்டும் வருவதல்ல என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் இரத்தத்தினாலும் வருகிறது.

புதிய ஏற்பாட்டின்படி இயேசுவின் ஞானஸ்நானம் ஆவிக்குரிய விருத்தசேதனமாகும். இரட்சிப்பு நம்மை பாவங்களிலிருந்து துண்டித்து போடுகிறது என்பது உண்மை. உலகின் பாவங்களுக்காக அவர் தீர்க்கப்பட்டார் என்பதன் பொருள், அவர் நமக்காக, உனக்காகவும், எனக்காகவும் நியாயம் தீர்க்கப்பட்டார் என்பதாகும்.

பாவ மன்னிப்பின் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும், இரத்தத்தையும் நாம் பெறும்பொழுது, நமது பாவங்களுக்கான தீர்ப்பிலிருந்து நாம் விடுதலை ஆகிறோம். நமது விசுவாசத்தின் மூலம், இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் நாம் இரட்சிக்கப்பட்டோம். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் நமது இரட்சிப்பாக ஏற்றுக்கொள்ளும்போது நம் இருதயத்தில் உள்ள எல்லா பாவங்களும் கழுவப்பட்டன. இதனை உண்மையென நீ புரிந்துகொண்டு நம்புகிறாயா? நீங்கள் நீர் மற்றும் ஆவி குறித்த நற்செய்தியை விசுவாசிப்பீர்கள் என்று நான் விரும்புகிறேன். விசுவாசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். “இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்.” (ரோமர் 2:29) நம் இதயத்தில் எப்படி விருத்தசேதனம் செய்யப்படுகிறோம். நாம் இயேசு இவ்வுலகிற்கு மாமிசமாக வந்தார் என்றும், அவரின் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்த்தார் என்றும், நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்றும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினார் என்றும் நம்புவதன் மூலம் ஆவிக்குள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாகிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் இதயத்தில் விருத்தசேதனம் என்று கூறினான். இதயத்தில் விருத்தசேதனம் என்பது இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும், விசுவாசிப்பதும் ஆகும். உங்கள் இதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டுமானால், நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, அப்பொழுது மட்டுமே உங்களால் உண்மையில் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும்.


யோவான் ஸ்நானன் இயேசுவால் அனுப்பப் பட்டவனா?

  • யோவான் ஸ்நானன் யார்?
  • அவன் மனிதகுலத்தின் பிரதிநிதி, ஆரோனின் வம்சத்தின் படி அவனே கடைசி தலைமை ஆசாரியன்.

இங்கே இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்த யோவான் ஸ்நானன் யாரென்று நாம் கேட்கவேண்டும். யோவான் ஸ்நானன் மனிதகுலத்தின் பிரதிநிதியாவான். மத்தேயு 11:11-14 கூறுகிறது. “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோக ராஜ்ஜியத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். யோவான் ஸ்நானன் காலமுதல் இது வரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்துண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன் தான்.”

அன்பான கிறிஸ்தவர்களே, ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை என்று இயேசு கூறினார். யோவான் ஸ்நானனின் பிறப்பின் மூலம், முதல் உடன்படிக்கையின் காலம், பழைய ஏற்பாட்டுக் காலம் ஆகியவை முடிவடைந்தன. கர்த்தரின் உடன்படிக்கையை இயேசு நிறைவேற்ற வந்தமையால் அக்காலம் முடிவடைந்தது.

அப்படியானால், கர்த்தருடைய உடன்படிக்கையை நிறைவேற்றப்போவது யார்? இயேசுகிறிஸ்துவும் யோவான் ஸ்நானனுமே அது. யோவான் ஸ்நானன் உலகின் பாவங்களையெல்லாம் இயேசுவின் மீது இடமாற்றம் செய்தான். பழைய ஏற்பாட்டின் கடைசி தலைமை ஆசாரியன் யார்? ஆரோனின் சந்ததியில் வந்தது யார்? அது யோவான் ஸ்நானன் என்று இயேசுவே சாட்சி கூறுகிறார். யோவான் ஸ்நானனே மனிதர்களின் பிரதிநிதி, ஸ்தீரிகளில் பிறந்தவர்களில் உயர்ந்தவன்.

நம்மிடமுள்ள குறிப்புகளை ஆராய்வோம். மோசே, ஆபிரகாம், யாக்கோபு எல்லாம் ஸ்திரீகளில் பிறந்தவர்கள். ஆனால் பழைய ஏற்பாட்டினதும், புதிய ஏற்பாட்டினதும் மனிதர்களில் ஸ்திரீகளுக்கு பிறந்தவர்களில் உயர்ந்தவன் யார்? அது யோவான் ஸ்நானனேயாகும்.

பழைய ஏற்பாட்டின் கடைசி ஆசாரியானவனும், ஆரோனின் சந்ததியானவனுமான யோவான் ஸ்நானன் புதிய ஏற்பாட்டுக் காலத்தில், தேவ ஆட்டுக்குட்டிக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். இது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவமன்னிப்பு நாளில் ஆரோன் பலி மிருகங்கள் மீது கைவைத்ததற்கு ஒப்பானதாகும். இயேசுகிறிஸ்துவுக்கு அவன் ஞானஸ்நானம் கொடுத்து உலகின் பாவங்களையெல்லாம் அவர் மீது சுமத்தினான். அவன் கர்த்தருடைய சேவகன் ஆவான். இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்ததன் மூலமாக மனிதர்களின் இதயங்களில் ஆவிக்குரிய விருத்தசேதனத்தை நிறைவேற்றினான்.

நம்முடைய இரட்சிப்பின் அடையாளமாக இயேசுவின் ஞானஸ்நானத்துடன் கண்டிப்பாக அவர் இரத்தத்தையும் நம்ப வேண்டும். இயேசுகிறிஸ்து உலகின் பாவங்களையெல்லாம் தம்மேல் ஞானஸ்நானம் மூலம் ஏற்றுக்கொண்டு அதற்காக தீர்க்கப்பட்டார். நாம் செய்ய வேண்டிய ஒரே எளிய வேலை இதனை விசுவாசிப்பதேயாகும். இயேசுவின் அனுபவங்களை நாம் விசுவாசிக்க வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாக இருக்கிறது.

நற்செய்தியாகிய நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பதை இதயப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பொழுது நீங்கள் ஆபிரகாமின் சந்ததியினராகவும் கர்த்தரின் பிள்ளையுமாவீர்கள். வெகு சிலரே கிறிஸ்துவுக்குள் இருக்கிறார்கள். ஆனால் நிறைய மக்கள் அவரை தம் இருதயத்தினுள் ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

பகல் முடிந்தது. இரவு வருகின்றது. இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்பி அவரை உன் இதயத்திற்குள் பிரவேசிக்க அனுமதி கொடு. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் மீதிருக்கும் உனது விசுவாசம் உன்னை ஆசீர்வதிப்பதோடு ஆவிக்குரிய இரட்சிப்பையும் நல்கும்.

இரட்சிப்பின் நற்செய்தியை நீ நம்பும்போது ஆவியின் அபிஷேகம் கிட்டுகிறது என்பதை எப்போதும் மனதில் வை. நற்செய்தியானது இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமுமாகும். நீ ஆவிக்குரிய விளக்கையும் (தேவாலயம்) எண்ணெய்யையும் (ஆவியானவர்) புத்தியுள்ள கன்னிகையை (மத்தேயு 25:4) போன்று நற்செய்தியாகிய ஞானஸ்நானத்தையும் அவரின் குருதியையும் நம்புவதால் ஆயத்தமாக வைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

இயேசுவை யார் நம்புகிறார்களோ அவர்கள் இதயத்தில் ஆவியுடன் ஆலயத்திற்கு செல்வார்களாக.

இயேசு யாருக்காக ஞானஸ்நானம் பெற்றார்?

  • இயேசு எதற்காக ஞானஸ்நானம் பெற்றார்?
  • மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவும் பொருட்டு.

“நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக; இப்பொழுது இடம் கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.” (மத்தேயு 3:14-15)

மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவும்படியாக இயேசு ஞானஸ்நானம் பெற்றார். இயேசுகிறிஸ்துவே தேவகுமாரன், நமது இரட்சகர். நம்மை படைத்த படைப்பாளி அவரே. இயேசுகிறிஸ்து, தந்தையான கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றும் பொருட்டும், நம்மை அவர் மக்களாக்கவும் வந்தார்.

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளனைவரும் யாரைக்குறித்து பேசுகிறார்கள்? அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து பேசுகிறார்கள். பழைய ஏற்பாட்டின் எல்லா தீர்க்கதரிசிகளும் இயேசு இவ்வுலகிற்கு வரப்போவதையும், நமது பாவங்களை தம்மீது ஏற்றுக்கொள்ளப் போவதையும், நம் அனைவரையும் பாவங்களிலிருந்து நிரந்தரமாக விடுதலைச் செய்யப்போவதையும் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களில் கூறப்பட்டபடி இயேசு இவ்வுலகிற்கு வந்தார். ஆதாம், ஏவாளில் இருந்து உலகின் கடைசி மனிதன் வரையுள்ள மனிதகுலத்தின் பாவங்களை அவர் எடுத்துப்போட்டார்.

இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும், அவரின் குருதியினாலும் வரும் இரட்சிப்பை உன் இருதயத்தில் இப்போது ஏற்றுக்கொள். இது உண்மை என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கிறதா? உன் இருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறதா? “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது எல்லா நீதிகளையும் நிறைவேற்றும்படியாக யோவான் ஸ்நானனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார்.

ஞானஸ்நானம் என்ற வார்த்தையானது கழுவுதல் என்று பொருள்படும். பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட கையை வைக்கும் முறையின் படி யோவான் ஸ்நானனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றார்.

மனிதகுலத்தின் சகல பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டபிறகு யோர்தான் நதியில் அவர் முழுகினார். இவ்வாறு பாவிகளின் இறப்பையும் நியாயத்தீர்ப்பையும் குறிப்பிடுகிறது. இயேசு நீரில் மூழ்கியது இயேசுவின் சிலுவை மரணத்திற்கு ஒப்பானதாகும். அவர் நீரிலிருந்து வெளியே வந்தது மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்ததைக் குறிக்கிறது. சிலுவை மரணத்திற்கு பிறகு இயேசு மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தார்.

இயேசு தமது கர்த்தராகவும் இரட்சகருமாகவும் இருக்கிறார். ஞானஸ்நானம் பெறும் பொருட்டு இயேசு இவ்வுலகிற்கு வந்ததும், சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்ததும், மூன்றாம் நாள் உயிருடன் எழுந்ததும், இப்பொழுது அவர் கர்த்தரின் வலது பக்கம் அமர்ந்திருக்கிறார் என்பதுமான காரணங்கள் அவர் மனிதகுலத்தை மரணத்திலிருந்து இரட்சித்தார் என்பதற்கு தெளிவான அத்தாட்சியாக இருக்கிறது. இந்த உண்மையை சிரத்தையுடன் நம்புகிறாயா?

புதிய ஏற்பாட்டின்படி இயேசுவின் ஞானஸ்நானமே ஆவிக்குரிய விருத்த சேதனமாகும். “இருதயத்தின் விருத்த சேதனமே விருத்த சேதனமாகும் இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் நம்புவதாலும், நம் பாவங்கள் எல்லாம் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதையும் நாம் உண்மையென விசுவாசிப்பதால் இதயம் விருத்தசேதனம் பண்ணப்பட்டதாகின்றது. இருதயத்தில் விருத்தசேதனம் என்பது நம்முடைய பாவங்களையெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அவர் மீது சுமத்தியதை ஒப்புக்கொள்வதாகும்.

நீ உன் இருதயத்தில் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா? இதயத்தின் விருத்த சேதனத்தை நீ விசுவாசித்தால் உன் பாவங்கள் நிரந்தரமாக கழுவப்படும். இதற்காகவே இயேசு நீதியை நிறைவாக்கி பாவிகளுக்கு இரட்சிப்பை உறுதியளித்தார்.

அன்பான கிறிஸ்தவர்களே, இந்த இரட்சிப்பின் உறுதியை உங்கள் இதயத்தினுள்ளும், மனதிலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே உண்மை. இயேசுவின் இரட்சிப்பை உங்களிருதயத்தில் ஏற்றுக்கொண்டால் உன் பாவங்களில் இருந்து விடுதலையாவாய். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைப் பேர்களோ, அத்தனைப் பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் (யோவான் 1:12).

ஞானஸ்நானத்தைப் பெறும்பொருட்டு இயேசு ஏன் இவ்வுலகிற்கு வரவேண்டும் என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறதா? அதனை இப்போது நம்புகிறீர்களா? மனிதர்களின் பாவங்களை சுமந்து தீர்க்கும் பொருட்டு இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அதுவே ஞானஸ்நானமாகிய விருத்த சேதனமாகும். இயேசுவின் ஞானஸ்நானமானது நமக்கு ஆவிக்குரிய விருத்தசேதனமாகிறது. அதனாலேயே அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை இதயத்தில் விருத்தசேதனம் செய்யும் படிக் கூறுகிறான். இயேசு தம் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தாலும் நம்மைத் தெளிவாக இரட்சித்தார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதனை இதயத்தில் நம்புவதைத் தவிர வேறில்லை. நாம் “ஆம். ஆமேன் என்று இதயபூர்வமாக வேதவாக்கிற்கு கூறவேண்டும். இதனை நம்புகிறாயா?

  • இந்த உண்மையை உன்னிருதயதில் ஏற்றுக் கொள்கிறாயா?
  • இயேசுவை சேவிக்கும் முன் நாம் என்ன செய்யவேண்டும்?
  • நீரையும் ஆவியையும் பற்றிய உண்மையை இதயத்தினுள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து ஏறத்தாழ 2000 ஆண்டுகளாகின்றன. இந்நாளில் இக்கிருபையின் காலத்தில் நமது இதயத்தில் இயேசுவின் இரத்தத்தையும், நீரையும் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எதையும் நாம் செய்யத் தேவையில்லை.

இருதயத்தின் விருத்தசேதனமே, விருத்தசேதனமாகும் நம்மிருதயத்தில் விசுவாசத்துடன் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். நம் விசுவாசத்தாலேயே நாம் இரட்சிக்கப் படுகின்றோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர்கள் விருத்தசேதனம் மூலமும், பஸ்காவின் இரத்தத்தைக் கதவின் மீதும், மேலுத்திரம் மீதும் தெளித்ததன் மூலமும் இரட்சிக்கப்பட்டார்கள்.

யாரெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் அவர்களின் இரட்சிப்பாக விசுவாசிக்கிறார்களோ அவர்கள் கர்த்தரின் தீர்ப்புக் குறித்து பயப்படத்தேவையில்லை, ஏனெனில் அது அவர்களைக் கடந்துச் செல்லும். ஆனால் உண்மையை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது கர்த்தரின் தீர்ப்பு பாயும். நிறையபேர் இயேசுவை வீனாக நம்பிக்கொண்டு இன்னமும் பாவங்களுக்கு அடிமைகளாயிருக்கின்றனர்.

இந்நிலைக்கு அவர்கள் எப்படி வந்தனர்? பாவங்களினால் அவர்களேன் இன்னும் துன்பப் படுகிறார்கள்? இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் குருதியையும் பற்றிய உண்மை அவர்களுக்குத் தெரியாமையே. அவர்கள் இயேசுவின் குருதியை மட்டும் நம்புகிறார்கள். அவரின் ஞானஸ்நானத்தை அசட்டையோ அல்லது மேலோட்டமாகவோ கருதுகிறார்கள்.

இயேசுவின் குருதியை மட்டும் சாதாரணமாக விசுவாசித்தால் இரட்சிப்பு கிட்டிவிடுமா? வேதாகமம் இது இப்படியானது தான் என்று கூறுகிறதா? இதுகுறித்து பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் என்ன கூறுகின்றன? வேதாகமத்தைப் பொருத்தவரையில் அது தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மட்டுமல்ல இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிப்பு வெற்றிக்கொள்ளபடுகிறது. (1 யோவான் 5:3-6)

இயேசுவின் இரத்தத்தை மட்டுமா நீ நம்புகிறாய்? யாருடைய இருதங்களில் இன்னும் பாவம் இருக்கிறதோ அவர்கள் தம் தவறான நம்பிக்கைகளை கைவிட்டு உண்மையான நற்செய்திக்குத் திரும்பவேண்டும்.

இதனை நம்பாதவர்கள் தாம் தவறாக வழிநடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டு தம்முடைய பாவங்களை இயேசு யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானம் மூலம் தீர்த்ததை அறியாமல் போனதை உணரவேண்டும். அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை அலட்சியப்படுத்தியதை தவறு என்று கூறவேண்டும். தன்னுடைய ஞானஸ்நானம் மூலம் இயேசு இவ்வுலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்தார் என்பதை அவர்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய இரண்டையும் நாம் விசுவாசிக்கும்போதே இரட்சிப்பு கிடைக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலமே நம்மால் நித்திய ஜீவனை சம்பாதிக்க முடிகிறது.

அன்புள்ள கிறிஸ்தவர்களே, இதுவரை இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து அதன்மேல் வாழ்ந்தீர்களா? அப்படியாயின் நிச்சயமாக உங்களிருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறது. கர்த்தரின் சட்டப்படி வாழ்வதால் நீங்கள் பாவங்களில்லாது இருப்பதாக நினைத்தால் அது உங்கள் தனிப்பட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். இந்த உறுதியான நம்பிக்கை வேதவாக்குடன் ஒத்துப்போவதில்லை.

இன்னும் நேரமிருக்கிறது

  • நம்மை சத்தியம் எதிலிருந்து விடுதலையாக்குகிறது?
  • பாவம் மற்றும் மரணம் குறித்த சட்டத்திலிருந்து.

இன்னும் அதிக நேரமாகவில்லை. நீங்களெல்லாம் செய்யவேண்டியது என்னவென்றால் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் கட்டாயமாக விசுவாசிக்கவேண்டும். அப்போது உங்கள் இதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாவீர்கள். எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாவீர்கள் என்பதன் பொருள் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் நம்புவதால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்பதாகும்.

 இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் உனது பாவங்களிலிருந்து உன்னை இரட்சிக்கும் என்று விசுவாசிக்க நீ சித்தமாயிருக்கிறாயா? இதனை நம்பினால் இரட்சிப்பு எப்படிப்பட்டது என்று கற்றுக்கொள்வாய். சமாதானத்தை உன் மனதிலே பெறுவாய். அப்பொழுது, அப்பொழுது மட்டுமே நீ நீதிமானாவாய். உன்னுடைய வேலைகளினாலல்ல. அது வேதவாக்கின் மீதுள்ள உன் விசுவாசத்தைப் பொருத்தது. உங்களில் யாரெல்லாம் இன்னும் இயேசுவின் இரத்தத்தை மட்டும் இரட்சிப்படைய நம்பி, அதனைச் சார்த்திருந்தால், உங்களை, இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகிய இரண்டையும் விசுவாசிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புள்ள கிறிஸ்தவர்களே, மனிதகுலத்திற்கு பாவங்களிலிருந்து முழு இரட்சிப்பு, நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலமாக நிறைவேற்றப்பட்டது. ஆவியானவர் கர்த்தராயிருக்கிறார். கர்த்தர் இவ்வுலகிற்கு மனித சரீரத்தில் வந்தார்.

கர்த்தர் தம் தீர்க்கதரிசிகள் மூலமாக நாம் அவரை இயேசு என்றழைக்க வேண்டுமென்றார். இயேசு என்பதற்கு அவர் தம் மக்களை பாவங்களிலிருந்து இரட்சிக்கிறார் என்று பொருளாகும். கர்த்தர் கூறினார். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம் (மத்தேயு 1:23)

பாவிகளை இரட்சிக்கும்பொருட்டு தேவன் இவ்வுலகத்திற்கு வந்தார். உலகின் எல்லாப் பாவங்களையும் தமது ஞானஸ்நானத்தின் மூலம் அவர் சுமந்து தீர்த்ததன் மூலம் எல்லாப் பாவிகளையும் இரட்சித்தார். இதுவே உண்மையாகும். நீர் மற்றும் ஆவியின் இரட்சிப்பும் ஆகும். இதனைச் சொல்வதற்காக நான் இங்கே இருக்கிறேன். இயேசுவின் இரத்தத்தால் மட்டுமா நாம் இரட்சிக்கப்பட்டோம்? அப்படியில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றால் நாம் இரட்சிக்கப்பட்டோம்.

இக்காலத்தில் நிறைய கள்ளத் தீர்க்கதரிசிகளும் வேதப் புரட்டர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதில்லை. இயேசு கூறினார். “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.” (யோவான் 8:32)

சத்தியத்தை நாம் அறியவேண்டும். இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தைக் குறித்து என்ன கூறினார் என்பதையும் நாம் அறியவேண்டும். நாம் அதனை ஏன் நம்பவேண்டும் என்றும் அறியவேண்டும். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களை விருத்தசேதனம் பண்ணும்படிக்கு கர்த்தர் ஏன் கூறினார் என்றும் பஸ்காவின் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைக் குறித்து அவர் ஏன் கூறினார் என்பதையும் நாம் அறியவேண்டும்.

ஒரு சம்பவத்தின் பகுதியை மட்டும் நாம் அறிந்தால் நம்மால் சத்தியத்தை புரிந்துகொள்ளமுடியாது. இயேசு கூறினார் “ஒருவன் ஜலத்தினலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (யோவான் 3:5)

  • இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெறுதல்.
  • இயேசுவின் மரணத்துடன் நாம் ஐக்கியமாவது எப்படி?
  • இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களை எல்லாம் இயேசுவின் மீது சுமத்துவதின் மூலம்.

இரட்சிப்பின் இரகசியத்தைக் குறித்து வேதாகமம் சாட்சி கூறுகிறது. அது இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமா கிடைக்கிறது? இல்லை. அது அவரின் இரத்தம் அவரின் ஞானஸ்நானம் ஆகிய இரண்டாலும் கிடைக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இதனைக்குறித்து ரோமர் 6ஆம் அதிகாரத்திலும் அவனின் பல்வேறு நிருபங்களிலும் மீண்டும் மீண்டும் கூறுகிறான்.

ரோமர் 6:3-8 ஐ வாசிப்போமாக. “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல் நாமும் புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனி பாவத்திற்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால், அவருடனே கூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.”

5-ஆம் வசனத்தைப் பார்ப்போமாக அது கூறுகிறது “ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்

அவருடைய மரணம் நம் மரணமுமாகும். ஏனெனில் அவருடைய ஞானஸ்நானம் மூலமாக நம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப் பட்டு விட்டது. ஆகவே, இயேசுவின் ஞானஸ்நானம் நம்மை சிலுவையில் அவர் சிந்திய இரத்தத்துடன் இணைக்கிறது.

இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவை மீது நாம் வைக்கும் நம்பிக்கையானது இயேசுவுடன் ஐக்கியமாக அனுமதிக்கிறது. “பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23) ஆகவே, இயேசுவின் சிலுவை மரணமானது நமது மரணமுமாகும். நம் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்கும்பொருட்டு இயேசு ஞானஸ்நானம் பெற்றார். இந்த உண்மையை நம்பினால் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவுடன் நாம் ஐக்கியமாவோம்.

இயேசுவை மதத்தின் ஒரு பகுதியாக விசுவாசிக்க கூடாது

  • “அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” என்பதன் பொருள் யாது?
  • அதன் பொருள் என்னவென்றால் இயேசு ஒரே சமயத்தில் நம் பாவங்களை கழுவினார் என்பதும் இந்த உண்மையை நம்புகிறவர்களை அவர் இரட்சிக்கிறார் என்பதுமாகும்.

நிறைய மனிதர்கள் இயேசுவை ஒரு மதத்தின் வழியாக மட்டும் நம்புகிறார்கள். ஆகவே, அவர்கள் ஆலயத்திற்கு சென்று அழுது ஜெபித்து மனம் கதறுகிறார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்து தினமும் பாவ மன்னிப்பை வேண்டுகிறார்கள். “இயேசுவே, எனக்குத் தெரியும்! மேலும் நீர் எனக்காய் சிலுவையில் மரித்ததை நம்புகிறேன். ஆம் நான் விசுவாசிக்கிறேன்.

அவர்கள் இவ்வசனத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளது தெளிவாகிறது. “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்தீகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) அவர்கள் பாவ அறிக்கை செய்வதன் மூலம் தினமும் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று கோருகிறார்கள். மேலுள்ள வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாவம் நமது அன்றாட மீறுதல்கள் இல்லை. இவ்வசனம் எதைக் குறிப்பிடுகிறது என்றால் நாம் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்று பாவ அறிக்கை செய்யும்போது நமது பாவங்கள் ஒரேயடியாக மன்னிக்கப்படும் என்பதேயாகும்.

ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும் கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” (ரோமர் 10:17) “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.” (யோவான் 8:32)

அன்பான கிறிஸ்தவர்களே, உண்மைத் தெளிவாக இருக்கிறது. இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் பாவங்களை சுமக்காமல் அவர் சிலுவையில் மரித்தார் என்று விசுவாசிப்பீர்களானால் உங்கள் நம்பிக்கை வீண். எந்த கிறிஸ்தவனாவது தன் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படவேண்டுமானால் அவன் இயேசுவின் யோர்தான் ஞானஸ்நானம் மூலம் தனது சகல பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதையும் நம்முடைய பாவங்களுக்காக அவர், சிலுவையில் நியாயம் தீர்க்கப்பட்டார் என்பதையும் அவன் கட்டாயமாக நம்பவேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதனால் நாம் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய இரண்டையும் விசுவாசிக்கவேண்டும்.

அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை என்றான் (அப்போஸ்தலர் 4:12). நம் எல்லாப் பாவங்களையும் தம் ஞானஸ்நானம் மூலம் ஏற்று இயேசு நமது இரட்சகரானார். இயேசு நம்மை நிரந்தர ஆக்கினையிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு நீராலும் ஆவியாலும் வந்தார். “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப் பண்ணப்படும்.” (ரோமர் 10:10) நீங்கள் பாவியா? இல்லை நீதிமானா?

கலாத்தியர் 3:27 கூறுகிறது, “ஏனெனில் உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ, அத்தனைப்பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே இவ்வசனம் இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் இவ்வுலகின் பாவங்கள் அனைத்தையும் தம்மீது ஏற்றுக் கொண்டு பிறகு சிலுவையில் அறையப் பட்டார் என்ற உண்மையை நமக்கு கூறுகிறது. அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து இப்போது கர்த்தரின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவரை நம்புவோருக்கு அவர் இரட்சிப்பின் கர்த்தரானார்.

இயேசு ஞானஸ்நானம் பெறவில்லையென்றால், நமக்காக அவர் சிலுவையில் இரத்தம் சிந்தவில்லையென்றால் அவர் நமது இரட்சகராயிருக்க முடியாது. நாம் நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிக்கும் போது மட்டுமே நாம் இரட்சிக்கப் படுவோம்.

மோசேயின் புத்திரர்கள்

  • எகிப்து செல்லும் வழியில் கர்த்தர் ஏன் மோசேயை கொல்லமுயன்றார்?
  • மோசே தன் புத்திரர்களுக்கு விருத்தசேதனம் பண்ணாததால்.

அன்பானவர்களே, உங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் நீர் மற்றும் இயேசுவின் இரத்தத்தின் மூலம் எப்படி பாவமன்னிப்பு பெறமுடியும் என்ற இரகசியத்தைக் குறித்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இவ் வேதவாக்கினை கேட்க முடிவது அதிசயமான ஆசீர்வாதமாகும்.

அது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டும்தானா? பழைய ஏற்பாட்டுக் காலத்தில், மக்கள் விருத்தசேதனத்தின் மூலமாகவும் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் ஆபிரகாமின் சந்ததியாயினர். நாம் இப்போது இயேசுவின் ஞானஸ்நானம் மூலமும் அவரின் இரத்தத்தின் மூலமும் கர்த்தரின் மக்களானோம். பழைய ஏற்பாட்டில் மோசே மூலமாக கர்த்தர் இதற்கான அத்தாட்சியை காண்பித்தார்.

இஸ்ரவேல் மக்களை இரட்சிக்கும்பொருட்டு கர்த்தர் மோசேயிடம் பேசினார். அவனிடம் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி கூறினார். ஆகவே, மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்தில் உத்தரவு பெற்று மீதியானை விட்டு தன் மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு எகிப்தை நோக்கி புறப்பட்டான். அவன் தன் குடும்பத்தாரை ஏற்றிக்கொண்டு போகும்போது, வழியிலே தங்குமிடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப் பார்த்தார்.

அவனின் மனைவியான சிப்போராளுக்கு அதற்கான காரணம் தெரியும். அவள் கூர்மையான ஒரு கல்லை எடுத்து தன் மகனின் நுனித்தோலை அறுத்து, அதனை அவன் கண்களுக்கு முன்பாக எறிந்து “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள் ஆகவே கர்த்தர் அவனைப் போகவிட்டார்.

இதுவே, யாராயிருந்தாலும், மோசேயின் புத்திரராக இருந்தாலும், அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படாதவர்களாக இருந்தால் அவர்களைக் கொல்வேன் என்று கர்த்தர் கூறும் முறையாகும்.

இஸ்ரவேல் மக்களுக்கு விருத்தசேதனமானது கர்த்தரின் உடன்படிக்கைக்கான அடையாளமாகும். அவர்களுக்கு யாரானாலும், தலைவனின் மகனாயிருந்தாலும், அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படாதவர்களாக இருந்தால் தம் மக்களிடம் இருந்து துண்டிக்கபடுவோம் என்று நிச்சயமாக தெரிந்திருந்தது. ஆகவே, மோசேயின் மகனை தம் மக்களிடமிருந்து துண்டித்து போடுவதைத் தவிர்க்கும்பொருட்டு இப்படியாக மோசேயை எச்சரிக்கைச் செய்தார்.

வேதம் கூறுகிறது, சிப்போராள் கூர்மையான ஒரு கல்லை எடுத்து தன் மகனின் நுனித்தோலை அறுத்து, அதனை அவன் கண்களுக்கு முன்பாக எறிந்து “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றதற்கு காரணம் என்னவென்றால் அது கர்த்தரின் எதிர்பார்ப்பான விருத்தசேதனத்தை நிறைவேற்றுவதாகும். (யாத்திராகமம் 4:26)

இஸ்ரவேலர்களில் யாரெல்லாம் விருத்தசேதனம் பண்ணப் படவில்லையோ அவர்கள் தம் மக்களிலிருந்து துண்டிக்கப்பட்டார்கள். விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் மட்டுமே பஸ்கா ஆட்டுக்குட்டியின் இறைச்சியை சாப்பிட அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் மட்டுமே கர்த்தரின் மக்களாக ஆராதனைகளில் பங்கேற்க முடிந்தது.

அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு எபிரேயன். அவன் பிறந்து 8 நாட்களில் விருத்தசேதனம் பண்ணப்பட்டான். கமாலியேல் என்ற போதகரிடம் பயின்றான். இயேசு ஏன் யோர்தானில் ஞானஸ்நானம் பெறவேன்டும்? அவர் ஏன் சிலுவையில் அறையப் பட வேண்டும் என்று சரியாக புரிந்திருந்தான். ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் தன் எல்லா நிருபங்களிலும் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து எழுதினான்.

அப்போஸ்தலனாகிய பவுல் நமது இரட்சிப்பு இயேசுவின் இரத்தம் மூலம் நிறைவு செய்யப் பட்டதை அநேக இடத்தில் கூறுகிறான். இயேசுவின் இரத்தம் பாவ மன்னிப்பு முறையின் கடைசி நிலையாகும். ஆனால் உண்மையில் ஆவிக்குரிய விருத்தசேதனம் இயேசுவின் ஞானஸ்நானமாகும். இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டு விட்டு, அவரின் இரத்தத்தை மட்டும் கூறுவதில் பயனேதுமில்லை.

இயேசுவின் சிலுவையைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் நிறைய இடங்களில் நேரடியாகக் கூறுகிறான். இது ஏன்? இதுவே நமது இரட்சிப்பின் கடைசி அடையாளமாகும். இயேசு தம் மீது இவ்வுலகின் அனைத்துப் பாவங்களையும் சுமந்த போதிலும், நமக்காக அவர் தீர்க்கப்பட்டு இரத்தஞ்சிந்தியிராவிட்டால் நாம் முழுவதுமாக இரட்சிப்படைந்திருக்க மாட்டோம். அதனாலேயே சிலுவையைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி குறிப்பிடுகின்றான். சிலுவையே நமது இரட்சிப்பின் இறுதி நிலையாகும்.

இந்த இரட்சிப்பின் சத்தியத்தை சிதைக்காமல் ஒவ்வொரு சந்ததியினரும் அடுத்த சந்ததிக்கு கையளித்திருந்தால், இந்நாட்களில் அநேகர் பாவமில்லாமல் இருந்திருப்பார்கள். ஆனால் காலப் போக்கில் உண்மை காணாமற் போயிற்று. நிறைய மக்களுக்கு சிலுவை மட்டுமே தெரியும். அவரின் ஞானஸ்நானத்தின் உட்பொருளை அவர்கள் உணர்ந்ததில்லை.

என் சாட்சி

  • பாவிகளை நீதிமான்களாக கர்த்தர் கருதுகிறாரா?
  • இல்லை. கர்த்தர் நீதியாயிருக்கிறார். நீதிமான்கள் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றவர்கள். இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அவர்கள் தம் பாவங்களை அவர் மீது சுமத்தி விட்டனர்.

நான் 20 வயதினனாக இருக்கும் போது இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்னால் என் வாழ்க்கையில் எத்தனைப் பாவங்களைச் செய்தேன் என்று நினைவில்லை. ஏனெனில் எனக்கு கர்த்தரின் சட்டங்கள் தெரியாது. கர்த்தரைப் பற்றி முற்றிலும் தெரியாதவனாக, அந்நேரம் வரை என் வழிகளில் வாழ்ந்தேன்.

அப்பொழுது நான் நோயாளியானேன். நான் எந்த அளவு நோயாளியாக இருந்தேனென்றால், நான் செத்து விடுவேன் என்று நினைத்தேன். ஆகவே என் சாவிற்கு முன் என் பாவங்களிலிருந்து பாவமண்ணிப்பு பெற்றுவிட வேண்டுமென்று தீர்மானித்தேன். என்னைப் போன்ற பாவிகளுக்காய் இயேசு மரித்தார் என்று கேள்விப் பட்டிருந்தமையால், அவரை விசுவாசிக்கத் தீர்மானித்தேன். அதன் பிறகு முதல் நாட்களில் நான் ஆணந்தத்தினாலும் நன்றியினாலும் நிறைந்திருந்தேன்.

இவ்வுணர்ச்சி காலப் போக்கில் மங்கத் தொடங்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தினமும் பாவம் செய்வதை தவிர்க்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் நான் பாவியானேன். 10 வருடங்களுக்குப் பிறகும் நான் பாவியாகவே இருந்தேன். இப்போது இன்னும் மோசமான பாவியாகி இருந்தேன். நான் இயேசுவை 10 வருடங்களாக் விசுவாசித்த போதிலும், நான் பாவி என்ற நிலை மாறவில்லை. நான் விசுவாசியாகவும் அதே சமயம் பாவியாகவுமிருந்தேன்.

நான் “அழுகை என்னை இரட்சிக்காது! என் முகம் கண்ணீரில் குளித்தாலும், என் பயத்தினை தள்ளி வைக்க முடியவில்லை. வருடக்கணக்கான பாவங்களை கழுவ முடியவில்லை! அழுகை என்னை இரட்சிக்காது!” என்ற பாடலைப் பாடினாலும், எப்போதெல்லாம் பாவம் செய்தேனோ அப்போது அழுதேன்.

அன்புள்ள ஆண்டவரே, தயவு செய்து இப்பாவத்தை எனக்கு மன்னியும். இதனை இப்போது மன்னியும். நான் இனி ஒரு போதும் பாவம் செய்ய மாட்டேன் நான் பாவம் செய்த பின் மூன்று நாட்கள் ஜெபிப்பேன். ஒரு மூலையிலுள்ள அறைக் கதவைச் சாத்திக் கொண்டு, மூன்று நாட்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பேன். ஏனெனில் எனது மனசாட்சி மிகவும் கணமாக இருந்தபடியால், நான் கர்த்தரின் மன்னிப்பை அழுது வேண்டினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு எனக்கு நன்றாக இருக்கும். நான் அவர் பிரசன்னத்தில் மீண்டும் இருப்பதாக நினைப்பேன்.

மீண்டும், எனது பாவங்களை கழுவி விட்டேன், அல்லேலூயா!” ஆகவே மீண்டும் சிறிது காலத்திற்கு கடமைகளைச் செய்து வாழ்வேன். ஆனால் வெகு சீக்கிரமாக பாவம் செய்தேன். மீண்டும் என் சுமை அதிகரிக்கும். இந்த சக்கரமானது மீண்டும் மீண்டும் என்னால் கடைப் பிடிக்கப் பட்டது. தொடக்க காலத்தில் இயேசுவை விசுவாசிப்பது மிகவும் பெரிதாக இருந்தது. ஆனால் அதிக காலம் அவரை விசிவாசித்தாலும், என்னுடையப் பாவங்கள் மேலும் பெருகின. அது பூட்டிய அறையில் அதிக புழுதி சேர்வதைப் போலாயிருந்தது.

பத்து வருடங்களுக்குப் பிறகு, தொடக்கக்காலத்தில் இருந்ததை விட அதிகப் பாவியானேன். “ஏன் என் இளம் பிராயத்திலேயே இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கினேன்? நான் 80 வயது வரைப் பொருத்திருந்து இயேசுவை நம்பியிருந்தால் நன்றாக இருக்குமே. அப்போது எனது பாவங்கள் என் மனசாட்சியை உறுத்தாது. ஆகவே தினமும் பாவத்திற்காய் புலம்பத் தேவையில்லை.” நான் கர்த்தரின் சித்தப் படி வாழவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் அது கடைப்பிடிக்க இயலாதது. எனது மனதிலிருந்து நான் தவறுவது போல் தோன்றியது.

கர்த்தரில் புதிதாக ஏதும் இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினேன். நிறைய நேரம் இறையியல் படிப்பதில் செலவிட்டேன், ஆனால் சில வருடங்களில் எனது இருதயம் இன்னும் வெறுமையாகியது. மதத்தத்துவங்கள் குறித்த நூல்களைப் படிக்கும் முன் அனலுள்ள படுக்கையில் எப்போதும் சொகுசாக உறங்காத சாது டேமியனைப் போல் வாழ வேண்டுமென்று கூறுவேன். நான் எனக்காக என்றும் வாழக்கூடாது என்றும் என்னை, முற்றிலுமாக கஷ்டப்படுவோர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்றும் உறுதி எடுத்திருந்தேன்.

இந்த சாதுவைக் குறித்து படித்தபோது, அவரைப் போலவே வாழ உறுதியெடுத்தேன். என் வாழ்வு உயர்வானதாக இருக்க முயற்சி செய்தேன். சொரசொரப்பான சிமெண்ட் தரையில் முழங்காலிட்டு ஒரே சமயத்தில் மணிக்கணக்காக ஜெபிப்பதுண்டு. அப்பொழுது எனது ஜெபத்திற்கு மிகுந்த அர்ததமிருப்பதாக உணர்வேன். பிறகு என்னைக் குறித்து சிறப்பாக உணர்ந்தேன்.

ஆனால் 10 வருடங்களுக்கு பிற்கு என்னால் இப்படி இருக்க முடியவில்லை. ஆகவே கர்த்தரிடம் ஜெபித்தேன், “பரலோகத்திலுள்ள அன்புள்ள ஆண்டவரே தயவுசெய்து என்னை இரட்சியும். உம்மை எனது முழு இதயத்துடன் நம்புகிறேன். யாராவது என் தொண்டையில் கத்தியை வைத்தாலும் கூட உம்மிடமுள்ள பக்தியிலிருந்து மாறமாட்டேனென்று எனக்குத் தெரியும், ஆயினும் உம்மை எனது இதயப்பூர்வமாக விசுவாசித்தாலும் ஏன் எனக்குள் வெறுமையாக உணருகிறேன்? நான் ஏன் இப்படி ஏமாளியானேன்? எப்போதுமில்லாத அளவு இப்போது ஏன் மோசமான பாவியானேன்? என்னுடையப் பாவங்களைக் குறித்து முன்பு இப்படிச் சிந்தித்ததில்லை. நான் உம்மை விசுவாசிக்கத் தொடங்கியபின், இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஏன் மோசமானவனாக இருக்கிறேன் என்று ஆச்சரியப்பட்டேன். என்னில் என்ன நிகழுகிறது?”

இந்த இடத்தில் இதற்கான காரணம் எனக்குப் புரிந்தது. என்னுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப் படாமலேயே கர்த்தரை விசுவாசித்திருக்கிறேன். அந்நேரத்தில் எனக்கு உண்மைத் தெரியவில்லை. அது என்னை பைத்தியக்காரன் ஆக்குவதற்கு போதுமானதாய் இருந்தது.

என்னுடைய இதயத்தில் பாவம் இருக்கும்போது, கர்த்தரின் கிருபையால் கிடைக்கும் பாவ விடுதலையைக் குறித்து மற்றவர்களிடம் நாம் எப்படி கூறக்கூடும்? இயேசுவை விசுவாசிக்கும்படி மற்றவர்களிடம் நான் எப்படி கூறக்கூடும்? மீண்டும் மீண்டும் ஜெபித்தேன். “அன்புள்ள ஆண்டவரே, வெகு சீக்கிரமாக வேதாகமகக் கல்லூரியின் பட்டம் வெற்றவனாகி ஆராதனை நடத்துபவனாக நியமிக்கப்பட போகிறேன். ஆனால் நான் பாவங்களால் சுமையேற்றப்பட்ட ஆராதனை நடத்துபவனானால் மற்ற பாவிகளிடத்தில் பாவ விடுதலைக் குறித்து நான் எப்படிக் கூறக்கூடும்? நானே ஒரு பாவி. நான் அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபங்களைப் படிக்கும்போது யாரொருவன் இயேசுவின் ஆவியை பெறாமலிருக்கிறானோ அவன் கர்த்தரின் பிள்ளை அல்லவென்று கண்டேன். எவ்வளவு எதிர்பார்ப்புடன் தேடினாலும் என்னுள் ஆவியானவர் இல்லை. அது தொடக்கத்தில் இருந்ததையும் பிறகு மாயமாகி போனதையும் உணர்ந்தேன். என்ன நடந்தது? ஏனென்று தயவு செய்து கூறும், கர்த்தரே! ”

குறிப்பாக இயேசுவை விசுவாசிப்பதால் பாவ மன்னிப்பு உண்டாயிற்று என்று என்னை ஏமாற்றியதே அதன் காரணம். இதனால் வெகு நாட்களாக மனஸ்தாபப்பட்டேன்.

அவரை எதிர்பார்ப்புடன் தேடுபவர்களிடம் தன்னை வெளிப்படுத்துவதாக கர்த்தர் உறுதியளித்துள்ளார். இறுதியில் அவரின் சத்தியத்தின் மூலம் என்னைச் சந்தித்தார். இயேசுவை நம்பத்தொடங்கி 10 வருடங்கள் ஆன பின்பும் நான் பாவியாகவே இருந்தேன். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம், அவர் இரத்தம் ஆகியவை குறித்த இரகசியத்தைக் கற்றபோது, பழைய ஏற்பாட்டின் விருத்தசேதனத்தையும், புதிய ஏற்பாட்டின் ஆவிக்குரிய விருத்தசேதனத்தையும் கண்டு கொண்டபோது, இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் கிடைக்கும் இரட்சிப்பின் இரகசியத்தை உணர்ந்து விசுவாசித்தேன். என் ஆத்துமா உரைந்த பனியைப்போல் வெண்மையாயிற்று.

உனக்கும் அது பொருந்தலாம். நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசித்தால், நீயும் பாவமற்றவனாவாய். நீ முழுமைபெற்றவனாய் இல்லாவிட்டாலும் கூட, நீ நீதிமானாய் இருப்பாய். இந்த உண்மைகளை உன் இதயத்தில் ஏற்றுக்கொண்டு மற்றவர்களையும் தெரிந்துகொள்ளச் செய்தால் அவர்களும் இரட்சிக்கப்பட்டு கர்த்தரை “அல்லேலூயா என்று சத்தமிட்டு ஸ்தோத்தரிப்பார்கள்.

பாவ விடுதலைப் பெற்ற சகோதர, சகோதரிகளை நான் வாழ்த்த விரும்புகிறேன். நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சித்ததால், இயேசுவை ஸ்தோத்தரிக்கிறேன். “அல்லேலூயா நாம் சந்தோஷமாக நம் பாவங்களிலிருந்து விடுதலையானோம்.

அது பெருத்த ஆசீர்வாதமாக இருப்பதால் நம் சந்தோஷத்தை வெறும் வார்த்தைகளால் கூற முடியாது. நாம் இப்பாடலைச் சேர்ந்து பாடுவோமாக. “அவர் பெயர் இரகசியமானது. எல்லா ஜீவராசிகளிடமும் இரகசியத்தை வெளிப்படுத்தவில்லை. கட்டிடம் கட்டுவோர் கற்களை ஒதுக்கி வீசியதுபோல் அவர் வீசப்பட்டார், ஆனால் அவர் பெயர் எனது இதயத்தின் விலையேறப்பட்டக் கல்லாகும்.”

இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் எல்லாப் பாவிகளையும் பாவங்களில் இருந்து இரட்சிக்க போதுமானதாக இருக்கிறது

  • நம் எல்லாப் பாவத்தையும் இதயத்திலிருந்து நீக்குவது எது?
  • இயேசுவின் ஞானஸ்நானம்.

இயேசுகிறிஸ்து தம் ஞானஸ்நானம், இரத்தம் மூலமாக இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டார். நம்மை ஆவிக்குரிய விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாக்கி, நம்மை அவர் மக்களாக்கினார். மறுபடியும் பிறந்தவர்களின் கர்த்தர் அவர்.

பாவத்திற்கு தீர்ப்பு எப்போதும் உண்டு. ஆனால் நம்மை இரட்சிக்கும்படி இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் தீர்க்கப்பட்டார். அவருடைய இரத்தத்தினால் நம்மை இரட்சித்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உயிருடன் எழுந்தார். பிதாவான கர்த்தரே இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர்.

இயேசுவின் ஜீவனே நமது ஜீவனுமாகும். கர்த்தரின் பிள்ளைகளாக நாம் இருப்பதற்கான அடையாளமும் அவரே. இயேசுவின் ஞானஸ்நானம் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டது. இயேசுவின் விலையேறப்பட்ட சிலுவை இரத்தம் நமக்காக அவர் நியாயம் தீர்க்கப்பட்டதற்கு அத்தாட்சியாகும்.

அன்பு நண்பர்களே, உங்கள் இதயத்தில் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் குறித்த நிச்சயமிருக்கிறதா? மீண்டும் கேட்கிறேன். நமது இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தின் மூலம் மட்டுமா வருகிறது? இல்லை. அது இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகிய இரண்டின் மூலமாகவும் வருகிறது.

வேதப்புரட்டன் யார் ?

  • வேதப்புரட்டன் யார்?
  • தன்னை ஆக்கினைக்குள்ளாக்கும்படி இயேசுவின் ஞானஸ்நானத்தை நம்பத் தவறுபவன் எவனோ அவன் வேதப்புரட்டன்.

அன்புள்ள நண்பர்களே நீங்கள் தினமும் பாவ அறிக்கை செய்தாலும், இயேசுவை விசுவாசித்தாலும் பாவியாகவே இருக்கிறீர்களா? இயேசுவை விசுவாசித்தபோதிலும் நீ பாவியாகவே இருந்தால் நீ ஒரு வேதப்புரட்டன். வேதப்புரட்டல் இயேசுவின் சத்தியத்தை நம்பாமையாகும். தீத்து 3:10 வேதப்புரட்டல் குறித்து பேசுகிறது. “வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைத் தவறி, தன்னிலே தானே ஆக்கினைத் தீர்ப்புடையவனாய் பாவஞ்செய்கிறவன் என்று அறிந்திருக்கிறாயே.”

தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவன் இவ்வாறு கூறுகிறான். “அன்புள்ள கர்த்தரே! நான் ஒரு பாவி. நான் உம்மை விசுவாசிக்கிறேன், ஆனால் நான் இன்னும் பாவியாயிருக்கிறேன். யார் எதைக் கூறினாலும் பரவாயில்லை, நான் பாவி. இது உண்மையென்று எனக்குத் தெரியும்.”

கர்த்தர் அவனிடம் கூறுகின்றார். “நீ இன்னும் பாவியா? என்னுடைய பிள்ளையில்லையா? அப்படியானால் நீ வேதப்புரட்டன். நரகத்தின் அக்கினியில் நீ எறியப்படுவாயாக.”

உன் இதயத்தில் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமல் இயேசுவை விசுவாசிப்பாயானால், உன் ஆவியில் பாவமிருக்கிறது என்று கர்த்தரிடம் பாவ அறிக்கை செய்து உன்னைப் பாவியென்று நீயே ஆக்கினைத்தீர்ப்பு செய்தால், கர்த்தர் முன் நீ ஒரு வேதப்புரட்டன்.

  • இரட்சிப்புக்குறித்த கர்த்தரின் சாட்சியம் யாது?
  • அது நீர், இரத்தம் மற்றும் ஆவியாகும்.

யாரெல்லாம் நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் விசுவாசிக்கிறார்களோ, யாரெல்லாம் கர்த்தரின் மக்கள் ஆனார்களோ, யாரெல்லாம் தம் பாவங்களிலிருந்து கழுவப்பட்டார்களோ அவர்கள் நீதிமான்கள். இயேசுவை விசுவாசிக்கும் நீ இன்னும் எப்படி பாவியாயிருக்கிறாய்? பரலோக ராஜ்ஜியத்தினுள் பாவியால் பிரவேசிக்க முடியாது.

இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் நீதிமான்கள் ஆனவர்கள் யாரோ, அவர்கள் இருதயத்தில் கர்த்தருக்கு சாட்சி பகருகிறார்கள். இயேசுவின் ஞானஸ்நானமும் அவர் இரத்தமும் சாட்சியாகும். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் செய்த இரட்சிப்பின் வேலை இதுவே.

ஆகவே, நம்முடைய பாவங்களையெல்லாம் எடுத்துப்போட்ட நற்செய்தியான இயேசுவின் ஞானஸ்நானத்தை ஒருவன் விசுவாசிக்க மறுத்தால் அவன் கர்த்தரிடமிருந்து துண்டிக்கப்படுகிறான்.

அன்புள்ள விசுவாசத்தின் சகோதர, சகோதரிகளே, உங்கள் இருதயத்தில், பாவிகளின் இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தினால் மட்டுமல்ல. நீராகிய இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் உண்டாயிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

யாரெல்லாம் இயேசு இவ்வுலகில் செய்த வேலைகளை நம்புகிறார்களோ, யாரெல்லாம் நீர், இரத்தம் மற்றும் ஆவியானவரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் சகல பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவார்கள். இதுவே நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவியானவர் குறித்த உண்மையும் ஞானமுமாய் இருக்கிறது.

இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்களனைத்தையும் துடைத்தார். ஆகவே, அவரின் மூலம் எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட முடியும். இப்பொழுது நீ உண்மையாக இயேசுவை நம்பினால், எந்த வழியிலும் நீ பாவியாக இருக்கமுடியாது.

இயேசு நம்மை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். வழித் தப்பிப்போன எல்லா ஆத்துமாக்களையும் அவர் இரட்சித்தார். அவர்கள் கர்த்தரின் உடமையானதால் சாத்தானின் வஞ்சனைகளிலிருந்து தூரமாகிப் போனார்கள். காணாமல் போன ஆத்துமாக்களை கண்டுபிடிக்க இயேசு விரும்புகிறார். இயேசுவின் மூலமாக நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவியானவரால் கர்த்தர் பணியாற்றுகிறார். அவர் நம்மை அழைத்தார். அவரால் இப்பொழுது நமது பாவங்களிலிருந்து விடுதலையாகி இரட்சிக்கப்படுகிறோம்.

இந்த உயர்ந்த சத்தியத்தை நீ நம்புகிறாயா? நான் உன்னிடம் கூறுவது இரட்சிப்பு வெறும் இரத்தத்தினால் மட்டும் வருவதல்ல. அது இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் ஆகிய இரண்டினாலும் வருவதாகும். இரத்தத்தினால் மட்டுமே இரட்சிக்கப்பட்டதாக கூறுபவர்கள் அவர்கள் இருதயத்தில் பாவமிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

நாமெல்லாம், இரட்சிக்கப்படுவதற்கு இயேசுவின் இரத்தத்தை நம்புவது மட்டும் போதும் என்று நினைக்கிறோம். முன்பு இப்படி நினைத்தோம். இப்பொழுது இது போதாது என்று புரிந்து கொள்ளவேண்டும். நாம் நீர், இரத்தம் மற்றும் ஆவியின் மூலம் வந்த இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறந்தோம்.

இயேசுவின் ஞானஸ்நானத்திலும் அவரின் இரத்தத்திலும் விசுவாசம் வைப்பதன் மூலமாக எல்லா பாவிகளும் மறுபடியும் பிறக்கமுடியும் (1 யோவான் 5:5-10) இயேசுவை துதிப்போமாக. அல்லேலூயா! *






மாறுதலடைந்த ஆசாரித்துவம்

【3-7】<எபிரெயர் 7:1-28>

  •  

<எபிரெயர் 7:1-28>

இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாய் இருந்தான்; ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய் அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசம பாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும் பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சாமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும். இவன் தகப்பனும் தாயும், வம்ச வரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் உடையவனாய் இராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். இவன் எவ்வளவு பெரியவனாய் இருக்கிறான் பாருங்கள்: கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்கு தசம பாகம் கொடுத்தான். லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அறையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசம பாகம் வாங்குகிறதற்கு கட்டளைப் பெற்றிருக்கிறார்கள். ஆகிலும் அவர்களுடைய வம்ச வரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசம பாகம் வாங்கி வாக்குத்தத்தங்களை பெற்றவனை ஆசீர்வதித்தான். சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்கு சந்தேகமில்லை. அன்றிலும் இங்கே மரிக்கிற மனுஷர்கள் தசம பாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சி பெற்றவன் வாங்கினான். அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டு போனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அறையில் இருந்தபடியால், தசம பாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய் தசம பாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லாவோ நியாயப் பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணபடுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின் படி அழைக்கப்படாமல் மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்ப வேண்டுவதென்ன? ஆசாரித்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்பட வேண்டியதாகும். இவைகள் எவரைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறொரு கோத்திரத்திற்குள்ளானவராய் இருக்கிறாரே; அந்த கோத்திரத்தில் ஒருவனாகிலும், பலி பீடத்து ஊழியம் செய்ததில்லையே. நம்முடைய கர்த்தர் யூதா கோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாய் இருக்கிறது; அந்த கோத்திரத்தாரைக் குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதனால், மேற் சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. அவர் மாமிச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமானத்தின் படி ஆசாரியராகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்கு தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின் படியே ஆசாரியர் ஆனார். முந்தின கட்டளை பலவீனம் உள்ளதும் பயனற்றதுமாய் இருந்ததின் நிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப் பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். அன்றியும், அவர்கள். ஆனையில்லாமல் ஆசாரியராக்கப் படுகிறார்கள். இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின் படி என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர் என்று கர்ததர் ஆணையிட்டார். மனம் மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார். ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்கு பிணையாளியானார். அன்றியும், அவர்கள் மரணத்தின் நிமித்தம் நிலைத்திருக்க கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராய் இருக்கிறார்கள். இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவம் உள்ளவராய் இருக்கிறார். மேலும் தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவருமாயிருக்கிறார். பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும் பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாய் இருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராய் இருக்கிறார். அவர் பிரதான ஆசாரியர்களைப் போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும் பின்பு ஜங்களுடைய பாவங்களுக்காகவும், நாடோரும் பலியிட வேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரே தரம் செய்து முடித்தார். நியாயப்பிரமானமானது பலவீனமுள்ள மனுஷர்களை பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது. நியாயப் பிரமாணத்திற்கு பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமும் என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.”

இயேசு பரலோக ஆசாரியர்

  • யார் பெரியவர், தலைமை ஆசாரியன் மெல்கிசேதேக்கா அல்லது ஆரோனின் வம்சத்தை சேர்ந்த தலைமை ஆசாரியனா?
  • தலைமை ஆசாரியன் மெல்கிசேதேக்கு.
  •  

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் மெல்கிசேதேக்கு என்னும் தலைமை ஆசாரியன் இருந்தான். ஆபிரகாமின் காலத்தில் கெதர்லாகோமேரும் மற்ற ராஜாக்களும் ஒன்று சேர்ந்து சோதோம் கொமாரா என்ற நகரங்களின் பொருட்களை எடுத்துச் சென்றனர். ஆபிரகாம் தன் வீட்டில் பிறந்த வேலையாட்களுக்கு ஆயுதம் தரிப்பித்து, கெதர்லாகோமேர் கூட்டணிக்கு எதிராக அவர்களை போருக்கு வழி நடத்தினான்.

அங்கே ஏலாம் நாட்டு ராஜாவான கெதர்லாகோமேரையும் அவன் கூட்டணியினரையும் வென்று, ஆபிரகாம் தன் சகோதரனின் மகன் லோத்தின் உடமைகளை திரும்பி எடுத்துவந்தான். ஆபிரகாம் தன் பகைவர்களை வென்று திரும்பி வருகையில் உன்னதமான தேவனுடைய ஆசாரியனும் சாலேமின் ராஜாவுமான மெல்கிசேதேக்கு, அப்பமும், திராட்சை இரசமும் கொண்டுவந்து ஆபிரகாமை ஆசீர்வதித்தான். ஆபிரகாம் தசம பாகத்தை அவனிடம் செலுத்தினான். (ஆதியாகமம் 14 ஆம் அதிகாரம்)

வேதாகமத்தில், தலைமை ஆசாரியன் மெல்கிசேதேக்கின் சிறப்புகளைப் பற்றியும் அவனையொத்த தலைமை ஆசாரியர்களைக் குறித்தும் விவரமாக எழுதப்பட்டுள்ளது. தலைமை ஆசாரியனான மெல்கிசேதேக்கு “சமாதானத்தின் ராஜா”, “நீதியின் ராஜா”, தகப்பனில்லாது வந்தவன், தாயில்லாது வந்தவன், வம்சமில்லாதவன், கர்த்தரின் குமாரன் போன்றே படைக்கப்பட்டவன் என்று வர்ணிக்கப்பட்டுள்ளான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆசாரியனாகவே இருந்தான்.

வேதாகமம் இயேசுவின் சிறப்புகளை கவனமாக கருத்தில் கொள்ளச் சொல்லுகிறது. அவர் மெல்கிசேதேக்கைப் போன்ற உயர்ந்த ஆசாரியர். புதிய ஏற்பாட்டின் தலைமை ஆசாரியரான இயேசு, பழைய ஏற்பாட்டின் தலைமை ஆசாரியனான ஆரோனுடன் ஒப்பிடத்தக்கவர்.

லேவியின் சந்ததியினர் ஆசாரியர்களாகி, மக்களிடமிருந்து, அதாவது சகோதரர்களிடமிருந்து தசமபாகம் பெற்றார்கள். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்கள். ஆனால் ஆபிரகாம் தலைமை ஆசாரியனான மெல்கிசேதேக்கிடம் தசம பாகத்தைக் கொடுத்தபோது, லேவி இன்னும் தன் தகப்பன் மடிக்குள் இருந்தான்.

பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள் இயேசுவைவிட மேலானவர்களா? இது குறித்து வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைமை ஆசாரியர்களைவிட இயேசு உயர்ந்தவரா? யார் யாரை ஆசீர்வதிப்பது? எபிரெயர் நிருபத்தை எழுதியவன் தொடக்கம் முதல் இது குறித்து கூறுகிறான். “சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.” ஆபிரகாம் தலைமை ஆசாரியனான மெல்கிசேதேக்கின் மூலம் ஆசீர்வாதம் பெற்றான்.

நம் விசுவாசத்தில் வாழ்வது எப்படி? பழைய ஏற்பாடு கூறும், ஆசரிப்புக்கூடாரத்தில் கர்த்தர் கட்டளையிட்ட பலி முறைகளின் மீது சார்ந்திருப்பதா? அல்லது பரலோகத்தின் உயர்ந்த ஆசாரியராக நீர் மற்றும் ஆவியினால் பலியிடப்பட்டவருமான, நம்மிடம் வந்த இயேசுவில் சார்ந்திருப்பதா?

எந்தக் கருத்தை நாம் தேர்ந்தெடுக்கிறோமோ, அதனைப் பொருத்து நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவோ, மோசம் போனவர்களாகவோ ஆகிறோம். தேவ வாக்கின்படி தினமும் பலியிடுகிறோமா? அல்லது நீராலும் ஆவியாலும், தன்னைத்தானே ஒரே தரம் பலியாகக் கொடுத்த இயேசுவின் இரட்சிப்பைத் தெரிந்து கொண்டோமா? இவையிரண்டில் ஏதாவது ஒன்றை நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேல் மக்கள் ஆரோன் மற்றும் லேவியின் சந்ததியினரை நோக்கிப் பார்த்தனர், புதிய ஏற்பாட்டின் இந்நாட்களில் யார் பெரியவர்? இயேசுவா அல்லது ஆரோனையொத்த ஆசாரியரா என்று நாம் கேட்கப்பட்டால், இயேசு தான் பெரியவர் என்று பதில் கூறலாம். மக்களுக்கு இக்காரியம் தெளிவாகத் தெரிந்தாலும், சிலர் தம் சொந்த நம்பிக்கைகளையே பின் பற்றுகின்றனர்.

வேதாகமம் இதற்கு மிகச் சரியான பதிலைக் கொடுக்கிறது. அது இயேசு, வேறொரு கோத்திரத்தை, இதுவரை பலி பீடத்தில் யாரும் ஆராதனைச் செய்திராத சந்ததியிலிருந்து பரலோக ஆசாரியரானார் என்று கூறுகிறது. “ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்பட வேண்டியாதாகும்.”

கர்த்தர் மோசே மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளைகளையும், 613 விரிவான சட்டங்களையும் கொடுத்தார். மோசே கர்த்தரின் கட்டளைப்படியும் அவரின் சட்டப்படியும் வாழுமாறு மக்களிடம் கூறினான். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

  • கர்த்தர் முதல் உடன்படிக்கையை விட்டுவிட்டு இரண்டாம் உடன்படிக்கை செய்ததேன்?
  • முதல் உடன்படிக்கையின்படி வாழ மனிதன்மிகவும் பலவீனமானவன்.

வேதாகமத்தில், இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய கட்டளைகளின் படி வாழ்வதாக உறுதியெடுத்தனர். இவற்றை முதல் ஐந்து நூல்களான, ஆதியாகமம், யாத்திராகமம், லேவியாரகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவற்றில் காணலாம். கர்த்தர் ஔவ்வொரு கட்டளைகளையும் அறிவிக்க, எந்தத் தயக்கமும் இன்றி “ஆமாம்” என்று அவர்கள் அறிவித்தனர்.

ஆயினும் உபாகமத்திற்கு பிறகு, யோசுவா காலமுதல் அவர்கள் கர்த்தரின் கட்டளைகளின்படி வாழவில்லை என்பதை நாம் காணலாம். நியாயாதிபதிகள் முதல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் காலங்களில் அவர்கள் தம் தலைவர்களை மதிக்காமல் வாழத் தொடங்கினர். அதன்பிறகு, பரிசுத்த ஆசரிப்புக்கூடார பலியிடும் முறையை மாற்றுமளவிற்கு அழுகிப்போனார்கள்.

இறுதியாக மல்கியா காலத்தில், கர்த்தரின் கட்டளைப்படி களங்கமில்லாத விலங்குகளைத் தவிர்த்து, பலியிடத்தகாத விலங்குகளை அழைத்து வந்தனர். அவர்கள் ஆசாரியர்களிடம் “தயவுசெய்து இதனைப் பாருங்கள். இதனை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கேட்டனர். கர்த்தரின் கட்டளைப்படி பலியிடுவதைத் தவிர்த்து, அதனைத் தாறுமாறாக்கினர்.

பழைய ஏற்பாட்டு கால முழுவதும் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் கட்டளையை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் இம்முறையில் கிட்டும் இரட்சிப்பைக் குறித்து மறந்துபோயும், அசட்டையாகவும் இருந்தார்கள். ஆகவே கர்த்தர் பலியிடும் முறையை மாற்ற வேண்டியதாய் இருந்தது. எரேமியாவில் கர்த்தர் சொல்லுகிறார். “இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.”

எரேமியா 31:31-34 ஐப் பார்ப்போம். “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப் போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்து கொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும், எல்லாரும் என்னை அறிந்து அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினயாதிருப்பேன்.”

தானொரு புதிய உடன்படிக்கைச் செய்யப்போவதாக கர்த்தர் கூறினார். கர்த்தர் இஸ்ரவேல் மக்களுடன் ஏற்கெனவே ஔர் உடன்படிக்கையைச் செய்திருந்தாலும் மக்கள் அவரின் வாக்குப்படி நடக்கத் தவறினர். ஆகவே, அவரின் மக்களுடன் புதியதொரு இரட்சிப்பின் உடன்படிக்கை ஒன்றைச் செய்ய தீர்மானித்தார்.

அவர்கள் கர்த்தர் முன்பாக, “உம்மை மட்டுமே நாம் தொழுது கொள்ளுவோம். உம்முடைய வார்த்தைகளின்படியும் கட்டளைகளின் படியும் வாழ்வோம்: என்று உறுதிமொழி கூறினார்கள். கர்த்தர் அவர்களிடம் “எனக்கு முன்பாக உங்களுக்கு வேறெந்த தெய்வங்களும் வேண்டாம்.” என்றார். அதற்கு இஸ்ரவேல் மக்கள் “நிச்சயமாக நாம் வேறெந்த தெய்வங்களையும் வணங்க மாட்டோம். நீரே எங்களின் ஒரே கர்த்தர். எங்களுக்கு வேறெந்த தெய்வங்களும் உண்டாயிருக்காது.” என்று உறுதி கூறினார்கள். ஆனால் இந்த உறுதிமொழியைக் கடைப்பிடிக்கத் தவறினார்கள்.

கர்த்தருடைய சட்டங்களின் கரு பத்துக் கட்டளைகளில் இருக்கிறது. “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. ஔய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக. கொலைச் செய்யாதிருப்பாயாக. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20ஆம் அதிகாரம்)

கர்த்தருடைய கட்டளைகள் 613 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நம் வாழ்நாள் முழுதும் அதனைக் கடைபிடிக்கும்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது. “மகளை என்னச் செய்யக்கூடாது? மகனை என்னச் செய்யக்கூடாது? மாற்றுத் தாயை என்னச் செய்யக்கூடாது....” கர்த்தரின் சட்டம் நல்ல காரியங்களைச் செய்யும் படியும் கெட்ட காரியங்களைச் செய்யாதிருக்கும்படியும் கட்டளையிட்டது. இவையே பத்துக் கட்டளைகளும் 613 விரிவான பிரிவுகளுமாகும். ஆயினும் எல்லா மனிதர்களில் ஒருவனாலும், கர்த்தரின் சட்டப்பிரிவுகள் அனைத்தையும் கடைப்பிடிக்கக் கூடாததாக இருந்தது, ஆகவே கர்த்தர் அவர்களை இரட்சிக்கும்பொருட்டு வேறு வழியொன்றை அறிவிப்பதில் தீவிரமாயிருந்தார்.

ஆசாரியத்துவம் எப்போது மாற்றப்பட்டது. இயேசு இவ்வுலகிற்கு வந்த பிறகு ஆசாரியத்துவம் மாற்றப்பட்டது. ஆரோனையொத்த சகல ஆசாரியர்களிடமிருந்தும் இயேசு ஆசாரியத்துவத்தை ஏற்றுக்கொண்டார். பரிசுத்த ஆசரிப்புக்கூடார பலி முறைகளை அவர் கைவிட்டார். அது லேவியையொத்த ஆசாரியர்களின் இயற்கையான உரிமையாக இருந்தது. அவர் ஒருவரே பரலோக ஆசாரித்துவத்தை ஆராதித்தார்.

அவர் ஆரோனின் சந்ததியினராக இவ்வுலகத்திற்கு வரவில்லை. ராஜாக்களின் குடும்பமாகிய யூதாவின் சந்ததியில் வந்தார். ஞானஸ்நானம் மூலமும், சிலுவை இரத்தம் மூலமும் தம்மை பலியாக அர்ப்பணித்து எல்லாப் பாவிகளையும் அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.

தம்மைப் பலியாக அவர் கொடுத்ததால், நம் பாவப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக்கொடுத்தார். தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலமாக பலியிட்டு மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டார். அவர் ஒரே தரம் எல்லாப் பாவங்களுக்கும் நிரந்தரப் பலியாக தன்னைக் கொடுத்தார்.


ஆசாரித்துவம் மாறியபோது சட்டங்களும் மாறின

  • இரட்சிப்பின் சட்டம் எவ்வாறு மாறியது?
  • இயேசுகிறிஸ்து நிரந்தர பலியானதால்.

அன்பு நண்பர்களே, பழைய ஏற்பாட்டின் ஆசாரித்துவம் புதிய ஏற்பாட்டில் மாற்றப்பட்டது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில், கடந்த வருடம் முழுவதும் இஸ்ரவேலர்கள் செய்தப் பாவங்களுக்காக லேவி குடும்பத்தினனும் ஆரோனின் சந்ததியினனுமான தலைமை ஆசாரியன், பாவ விடுதலைக்காக பலியாராதனைச் செய்தான். தலைமை ஆசாரியன் மிகவும் பரிசுத்தமான இடத்திற்குள் பிரவேசித்தான். அவன் பலியிட்ட மிருகத்தின் இரத்தத்துடன், கிருபாசனம் முன் சென்றான். திரைக்குப் பின்னாலிருந்த மிகவும் பரிசுத்தமான இடத்திற்குள் தலைமை ஆசாரியன் மட்டுமே போக முடியும்.

ஆனால் இயேசுவின் வருகைக்குப் பிறகு, ஆரோனின் ஆசாரித்துவம் அவரிற்கு மாற்றப்பட்டது. இயேசு நிரந்தர ஆசாரியரானார். எல்லா மனிதர்களும் தம் சகலப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் படும்படியாக தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்ததன் மூலம் அவர் நிரந்தர ஆசாரியராக ஆராதனை நடத்தினார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தன் மக்களுக்காக ஆராதனை ஏறெடுக்கும் முன் தலைமை ஆசாரியனும் ஒரு காளையின் தலையில் கைவைத்து தன் பாவங்களிலிருந்து விடுதலைப் பெற வேண்டியிருந்தது. அவனுடையப் பாவங்களை “கர்த்தரே நான் பாவங்களை இடமாற்றம் செய்தேன் என் கூறி கை வைத்து தன் பாவங்களை இடமாற்றம் செய்தான். அதன் பிறகு அந்த மிருகத்தைக் கொன்று, அதன் இரத்தத்தை ஏழுமுறை கிருபாசனத்தின் மீது தெளித்தான்.

தலைமை ஆசாரியனான ஆரோனே நிறைவற்றவனென்றால் மக்களின் நிலை என்னவென்று நினைத்துப் பாருங்கள். லேவியின் மகன், தலைமை ஆசாரியனான ஆரோனே ஒரு பாவி, அதனால் அவன் தன் பாவங்களிலிருந்தும், தன் குடும்பத்தாரின் பாவங்களிலிருந்தும் மீட்கப்பட பலி செலுத்தவேண்டியிருந்தது.

எரேமியா 31 இல் கர்த்தர் கூறுகிறார். “நான் உடன்படிக்கையை உடைத்துப்போடுவேன். நான் உன்னுடன் உடன்படிக்கைச் செய்தேன். அதனை நீ கடைப்பிடிக்கவில்லை. ஆகவே, உன்னை பரிசுத்தமாக்காத அந்த உடன்படிக்கையை தூரவைத்துவிட்டு புதியதோர் இரட்சிப்பின் உடன்படிக்கையை கொடுப்பேன். என்னுடைய கட்டளைகளினால் இனிமேல் உன்னை இரட்சிக்கப்போவதில்லை. ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் இரட்சிப்பை அருளிச் செய்வேன்

கர்த்தர் நமக்கு புதிய உடன்படிக்கையைக் கொடுத்தார். நேரம் வந்தபோது, இயேசு இவ்வுலகிற்கு மனிதனைப்போன்றே வந்தார். உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கும்பொருட்டு தன்னை அர்ப்பணித்தார். சிலுவையில் இரத்தஞ்சிந்தினார். அவரை விசுவாசிப்போரை இரட்சிக்கிறார். தம் ஞாஸ்நானம் மூலம் மனித குலத்தின் சகல பாவங்களையும் எடுத்துப்போட்டார்.

கர்த்தரின் சட்டங்கள் தூர வைக்கப்பட்டு, நிரப்பப்பட்டன: இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் கட்டளைப்படி வாழ்ந்திருந்தால், அவர்கள் இரட்சிப்படைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யத் தவறினார்கள். “பாவத்தை அறிகிற அறிவு, நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால்.” (ரோமர் 3:20)

தாம் பாவிகள் என்பதை இஸ்ரவேலர்கள் உணரவும் சட்டம் அவர்களை விடுதலையாக்காது என்பதை உணரவும் வேண்டுமென்று கர்த்தர் விரும்பினார். கர்த்தர் அவர்களின் கிரியைகளின் நிமித்தமல்ல, இரட்சிப்பின் சட்டமாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் அவர்களை இரட்சித்தார். அவரின் அளவில்லாத அன்பின் மூலம், கர்த்தர் ஒரு புதிய உடன்படிக்கையை நமக்குக் கொடுத்தார். அதன்படி இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் மூலமாக, இவ்வுலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும், நாம் இரட்சிக்கப்பட முடியும்.

இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றின் உட்பொருளை அறியாது இயேசுவை நீ விசுவாசித்தால், உன் நம்பிக்கை வீண். அப்படிச் செய்வதானால் இயேசுவை மொத்தமாக நீ விசுவாசிக்காமல் இருந்த போதை விட அதிக தொந்திரவில் இருக்கிறாய்.

கர்த்தர் மனிதர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு புதிய உடன்படிக்கைச் செய்வதாகக் கூறினார். அதன்பலனாக, நம் செய்கைகளின் பலனாக, நாம் இரட்சிக்கப்படவில்லை; ஆனால் நீதியின் இரட்சிப்பு சட்டமாகிய நீர் மற்றும் இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டோம்.

இது அவரின் நிரந்தர வாக்குத்தத்தமாகும். இயேசுவை நம்புவோருக்கு இவ்வாக்குதத்தத்தை நிறைவேற்றினார். இயேசுவின் சிறப்புகளைப் பற்றியும் அவர் நம்மிடம் கூறினார். பழைய ஏற்பாட்டின் ஆரோனை ஒத்த ஆசாரியர்களுடன் ஒப்பிட்டு இயேசு எவ்வளவு பெரியவர் என்று நம்மிடம் கூறினார்.

இயேசுவின் இரத்தம் நீர் ஆகியவற்றால் கிட்டும் இரட்சிப்பை நாம் விசுவாசிப்பதால் சிறப்பானவர்களானோம். இதனை தயவுசெய்து எண்ணிப்பாருங்கள். உங்கள் போதகர் எத்தனைப் படித்திருந்தாலும், எத்தனை அழகாக பேசினாலும் அவர் எப்படி இயேசுவை விட பெரியவராக முடியும்? அதற்கு வழியே இல்லை. நீர் மற்றும் இரத்தத்தை விசுவாசிப்பதால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படமுடியும். கர்த்தரின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதால் ஒருபொழுதும் இரட்சிப்படைய முடியாது. ஏனெனில் ஆசாரித்துவம் மாறியதால் இரட்சிப்பிற்கான சட்டமும் மாறுதல் அடைந்தது.

மேன்மையான கர்த்தரின் அன்பு

  • எது மேலானது, கர்த்தரின் அன்பா அல்லது அவரின் சட்டமா?
  • கர்த்தரின் அன்பு.

இயேசுவை விசுவாசித்தால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுவோம். இயேசு நம்மை எப்படி இரட்சித்தார்? நமக்கு கர்த்தரின் அன்பு எத்தனைப் பெரிது என்று தெரியவேண்டும். அப்படியானால் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கும், கர்த்தருடைய அன்பின் மேன்மைக்கும் உள்ள வித்தியாசமென்ன?

மரபு சார்ந்தவர்கள் தங்கள் பிரிவின் கொள்கைகளுக்கும், தம் சொந்த அனுபவங்களுக்கும், கர்த்தரின் வார்த்தைக்கும் மேலாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆயினும், உண்மையானதும், இயேசுவுக்குள் முழுமையான ஆவிக்குரிய விசுவாசமும்; நீர் மற்றும் ஆவியால் நிறைவேற்றப்பட்ட இரட்சிப்பின் மேன்மையை விசுவாசிப்பதால் வரும்.

இன்றும் கூட, தம் மூலப் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகவும், தம் அன்றாடப் பாவங்களுக்காக தினந்தோறும் மனம் வருந்தி ஜெபிக்கவேண்டுமென்றும் கூறுவோர் அநேகர். நிறைய மனிதர்கள் இதனை நம்பி, பழைய ஏற்ப்பாட்டின் கட்டளைகளின்படி தங்கள் வாழ்வினில் வாழ முயல்கிறார்கள். அவர்களுக்கு நீர் மற்றும் ஆவியால் வந்த இயேசு அளிக்கும் இரட்சிப்பின் மேன்மையைக் குறித்து எதுவும் தெரியாது.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ரவேலர்கள் தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படும்பொருட்டு, கர்த்தரின் சட்டப்படி வாழவேண்டியிருந்தது. ஆயினும் அவர்கள் இரட்சிப்படையவில்லை. ஆயினும் கர்த்தருக்கு நாம் பலவீனர்கள் என்றும், நாம் முழுமையடையாதவர்கள் என்றும் தெரியுமாகையால் அவர் தம் கட்டளைகளைத் தள்ளி வைத்தார். நம்முடைய செய்கைகளினால் எப்பொழுதும் நாம் இரட்சிப்படைய முடியாது. இயேசு தம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் நம்மை இரட்சிப்பதாக கூறினார். அவர் “நான் உங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் உங்களை விடுதலையாக்குவேன் என்றார்.” கர்த்தர் இதனை ஆதியாகமத்தில் தீர்க்கத்தரிசனமாக உரைத்தார்.

“அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” (ஆதியாகமம் 3:15). ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து விழுந்துபோய், அத்திமர இலைகளினால் ஆடைசெய்து கர்த்தரிடமிருந்து தம் பாவங்களை மறைக்கும்படியாக அவற்றை அணிந்தனர். ஆயினும் கர்த்தர் அவர்களை அழைத்து தோலினாலான ஆடையை இரட்சிப்பின் அடையாளமாக அவர்களுக்கு அணிவித்தார். ஆதியாகமம் இரண்டுவிதமான இரட்சிப்பின் ஆடைகளைக் குறித்து கூறுகிறது. ஒன்று அத்திமர இலைகளினால் ஆனது மற்றது தோலிலானது. எது சிறந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள். தோலினால் செய்யப்பட்ட ஆடையே சிறந்தது. ஏனெனில் மனிதனை பாதுகாக்கும்படி ஒரு மிருகத்தின் உயிர் எடுக்கப்பட்டது.

அத்திமர இலைகளினால் செய்யப்பட்ட ஆடை உதிர்ந்து போகும். அத்தியிலை ஒரு கை வடிவத்தில் அமைந்திருப்பதை அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, அத்திமர இலையை ஆடையாக அணிவது நற்செய்கைகளினால் பாவங்களை மறைப்பது போன்றதாகும். நீங்கள் அத்திமர இலைகளினால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கீழே உட்கார்ந்தீர்களானால் சீக்கிரத்தில் அது துண்டு துண்டாகிவிடும். நான் சிறுவனாக இருக்கையில் சிப்பாய்போல் விளையாடுவதற்கு, அரரூட் இலையில் கவசம் செய்வேன். அவற்றை நான் எத்தனைக் கவனமாக உடுத்தாலும் நாளின் முடிவில் அவை பிய்ந்துபோய்விடும். அதுபோல மனிதகுலத்தின் மாமிசம் பரிசுத்தப் படுதலை கடினமாக்குகிறது.

ஆயினும் நீர் மற்றும் இரத்தம் அளிக்கும் இரட்சிப்பு, இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் ஆகியவை நிறைய பாவிகளை இரட்சித்துள்ளது. இது கர்த்தரின் மேன்மையான அன்பைக் குறித்து சாட்சி பகறுகின்றது. இந்தப்படியே கர்த்தரின் அன்பு அவர் சட்டத்தினைவிட மேலானதாகும்.

கர்த்தரின் சட்டத்தில் இன்னும் விசுவாசம் வைத்திருப்பவர்கள்

  • மரபுச் சார்ந்தவர்கள் தம் செய்கைகளின் மூலம் தினமும் புதிய ஆடைகளைச் செய்வதேன்?
  • அவர்கள் செய்கைகளினால், தாம் நீதிமான்களாக முடியாது என்று அவர்களுக்கு தெரியாததால்.

அத்திமர இலையினால் தம் ஆடையைத் தயாரிப்பவர்கள் மரபுச் சார்ந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். இத்தகைய தவறுதலாக வழி நடத்தப்பட்ட விசுவாசிகள் தம் ஆடையை அடிக்கடி மாற்றவேண்டியுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் அவர்கள் ஆலயத்திற்கு செல்லும்போதும் அவர்கள் புதிய ஆடை ஒன்றைத் தயாரிக்கவேண்டும். “அன்புள்ள கர்த்தரே, கடந்த வாரம் அநேக பாவங்களைச் செய்தேன். ஆயினும் கர்த்தரே, நீர் என்னைச் சிலுவையில் இரட்சித்ததை விசுவாசிக்கிறேன். கர்த்தரே, தயவுசெய்து சிலுவை இரத்தத்தின் மூலம் என்னைக் கழுவும்!” இப்படிச் செய்வதனால் ஒரு புதிய ஆடையை, அந்த இடத்தில், அந்த நேரத்தில் தைத்தார்கள். “ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அல்லேலூயா!”

ஆனால் வெகுசீக்கிரமாக இன்னுமொரு ஆடையை வீட்டில் தயாரிக்கவேண்டும். ஏன்? ஏனெனில் அவர்களுடைய பழைய ஆடைகள் கிழிந்து போயின. “அன்புள்ள கர்த்தரே, கடந்த மூன்று நாட்களில் மீண்டும் பாவம் செய்தேன். தயவு செய்து மன்னியும்.” அவர்கள் மீண்டும் மீண்டும் மனம் வருந்துதலான ஆடையை அணிகிறார்கள்.

தொடக்கக் காலத்தில், ஆடையானது அநேக நாட்களுக்கு வரும், ஆனால் சில காலத்திற்கு பிறகு, ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆடை அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அவர்களால் கர்த்தரின் சட்டப்படி எப்பொழுதும் வாழ முடியாதாகையால், தம்மைக் குறித்து வெட்கம் கொள்கிறார்கள். “ஓ, இது மிகவும் வெட்கமாக இருக்கிறது. கர்த்தரே, ஓ, கர்த்தரே நான் மீண்டும் பாவம் செய்தேன்!” மனம் வருந்துதலான புதிய ஆடையை அவர்கள் தயாரிக்கவேண்டும். “ஓ, கர்த்தரே, இன்று அத்திமர இலைகளினால் ஆடை தயாரிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.” புதிய ஆடையைத் தயாரிக்க அவர்கள் கஷ்டப்பட்டு வேலைச் செய்கிறார்கள்.

இத்தகைய மனிதர்கள் கர்த்தரை கூப்பிட்டால் அது பாவ அறிக்கைச் செய்யவே. தம் உதடுகளைக் கடித்துக் கொண்டு கட~வுளே! என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டுத் தினமும் ஒரு புதிய ஆடையைத் தயாரிக்கிறார்கள். அப்புறம் அவர்கள் களைப்படைந்தபின் என்னவாகின்றது?

வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ மலைகளுக்குச் சென்று உபவாசம் இருக்கிறார்கள். அவர்கள் பலமுள்ளதும் கடினமாக உழைக்கக்கூடியதுமான ஆடைகளை முயன்று தயாரிக்கிறார்கள். “கர்த்தரே, என் பாவங்களைக் கழுவிப்போடும், என்னைப் புதிதாக்கும். நான் உம்மை நம்பியிருக்கிறேன், கர்த்தரே.” இரவில் ஜெபிப்பது நல்லது என்று நினைக்கிறார்கள். ஆகவே, பகல் நேரங்களில் நன்கு தூங்கி இருட்டும் வேளை தொடங்கிய உடனேயே தம் பலத்தையெல்லாம் உபயோகித்து மரக்கிலைகளில் தொங்கிக்கொண்டோ, இருட்டான குகைக்களுக்குள்ளே போயோ, கர்த்தரை நோக்கி கூக்குரலிடுகிறார்கள். “கர்த்தரே, நான் விசுவாசிக்கிறேன்!” “நான் மனம் வருந்தி என் இருதயத்தை சோகமான மனதால் நிறைத்தேன்.” அவர்கள் சத்தமிட்டு ஜெபித்து கத்துகிறார்கள். “நான் விசுவாசிக்கிறேன்.” இம்முறைகள் மூலமாக அவர்கள் சிறப்பான ஆடைகளைத் தயாரிக்கிறார்கள். அது வெகு நேரம் உழைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் அவை அப்படி இருப்பதில்லை.

மலையில் ஜெபம் செய்து கீழிறங்கும்போது எத்தனை பலமாக இருக்கிறது. தென்றல் காற்றைப் போலவும், வசந்த கால மழை; மரங்கள், பூக்கள் மீது பொழிவது போல், அவர்கள் ஆத்துமா சந்தோஷத்தினாலும் வல்லவரின் கிருபையினாலும் நிறைந்திருக்கிறது. மலைகளின் மேலிருந்ததைவிட ஆத்துமா சுத்தமாக இருப்பதை உணர்ந்து, புதிய சிறப்பு ஆடைகளுடன் உலகினை எதிர் கொள்ளுகிறார்கள்.

ஆனால் அவர்கள் தங்கள் இல்லத்திற்கும் ஆலயத்திற்கும் திரும்பி வாழத்தொடங்கும்போது, அவ்வாடைகள் அழுக்காகி கிழியத் தொடங்குகின்றன. அவர்களுடைய நண்பர்கள் “நீ எங்கே போயிருந்தாய்?” என்று கேட்கிறார்கள்.

நல்லது, சிறிது நேரம் சற்று தூரமாகச் சென்றிருந்தேன்.”

நீ சற்றே எடையிழந்திருப்பதுபோல் தோன்றுகிறாய்.”

நல்லது, ஆமாம், ஆனால் அது வேறு ஒரு கதை.”

அவர்கள் தாம் உபவாசமிருந்ததை காட்டிக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் ஆலயத்திற்குச் சென்று ஜெபிக்கிறார்கள். “நான் பெண்களை இச்சிக்கமாட்டேன். பொய் சொல்லமாட்டேன். அயல் வீட்டினை நான் இச்சிக்க மாட்டேன். எல்லா மக்களையும் நேசிப்பேன்.”

ஆனால் அவர்கள் ஔர் அழகான பெண்ணை மெலிந்த கால்களுடன் கண்டால், அவர்கள் இதயத்திலுள்ள பரிசுத்தம் நொடியில் காமமாகிவிடுகிறது. “அவள் ஆடை எத்தனைக் குறைவாக இருக்கிறது பார்! அவள் ஆடை சிறியதாக சிறியதாக ஆகிறது! அந்தக் கால்களை மறுபடியும் நான் பார்த்தேயாக வேண்டும்! ஓ! இல்லை! ஓ, கர்த்தரே நான் மீண்டும் பாவஞ் செய்தேன்!”

மரபு சார்ந்தவர்கள் பக்திமான்கள்போல் தோன்றுகிறார்கள். அவர்கள் தினமும் புதிய ஆடை தயாரிக்க வேண்டுமென்பதை நீ அறிந்துகொள். மரபு சார்ந்திருத்தல் அத்தி இலைகளினால் செய்யப்பட்ட ஆடையைப் போன்று, தவறான நம்பிக்கையாகும். கர்த்தரின் சட்டப்பிரகாரமாக வாழ வேண்டுமென்று அநேக மக்கள் பக்தியுடன் வாழ கடும் பிரயத்தனம் செய்கிறார்கள். தம் நுரையீரல் கிழிய மலை உச்சியிலிருந்து தமது பக்தி வெளிப்படும்படி கத்துகிறார்கள்.

மரபு சார்ந்தவர்கள், ஆலயத்தில் ஜெபக்கூட்டம் நடத்துகையில், நல்லத் தோற்றத்துடன் இருக்கிறார்கள். “பரலோகத்திலுள்ள பரிசுத்த பிதாவே! கடந்த வாரம் நாம் பாவம் செய்தோம். நம்மை தயவுசெய்து மன்னியும்.” அவர்கள் அழுது கதறுகிறார்கள். சபையோரும் அதனை பின்பற்றுகிறார்கள். தமக்குள் அவர்கள் நினைக்கிறார்கள், “அவர் மலைமீது ஜெபிப்பதிலும், உபவாசமிருப்பதிலும் நிறைய நேரம் செலவிட்டிருப்பார். அவர் எத்தனை பக்தியுடனும், முழு நம்பிக்கையுடனும் இருக்கிறார் ஆனால் அவர் நம்பிக்கை மரபு சார்ந்திருப்பதால், ஜெபக்கூட்டம் முடியும் முன்பே அவருடைய இருதயம் முரட்டுத்தனத்தாலும், பாவத்தாலும் நிரம்பத் தொடங்கிவிடுகிறது.

அத்திமர இலைகளால் சிறப்பு ஆடைகளை மக்கள் தயாரிக்கும்போது, அவை இரண்டு மாதமோ மூன்று மாதமோ உழைக்கும். ஆனால் சீக்கிரமாகவே சிறிது காலத்திலே அவை உபயோகமற்றுபோவதால் அவர்கள் மீண்டும் புதிய ஆடை தயாரித்து தம் கபட வாழ்வைத் தொடருகிறார்கள். இதுவே இரட்சிக்கபடும்படியாக சட்டத்தின்படி வாழ நினைக்கும் மரபு சார்ந்தவனின் வாழ்க்கையாகும். அவர்கள் அத்திமர இலையிலிருந்து தொடர்ந்து புதிய ஆடைகளைச் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

மரபு சார்ந்து வாழ்வது அத்திமர இலை நம்பிக்கையாகும். அவர்கள் “கடந்த வாரம் முழுவதும் பாவம் செய்தீர்கள், அப்படியில்லையா? அப்படியானால் மனம் வருந்தி ஜெபியுங்கள்.” என்று உங்களிடம் கூறுவார்கள்.

உங்களிடம் பலத்த குரலில் சத்தமிடுவார்கள் “மனம் வருந்து! ஜெபி!”

மரபு சார்ந்த ஒருவனுக்குத் தன் குரலை பரிசுத்தமானதுபோல் காட்டத் தெரியும். “கர்த்தரே! என்னைப் பொருத்துக்கொள்ளும். உம்முடைய சட்டப்படி நான் வாழவில்லை. உம்முடைய கட்டளைகளை கடைப்பிடிக்கவில்லை. என்னை மன்னியும் கர்த்தரே. மீண்டும் ஒரு முறை என்னை மன்னியும்.”

அவர்கள் எத்தனைத் தீவிரமாக சட்டத்தின்படி வாழப் போராடினாலும் அவர்களால் அப்படி வாழ முடியாது. அவர்கள் கர்த்தரின் சட்டத்திற்கும் கர்த்தருக்கு எதிராகவும் சவால் விடுகிறார்கள். கர்த்தருக்கு முன் அவர்கள் முரடர்களாக இருக்கிறார்கள்.

சூடல் பேயின் விருப்பங்கள்

  • கர்த்தர் ஏன் சட்டத்தை அகற்றினார்?
  • ஏனெனில் பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்க அதனால் முடியாது.

சூடல் பே என்றொரு வாலிபன் இருந்தான். 1950 இல், கொரிய யுத்தத்தின்போது கம்யூனிச சிப்பாய்கள் வந்து அவனின் அசைக்கமுடியாத சமய நம்பிக்கையிலிருந்து கம்யூனிஸ்டாக மாற்ற ஓய்வு நாளில் தாழ்வாரத்தைப் பெருக்கும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் இந்த சமய நம்பிக்கையுள்ள வாலிபன் அவர்கள் கட்டளைக்கு அடிபணிய மறுத்தான். அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் அவ்வாலிபனோ மீண்டும் மறுத்தான்.

கடைசியாக, சிப்பாய்கள் அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து துப்பாக்கி முனையை அவன் மீது குறிவத்தார்கள். “எது உனக்கு வேண்டும்? தாழ்வாரத்தைப் பெருக்குவதா? அல்லது சாவாதா?”

தீர்மானம் செய்யும்படி நெருக்கப்பட்டபோது அவன் கூறினான், “ஓய்வு நாளில் வேலை செய்வதைப் பார்க்கிலும் நான் சாவது நலம்.”

“நீ உன் தீர்மாணத்தைச் செய்தாய். அதன்படி செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியானது.”

அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள். அவன் மரணத்திற்கு பிறகு அவனின் அசைக்கமுடியாத மத நம்பிக்கையை நிறைவு கூறும் வண்ணம் ஆலய மூப்பர்கள் அவனை டீக்கனாக நியமித்தார்கள்.

அவனின் மன உறுதி இத்தகையதாக இருந்தாலும், அவன் மத நம்பிக்கை தவறாக வழி நடத்தியது. அவன் ஏன் வெளிப்புறத்தைப் பெருக்கி, அந்த சிப்பாய்களுக்கு நற்செய்தியைக் கூறியிருக்கமுடியாது? ஏன் இத்தனை உறுதியாக இருந்து சாகவேண்டும்? ஔய்வு நாளில் வேலை செய்யாதிருந்தால் கர்த்தர் அவனைப் புகழுவாரா? இல்லை.

நாம் ஆவிக்குரிய வாழ்க்கை நடத்தவேண்டும். கர்த்தரின் முன்பு நம் செய்கைகள் அல்ல, நம் நம்பிக்கையே முக்கியம். ஆலயத் தலைவர்கள் சூடல் பே போன்றவர்களுக்கு விழா எடுக்க விரும்புகிறார்கள். தம்முடைய பிரிவின் மேன்மையை பறைசாற்ற அவர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் இயேசுவிடம் சவாலிட்ட கபட பரிசேயரைப் போன்றவர்கள்.

மரபு சார்ந்தவர்களிடமிருந்து நாம் படிப்பதற்கு எதுவுமில்ல. ஆவிக்குரிய நம்பிக்கையை நாம் படிக்கவேண்டும். இயேசு ஏன் ஞானஸ்நானம் பெறவேண்டும் சிலுவையில் ஏன் இரத்தஞ்சிந்தவேண்டும் என்று தியானிக்கவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குறித்த இயல்பியலை ஆராயவேண்டும்.

முதலில் இக்கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க முயல வேண்டும். பிறகு எல்லா மக்களுக்கும் இந்த நற்செய்தியைப் பரப்பவேண்டும். ஆகவே அவர்கள் மறுபடியும் பிறந்தவராவார்கள். ஆவிக்குரிய வேலைகளுக்கு நம் வாழ்வை அர்ப்பணிக்கவேண்டும்.

ஒரு போதகர் உன்னிடம் “இந்த வாலிபன் சூடல் பே போலிரு. ஔய்வு நாளை பரிசுத்தமாக ஆசரி” என்றால், அவர் உன்னை ஞாயிறுதோறும் ஆலயத்திற்கு வரவழைக்க மட்டும் முயல்கிறார்.

இங்கே இன்னுமொரு கதையிருக்கிறது. அங்கே ஒரு பெண்ணிருந்தாள். அவள் ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்ல வேண்டுமென்றால் நிறைய சோதனைகளைக் கடக்க வேண்டியிருந்தது. அவள் கணவனின் பெற்றோர் கிறிஸ்தவர்களல்ல. அவள் ஆலயத்திற்குச் செல்வதைத் தடுக்க மிகவும் முயன்றனர். ஆவளை ஞாயிற்றுக்கிழமையும் வேலைச் செய்யக்கூறினர். அவள் சனிக்கிழமை இரவில் வயல் வெளிகளுக்குச் சென்று நிலா வெளிச்சத்தில் வேலை செய்தாள். அப்பொழுது அவள் வீட்டாருக்கு அவளை ஞாயிற்றுக்கிழமை ஆலயம் செல்லாதே என்பதற்கு எந்த முகாந்தரமும் இல்லை.

ஆலயம் செல்வது மிகவும் அவசியம் தான். ஆனால் நாம் எத்தனை விசுவாசமாக இருக்கிறோம் என்று காட்டுவதற்காக எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனைச் செய்ய வருவது போதுமா? உண்மையான நம்பிக்கை நீர் மற்றும் ஆவியில் மறுபடியும் பிறப்பதிலிருக்கிறது. ஒருவன் மறுபடியும் பிறக்கும்போது உண்மை விசுவாசம் தொடங்குகிறது.

கர்த்தரின் சட்டப்படி வாழ்வதானால் பாவங்களிலிருந்து உன்னால் இரட்சிக்கப்பட முடியுமா? இல்லை. சட்டத்தை அசட்டைப் பண்ணும்படி நான் உன்னிடம் கூறவில்லை. ஆனால் சட்டத்தின் எல்லாப் பிரிவுகளையும் மனிதர்களால் கடைப்பிடிப்பது இயலாத காரியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

யாக்கோபு 2:10 கூறுகிறது. “ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைகொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லவற்றிலும் குற்றவாளியாய் இருப்பான்.” ஆகவே, முதலில் எப்படி நீர் மற்றும் ஆவி மூலம் மறுபடியும் எப்படி பிறப்பது என்பது குறித்து நீ யோசி. பிறகு நற்செய்தியை கேட்கக்கூடிய ஆலயத்திற்கு போ. நீ மறுபடியும் பிறந்தபிறகு விசுவாச வாழ்வை வாழலாம். பிறகு, கர்த்தர் உன்னை அழைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் முன் போகலாம்.

போலியான ஆலயத்திற்குச் செல்லுவதன் மூலம் உன் நேரத்தை வீணாக்காதே. தவறான காணிக்கைகளைச் செலுத்தி உன் பணத்தை வீணாக்காதே. போலி ஆயர்களினால் நீ நரகம் போவதைத் தடுத்து நிறுத்தமுடியாது. முதலில் நீர் மற்றும் ஆவி குறித்த நற்செய்தியை கேட்டு மறுபடியும் பிற.

இயேசு இவ்வுலகிற்கு வந்த காரணத்தை யோசித்துப்பார். நாம் சட்டப்படி வாழ்ந்து பரலோகத்திற்குள் பிரவேசிக்கமுடியும் என்றால், அவர் இவ்வுலகிற்கு வரவேண்டியது அவசியமே இல்லை. அவர் வருகைக்குப்பின், ஆசாரித்துவம் மாறிற்று. மரபு சார்ந்த வாழ்க்கை பழமையானது. நாம் இரட்சிக்கப்படும் முன்னால் சட்டத்தின்படி வாழ்ந்தால் மட்டுமே இரட்சிக்கப்படுவோம் என்று நினைத்தோம். ஆனால் இது உண்மையான விசுவாசத்தின் அடையாளமாக இப்போதில்லை.

இவ்வுலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மைத் தம் அன்பினாலும், தம் ஞானஸ்நான நீரினாலும், தம் இரத்தத்தினாலும், ஆவியினாலும் இரட்சித்தார். அவர் நம்முடைய இரட்சிப்பை யோர்தானில் தன் ஞானஸ்நானம் மூலமும் சிலுவையில் அவர் இரத்தம் மூலமும், அவர் உயிரோடெழுந்ததன் மூலமும் நிறைவேற்றினார்.

கர்த்தர் முந்தைய விதிமுறைகளை அப்புறப்படுத்தினார். ஏனெனில் அவை பலவீனமும் பயனற்றதுமாகும். “நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை. அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். அன்றியும் அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்.” (எபிரேயர் 7:19-20) இயேசு ஆணையிட்டு எல்லாப் பாவங்களிலிருந்தும் தன் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தால் நம்மை இரட்சித்தார். மரபு சார்ந்த கொள்கையின்மூலம் இரத்த சாட்சியாக மரிப்பது கனியற்ற சாவு. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதே உண்மையான நம்பிக்கையாகும்.

நம்மிடம் கனி தரும் விசுவாசம் இருக்கவேண்டும். “உன் ஆத்துமாவிற்கு எது நல்லது என்று நினைக்கிறாய்? ஆலயத்திற்கு நாள் தவறாமல் சென்று சட்டப்படி வாழ்வதா? அல்லது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பது குறித்து போதிக்கும் கர்த்தரின் ஆலயத்திற்கு செல்வது நல்லதா? எந்த ஆலயமும் எந்தப் போதகரும் உன் ஆத்துமாவிற்கு அதிக நன்மையைக் கொண்டுவருகிறது? இனைப்பற்றி யோசித்து உனது ஆத்துமாவிற்கு நன்மை பயக்கும் ஒன்றைத் தேர்ந்தெடு.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றிய வார்த்தைகளைக் கொண்டிருக்கும் போதகர் மூலம் கர்த்தர் உன் ஆத்துமாவை இரட்சிக்கிறார். அவரவர் ஆத்துமாவிற்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும். ஒரு உண்மையான அறிவுள்ள விசுவாசி வேதவாக்கிற்கு தன் ஆத்துமாவை ஒப்புவிக்கிறான்.


இயேசு ஆணையின் மூலம் ஆசாரியரானார்

  • லேவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆணையின் மூலம் ஆசாரியர்கள் ஆக்கப்பட்டார்களா?
  • இல்லை. இயேசு மட்டுமே ஆணையின் மூலம் ஆசாரியரானவர்.

எபிரெயர் 7:20-21 கூறுகிறது, “அன்றியும் அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியராய் ஆனார். ஆனதால் இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ.”

சங்கீதம் 110:4 கூறுகிறது. “நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலும் இருப்பார்.” கர்த்தர் ஒரு உறுதிகொடுத்தார். நம்முடன் அவர் ஔர் உடன்படிக்கைச் செய்து அதனை எழுத்தில் நமக்கு காண்பித்தார். “மெல்கிசேதேக்குக்கு ஒப்பான நிரந்தர ஆசாரியராவேன். மெல்கிசேதேக்கு நீதியின் ராஜாவும், சமாதானத்தின் ராஜாவும், நிரந்தர தலைமை ஆசாரியனுமாவான். உன்னை இரட்சிக்குபொருட்டு மெல்கிசேதேக்கையொத்த நிரந்தர தலைமை ஆசாரியராவேன்.”

இயேசு இவ்வுலகிற்கு வந்து உடன்படிக்கைக்கு நிச்சயம் அளிப்பவராய் இருந்தார். (எபிரெயர் 7:22) காளைகளினதும், ஆடுகளினதும் இரத்தத்திற்கு பதிலாக தம்மையே, நம் எல்லாப் பாவங்களையும் கழுவும் பொருட்டு ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் இரத்தஞ் சிந்தினார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு தலைமை ஆசாரியன் மரிக்கும்போது அவன் மகன் 30 வயதாகும்போது ஆசாரியத்துவத்தைக் கொண்டுச் சென்றான். அவன் வயதானவன் ஆகும்போது அவன் மகன் 30 வயதை அடைந்தால் அவன் ஆசாரித்துவத்தை தன் மகனுக்கு கொடுத்தான்.

அங்கே அநேக சந்ததியினர் தலைமை ஆசாரியனுக்கு கீழிருந்தனர். ஆகவே, தாவீது அவர்களுக்கு ஒரு முறைமையை ஏற்படுத்தினான். அதன்படி ஒருவர் பின் ஒருவராக சுழல் முறையில் அவர்கள் ஆசாரியரானார்கள். ஆரோனின் எல்லா சந்ததியாரும் ஆசாரியராக நியமிக்கப்பட்டதால் கர்த்தரை சேவிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். லூக்கா கூறுகிறான். “அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். ....அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவ சன்னதியிலே ஆசாரிய ஊழியஞ் செய்துவருகிற காலத்தில்ஸ.,”

இயேசு இவ்வுலகிற்கு வந்து ஆராதனைச் செய்யும் ஆசாரித்துவத்தை முற்றிலுமாக எடுத்துக்கொண்டார். அவர் நல்ல காரியங்கள் வரும்பொருட்டு ஆசாரியராக வந்தார். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பதால் கிட்டும் இரட்சிப்பை நிறைவேற்றினார்.

ஆரோனின் சந்ததியினர் பலவீனமானவர்களாகவும் மாமிசத்தில் குறைவுள்ளவர்களாகவும் இருந்தார்கள். ஒரு தலைமை ஆசாரியன் மரிக்கும்போது என்னவாகும்? அவன் மகன் ஆசாரியத்துவத்தை எடுத்துக் கொள்வான். ஆனால் அத்தகைய பலிகள் மனிதகுலத்தின் இரட்சிப்பிற்கு போதிய உறுதியை அளிக்கவில்லை. மனிதர்கள் மேல் வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் உண்மையான முழு நம்பிக்கையாகாது.

புதிய ஏற்பாட்டின் காலத்தில் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் நித்திய நித்தியமாக ஜீவிப்பதால் தொடர்ந்து பலி கொடுத்துகொண்டிருக்க தேவையில்லை. தம்முடைய ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களை எடுத்துப்போட்டார். அவரை விசுவாசிப்பவர்கள் எல்லாம் முற்றிலும் பாவமற்றவர்களாகும்பொருட்டு அவர் தம்மை பலியாக்கி சிலுவையில் அறையப்பட்டார்.

இப்பொழுது அவர் உயிருடன் கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்து நம்மைக் குறித்து சாட்சி பகருகின்றார். “அன்புள்ள பிதாவே, அவர்கள் இன்னும் முழுமை பெறாதவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் என்னை விசுவாசிக்கிறார்கள். அவர்களுடைய பாவங்களை வெகு நாட்களுக்கு முன்பு எடுத்துப் போடவில்லையா?” இயேசுவே நம் இரட்சிப்பின் நிரந்தர ஆசாரியர்.

உலகின் ஆசாரியர்கள் முழுமையானவர்களே அல்ல. அவர்கள் மரிக்கும்போது அவர்களின் மகன்கள் ஆசாரித்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள். நம் கர்த்தர் என்றும் ஜீவிக்கிறார். அவர் நிரந்தர இரட்சிப்பை கீழ் கண்டவாறு நிறைவேற்றினார். நமக்காக இவ்வுலகத்திற்கு வந்தார். யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார். நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் சிலுவையில் இரத்தஞ்சிந்தினார்.

இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனி பாவத்தின் நிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.” (எபிரெயர் 10:18) முடிவு பரியந்தமும் நமது இரட்சிப்பை குறித்து இயேசு சாட்சி சொல்லுகிறார். நீ நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறந்துவிட்டாயா?

பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாய் இருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராய் இருக்கிறார்.” (எபிரெயர் 7:26) “நியாயப் பிரமாணமானது பலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப் பிரமாணத்திற்கு பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.” (எபிரெயர் 7:28)

நான் இங்கு என்ன கூறவிரும்புகிறேன் என்றால் களங்கமில்லாத இயேசுகிறிஸ்து தன் ஞானஸ்நான நீரின் மூலமும், தன் சிலுவை இரத்தம் மூலாமாகவும் நம்முடைய பாவங்களை ஒரே தரம் கழுவினார். அவர் நம்மை செய்கைகளின் சட்டம் மூலமாக இரட்சிக்கவில்லை, ஆனால் நம்முடைய பாவங்கள் அனைத்தையும் எடுத்து அதற்காக நித்திய தீர்ப்பு பெற்றதன் மூலம் நம்மை இரட்சித்தார்.

அவர் நம்மை நித்திய இரட்சிப்பு மூலம் இரட்சித்தார் என்பதை விசுவாசிக்கிறாயா? அப்படிச் செய்வாயானால், நீ இரட்சிக்கப்படுவாய். அப்படியில்லையென்றால் இயேசுவின் நித்திய இரட்சிப்புக் குறித்து நீ படிக்கவேண்டியது நிறைய உள்ளது.

உண்மையான விசுவாசம் நற்செய்தியான நீர் மற்றும் ஆவியின் மூலமாக வருகிறது. இது தேவ வசங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. நித்தியமான பரலோக தலைமை ஆசாரியரான இயேசுகிறிஸ்து தம் ஞானஸ்நானம் மூலமும், சிலுவை இரத்தம் மூலமும் நம் நித்திய இரட்சகரானார்.

நம் விசுவாசத்தை முற்றிலும் புரிந்து கொள்ள வேண்டும்

  • “இயேசுவில் விசுவாசித்தல்” என்பதன் பொருள் யாது?
  • இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் மீது வைக்கும் நம்பிக்கை.

இயேசுவை நாம் எப்படி சரியான வழியில் நம்புவது? அவர் மேல் எப்படி நேரடி விசுவாசம் வைப்பது? என்று நாம் யோசிக்கவேண்டும். இயேசுவை சரியான வழியிலும் முறையான வழியிலும் நாம் விசுவாசிப்பதெப்படி? நற்செய்தியாகிய இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதன் மூலம் நாம் அதைச் செய்யலாம்.

 சரியான விசுவாசம் இயேசுவின் செய்கைகளை விசுவாசிப்பதாகும். அவரின் செய்கைகள் அவரின் ஞானஸ்நானமும், அவரின் இரத்தமுமாகும். நம்முடைய தவறான சிந்தனைகளை இவற்றில் கலக்ககூடாது. இதனை உண்மையென்று நீ நம்புகிறாயா? உன் ஆவிக்குரிய நிலை என்ன? உன்னுடைய சொந்த முயற்சிகளிலும், செயல்களிலும் அதிகம் சார்ந்திருக்கிறாயா.

இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கி அதிக காலமாகவில்லை. ஆனால் பத்து வருடங்களாக மரபு சார்ந்து வாழ்ந்ததால் அவதிப்பட்டேன். அதன் பயனாக இத்தகைய வாழ்வு என்னைக் களைப்படையச் செய்தது. அக்காலங்களில் என்னைக் குறித்து நினைவுபடுத்தக்கூட மறந்து போனேன். என் மனைவி இங்கே உட்கார்ந்திருக்கிறாள். அது எத்தனைக் கொடுமையானது என்று அவளுக்குத் தெரியும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கூறுவேன், “அன்பே, இன்று நாம் சந்தோஷமாய் இருப்போம்.”

ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை.”

அவள் ஆடைகளைக் கூட ஞாயிற்றுகிழமைகளில் துவைப்பது இல்லை. ஒரு ஞாயிறு என்னுடைய முழுக்கால் சட்டைக் கிழிந்துபோயிற்று. ஆனாலும் கூட அவள் திங்கள் கிழமை வரை பொறுங்கள் என்றாள். இப்படியிருந்தாலும் கூட ஓய்வு நாளைச் சரியாக கடைப்பிடிக்கிறோம் என்று மேலும் குறிப்பாக இருந்தேன். ஆனால் அது மிகவும் கடினமானது நாம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்ந்திருந்ததே இல்லை. ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது வெகு கடினம். இன்னும் அந்த நாட்களை நினைவு கூறுகிறேன்.

அன்புள்ள நண்பர்களே, இயேவை உண்மையாக விசுவாசிக்க வேண்டுமானால், அவரின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் மூலம் கிடைக்கும் பாவ மன்னிப்பை நாம் விசுவாசிக்கவேண்டும். உண்மையான விசுவாசம் என்பது இயேசுவின் இறைத்துவம், மனிதத்துவம் மற்றும் அவர் இவ்வுலகில் செய்த அனைத்துக் காரியங்களையும் விசுவாசிப்பதாகும். உண்மையான விசுவாசி அவரின் எல்லா வார்த்தைகளையும் நம்புகிறான்.

இயேசுவில் விசுவாசித்தல் என்பதன் பொருள் யாது? இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தத்தை நம்புவதே அதுவாகும். இது எத்தனை எளிதானது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், வேதாகமத்தைப் படித்து நற்செய்தியை விசுவாசிப்பது மட்டுமே. சரியான வழியை நாம் நம்பவேண்டும்.

நன்றி கர்த்தாவே! என்னுடைய செய்கைகளினால் அல்ல என்று இப்போது அறிந்தேன். சட்டத்தின் பாவ அறிவு கிட்டியது (ரோமர் 3:20) அவற்றையெல்லாம் இப்போது அறிந்திருக்கிறேன். சட்டம் நல்லதாகையாலும், அது கர்த்தரின் கட்டளையாகையாலும் அவற்றைக் கடைப்பிடித்து வாழவேண்டுமென்று நினைத்தேன். இதுவரை மிகவும் கஷ்டப்பட்டு முயற்சி செய்தேன். ஆனால் இப்போது சட்டத்தின் படி வாழ நினைப்பது முடியாத ஒன்று எனப் புரிகிறது. கர்த்தரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது முடியாத ஒன்று என்று இப்போது தெரிகிறது. ஆகவே கர்த்தரின் சட்டம் மூலமாக, என் இதயம் முழுவதும் தீய சிந்தனைகளாலும், மீறுதல்களாலும் நிறைந்திருப்பதை இப்போது உணருகிறேன். பாவத்தைப் பற்றிய அறிவைப் பெறும்படியாகவே சட்டம் கொடுக்கப்பட்டது என்று இப்போது புரிந்துகொண்டேன். ஓ, நன்றி, கர்த்தரே! உம் சித்தத்தைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு உம் சட்டத்தைக் கடைப்பிடிக்க கடும் முயற்சி செய்தேன். நான் எனக்கே இத்தகைய முயற்சிகள் மூலம் முரடனாய் இருந்திருக்கிறேன். நான் மனம் வருந்துகிறேன். இப்பொழுது இயேசு ஞானஸ்நானம் பெற்றதையும் என்னுடைய இரட்சிப்புக்காக இரத்தஞ் சிந்தியதையும் அறிந்திருக்கிறேன்! நான் விசுவாசிக்கிறேன்.”

நீங்கள் கபடம் இல்லாமலும் சுத்தமாகவும் விசுவாசிக்கவேண்டும். வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளவைகளை மட்டுமே நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறப்பதற்கான ஒரே வழி இதுவே.

இயேசுவில் எதனை விசுவாசிப்பது? எதனையாவது குறிப்பிட்ட காலத்திற்குள் செய்துமுடிக்கவேண்டுமா? நம்முடைய விசுவாசம் நீ வேலை செய்யவேண்டிய மதமா? மக்கள் கர்த்தர்களை படைத்தார்கள். அக்கர்த்தர்களுக்கு பொருந்துமாறு மதங்களையும் படைத்தார்கள். ஒரு இலக்கினையடையும்பொருட்டு மக்கள் காரியங்கள் செய்வதற்கான ஒரு முறையே மதமாகும்: மனிதனின் நல்ல பக்கத்தை காட்டுவதற்காகும்.

அப்படியானால் விசுவாசம் என்பது என்ன? அதன் பொருள் கர்த்தரை நம்புவதும், அவரை நோக்கி பார்ப்பதுமாகும். நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தை நோக்கிப் பார்த்து, அவர் அளித்த ஆசீர்வாதத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இது உண்மையான நம்பிக்கையாகும். இதுவே நம்பிக்கைக்கும் மதத்திற்கும் உள்ள வேறுபாடு. இவற்றை வேறுபடுத்தி அறிய உன்னால் முடியும் என்றால், நீ நம்பிக்கையைப் புரிந்துகொண்டமைக்காக 100 புள்ளிகள் பெறுவாய்.

மறுபடியும் பிறவாத இறையியலாளர்கள் நாம் இயேசுவை விசுவாசிக்கவேண்டுமென்றும், பக்தியுடன் வாழவேண்டுமென்றும் கூறுகிறார்கள். ஒருவன் பக்தியுடன் இருந்தால் அவன் விசுவாசியாவானா? நாம் நல்லவர்களாக இருக்கவேண்டும். மறுபடியும் பிறந்தவர்களான நம்மைத் தவிர வேறு யார் பக்தி வாழ்வு வாழ்கிறார்கள்.

இங்கு குறிப்பிடுவது என்னவென்றால் இதனை அவர்கள் பாவிகளிடம் கூறுகிறார்கள். சராசரி பாவியினுள் 12 வகையான பாவங்கள் இருக்கின்றன. அவன் எப்படி பக்தியுடன் வாழ முடியும்? அவன் மனம் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிட்டாலும் அவன் இதயம் அதனைச் செய்யாது. ஒரு பாவி ஆலயத்தைவிட்டு வெளியே வரும்போது, பக்தியாக வாழ வேண்டுமென்பது வெறும் தத்துவமாகி, அவன் உணர்ச்சிகள் அவனைப் பாவத்திற்கு வழி நடத்துகின்றன.

ஆகவே, நம் இருதயத்தினுள் நாம் தீர்மானிக்கவேண்டும். சட்டத்தின்படி வாழப் போகிறோமா அல்லது இயேசுவின் ஞானஸ்நானம், அவர் சிலுவை இரத்தம் ஆகியவற்றை நம்பி இரட்சிக்கப்படவேண்டுமா? பரலோகத்தின் பிரதான ஆசாரியரான இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.

இயேசுவை நம்புவோருக்கெல்லாம் அவரே தலைமை ஆசாரியர் என்பதை நினைவுகொள்ளுங்கள். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் மூலமே உண்மையான இரட்சிப்பு வருகிறது என்பதை அறிந்து நாமெல்லாம் இரட்சிக்கப்படுவோமாக.

உலகின் முடிவு குறித்து மறுபடியும் பிறந்தவர்கள் கவலைப் படுவதில்லை

  • மறுபடியும் பிறந்தவர்கள் உலகின் முடிவு குறித்து ஏன் கவலைப் படுவதில்லை?
  • ஏனெனில் அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிமீது வைத்திருக்கும் நம்பிக்கை அவர்களைப் பாவமற்றவர்களாக்குகிறது.

நீங்கள் உண்மையில் மறுபடியும் பிறந்தவர்கள் என்றால் உலகின் முடிவு குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. கொரியாவின் அநேக கிறிஸ்தவர்கள் அக்டோபர் 28, 1992 இல் உலகம் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறினார்கள் அது எத்தனைக் கொடுமையானதும், மோசமான நாளுமாக இருக்கப்போகிறது என்றும் அவர்கள் கூறினர். அவர்களுடைய கூற்றெல்லாம் பொய்யானது. உண்மையில் மறுபடியும் பிறந்தவன் கடைசி நொடிவரை பக்தியுடன் நற்செய்தியைப் பரப்புவான். உலகம் எப்போதானாலும் முடிவுக்கு வரட்டும். நாம் செய்யவேண்டியதெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப்பற்றி பிரசங்கிப்பதேயாகும்.

மணவாளன் வரும்போது நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்த மணவாட்டிகள் அவரை மிகுந்த சந்தோஷத்தோடே சந்திப்பார்கள். அவர்கள் “ஓ, நீர் கடைசியாக வந்துவிட்டீர் என் மாமிசம் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால் நீர் என்னை நேசித்து, என் பாவங்களிலிருந்து என்னை இரட்சித்தீர். ஆகவே, எனது இதயத்தில் பாவங்கள் இல்லை. நன்றி, கர்த்தாவே!. நீரே என் இரட்சகர்.” என்று கூறுவார்கள்.

இயேசுவே நீதிமான்களுக்கு ஆவிக்குரிய மணவாளர். இவ்விவாகம் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் மணவாளன் மணவாட்டியை நேசிப்பதாலாகும். மற்ற வழிப்படியல்ல. பூமியில் அப்படி நடைபெறுவதை அறிந்திருக்கிறேன். ஆனால் பரலோகத்தில் மணவாளனே விவாகம் நடைபெறவேண்டுமா என்று தீர்மானிப்பவர். மணவாளனாகிய இயேசுவே, அவரின் அன்பினாலும், இரட்சிப்பினாலும், மணவாட்டி எப்படிப்பட்டவளாக இருந்தாலும் விவாகத்திற்காக தேர்ந்தெடுப்பவர். பரலோகத்தில் விவாகம் இப்படியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணவாளனிற்கு மணவாட்டியை பற்றி எல்லாம் தெரியும். அவருடைய அன்புள்ள மணவாட்டி மிகுந்த பாவியாக இருந்ததினாலே, அவர்களுக்காக இறங்கி தம் ஞானஸ்நானத்தினால் அவர்கள் பாவங்களிலிருந்து அவர்களை இரட்சித்தார்.

நம் கர்த்தராகிய இயேசு ஆரோனின் சந்ததியினராக இவ்வுலகிற்கு வரவில்லை. உலகப்படியான பலியைக் கொடுப்பதற்காக அவர் பூமிக்கு வரவில்லை. இந்த வேலையைச் செய்வதற்கு ஆரோனின் சந்ததியினாரான அநேக லேவிகள் இருந்தனர்.

பழைய ஏற்பாட்டு பலிகளின் முக்கியமான பாத்திரம் இயேசுவேயல்லாமல் வேறொருவரும் இல்லை. ஆகவே, இவ்வுலகிற்கு உண்மையானது வந்தமையால் நிழல் என்னவாயிற்று? நிழல் ஒதுக்கி வைக்கப்பட்டது.

இயேசு இவ்வுலகிற்கு வந்தபோது ஆரோன் செய்ததுபோல அவர் எந்த பலியையும் கொடுக்கவில்லை. தம்மையே மனித குலத்துக்காக ஞானஸ்நானம் மூலமும் பாவிகளின் இரட்சிப்புக்காக இரத்தஞ்சிந்தியும் தம்மை பலியாக்கினார். இரட்சிப்பை அவர் சிலுவையில் நிறைவேற்றினார்.

இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்போருக்கு இரட்சிப்பு சாதாரண சொற்களால் வருவதல்ல. இயேசு தெளிவில்லாத வழிகளில் நம்மை பாவ விடுதலைச் செய்யவில்லை. அதனை மிகத்தெளிவாகச் செய்தார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6) இயேசு இவ்வுலகிற்கு வந்து தம் ஞானஸ்நானம், தம் மரணம், உயிரோடு எழும்புதல் ஆகியவை மூலம் நம்மை இரட்சித்தார்.

பழைய ஏற்பாடு இயேசுவின் முன் மாதிரியாகும்

  • புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியதற்கான காரணம் என்ன?
  • முதல் உடன்படிக்கை கடைப்பிடிக்கமுடியாததும், பயனற்றதுமாக இருந்தது.

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டின் தலைமை ஆசாரியர்கள் போன்று இயேசு பலியாராதனைகளைச் செய்யாவிட்டாலும், அவர் சிறந்த ஆசாரித்துவத்தை, நிரந்தர பரலோக ஆசாரித்துவத்தைக் கடைப்பிடித்தார். மனிதர்களாகிய நாம் பிறந்ததிலிருந்தே இவ்வுலகில் பாவம் நிறைந்தவர்களாக இருந்ததாலே, அவர்கள் பாவிகளாயினர்; அவர்கள் கர்த்தரின் சட்டத்தினால் நீதிமான்களாக முடியாது. ஆகவே கர்த்தர் புதிய உடன்படிக்கையைச் செய்தார்.

பரலோகத்திலுள்ள நம் பிதா தம் ஒரே பேறான குமரனை இவ்வுலகிற்கு அனுப்பி, அதற்கு பதிலாக நம்மிடம், இயேசுவின் ஞானஸ்நானம், அவர் இரத்தம், அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவை மீது நம்பிக்கை வைக்கும்படி கூறினார். இது கர்த்தரின் இரண்டாவது உடன்படிக்கையாகும். இரண்டாம் உடன்படிக்கைப்படி நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும்.

கர்த்தர் நம்மிடம் நற்காரியங்களை எதிர்பார்க்கவில்லை. அவர் நம்மிடம் இரட்சிக்கப்பட இப்படி வாழவேண்டும் என்று கூறவில்ல. அவர் குமாரன் மூலம் வரும் இரட்சிப்பை மட்டும் விசுவாசிக்கும் படி கூறுகிறார். எல்லாவற்றிற்கும் மேல் அவரின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை நம்பும் படி நம்மிடம் கேட்கிறார். நாம் ஆமாம் என்று கூறவேண்டும்.

வேதகமத்தில், யூதாவின் குடும்பத்தினர் ராஜ்யத்தை ஆண்டனர். சாலொமோன் ராஜாவரை இஸ்ரவேலின் அரசர்கள் எல்லாம் யூதாவின் வீட்டில் பிறந்தவர்களாகவே இருந்தனர். ராஜ்யம் இரண்டாக பிளவுபட்ட போதிலும், கி.மு.586 இல் முற்றிலும் அழியும்வரை, தெற்கு ராஜ்யம் யூதா குடும்பத்தாரின் வசம் இருந்தது. இவ்வழியாக, யூதர்கள் இஸ்ரவேல் மக்களைக் குறிக்கின்றனர். லேவியின் கோத்திரத்தார் ஆசாரியர்கள். இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் குறிப்பிட்ட வேலையிருந்தது. யூதா கோத்தித்தாரிடமிருந்து இயேசு வெளிப்படுவார் என்று கர்த்தர் அவர்களிடம் உறுதியளித்தார்.

யூதா கோத்திரத்தாருடன் அவர் ஏன் இந்த உடன்படிக்கையைச் செய்யவேண்டும். இவர்களுடன் உடன்படிக்கைச் செய்வது உலக மக்கள் அனைவருடன் உடன்படிக்கைச் செய்வதற்கு ஒத்ததாகும். ஏனெனில் இஸ்ரவேல் மக்கள் உலக மக்களைக் குறிக்கிறார்கள், இயேசு புதிய உடன்படிக்கையை நிறைவேற்றினார், அது அவரின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல் ஆகியவை உலகமக்களுக்கு அளிக்கும் இரட்சிப்பாகும்.

மனம் வருந்துவதால் பாவங்களைக் கழுவ முடியாது

  • மனிதர்களின் பாவங்கள் மனம் வருந்தலினால் கழுவப்படுமா?
  • இல்லை.

எரேமியா 17:1 இல் ஒருவனின் பாவங்கள் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. “யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும், எழுதப்பட்டு, அவர்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.”

நம் பாவங்கள் நம்மிருதயத்தில் பதிந்திருக்கிறது. அதனாலேயே நாம் பாவிகள் என்று நமக்குத் தெரிகிறது. ஒருவன் இயேசுவை நம்புவதற்கு முன்னால், அவனுக்குத் தான் ஒரு பாவி என்று தெரியாது. ஏன்? ஏனெனில் கர்த்தரின் சட்டம் அவன் இருதயத்தில் இல்லை, ஆகவே, இயேசுவை ஒரு முறை விசுவாசிக்கும் போது கர்த்தருக்கு முன் பாவியென்று புரிந்துகொள்கிறான்.

சிலர் 10 வருடங்கள் சென்றபிறகே தாம் ஒரு பாவி என்று புரிந்து கொள்ளுகிறார்கள். “ஓ, அன்பானவர்களே! நானொரு பாவி! நான் இரட்சிக்கப்பட்டதாக நினைத்தேன்! ஆயினும் நான் பாவியாகவே இருந்தேன்!” நாம் உண்மையில் எப்படியிருக்கிறோம் என்று கடைசியாக ஒரு நாள் பார்த்தோமானால் இதனைப் புரிந்து கொள்வோம். பத்து வருடங்களாக மிக்க மகிழ்ச்சியுடனிருந்தனர். திடீரென உண்மையைக் காண்கின்றனர். இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களுடைய உண்மையானப் பாவங்களும், மீறுதல்களும் கர்த்தரின் சட்டம் மூலமாக கடைசியாக தெளிவாக உணர்த்தப்படுகின்றது. அத்தகைய மனிதன் மறுபடியும் பிறக்காமலேயே 10 வருடங்களாக இயேசுவை விசுவாசித்திருக்கிறான்.

தன் இருதயத்தில் உள்ள பாவங்களை ஒரு பாவியால் அழிக்க முடியாதாகையால், கர்த்தர் முன் அவன் பாவியாகவே இருக்கிறான், சிலருக்கு 5 வருடங்கள் பிடிக்கிறது. சிலர் இதனை உணருவதற்கு 10 வருடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் 30 வருடங்களுக்குப் பிறகு உணருகிறார்கள், சிலர் 50 வயதிற்கு பிறகு உணருகிறார்கள். சிலர் முடிவு மட்டும் இதனை உணருவதேயில்லை. “அன்பான கர்த்தரே, என் மனதில் கட்டளைகளை வைக்கும் முன் வரை நல்லவனாக இருந்தேன். சட்டத்தை நன்றாகக் கடைப்பிடிக்கிறேன் என்று உறுதியாக இருந்தேன். ஆனால் இப்போது அன்றாடம் பாவம் செய்திருப்பதாக உணருகிறேன். அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டதுபோல், “முன்னே நியாயப் பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.” (ரோமர் 7:9) நான் இயேசுவை விசுவாசித்த போதிலும் பாவியாகவே இருந்தேன்.”

உன்னுடைய சொந்தப் பாவங்களே வேத வாக்கின் படி நீ வாழ்வதிலிருந்து உன்னைத் தடுக்கின்றன. கர்த்தர் உன் பாவங்களை அங்கே எழுதியிருப்பதால், நீ ஜெபிக்கும் பொருட்டு தலை வணங்கும்போது, உன் எல்லாப் பாவங்களும் வெளிப்படும். “ஆச்சரியம்! நீ செய்த பாவம் நானே.”

இரண்டு வருடங்களுக்கு முன் உன்னிலிருந்து விடுதலைப் பெற்றேனே. திடீரென்று நீ எப்படி மீண்டும் வந்தாய்? நீ ஏன் ஒழிந்து போகவில்லை?”

ஓ, இப்படியிருக்காது! நான் உன் இதயத்தில் பதிந்துள்ளேன். நீ என்ன நினைத்தாலும் சரி, நீ இன்னும் பாவியாகவே இருக்கிறாய்.”

இல்லை! இல்லை!”

ஆகவே, இரண்டு வருடங்களுக்கு முன்பு செய்த பாவத்திற்காக அந்த பாவி மீண்டும் மனம் வருந்துகிறான். “தயவு செய்து என்னை மன்னியும், கர்த்தரே. நான் முன்பு செய்த பாவங்களினாலே இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என் பாவங்களுக்காக மனம் கசந்து அழுதேன். ஆனால் இன்னும் அவை என்னுள் இருக்கின்றன. தயவு செய்து என்னை மன்னியும், நான் பாவஞ் செய்தேன்.”

இப்படி மனங்கசந்து அழுவதால் அப்பாவங்கள் போய்விடுமா? மக்களின் பாவங்கள் அவர்கள் இருதயத்தில் எழுதப்பட்டுள்ளபடியால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி ஆகியவை இல்லாமல் அவற்றை அழிக்கமுடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மட்டுமே உண்மையில் பாவ விடுதலை பெற முடியும். இயேசுவின் உண்மை நற்செய்தியை நாம் விசுவாசிப்பதன் மூலமே நாம் இரட்சிக்கப்படமுடியும்.

  • நானே உன் இரட்சகர்
  • புதிய உடன்படிக்கைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?
  • அதனை நம் இருதயத்தில் நம்பி உலகமெல்லாம் அது குறித்து பிரசங்கிக்க வேண்டும்.

பரலோகத்திலுள்ள நம் கர்த்தர் புதிய உடன்படிக்கை ஒன்றினை நம்முடன் செய்தார். “நான் உன் இரட்சகராய் இருப்பேன், நீர் மற்றும் இரத்தத்தின் மூலமாக உன்னை இவ்வுலகின் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுதலயாக்குவேன். என்னை விசுவாசிப்போரை நிச்சயமாக ஆசீர்வதிப்பேன்.”

கர்த்தரின் இந்த புதிய உடன்படிக்கையை நம்புகிறாயா? நாம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும், இரட்சிப்படையலாம். மறுபடியும் பிறக்கலாம். அதற்கு நாம் நீர் மற்றும் ஆவியினால் கிட்டும் அவர் இரட்சிப்பையும், அவரின் சத்திய உடன்படிக்கையயும் விசுவாசிக்கவேண்டும்.

ஒரு வைத்தியர் நம் நோயை சரியாக கண்டுபிடிக்கவில்லையென்றால் அவரை நம்பமாட்டோம். ஒரு வைத்தியர் முதலில் தன் நோயாளியின் நோயைக் கண்டுபிடித்து அதற்கு சரியான மருந்தைக் கொடுக்கவேண்டும். அங்கே அநேக வகையான மருந்துகள் இருக்கின்றன. ஆனால் எதைப் பயன்படுத்துவது என்று மருத்துவருக்கு தெரிந்திருக்கவேண்டும். ஒருமுறை மருத்துவர் அவன்/அவள் நோயைக் கண்டுபிடித்துவிட்டால் அங்கே அநேக மருந்துகள் அவர்களைக் குணப்படுத்த உள்ளன. ஆனால் தவறான கண்டுபிடிப்பினால் எல்லா வகையான நல்ல மருந்துகளும் நோயாளியின் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.

அதுபோல, நீ இயேசுவை விசுவாசிக்கும்போது வேதவாக்கின் மூலம் உன் ஆவியின் நிலைமையை சரியாக கண்டு பிடிக்க வேண்டும். வேதவாக்கின் மூலம் உன் ஆவியை பரிசோதித்தால் அதன் சரியான நிலை உனக்குத் தெரியவரும். ஆவிகளின் மருத்துவர் யாரையும் தள்ளிவிடாது, எல்லோரையும் குண்மாக்குகிறார். அவர்கள் எல்லாம் மறுபடியும் பிறக்கமுடியும்.

நான் பாவ விடுதலை பெற்றுள்ளேனா என்று எனக்குத் தெரியவில்லையே என்று நீங்கள் கூறினால் அதன் பொருள் நீங்கள் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. ஒரு போதகர் இயேசுவின் உண்மைச் சீடராக இருந்தால் அவர் தம்மை பின்பற்றுவோரின் பாவப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர்களுக்கு உதவ வேண்டும். பிறகு அவர்களுடைய விசுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவி செய்து, ஆவியில் அவர்களை வழி நடத்துவார். அவரால் தம்மைப் பின் பற்றுவோரின் ஆவிக்குரிய நிலையை சரியாக அறிந்துகொள்ள இயலவேண்டும்.

இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போடும்படி இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் வந்து ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்தார். அவர் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைக் கொடுத்தபோது உன் பாவங்களை மட்டும் விட்டுவிட்டாரா? நீர் மற்றும் ஆவியின் வார்த்தை எல்லா விசுவசிகளின் பாவத்தையும் கழுவிப்போடுகிறது.

நற்செய்தியானது டைனமைட் போன்றது. அது உயர்ந்த கட்டிடங்களிலிருந்து மலைகள் வரை எல்லாவற்றையும் தகர்த்து விடுகிறது. இயேசுவின் செய்கையும் இதற்கொப்பானது. அவர் தம்மை நம்புவோரின் எல்லாப் பாவங்களையும் அவரின் நற்செய்தியான நீர் மற்றும் ஆவியின் மூலமாக அழித்தார். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து வேதாகமம் கூறியுள்ளபடி பார்ப்போமாக.

பழைய ஏற்பாட்டில் கை வைப்பதான நற்செய்தி

  • பழைய ஏற்பாட்டின்படி கை வைப்பதற்கான காரணம் என்ன?
  • பாவங்களை பாவ பலிகளின்மீது சுமத்துவதே அதன் காரணம்.

லேவியராகமம் 1:3-4 இல் நற்செய்தியாகிய பாவ விடுதலையின் சத்தியத்தைப் பார்ப்போமாக. “அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சன்னதியில் தான் அங்கீகரிக்கப்படும்படி அவன் அதை ஆசரிப்புக் கூடார வாசலில் கொண்டுவந்து, அது தன் பாவ நிவர்த்திக்கென்று அங்கீகரிக்கப்படுபடி தன் கையை அதின் தலையின் மேல் வைத்து.”

இந்த வசனங்கள் கூறுவதாவது, தகனப்பலிகள் ஆசரிப்புக்கூடார வாசலில், கர்த்தருக்கு முன்பாக, பலிகளின் தலை மீது கை வைத்து பலி செலுத்தவேண்டும். அப்பலி மிருகங்கள் உயிருடனும், எந்த ஒரு களங்கமும் இல்லாமல் இருக்கவேண்டும்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு பாவி, தம் அன்றாட பாவங்களிலிருந்து விடுதலை பெறும்பொருட்டு தன் கைகளை பலி மிருகத்தின் தலையில் வைத்தான். கர்த்தருக்கு முன் பாவ பலியாக அதனைக் கொன்றான். ஆசாரியன் அதன் இரத்தத்தை எடுத்து, தகன பலி பீடத்தின் மேலுள்ள கொம்புகளில் அதையிட்டான். அதன்பிறகு மீதியான இரத்தத்தை பலி பீடத்தரையில் கொட்டினான். இவற்றினால் அப்பாவி தன் அன்றாட பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றான்.

ஒரு வருடத்திற்கான பாவத்தைக் குறித்து லேவியராகமம் 16:6-10 இல் எழுதப்பட்டுள்ளது. “பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவ நிவர்த்தி செய்யும்படிக்கு தன்னுடைய பாவ நிவாரண பலியின் காளையைச் சேரப்பண்ணி அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டு வந்து, ஆசரிப்புகூடார வாசலிலே கர்த்தருடைய சன்னதியில் நிறுத்தி, அந்த இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் குறித்து கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக் கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவை பாவ நிவாரண பலியாக சேரப்பண்ணி, போக்காடாக விடப்பட சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவை, அதைக் கொண்டு பாவ நிவர்த்தி உண்டாக்கவும், அதை போக்காடாக வனாந்திரத்திலே போக விடவும், கர்த்தருடைய சன்னதியில் உயிரோடே நிறுத்தி,” வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல், போக்காடு என்பதன் பொருள் “வெளியில் போடுவதற்காக.” ஆகவே, அவ்வருடத்தின் பாவங்கள் ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே மன்னிக்கப்பட்டது.

லேவியராகமம் 16:29-30 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைபடுத்துவதுமன்றி ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக் கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவ நிவர்த்தி செய்யப்படும்.”

இஸ்ரவேலர்கள் ஒரு வருடத்தின் பாவங்களுக்காக பாவ நிவர்த்தி செய்த நாள் இதுவாகும். இதனை எப்படிச் செய்வது? முதலாவதாக தலைமை ஆசரியனான ஆரோன் அங்கிருக்கவேண்டும். இஸ்ரவேல் மக்களுக்கு பிரதிநிதியாக இருந்தது யார்? ஆரோன். கர்த்தர் ஆரோனையும் அவன் சந்ததியாரையும் தலைமை ஆசாரியர்களாக நியமித்தார்.

ஆரோன் தானும் தன் குடும்பத்தாரும் பாவ நிவர்த்தி பெறும்பொருட்டு காளையைப் பலி கொடுத்தான். அவன் காளையைக் கொன்று அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை கிருபாசனம் முன்பு ஏழுமுறை தெளித்தான். முதலில் அவனும் அவன் குடும்பத்தாரும் பாவ நிவர்த்தி செய்யவேண்டியிருந்தது.

பாவ நிவர்த்தி என்பது ஒருவனின் பாவங்களை பலிமீது சுமத்தி பலி மிருகத்தை அவனுக்காக கொல்லுவதாகும். பாவியே சாகவேண்டியவன். ஆனால் அதற்கு நிவர்த்தியாக அவன் பாவங்களை பலி மீது செலுத்தி அதைக் கொல்கிறான்.

தன் பாவங்களையும் அவன் குடும்பத்தார் பாவங்களையும் கழுவிய பின் கர்த்தருக்கு முன் ஒரு ஆட்டை பலியாகவும், மற்றதை வனாந்திரத்திலே போக்காடாகவும், இஸ்ரவேல் மக்கள் முன் செய்தான்.

ஒரு ஆடு பாவப்பலியாக பலி கொடுக்கப்பட்டது. ஆரோன் தன் கையை பலியாட்டின் தலை மீது வைத்து அறிக்கைச் செய்தான். “ஓ கர்த்தரே, உம்முடைய இஸ்ரவேல் மக்கள் பத்துக் கட்டளைகளையும், 613 சட்டங்களையும் கடைப்பிடிக்கத் தவறினார்கள். இஸ்ரவேலர்கள் பாவிகளானார்கள். நான் இப்போது இந்த ஆட்டின்மீது கடந்த வருட பாவங்களையெல்லாம் சுமத்தும் நிமித்தம் கை வைக்கிறேன்.”

அவன் ஆட்டின் கழுத்தை வெட்டி, ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள மகா பரிசுத்த இடத்திற்கு இரத்தத்துடன் சென்றான். அங்கு சிறிது இரத்தத்தைக் கிருபாசனம் மீதும், அதன் முன்பும் ஏழு முறை தெளித்தான்.

மகா பரிசுத்த இடத்திற்குள் உடன்படிக்கையின் பெட்டி இருக்கிறது. அதன் உரையானது கிருபாசனம் என்றழைக்கப்படுகிறது. அதனுள் இரண்டு கற்பலகைகளில் பத்து கட்டளைகளும், ஒரு தங்க பாத்திரத்தில் மன்னாவும், ஆரோனின் கோலும் இருந்தன.

ஆரோனின் கோல் உயிரோடு எழும்பியதைக் குறிக்கிறது. இரண்டு கற்பலகைகள் கர்த்தரின் நீதியையும், தங்கப் பாத்திரத்திலுள்ள மன்னா அவர் ஜீவ வார்த்தைகளையும் குறிப்பிடுகின்றன.

உடன்படிக்கைப் பெட்டியின் மீது உறை ஒன்றிருந்தது. இரத்தம் கிருபாசனத்தின் முன் ஏழு தரம் தெளிக்கப்பட்டது. தலைமை ஆசாரியனின் ஆடையின் கரையில் தங்க மணிகள் பிணையப் பட்டிருந்ததால், அவன் இரத்தத்தை தெளிக்கும்போது அவை ஔசை எழுப்பின.

லேவியராகமம் 16:14-15 இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து கிருபாசனத்திற்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன். பின்பு ஜனத்தினுடைய பாவ நிவாரணப்பலியான வெள்ளாட்டுக் கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாக கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்தது போல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து.”

ஒவ்வொரு முறை அவன் இரத்தத்தைத் தெளிக்கும்போதும், மணிகள் ஓசை எழுப்பின. வெளியே கூடி இருந்த அனைத்து இஸ்ரவேல் மக்களும் அதனைக் கேட்க கூடியதாக இருந்தது. அவர்களுடைய பாவங்களுக்கு தலைமை ஆசாரியனே பாவ நிவர்த்தி செய்யவேண்டியிருந்ததால், இந்த மணியோசையின் பொருள் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதாம். அது இஸ்ரவேல் மக்களுக்கான ஆசீர்வாதமான ஓசையாக இருந்தது.

மணிகள் ஏழுதரம் ஒலித்தபோது, அவர்கள் கூறினார்கள் “நான் விடுவிக்கப்பட்டேன். முழுவருட பாவங்களை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்பொழுது விடுதலையாகிவிட்டேன் மக்கள் தம் வாழ்க்கைக்கு மீண்டும் போயினர். குற்ற உணர்ச்சி இல்லாது சென்றனர். அந்த மணிகளின் ஓசையைப் போன்றதே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பது.

நாம் நீர் மற்றும் ஆவியின் நற்செய்தியாகிய பாவ விடுதலையைக் கேட்டு அதனை இதயப்பூர்வமாக விசுவாசித்து, வாயினால் அறிக்கைச் செய்தால், இதுவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி குறித்த விவரமாகும். மணி ஏழுதரம் ஒலி எழுப்பியபோது, இஸ்ரவேலர்களின் வருட பாவங்கள் கழுவப் பட்டன. அவர்கள் பாவங்கள் கர்த்தருக்கு முன்பாக கழுவப்பட்டன.

இஸ்ரவேலர்களுக்காக ஒரு ஆட்டை பலியிட்டபின், தலைமை ஆசாரியன் மற்ற ஆட்டை எடுத்துக்கொண்டு ஆசரிப்புகூடாரத்திற்கு வெளியே காத்துக் கொண்டிருக்கும் மக்களிடம் சென்றான். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் தலைமை ஆசாரியனான ஆரோன் தன் கைகளை அந்த ஆட்டின் தலைமீது வைத்தான்.

லேவியராகமம் 16:21-22 இல் “அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்திரத்திற்கு அனுப்பிவிடக்கடவன். அந்த வெள்ளாட்டுக்கடா, அவர்களுடைய அக்கிரமங்களை எல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.”

தலைமை ஆசாரியனான ஆரோன், தன் கைகளை மற்ற ஆட்டின் (போக்காடு) தலைமீது வைத்து கர்த்தர் முன்பாக இஸ்ரவேலர்களின் பாவங்களை அறிக்கைச் செய்தான். “ஓ, கர்த்தரே, இஸ்ரவேலர்கள் உமக்கு முன்பாக பாவம் செய்தார்கள். நாம் பத்து கட்டளைகளையும் 613 சட்டப்பிரிவுகளையும் பின் பற்றவில்லை. ஓ கர்த்தரே, நான் இஸ்ரவேல் மக்களின் வருட பாவத்தை இந்த ஆட்டின் தலைமீது சுமத்துகிறேன்.”

எரேமியா 17:1 ஐப் பொருத்தவரையில் பாவங்கள் இரண்டு இடங்களில் பதிந்திருக்கின்றன. ஒன்று செய்கையின் புத்தகத்திலும் மற்றது இதயப் பலகையிலுமாகும்.

ஆகவே மக்கள் பாவ விடுதலைப் பெறவேண்டுமானால், அவர்கள் பாவங்கள் செய்கையின் புத்தகத்திலிருந்தும், இருதயப்பலகயிலிருந்தும் அழிக்கப்பட வேண்டியதாயிருந்தது. பாவ விடுதலைத் தினத்தில் ஒரு ஆடு நியாயத்தீர்ப்பு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள பாவத்திற்காகவும் மற்றது இருதயப்பலகையில் வரையப்பட்டுள்ள பாவங்களுக்குமாகும்.

  • பழைய ஏற்பாட்டில் கர்த்தர் ஏன் பலியிடும் முறையை இஸ்ரவேலர்களுக்கு நியமித்தார்.
  • ஒரு இரட்சகர் ஒரே முறையில் பொருந்ததக்க வகையில் அவர்கள் பாவங்களை துடைத்தெடுப்பார் என்பதற்காகவே.

தன் கைகளை ஆட்டின் தலைமீது வைத்ததன்மூலம், தலைமை ஆசாரியன் மக்களுக்கு, அவர்கள் வருடாந்திர பாவங்கள் அந்த ஆட்டின் மீது சுமத்தப்பட்டதை உணர்த்தினான். ஆட்டின் தலையில் பாவங்கள் சுமத்தப்பட்டவுடன் பொருத்தமான ஒருவன் அந்த ஆட்டை வனாந்திரத்திற்கு கூட்டிச் சென்றான்.

பாலஸ்தீனம் பாலைவனத்திலான நிலமாகும். இஸ்ரவேல் மக்களின் பாவங்கள் சுமத்தப்பட்ட ஆடானது இதனைச் செய்வதற்கென்றே நியமிக்கப்பட்ட ஒருவனால், நீரோ, புல்லோ இல்லாத பாலைவனத்திற்குள் வழி நடத்தப்பட்டது. மக்கள் எழுந்து நின்று போக்காடானது வனாந்திரத்திற்குள்ளே போவதைப் பார்த்தார்கள்.

அவர்கள் தமக்குள் கூறிக்கொண்டார்கள். “நான் செத்திருக்க வேண்டியவன். ஆனால் என்னுடைய பாவங்களுக்காய் இந்த ஆடு சாகிறது. பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால் எனக்கு பதிலாக இந்த ஆடு சாகிறது. ஆடே, உனக்கு நன்றிகள். உன்னுடைய சாவின் பொருள் நான் ஜீவித்திருப்பது அந்த ஆடு பாலைவனத்திற்குள் கொண்டுச் செல்லப்பட்டது. இஸ்ரவேலர்கள் ஒரு வருடம் செய்த பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டார்கள்.

உன் இருதயத்திலுள்ள பாவங்கள் பாவ பலியில் இடமாற்றம் செய்யப்பட்டதால், நீ சுத்தமானாய். அது அத்தனை இலகுவானது. உண்மையை நாம் புரிந்துகொண்டால் அது வெகு இலகுவானது.

அந்த ஆடு தொடுவானத்தில் காணாமற்போயிற்று. அதனை விடுவித்தபின் அவன் தனியாக திரும்பி வந்தான். இஸ்ரவேலரின் ஔராண்டு பாவம் முழுவதும் போயிற்று. அந்த ஆடு வனாந்தரத்திலே, நீர், புல், ஆகியவையின்றி அலைந்தது. அத்துடன் இஸ்ரவேலர்களின் ஔராண்டு பாவங்களுடன் அந்த ஆடு மரித்தது.

பாவத்தின் சம்பளம் மரணம். கர்த்தரின் நீதி நிறைவேற்றப்பட்டது. கர்த்தர் இஸ்ரவேலர்கள் ஜீவித்திருக்கும்படியாக அந்த ஆட்டை பலியிட்டார். இஸ்ரவேலர்களின் இந்த ஆண்டின் எல்லா மீறுதல்களும் தெளிவாகக் கழுவப்பட்டன.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு நாளின் பாவமும் ஒரு வருடத்தின் பாவமும் இவ்வாறாக கழுவப்பட்டதைப் போன்று கர்த்தரின் உடன்படிக்கைப்படி நம் பாவங்கள் ஒரே தரம் மன்னிக்கப்பட வேண்டியதாய் இருந்தது. அவர் மேசியாவை உலகிற்கு அனுப்பி நம் ஜீவிய பாவங்கள் அனைத்தையும் கழுவுவதாக புதிய உடன்படிக்கைச் செய்தார். இந்த உடன்படிக்கை இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் செயல் படுத்தப்பட்டது.

புதிய ஏற்பாட்டின் படி நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறத்தல்

  • இயேசு ஏன் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார்?
  • நீதியை நிறைவேற்றுவதற்காக உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கவும்; பழைய ஏற்பாட்டின் பலியின் தலையில் கை வைப்பதுபோல் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானம் அமைந்தது.

மத்தேயு 3:13-15 ஐ வாசிப்போமாக. “அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைச் செய்து; நான் உம்மாலே ஞானஸநானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.”

இயேசு யோர்தானுக்குச் சென்றார். அங்கு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். இதன் மூலம் நீதியை நிறைவேற்றினார். அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் பெரியவன்.

மத்தேயு 11:11-12 கூறுகிறது. “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; யோவான் ஸ்நானன் காலமுதல் இது வரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது.”

கர்த்தரால் யோவான் ஸ்நானன் மனித குலப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கிறிஸ்துவுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்டான். அவன் ஆரோனின் சந்ததியினனும் கடைசித் தலைமை ஆசாரியனுமாவான்.

இயேசு தன்னிடம் வருகிறதைக் கண்டு, யோவான் ஸ்நானன், “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா?” என்றான்.

இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது அவருடைய நோக்கம் மனித குலத்தைப் பாவத்திலிருந்து விடுதலை செய்து அவர்களை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றுவதாயிருந்தது. இயேசு யோவானிடம் கூறினார். “நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்கும் நற்செய்தியை நாம் நிறைவேற்றவேண்டும். ஆகவே, எனக்கு இப்போது ஞானஸ்நானம் செய்.”

யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். இயேசு உலகின் பாவங்களை எல்லாம் சுமந்து தீர்க்க அது பொருத்தமாக இருந்தது. அவர் மிகவும் பொருத்தமான முறையில் ஞானஸ்நானம் பெற்றதால் நாமும் முறைப்படி நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டோம். நம் பாவங்கள் அனைத்தையும் தம் மீது ஏற்கும்படியாக இயேசு ஞானஸ்நானம் பெற்றார்.

இயேசு இவ்வுலகில் பிறந்து அவர் ஞானஸ்நானம் பெறும்போது அவரின் வயது 30. இது அவரின் முதல் இறைப்பணியாகும். உலகின் எல்லாப் பாவங்களையும் துடைத்ததன் மூலம் நீதியை நிறைவேற்றி மக்களை பரிசுத்தமாக்கினார்.

இயேசு இவ்வுலகிற்கு வந்து நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் பொருட்டு மிகவும் பொருந்ததக்க வகையில் ஞானஸ்நானம் பெற்றார். “இதனால் எல்லா நீதிகளும் நிறைவேறின.

கர்த்தர் கூறினார், “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாய் இருக்கிறேன் (மத்தேயு 3:17) இயேசுகிறிஸ்துவுக்கு தாம் மனித குலத்தின் பாவங்களைச் சுமக்கப் போவதும் சிலுவையில் இரத்தஞ்சிந்தி மரிக்கப்போவதும் தெரிந்திருந்தாலும் அவர் தம் தந்தையின் சித்தத்திற்கு “என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது (மத்தேயு 26:39) என்றார். தந்தையின் சித்தம் மக்களின் சகல பாவங்களையும் கழுவி உலக மக்களுக்கு இரட்சிப்பை அருளுவதாக இருந்தது.

ஆகவே, இயேசு, கீழ்ப்படிதலுள்ள மகனாக, தன் தந்தையின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார்.

யோவான் 1:29 “மறுநாளிலே இயேசுவை தன்னிடத்திலே வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” இயேசு உலகின் பாவங்களையெல்லாம் சுமந்து கொல்கொதா மலைமீது சிலுவையில் இரத்தஞ்சிந்தினார். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” என்று யோவான் ஸ்நானன் சாட்சி கொடுக்கிறான்.

உன்னிடம் பாவமிருக்கிறதா? இல்லையா? நீ நீதிமானா? அல்லது பாவியா? உண்மை யாதெனில் இயேசு நம் பாவங்கள் அனைத்தையும் ஏற்று நம் அனைவருக்காகவும் சிலுவையில் அறையப்பட்டார்.

  • இவ்வுலகின் பாவங்கள் யாவும் எப்போது இயேசு மீது சுமத்தப்பட்டது?
  • யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றபோது இயேசு நம் பாவங்களை ஏற்றுக்கொண்டார்.

நாம் இந்த பூமியில் பிறந்தபிறகு 1 முதல் 10 வயது வரையிலும் கூட பாவஞ்செய்கிறோம். இயேசு அந்தப் பாவங்களை எடுத்துப்போட்டார். நாம் 11 முதல் 20 வயதிலும் கூட பாவஞ்செய்கிறோம். நம் இதயத்தில் செய்த பாவங்கள், நம் செய்கைகளினால் செய்த பாவங்கள், இவையனைத்தையும் அவர் எடுத்துப்போட்டார்.

நாம் 21 முதல் 45 வயது வரை கூட பாவஞ்செய்கிறோம். இயேசு அதையும் எடுத்துப்போட்டார். உலகின் எல்லா பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு, சிலுவையில் அறையப்பட்டார். நாம் பிறந்த நாள் முதல் மரண பரியந்தமும் பாவஞ்செய்கிறோம். ஆனால் அவர் அவையாவற்றையும் எடுத்துப்போட்டார்.

இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” எல்லாப் பாவங்களையும், ஆதாம் தொடங்கி முதல் மனிதன் முதல், உலகின் கடைசி மனிதன் வரை - எல்லாப் பாவங்களையும் அவர் சுமந்து தீர்த்தார். அவர் யாருடைய பாவத்தைச் சுமப்பது என்று தெரிந்தெடுக்கவில்லை.

நம்மில் சிலரை மட்டுமே நேசிக்க அவர் தீர்மானிக்கவில்லை. அவர் மாமிசமாக இவ்வுலகிற்கு வந்து, எல்லாப் பாவங்களையும் தம் மீது சுமந்து சிலுவையில் அறையப்பட்டார். நம் எல்லாருக்காகவும் நியாயம் தீர்க்கப்பட்டு உலகின் பாவங்களை நிரந்தரமாக துடைத்தார்.

அவரின் இரட்சிப்பிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. “உலகின் எல்லா பாவங்களையும் என்பதில் நம் பாவங்களும் அடங்கும். இயேசு அவற்றை எடுத்துப்போட்டார்.

அவருடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் துப்புரவாக்கினார். தம் ஞானஸ்நானத்தின் மூலம் அவைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக சிலுவையில் தீர்க்கப்பட்டார். இயேசு சிலுவையில் மரிக்கும் முன்பு “ முடிந்தது (யோவான் 19:30), என்று கூறியதன் பொருள் மனிதர்களின் இரட்சிப்பு முழுமையடைந்தது என்பதாகும்.

இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? மாமிசத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. இரத்தம் ஒருவனை பாவத்திலிருந்து விடுதலையாக்குகிறது. (லேவியராகமம் 17:11) இயேசு ஏன் ஞானஸ்நானம் பெறவேண்டும். ஏனெனில் உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொள்ள அவர் விரும்பினார்.

அதன் பின்பு எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: ‘தாகமாயிருக்கிறேன்' என்றார் (யோவான் 19:28). பழைய ஏற்பாட்டில் கர்த்தர் செய்த உடன்படிக்கைகள், யோர்தான் நதியில் தம் ஞானஸ்நானம் மூலமும், சிலுவை மரணத்தாலும், நிறைவேறிற்று என்று கண்டு இயேசு மரித்தார்.

பாவ மன்னிப்பு அவர் மூலம் நிறைவேற்றப்பட்டது என்று உணர்ந்து “எல்லாம் முடிந்தது என்றார். அவர் சிலுவையில் மரித்தார். அவர் நம்மை பரிசுத்தர்களாக்கினார். மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள் உயிரோடெழும்பினார், பரலோகத்திற்கு ஏரிச்சென்றார். அங்கு இப்போது கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம் மூலம் அனைத்துப் பாவங்களும் கழுவப்படுதலே ஆசீர்வதிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறத்தல் ஆகும். அதனை விசுவாசி. உன் பாவங்கள் அனைத்தும் உனக்கு மன்னிக்கப்படும்.

தினமும் மனம் வருந்தி அழுவதால், நம் பாவங்களிலிருந்து விடுதலைப் பெறமுடியாது. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை மரணம் மூலம் ஒரே தரம் பாவ மன்னிப்பு ஈயப்பட்டது. கூறுகிறது, “இவைகள் மன்னிக்கபட்டதுண்டானால், இனிப் பாவத்தின் நிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.” (எபிரெயர் 10:18).

இப்பொழுது நாம் செய்யவேண்டியதெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் மூலம் பாவ மன்னிப்பு உண்டாயிருக்கிறது என்று விசுவாசிப்பதே. இதனை நம்பி இரட்சிக்கப்படு.

ரோமர் 5:1-2 கூறுகிறது, “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற படியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அவர் மூலமாய் நாம் இந்த கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலை கொண்டிருந்து, தேவ மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம்.”

நாம் ஆசீர்வதிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்புவதைத் தவிர வேறு நியாயமான வழிகள் இல்லை.

கர்த்தரின் சட்டம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது?

  • சட்டத்தினால் பரிசுத்தமடைய முடியுமா?
  • இல்லை. நம்மால் முடியாது. சட்டம் பாவம் குறித்து நமக்கு அறிவுறுத்துகிறது.

 

எபிரெயர் 10:9 இல் இவ்வாறு எழுதப் பட்டுள்ளது, “தேவனே; உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.” சட்டத்தினால் நாம் பரிசுத்தனாகமுடியாது. அது நம்மை பாவியாக்கும்.

ரோமர்3:20 கூறுகிறது, “பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால் ஆபிரகாமுடன் கர்த்தர் உடன்படிக்கைச் செய்து 430 வருடங்களுக்கு பிறகு மோசே மூலமாக கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு சட்டங்களை வழங்கினார். அதனைக் கொடுத்ததற்கு முக்கியமான காரணம், இஸ்ரவேலர்கள் கர்த்தருக்கு முன் எது பாவம் என்று அறிந்துகொள்வதற்காகவே. கர்த்தரின் சட்டம் இல்லையென்றால் மனிதர்களுக்கு பாவத்தைப்பற்றி எந்த அறிவும் இருந்திருக்காது. கர்த்தர் நமக்கு சட்டத்தைக் கொடுத்தபடியால் பாவத்தைப் பற்றி புரிந்து கொள்கிறோம்.

சட்டத்தின் ஒரே நோக்கம், கர்த்தர் முன் நாம் பாவிகள் என்று நமக்கு அறிவுறுத்துவதே. இந்த அறிவு மூலம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மூலம் மறுபடியும் பிறந்து இயேசுவினிடம் திரும்பி வர வேண்டும். இந்நோக்கம் பற்றியே கர்த்தர் சட்டத்தை நமக்குத் தந்தருளினார்.

கர்த்தரின் சித்தம் செய்யவே இயேசு வந்தார்

  • கர்த்தர் முன்பு நாம் என்ன செய்யவேண்டும்?
  • இயேசுவின் மூலமாக கர்த்தரின் பாவ மன்னிப்பை விசுவாசிக்கவேண்டும்.

“தேவனே; உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.” (எபிரெயர் 10:9) சட்டத்தினால் முற்றிலுமாக நாம் பரிசுத்தமாக முடியாது என்பதால் கர்த்தர் நம்மைச் சட்டத்தின் மூலமாக விடுதலைச் செய்யாமல் அவரின் முழுமையான பாவ மன்னிப்பு மூலம் பரிசுத்தமாக்கினார். கர்த்தர் நம்மை தம் அன்பினாலும் நீதியினாலும் இரட்சித்தார்.

இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அன்றியும் எந்த ஆசாரியனும் நாடோரும் ஆராதனைச் செய்கிறவனாயும், பாவங்களை ஒரு காலும் நிவர்த்திச் செய்யக்கூடாத ஒரே வித பலிகளை அநேகந்தரம் செலுத்தி வருகிறவனாயும் நிற்பான். இவரோ பாவங்களுக்கு ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து.” (எபிரெயர் 10:10-12)

இயேசு கர்த்தரின் வலது பாரிசத்தில் அமர்ந்தார். ஏனெனில் அவரின் பாவ மன்னிப்புக்கான செய்கை முடிவடைந்தது. அவர் செய்யவேண்டியது வேறு எதுவும் இல்லை. அவர் மீண்டும் ஞானஸ்நானம் பெறப்போவதுமில்லை. மீண்டும் தம்மைப் பலியாகக் கொடுக்கப் போவதுமில்லை.

இப்பொழுது உலகின் பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டுவிட்டன. அவர் செய்யவேண்டியதெல்லாம் தம்மை நம்புவோருக்கு நித்திய ஜீவனை அளிப்பது மட்டுமே. தம் ஆவியின் மூலம், நீர் மற்றும் ஆவியளிக்கும் இரட்சிப்பை விசுவாசிப்போரை தம் முத்திரை பதித்து காக்கிறார்.

இயேசு இவ்வுலகிற்கு வந்தார். உலகின் எல்லா பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார். சிலுவயில் மரித்தார். இந்தப்படியாக அவர் தம் செய்கையை நிறைவேற்றினார். இப்பொழுது இயேசுவின் செய்கை முடிந்தது. அவர் கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

இயேசு நம்மை நிரந்தரமாக இரட்சித்ததை நாம் விசுவாசிக்கவேண்டும்.

கர்த்தரின் பகைவரானோர்

  • கர்த்தரின் பகைவர் யார்?
  • இயேசுவை விசுவாசித்தபோதிலும் தன் இருதயத்தில் பாவமுள்ளவன்.

எபிரெயர் 10:12-13 இல் கர்த்தர் கூறுகிறார். “இவரோ பாவங்களுக்கு ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.” அவர் அவர்களுடைய கடைசி தீர்ப்புவரை காத்துக்கொண்டிருப்பதாக கூறுகிறார்.

அவருடைய பகைவர்கள் இன்னும் கூறுகிறார்கள் “கர்த்தரே தயவுசெய்து என்னுடைய பாவங்களை மன்னியும்” சாத்தானும் அவனைப் பின்பற்றுவோரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் அவரிடம் தொடர்ந்து பாவ மன்னிப்பு கேட்டுவருகின்றனர்.

நம் கர்த்தராகிய தேவன் அவர்களை இப்போது நியாயந்தீர்க்கப் போவதில்லை. ஆனால் அவர் இரண்டாம் முறை வரும் அந்நாளிலே அவர்கள் தீர்க்கப்பட்டு நித்திய நரகாக்கினை அடைவார்கள். அவர்கள் மனம் திருந்தி பாவ மன்னிப்பு மூலம் நீதிமான்கள் ஆவார்கள் என்று கர்த்தர் அவர்கள் மீது பொறுமையாக, அந்நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் சுமந்து தீர்த்தார். அவரை நம்பும் நமக்காய் மரித்தார். என்றாவது ஒரு நாள் தம்மை விசுவாசித்தவர்களை அழைத்துக்கொள்ளும் படியாக அவர் இரண்டாம் முறை தோன்றுவார். “ஓ, தயவுசெய்து சீக்கிரம் வாரும், கர்த்தரே!” பாவமற்றவர்களை நிரந்தரமாக தம்முடன் பரலோக ராஜ்ஜியத்தில் வாழ வைக்கும்பொருட்டு இரண்டாம் முறை வந்து எடுத்துக்கொள்வார்.

தம்மைப் பாவிகள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள், இயேசுவின் இரண்டாம் வருகையின்போது பரலோகத்தில் தமக்கு இடமில்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள். கடைசி நாளில் அவர்கள் தீர்க்கப்பட்டு எரியும் நரகத்தில் எறியப்படுவார்கள். இந்தத் தண்டனை நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறத்தலை ஏற்க மறுப்பவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

உண்மையல்லாதவைகளை நம்பிக் கொண்டிருப்பவர்களை இயேசு தம் பகைவர்களாக கருதுகிறார். அதனாலே இந்தப் பொய்களுடன் நாம் போரிடவேண்டியவர்களாக இருக்கிறோம். அதனாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பதை நாம் விசுவாசிக்கவேண்டும்.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்

  • நம்முடைய கடன்கள் எல்லாம் (பாவங்கள்) முழுவதுமாக செலுத்தித் தீர்த்தபிறகும் நம் பாவங்களுக்கு விடுதலை பெறவேண்டுமா?
  • இல்லை. இல்லவே இல்லை.

எபிரெயர் 10:15-16 கூறுகிறது. “இதைக் குறித்து பரிசுத்த ஆவியானவரும் நமக்கு சாட்சி சொல்கிறார்; எப்படியெனில்; அந்த நாட்களுக்குப் பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் ஏழுதுவேன் என்று கர்த்தர் சொல்கிறார் என்பதை உரைத்த பின்பு.”

நம் பாவங்கள் யாவற்றையும் துடைத்த பின்பு அவர் கூறினார். “நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது” இந்த உடன்படிக்கை என்ன? “நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்” முதலில் நாம் சட்டப்படி மரபுசார்ந்த வாழ்க்கை வாழ முயற்சித்தோம். ஆனால் சட்டத்தினால் நாம் இரட்சிப்படையவில்லை.

பிறகு ஆசீர்வதிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பதை இதயபூர்வமாக நம்பும்போது நாம் ஏற்கெனவே இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்று அறிந்தோம். யாரெல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தத்தை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் இரட்சிக்கப்படுவர்.

இயேசுவே இரட்சிப்பின் கர்த்தர். “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை” (அப்போஸ்தலர் 4:12) இயேசு இவ்வுலகிற்கு இரட்சகராக வந்தார். நம்முடைய செய்கைகளினால் நாம் இரட்சிக்கப்பட முடியாததாகையால், இயேசு நம்மை இரட்சித்து அதனை நம் இதயப் பலகைகளில், தம்முடைய இரட்சிப்பின் சட்டத்தினாலும், அன்பினாலும் இரட்சித்ததாக எழுதியுள்ளார்.

“அவர்களுடைய பாவங்களையும், அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனி பாவத்தின் நிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.” (எபிரெயர் 10:17-18)

நம்முடைய அக்கிரமங்களை அவர் இப்பொழுது நினைப்பதில்லை. நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார். விசுவாசிகளாகிய நம்மிடம் மன்னிக்கப் படும்படியாக பாவங்கள் எதுவுமில்லை. நம்முடைய கடன்களெல்லாம் மொத்தமாக செலுத்தப்பட்டுவிட்டதால், இப்பொழுது செலுத்துவதற்கு எதுவுமில்லை. இயேசுவின் ஊழியத்தை நம்புவதன் மூலம் மக்கள் இரட்சிக்கப் பட்டார்கள். இயேசு நம்மைத் தம்முடைய ஞானஸ்நானத்தினாலும், சிலுவை இரத்தத்தாலும் இரட்சித்தார்.

இப்பொழுது நாம் செய்யவேண்டியதெல்லாம், நீரையும் இயேசுவின் இரத்தத்தையும் நம்புவதே. “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32) இயேசுவினுள் இரட்சிப்பை நம்புங்கள். மூச்சுவிடுவதைவிட பாவ மன்னிப்பு பெறுவது இலகுவானது. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உள்ளவைகளையெல்லாம் உள்ளபடியே நம்புவது மட்டுமே. இரட்சிப்பு என்பது வேதவாக்கை விசுவாசிப்பதாகும்.

இயேசுவே நம் இரட்சகர் (இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம்) என்று விசுவாசி. இரட்சிப்பு உன்னுடையது என்று விசுவாசி. உன்னுடைய சொந்த யோசனைகளை கைவிட்டு இயேசுவின் இரட்சிப்பை விசுவாசி. நீங்கள் உண்மையில் இயேசுவை விசுவாசிக்கும் படியாகவும், அவருடன் நித்திய வாழ்வு வாழவும் ஜெபிக்கிறேன். *






பாவ மன்னிப்பு முறையில் இயேசுவின் ஞானஸ்நானம் இன்றியமையாதது

【3-8】< மத்தேயு 3:13-17 >


< மத்தேயு 3:13-17 >

“அப்போழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைச் செய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”

 

யோவான் ஸ்நானனின் ஞானஸ்நானம்

  • மனம் வருந்துதல் என்றால் என்ன?
  • பரிசுத்தமாகும்படி பாவ வாழ்க்கையைவிட்டு இயேசுவை விசுவாசித்தல்.

இவ்வுலகின் அநேக மக்களுக்கு இயேசு ஏன் உலகத்திற்கு வந்தார் என்றும், எதற்காக அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார் என்றும் தெரியாது. ஆகவே, இயேசுவின் ஞானஸ்நான நோக்கம் குறித்தும் அவருக்கு ஞானஸ்நானம் செய்வித்த யோவான் ஸ்நானன் குறித்தும் பார்ப்போம்.

யோர்தான் நதியில் யோவான் ஸ்நானன் எக்காரணத்தினால் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான் என்று யோசிப்போம். மத்தேயு 3:1-12 இல் மக்களைத் தம் பாவங்களை அறிக்கைச் செய்யவைத்து பாவத்திலிருந்து கர்த்தரிடம் மக்களைத் திருப்புவதற்காக ஞானஸ்நானம் செய்வித்தான்.

“மனம் திரும்புதலுக்கு என்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்;” (11 ஆம் வசனம்) மற்றும் “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்: அவருக்குப் பாதைகளைச் செவ்வைப் பண்ணுங்கள் என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.” (3 ஆம் வசனம்) யோவான் ஸ்நானன், ஒட்டக மயிரினால் தயாரிக்கப்பட்ட ஆடையை உடுத்தி, வெட்டுக்கிளிகளைத் தின்று, வனாந்திரத்தில் கூக்குரலிட்டான். அவன் மனம் திரும்பும் ஞானஸ்நானத்தை பாவ மன்னிப்புக்கென்று பிரசங்கித்தான்.

அவன் மக்களிடம் கூக்குரலிட்டான். “மனம் திரும்பு, மனித குல இரட்சகர் வருகிறார்; அவருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள். இரட்சிப்பின் பாதையை செவ்வை பண்ணுங்கள். புற ஜாதியார்களின் தெய்வங்களை ஆராதிப்பதை நிறுத்துங்கள். கர்த்தரை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்.”

எதனிடமிருந்து திரும்புவது? சிலைகளை வணங்குவதிலிருந்தும், பாவ வாழ்க்கையின் மற்ற எல்லா கெட்ட காரியங்களிலிருந்தும் திரும்ப வேண்டும். அதற்கு நாம் என்னசெய்யவேண்டும்? நாம் பரிசுத்தமாக வேண்டுமானால் இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெறவேண்டும். யோவான் ஸ்நானன் வனாந்திரத்திலே கூக்குரலிட்டான். “என்னால் ஞானஸ்நானம் பெறுங்கள். உங்கள் பாவங்களைக் கழுவிப் போடுங்கள். உங்கள் இரட்சகர், மேசியா, இவ்வுலகிற்கு வருகின்றார். பழைய ஏற்பாட்டின் பலியாட்டுக் குட்டியைப்போல், அவர் உங்கள் பாவங்களை எடுத்துப்போடுவார். உங்கள் பாவங்களை எல்லாம் கழுவுவார்.”

பழைய ஏற்பாட்டின்படி அன்றாடப் பாவங்கள் பலியின் தலைமீது கைவைப்பதால் மாற்றப்பட்டன. பாவ நிவாரண நாளில் இஸ்ரவேலினுடைய வருடத்தின் பாவங்கள் யாவும் பிரதான ஆசாரியன் ஆட்டின் தலைமீது கைவைப்பதன் மூலம் மாற்றப்பட்டன. பாவ நிவாரண நாள் ஒவ்வொரு வருடமும் ஏழாம் மாதம் பத்தாம் நாளில் வந்தது (லேவியராகமம் 16:29-31).

அதுபோல, உலகின் பாவங்களெல்லாம் இயேசுவின் மீது ஞானஸ்நானம் மூலம் ஒரே தரம் அவைகளைத் துடைத்துப்போடும்படியாக சுமத்தப்படவேண்டும். ஆகவே, யோவான் மக்களை இயேசுவிடம் திரும்பிவந்து, தன்னால் ஞானஸ்நானம் பெறும்படி வேண்டினான்.

யோவான் ஸ்நானன் செய்வித்த ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம் மனம் வருந்துதலாகும். இது இஸ்ரவேல் மக்களை பின்னால் வரப்போகும் இயேசுவிடம் அவர்களை அழைத்து வந்தது. மனம் வருந்துதல் என்பது பாவ வாழ்க்கையிலிருந்து திரும்பி தம் பாவங்கள் மன்னிக்கப்படும் படியாக மேசியாவை விசுவாசிக்க வேண்டுமென்பதே.

இஸ்ரவேல் மக்கள் தம் பாவங்களையெல்லாம் கழுவுவதற்கு வரப்போகும் மேசியாவை எதிர்பார்ப்பதால் விடுதலைப்பெற முடிந்தது. அதுபோலவே நாமும் 2000 வருடங்களுக்கு முன் பரலோகத்தில் இருந்து இறங்கி உலகின் பாவங்களையெல்லாம் கழுவிப்போட்ட இயேசுவை விசுவாசிப்பதால் பாவ விடுதலையை அடையமுடியும். ஆனால் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர்கள் கர்த்தரின் சட்டத்தைக் கைவிட்டு, தவறான பலிகளைச் செலுத்தி மேசியாவை மறந்துபோயினர்.

அவர்களுக்கு கர்த்தரின் சட்டத்தைக் குறித்து நினைவுபடுத்தவும் வரப்போகும் மேசியாவைக் குறித்து நினைவுபடுத்தவும் வேண்டியிருந்ததால், யோவான் ஸ்நானகன், மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். இப்படியாக இயேசுவுக்கும் யோர்தானில் ஞானஸ்நானங் கொடுத்தான்.

நிறைய மக்கள் யோவானிடம் வந்தார்கள். (அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்) விக்கிரகாராதனை செய்தமைக்காகவும், கர்த்தரின் கட்டளைகளைக் கைவிட்டதற்காகவும் மனம் வருந்தினார்கள். ஒரு முறையான பலியில் மூன்று இன்றியமையாத கூறுகள் உள்ளன. அவை, உயிருள்ள ஒரு மிருகம், கை வைத்தல், அதன் இரத்தம். உலகின் மக்களெல்லாம் இயேசுவை விசுவாசித்ததன் மூலம், இரட்சிக்கப்பட்டனர்.

பரிசேயரும் சதுசேயரும் ஞானஸ்நானம் பெற வந்தபோது யோவான் கூக்குரலிட்டான். “விரியன் பாம்புக் குட்டிகளே! வருங் கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகைக் காட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள்” (மத்தேயு 3:7-9).

இந்த பரிசேயரும் சதுசேயரும், குழுக்களான அரசியல்வாதிகளும், விக்கிரகாராதனைக் காரரும், தாம் கர்த்தரின் பிள்ளைகளென்று நினைத்திருந்தனர். ஆனால் அவர்கள் கர்த்தரின் சட்டங்களை நம்பவில்லை. அவர்கள் மற்ற தெய்வங்களையும் தம் சொந்த யோசனைகளையும் நம்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் ஞானஸ்நானம் பெறும்படியாக யோவானிடம் வந்தபோது அவன் கூறினான் “தவறான பலிகளைக் கொடுக்காதீர்கள், பாவத்திலிருந்து திரும்பி மேசியா வந்து உங்கள் பாவத்தைக் கழுவுவார் என்று விசுவாசியுங்கள். இதனை உங்கள் இதயத்தில் விசுவாசியுங்கள்.

மனம் வருந்துதல் என்பது தவறான வழிகளில் இருந்து திரும்புவதாகும். உண்மையான மனம் வருந்துதல் என்பது பாவத்திலிருந்தும், தவறான நம்பிக்கைகளிலிருந்தும் இயேசுவிடம் திரும்பி வருவதாகும். அது அவரின் ஞானஸ்நானம் மூலம் விடுதலையாவதும், அவர் சிலுவையில் தீர்க்கப்படுவதை விசுவாசிப்பதுமாகும்.

இந்தப்படியாக, கர்த்தரின் சட்டத்தையும், பலியிடும் முறையையும் கைவிட்ட இஸ்ரவேல் மக்களிடம் யோவான் ஸ்நானன் அவர்களைக் கர்த்தரிடம் திருப்பும் முகமாகக் கூக்குரலிட்டான். யோவான் ஸ்நானனின் கடமை மக்களை இயேசுவிடம் திரும்ப அழைத்துவருவதாய் இருந்தது. இதனால் அவர்கள் அவரை நம்பி தம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட முடியும்.

இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் வரும் பாவ விடுதலையை விசுவாசிக்கிறாயா?

  • இயேசுவின் முன் எல்லா மனிதர்களும் என்ன செய்யவேண்டும்?
  • தம் எல்லாப் பாவங்களிலிருந்தும்இரட்சிக்கப் படும்படியாக அவரைவிசுவாசிக்கவேண்டும்.

இயேசு தம் பொது ஊழியத்தில் முதல் செய்த காரியம் என்னவென்றால் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றதேயாகும். உலகின் எல்லாப் பாவங்களும் இதன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்டது.

இப்படியாக, இயேசுவின் ஞானஸ்நானமே, மனிதர்களை கர்த்தர் இரட்சிப்பதற்கான தொடக்கமாகும். இயேசுவின் இந்த நீதியின் செயல் உலகின் பாவங்களையெல்லாம் கழுவிப்போட்டது. இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் எடுத்துப்போட்டார் என்று விசுவாசிப்போரை கர்த்தர் விடுவிக்கிறார்.

இயேசு இவ்வுலகிற்கு வந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றதால், பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்த நற்செய்தி தொடங்கியது. மத்தேயு 3:15 இல் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் அவரின் ஞானஸ்நானம் மூலம் பரலோக ராஜ்ஜியம் திறந்தது. அது பழைய ஏற்பாட்டில் லேவியராகமம் 1:1-5, 4:27-31 ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள பாவ விடுதலைக்கான பலிமுறையை ஒத்துள்ளது.

பழைய ஏற்பாட்டின் எல்லாவற்றிற்கும் புதிய ஏற்பாட்டில் ஜோடியுள்ளது. “கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது.” (ஏசாயா 34:16)

புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் எல்லா மனிதர்களின் பாவ விடுதலைக் குறித்து போதிக்கின்றன

  • நம்முடைய அன்றாட பாவங்களுக்கு தினமும் மனம் வருந்தவேண்டுமா?
  • இல்லை. உண்மையான மனம் வருந்துதல்என்பது தன் எல்லாப் பாவங்களையும்ஒப்புக்கொண்டு பாவ விடுதலைபெறும்பொருட்டு இயேசுவின்ஞானஸ்நானத்திற்கு மனம் திரும்புவதாகும்.

பழைய ஏற்பாட்டில் அன்றாட பாவம் பலியின் தலைமீது கைவைத்ததால் பலி மீது இடமாற்றம் செய்யப்பட்டது. பாவிக்கு பதிலாக, அந்தப் பலியானது இரத்தஞ்சிந்தி, தீர்க்கப்படவேண்டும். அதேபோல வருடம் முழுவதும் சேர்ந்த பாவங்களும், கை வைப்பதன் மூலம் பாவ பலிமீது இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் எல்லா மனிதர்களும் அவ்வருட பாவங்களிலிருந்து பாவ மன்னிப்பு பெற முடிந்தது.

புதிய ஏற்பாட்டில், அது போன்றே, இயேசுகிறிஸ்து வந்து உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுகொள்வதற்காக ஞானஸ்நானம் பெற்றார். இப்படியாக பழைய ஏற்பாட்டில் கர்த்தர் தீர்க்க தரிசனம் உரைத்தது நிறைவேற்றப்பட்டது.

கர்த்தரின் சேவகனான, இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானன், இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்டவன். அவன் இயேசு இவ்வுலகின் பாவங்களைச் சுமந்து தீர்த்ததைச் சாட்சி கூறுகிறான். யோவான் 1:29 இல் இவ்வாறு கூறுகிறான். “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”

யோர்தான் நதியில், யோவான் ஸ்நானன், இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்வித்ததன் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் அவர் மீது செலுத்தினான். இவ்வழியாக, மனிதர்களின் பாவங்களை கர்த்தர் நிவர்த்தி செய்தார். நாம் இப்போது செய்யவேண்டியதெல்லாம் விசுவாசிப்பதே.

உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. அப்போஸ்தலர் 3:19 இல் இயேசுவின் சீடர்கள் கூறுகின்றனர். “ஆனபடியால் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்.”

யோவான் ஸ்நானன், இயேசுவுக்கு ஏன் ஞானஸ்நானம் செய்வித்தான், அவரைப் பின்பற்றும்படி ஏன் கூறினான்? என்று அறியுங்கள் என அவர்கள் வேண்டுகிறார்கள். அவன் கூறினான் “மனந்திரும்பி குணப்படுங்கள். இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் வரும் பாவ விடுதலையை விசுவாசியுங்கள். உங்கள் பாவங்களைக் கழுவுங்கள்.”

மேசியா இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம், நம் பாவங்கள் அனைத்தையும் ஒரே தரமாக கழுவினார். உலகின் எல்லா பாவங்களும் இம்முறையில், அவர் மீது சுமத்தப்பட்டது. மத்தேயு 3:13-17 இல் எழுதப்பட்டுள்ளபடி கர்த்தரின் உடன்படிக்கை இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நிறைவேற்றப்பட்டது.

“அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”

கர்த்தரின் இரட்சிப்பை முழுமையாக்கும்படி ஞானஸ்நானம் பெறுவதற்காக இயேசு யோவானிடம் வந்தார். லூக்கா முதல் அதிகாரம் யோவானை, முதல் தலைமை ஆசாரியனான ஆரோனின் சந்ததியன் என்று கூறுகிறது. ஆரோனின் சந்ததியினனான யோவானைக் கர்த்தர் தெரிந்தெடுத்ததற்கான காரணம், எல்லா நீதிகளையும் நிறைவேற்ற மனிதர்களின் பிரதிநிதி அவருக்குத் தேவைப்பட்டது.

இயேசு பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்குமுன் தலைமை ஆசாரியனின் வீட்டில் யோவானை கர்த்தர் பிறக்கச் செய்தார். வனாந்திரத்திலே கூக்குரலிட்டு யோவான் ஸ்நானன் இயேசுவின் வழியை ஆயத்தம் செய்தான். “மனந்திரும்புங்கள், விரியன் பாம்புக்குட்டிகளே! மனந்திரும்பி குணமடையுங்கள். மேசியா வருவார், அவரிற்காக மாறுங்கள், அல்லது அவர் உங்களை வெட்டி எரிகின்ற நெருப்பில் வீசுவார். அவரின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் நம்புங்கள், மனந் திரும்பி ஞானஸ்நானம் பெறுங்கள், அப்பொழுது நீங்கள் விடுவிக்கப் படுவீர்கள்.”

விடுதலை நற்செய்தி அப்போஸ்தலர் 3:19 இல் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. யோவான் ஸ்நானன் மக்களின் பாவங்களைக் குறித்து குரல் எழுப்பியதைக் கேட்டு அநேகர் மனம் திரும்பினார்கள்.

யோவான் உலகின் பாவங்களையெல்லாம், இயேசுவின் மீது சுமத்தியதால், மனிதகுலத்தின் பாவங்கள் எல்லாம் ஒரே தரமாக துடைக்கப்பட்டது. இயேசு உலகின் பாவங்களை சுமந்தார் என்று யோவான் ஸ்நானன் சாட்சி பகன்றதால்; விடுதலை நற்செய்தியை விசுவாசித்து இரட்சிப்படையலாம் என்பது நமக்குத் தெரியும். நீர் மற்றும் இரத்தம் ஆகியவை நற்செய்தியாகும்.

இயேசுவுக்கு முன்னோடியாக ஏன் யோவான் ஸ்நானன் வரவேண்டும்?

  • “இதற்காகவே என்பதன்பொருள் யாது?
  • 1.மிகவும் முறையானது
  • 2.மிகவும் பொருத்தமானது
  • 3.இதுவே ஒரே வழி (வேறுவழிகள் இல்லை)

 

இரட்சகராகிய இயேசுவை விசுவாசித்ததன் மூலம் தம் பாவங்கள் கழுவப்பட்டவர்கள், தம் இரட்சிப்பை இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்த மத்தேயுவின் சாட்சி மூலம் தெரிந்து கொள்ளலாம். மத்தேயு 3:15-16 இயேசு யோவானிடம் வந்து “எனக்கு ஞானஸ்நானம் கொடு” என்றார். அதற்கு யோவான் “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா? என்றான்.”

இயேசுவை யாரென உணர்ந்து யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்துவதற்காக, அனுப்பப்பட்ட கர்த்தரின் சேவகன் யோவான் ஆவான். பழைய ஏற்பாட்டில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றவே இயேசு இரட்சகராக வந்ததால், உலகின் எல்லாப் பாவங்களையும் தன் தலைமீது சுமக்கும்பொருட்டு இயேசு தனக்கு ஞானஸ்நானம் பண்ணும்படி யோவான் ஸ்நானனுக்கு கட்டளையிட்டார்.

ஏன்? ஏனெனில் இயேசு தேவகுமாரன், வல்லவர், படைத்தவர், இரட்சகருமாவார். நமது எல்லாப் பாவங்களையும் கழுவும் பொருட்டு அவர் நம்மிடம் வந்தார். ஆகவே, மக்களை இரட்சிக்கும் பொருட்டு அவர் ஞானஸ்நானம் பெறவேண்டியிருந்தது.

“இதற்காகவே” இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று நம் பாவங்களையெல்லாம் கழுவினார். நமக்காகத் தீர்க்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். நம்முடைய இரட்சிப்புக்கான சாட்சி இயேசுவின் ஞானஸ்நானமே. பழைய ஏற்பாட்டில் பலியிடப்படும் ஆட்டுக்குட்டிமீது பாவங்கள் சுமத்தப்படும் என்று கர்த்தர் உறுதி கூறியதைப்போல், தேவகுமாரன் ஆட்டுக்குட்டியாகி, நம் பாவங்களை எல்லாம் தம்மீது ஏற்றுகொண்டார்.

அந்தப்படியால், பழைய ஏற்பாட்டில் கை வைப்பதும், புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானமும் பாவங்களை இடமாற்றம் செய்கின்றன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள், இரட்சிப்பையும் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்வார்கள்.

இயேசுவின் ஞானஸ்நானம் நம் பாவங்கள்அனைத்தையும் கழுவியது

  • இயேசுவில் நாம் எப்படியிருப்பது?
  • இயேசுவினுள் ஞானஸ்நானம் பெறுவதால்.

இயேசு ஞானஸ்நானம் பெறச் சென்றபோது, யோவான் அவரைத் தடைச் செய்ய முயன்றான். “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா? என்றான்.”

இயேசு அவனுக்கு பதிலளித்தார். “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்றார்.”

இப்பொழுது இடங்கொடு. இப்பொழுது. அவர் யோவானிடம் கூறினார். “எல்லா மக்களின் பாவங்களையும் என் மீது மாற்றவேண்டும். அதன் பிறகு அவர்கள் பாவங்களுக்காக நியாயம் தீர்க்கப்படுவேன். இதனால், யாரெல்லாம் என் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் தம் பாவத்திலிருந்து விடுதலைப் பெறுவார்கள். உலகின் பாவங்களை என் மீது ஞானஸ்நானம் மூலம் செலுத்து. அதனால் இனி இவ்வுலகத்தில் வரப்போகிறவர்களும் ஒரே தரம் பாவ விடுதலைப் பெறுவார்கள். ஆகவே, இப்பொழுது இடங்கொடு.”

இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். இயேசுவின் ஞானஸ்நானம் கர்த்தர் அளித்த விடுதலையளிக்கும் நீதியின் சட்டத்திற்கு ஏதுவாய் இருந்தது. எல்லாப் பாவங்களும் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவர் மீது சுமத்தப் பட்டதால், இயேசுவை நாம் விசுவாசிக்கும் போது நாம் பாவ விடுதலையடைகிறோம். தலையில் கை வைக்கப்பட்டதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தையும் அவர் எடுத்துக்கொண்டதால், நமக்காக சிலுவையில் மரித்து, இப்போது கர்த்தரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். நீர் மற்றும் ஆவியளிக்கும் பாவ விடுதலையை விசுவாசிப்பதன்மூலம் நாம் இரட்சிக்கப்படலாம்.

அவர் இயேசு. அவர் இவ்வுலகத்தின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தார். இயேசு நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு நம் பாவத்திற்கான சம்பளத்தை சிலுவையில் கொடுத்தார் என்பதை விசுவாசிப்பதன் முலம் நாம் இரட்சிக்கப்படலாம். இயேசுவின் ஞானஸ்நானமே பாவ விடுதலை நற்செய்தியின் தொடக்கமாகும்.

பாவ விடுதலை தரும் ஞானஸ்நானம் குறித்து வேதாகமத்தில் பல்வேறு இடங்களில் காணலாம். அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் தான் கிறிஸ்துவில் ஞானஸ்நானம் பெற்றதாலும், தான் கிறிஸ்துவினுள் இருப்பதாலும் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டதாக கூறுகிறான். அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் ஆகியவை மூலம் கிட்டிய பாவ விடுதலை மீது தான் வைத்திருந்த விசுவாசத்தைக் குறித்து இங்கே பேசுகிறான்.

இப்பொழுது இடங்கொடு

  • யோவான் ஸ்நானனின் பாத்திரமென்ன?
  • மனிதகுலத்தின் தலைமை ஆசாரியனாக,உலகின் எல்லாப் பாவங்களையும்இயேசுவின் மீது சுமத்துபவனாய் இருந்தான்.

இயேசு கூறினார். “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது ஏற்றதாயிருக்கிறது” எல்லா நீதியையும் என்பது அவரின் ஞானஸ்நானம் மூலம், எல்லா மனிதர்களையும், இதயப்பூர்வமாக பாவமற்றவர்கள் ஆக்கும்படி அவர்கள் பாவங்களைத் துடைப்பது, என்று பொருளாகும். “அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.” இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றார்.

தலைமை ஆசாரியன் எப்படி தன் கைகளை ஆட்டின் தலைமீது வைத்தானோ, அதுபோலவே, யோவான் ஸ்நானன் இயேசுவின் தலை மீது தன் கைகளை வைத்து உலகின் பாவங்களையெல்லாம் அவர் மீது சுமத்தினான். யோவான் ஸ்நானனே தலைமை ஆசாரியன். மனித குலத்தின் பிரதிநிதியாக, உலகின் சகல பாவங்களையும், இயேசுவின் மீது சுமத்துவது அவன் இலக்காக இருந்தது. “கர்த்தரே, உலகின் சகலப்பாவங்களையும் உம் ஆட்டுக்குட்டியாகிய இயேசு மீது சுமத்துகிறேன்.” இப்படியாக மனிதர்களின் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது.

யோவான் ஸ்நானன் இயேசுவின் தலைமீது தன் கைகளை வைத்தான். அவரை நீரில் முழுக்கினான். இயேசு நீரிலிருந்து வெளியே வரும்பொழுது அவன் தன் கைகளை அப்புறப்படுத்தினான். இயேசுவின் ஞானஸ்நானம் நீதியின் இரட்சிப்புக்காக செய்யப்பட்டது. இயேசு தம் ஞானஸ்நானத்தை விசுவாசிப்போரை இப்படியாக இரட்சித்தார்.

வானம் திறக்கப்பட்டது அன்றியும் வானத்தில் இருந்து சத்தமும் வந்தது

  • பரலோக ராஜ்ஜியம் எப்போதிலிருந்து திறக்கப் பட்டுள்ளது?
  • யோவான் ஸ்நானனின் நாட்களிலிருந்து.(மத்தேயு 11:12 )

“இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி; இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத்தேயு 3:16-17)

இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் இவ்வுலகின் சகல பாவங்களையும் எடுத்துக்கொண்டபோது வானம் அவருக்காக திறக்கப்பட்டது. இப்படியாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக கர்த்தர் செய்த உடன்படிக்கை, யோர்தான் நதியில் இயேசு ஞானஸ்நானம் பெற்றதால் நிறைவேறியது.

இப்படியாக இயேசு, தேவ ஆட்டுக்குட்டியாக, உலகின் எல்லா மக்களையும் அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார். உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன. அவர் கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றினார்.

யோவான் 1:29 இல் சாட்சி கொடுக்கப்பட்டுள்ளது. “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” தேவ ஆட்டுக்குட்டியான இயேசு மீது எல்லாப் பாவங்களும் சுமத்தப்பட்டதால், மூன்று வருடங்களுக்குப் பிறகு தோள்களில் சுமையுடன், கொல்கொதாவில் உள்ள சிலுவையை நோக்கி நடந்தார். நம் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களை எல்லாம் தம் மீது ஏற்றுக்கொண்டபிறகு, எங்கெல்லாம் அவர் சென்றாரோ, அங்கு தம்மை நம்பிக்கையுடன் வரவேற்றவர்களிடம் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறினார்.

யோவான் 8:11 இல் விபசாரத்தில் கையும் களவுமாக பிடிப்பட்ட பெண்ணிடம் “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை” அவரால் அவளை ஆக்கினைக்குட்படுத்த முடியாது. ஏனெனில் தீர்க்கப்படவேண்டியது இயேசுவே, ஏனெனில் அவர் தம்மீது எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். ஆனபடியால், தான் பாவிகளின் இரட்சகர் என்று எல்லா மக்களிடமும் கூறினார்.

ஏனெனில் தேவகுமாரரான அவர், நம் பாவங்களை எடுத்துப்போட்டதால், உலகின் எல்லா விசுவாசிகளும், பரிசுத்தமடையமுடியும். அவர் ஞானஸ்நானம் பெற்றவுடன் வானம் திறந்தது. பரலோக ராஜ்ஜியத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டன. இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்போர் அதனுள் இலவசமாக பிரவேசிக்க முடியும்.

தம் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை தம்மீது ஏற்றுக்கொண்ட பிறகு இயேசு சிலுவையில் அறையப் பட்டார்

  • சாத்தானின் தலையை இயேசு எப்படி நசுக்கினார்?
  • நம் எல்லாப் பாவங்களுக்கும் தீர்க்கப்பட்டு மரித்து, மீண்டும் மரித்தோரிலிருந்து எழும்பியதால்.

எல்லாப் பாவங்களும் அவர் தலை மீது சுமத்தப்பட்டதால், இயேசு சிலுவையில் தீர்க்கப்படவேண்டியவராய் இருந்தார். சிலுவையில் தாம் படப்போகும் பாடுகளை நினைத்து அவர் மிகுந்த மனவேதனையுடனும், சஞ்சலத்துடனும் இருந்தார். அவர் வியர்வை இரத்தத்தின் பெருந் துளிகளாக மாறும்வரை ஜெபித்தார். அவர் தம் சீடர்களுடன் கெத்சமனே என்ற இடத்திற்குச் சென்றபோது அவர் ஜெபித்தார். “என் பிதாவே, இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்” (மத்தேயு 26:39). “நான் ஞானஸ்நானத்தின் மூலம் இவ்வுலகின் பாவங்களை எல்லாம் ஏற்றேன். ஆயினும் என்னை மரிக்கவிடாதேயும்” ஆனால் கர்த்தர் இதற்கு பதிலளிக்கவில்லை.

பழைய ஏற்பாட்டில் பாவ விடுதலை தினத்தில், தலைமை ஆசாரியனால் இரத்தம் கிருபாசனம் மீது தெளிக்கப்படும்படியாக பலி மிருகம் கொல்லப்படவேண்டும். அதேபோல், இயேசு சிலுவையில் அறையப்படவேண்டும். வேறு வழிகளில் அவற்றைச் செய்யவேண்டாம் என்று கர்த்தர் தீர்மானித்தார்.

பலி பீடம் கர்த்தரின் நியாயத்தீர்ப்பும், பாவப்பலியின் இரத்தம் ஜீவனுமாகும். கிருபாசனத்தின் மேலும் அதன் முன்பும் இரத்தத்தை ஏழு முறை தெளிப்பதென்பதன் பொருள் எல்லா தீர்ப்பும் கடந்தது என்பதாகும். (லேவியராகமம் 16:1-22)

இயேசு கர்த்தரிடம் தன் பாத்திரம் தன்னை விட்டு நீங்கும்படி ஜெபித்தார். ஆனால் பிதா அதனை அனுமதிக்கவில்லை. இறுதியில் இயேசு கூறினார், “என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (மத்தேயு 26:39). அவர் கர்த்தருக்கு சரியெனப்படுவதை செய்யும்படி ஜெபித்தார். அவர் ஜெபம் செய்து முடித்து தன் பிதாவின் சித்தத்தை பின்பற்றினார்.

இயேசு தன் சித்தத்தைக் கைவிட்டு, பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தார் ஏன்? அவர் உலகின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொண்டபிறகு அதற்காக தீர்க்கப்படாவிட்டால், இரட்சிப்பு முழுமை பெற்றிருக்காது. அவர் சிலுவையில் அறையப்பட்டதற்கு காரணம் அவர் ஞானஸ்நானம் மூலம் மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டதே. “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர் 6:23).

இயேசுவின் ஞானஸ்நானமான தலைமீது கைவைப்பதன் மூலம் மனிதர்களை இரட்சிக்கும்படியாக இரட்சகர் ஒருவரை அனுப்பிவைப்பேன் என்ற தமது உடன்படிக்கையை கர்த்தர் நிறைவேற்றினார். இயேசு கர்த்தரின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, நமக்காக தீர்ப்பை ஏற்றார்.

ஆதியாகமம் 3:15 இல் கூறிய தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்: அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.” கர்த்தர் ஆதாமிடம், ஏவாளின் வித்தான மேசியாவை அனுப்புவதாக உறுதியளித்தார். மனிதர்களை பாவிகளாகவும் நரகத்திற்குப் போகும்படியும் செய்த சாத்தானின் வல்லமையை அவர் முறியடிப்பார்.

இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை மரணத்தையும் அறிந்து அதனை விசுவாசித்தால், நம் எல்லாப் பாவங்களும் கழுவப்பட்டு நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிக்கப்படுவோம்.

இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை எண்ணும்போது நமது இருதயத்திற்குள் ஆழமான விசுவாசம் இருக்கவேண்டும். இதனை உன் இருதயப்பூர்வமாக விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்.

இயேசுவின் ஞானஸ்நானம் பரலோக நற்செய்தியின் தொடக்கம்

  • தேவன் பரலோகத்திற்குஏறுமுன் அளித்த கடைசிகட்டளை என்ன?
  • அவர் தம் சீடர்களிடம் உலக மக்களெல்லாம் சீடர்களாக்கும்படி பிதாவின் பெயரிலும், குமாரன் பெயரிலும், பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டார்.

இயேசுவின் ஞானஸ்நானமே நற்செய்தியின் தொடக்கம், தம் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் எல்லாப் பாவிகளையும் இரட்சித்தார். மத்தேயு 28:19 இல் “ஆகையால் நீங்கள் புறப்பட்டு போய், சகல ஜாதிகளையும், சீஷராக்கி, பிதா குமாரர் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து என்று எழுதப்பட்டுள்ளது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியியானவர், ஆகியோர் மனிதர்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சித்ததையும், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலம் அவை கழுவப்பட்டதையும்; சாட்சி கொடுக்கும்படி இயேசு தம் சீடர்களிடம் கூறினார்.

இயேசு அவர்களுக்கு உலகமெல்லாம் சென்று சீடர்களை உருவாக்கும்படி அதிகாரம் கொடுத்தார். அவர்களுக்கு இயேசுவின் ஞானஸ்நானத்தைப் பற்றியும் பாவ விடுதலையின் ஞானஸ்நானத்தைப் பற்றியும், உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவிப் போட்ட ஞானஸ்நானத்தை பற்றியும் போதிக்கும்படி கூறினார்.

2000 வருடங்களுக்கு முன் இயேசு இவ்வுலகிற்கு மாமிசமாக வந்து யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். அந்த ஞானஸ்நானம் மூலம், உலகின் அனைத்துப் பாவங்களும், நம் பாவங்கள் உட்பட அவரின் மீது சுமத்தப்பட்டது.

எவ்வளவு பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது? நாளைய பாவங்களைக் குறித்து என்ன? நாளைய பாவங்களும் தன் மீது சுமத்தப்பட்டதாக அவர் நம்மிடம் கூறுகின்றார். நம் பிள்ளைகளின் பாவங்கள், எல்லா சந்ததியினரின் பாவங்கள், முந்தையவர்கள், இப்போதுள்ளவர்கள், வருங்காலத்தில் வரப்போகிறவர்கள், அது ஏன், ஆதாமின் பாவமுதல் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன.

அங்கே எப்படி பாவங்கள் இல்லாமல் போயிற்று? நாம் எப்படி பாவங்களின்றி இருக்கமுடியும்? இயேசு தம் ஞானஸ்நானம் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும், உலகின் எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டதால், விசுவாசிகள் தம்மை பாவங்களிலிருந்து விடுதலை செய்துகொண்டு, பரலோக ராஜ்ஜியத்தை அடையலாம்.

சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார் (யோவான் 3:21).

இயேசு நம் பாவங்களை எல்லாம் தம் ஞானஸ்நானத்தின் மூலமும், அவரின் சிலுவை இரத்தத்தின் மூலமும், அவரின் மரணம் மூலமும், அவர் உயிரோடெழும்பியதன் மூலமும் கழுவிப்போட்டார். ஆகவே, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை மரணத்தையும் விசுவாசிக்கும்போது நம் எல்லாப் பாவங்களிலிருந்தும், இரட்சிக்கப்படுகின்றோம். இது பாவ விடுதலைக்கான விசுவாசம்.

நாம் கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும், அவரின் இரத்தத்தையும் விசுவாசித்தால், இரட்சிக்கப்படுவோம். நாம் இயேசுவை சரியாக விசுவாசிக்கும்போது, நாம் பாவிகளாக இருப்போமா அல்லது நீதிமான்களாக இருப்போமா? நாம் நீதிமான்களாகவே இருப்போம். நாம் முழுயடையாதவர்கள் என்றாலும் பாவமற்றவர்களாக இருப்போமா? ஆம் நாம் பாவமற்றவர்கள். இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவைத் தீர்ப்பு ஆகியவற்றை விசுவாசிக்க முழுமையானதும், சரியானதுமான நம்பிக்கை வேண்டும். 

இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதும் பெறுவதும்

  • பரலோக நற்செய்தியின்தொடக்கம் யாது?
  • இயேசுவின் ஞானஸ்நானம்.

மக்கள் முழுமை பெறாதவர்களாகையால், இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பவர்களுக்கு அவர்களின் விசுவாசத்தை உறுதி செய்யும்பொருட்டு போதகர்கள் ஞானஸ்நானம் செய்விக்கிறார்கள். மறுபடியும் பிறந்தவர்கள், இயேசு ஞானஸ்நானம் பெற்றதைப்போன்றே தாமும் ஞானஸ்நானம் பெற்று, விசுவாசத்தை உறுதி செய்யவேண்டும்.

மறுபடியும் பிறந்த ஒருவனின் தலைமீது போதகர் கைவைத்து, அவனின் முடிவு பரியந்தமும், கர்த்தரை ஆராதிக்கும் பொருட்டு கர்த்தர் ஆசீர்வதிக்கவேண்டுமென்று ஜெபிக்கிறார். அதன்பிறகு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் செய்விக்கிறார்.

இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றின் மீது நமக்கிருக்கும் நம்பிக்கையினால் நாம் ஞானஸ்நானம் பெறுகிறோம். இந்த ஞானஸ்நானம் இயேசுவின் மீது பாவங்களைச் சுமத்தியதையும், ஞானஸ்நானம் பெற்ற ஒருவன் இயேசுவுடன் மரித்து, அவருடன் உயிரோடே எழும்பியதையும் காட்டுகிறது.

ஒருவன் ஞானஸ்நானம் பெறும்போது இவைகளை அறிவிக்கின்றான். அவை, இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் தன் பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டதை விசுவாசிப்பதையும், இயேசுவுடன் பாவங்களுக்காக தீர்க்கப்பட்டதையும், இயேசுவுடன் மீண்டும் உயிரோடு எழும்பியதையும் அறிவிக்கின்றான். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்,அவனின் சகோதர சகோதரிகள், சாத்தான், முன்பு அவனின் விசுவாசத்தைப் பிரகடனஞ் செய்கிறான். இது நீரினாலும், ஆவியாலும் மறுபடியும் பிறந்ததை அறிக்கைச் செய்வதுமாகும்.

இயேசுவை விசுவாசிக்கும், இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை முழுவதுமாக அறிந்துகொண்டோர் உலகின் எல்லா பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டனர். ஆகவே அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறுகிறார்கள்.

“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புதுச்சிருஷ்டியாய் இருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” (2 கொரிந்தியர் 5:17) நம்முடைய பழையவைகள் ஒழிந்து போயின, விசுவாசத்தின் மக்களாக நாம் மீண்டும் பிறந்தோம். இதனை நம் இருதயத்தில் உறுதிப்படுத்தவே, நாம் ஞானஸ்நானம் பெறுகிறோம். இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்ததினால் நாம் அவரில் ஞானஸ்நானம் பெற்றோம்.

இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் மூலம் மறுபடியும் பிறந்தபிறகு அவர்களின் வாழ்க்கை

  • மறுபடியும் பிறந்தவர்கள்எதற்காக வாழ்கிறார்கள்?
  • கர்த்தரின் ராஜ்ஜியத்திற்காகவும், அவரின்நீதிக்காகவும் உலகெங்கும்நற்செய்தியை பிரசங்கிப்பதற்கும்அவர்கள் வாழ்கிறார்கள்.

விடுதலை மற்றும் மறுபடியும் பிறந்தபிறகு வாழும் வாழ்க்கையானது வேதவாக்கின் மீது நம்பிக்கை சேர்ந்ததாக இருக்கவேண்டும். அவ் வாழ்க்கையானது மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியதும், பாவங்களுக்காக தினமும் மனம் வருந்துவதாகவும் இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக, அது ஒரு விசுவாச வாழ்வாகவும், இயேசு தம் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் கழுவிப்போட்டார் என்று தினமும் உறுதியோடும் வாழவேண்டும்.

இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நம் பாவங்கள் எல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டது. மூன்று வருடங்கள் இந்த பாரத்துடன் அவர் வாழ்ந்து நமது எல்லாப் பாவங்களுக்கும் சிலுவையில் தீர்க்கப்பட்டார்.

ஆகவே, விசுவாசிகளாகிய நமக்கு எழுதப்பட்ட வாக்கியத்தின் மீது நம்பிக்கை இருக்கவேண்டும். வெறும் உணர்ச்சிகளில் நம்பிக்கை வைக்கலாகாது. இப்படிச் செய்தால், நாம் விடுதலைப் பெற்று மறுபடியும் பிறந்தவர்களானாலும், தினமும் நம் அன்றாடப் பாவங்களுக்கு கவலைப்பட்டுக்கொண்டிருப்போம்.

நாம் இலக்கிய நோக்கில் பாவத்தை பார்ப்பதை விட்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் இரத்தத்தை மட்டும் விசுவாசிக்கவேண்டும். இத்தகைய ஒரு வாழ்வையே, விடுதலைப் பெற்ற ஒருவன் நடத்தவேண்டும்.

இயேசுவைக் குறித்து யோவான் ஸ்நானன் என்ன கூறினான்? அவன் கூறினான், “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) அவன் இயேசு, இன்றைய, நாளைய, நேற்றைய மற்றும் மூலப்பாவங்களையும் சுமந்து தீர்த்ததாக சாட்சி கூறுகிறான்.

அவர் அப்பாவங்களையெல்லாம் எடுத்துப்போடவில்லையா? அப்பாவங்கள் அவர் மீது சுமத்தப்படவில்லையா? உலகின் பாவங்கள் நம் பழைய கால பாவங்களையும், நிகழ்கால, மற்றும் எதிர்கால பாவங்களையும் உள்ளடக்கியுள்ளது. இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் விடுதலை உண்டாகிறது என்ற நற்செய்தியை நாம் உறுதிசெய்யவேண்டும்.

இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தத்தின் உண்மைகளை விசுவாசிப்போர் இரட்சிப்படைய வேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்போரின் இருதயத்தில் பாவங்கள் இருப்பதில்லை.

ஆயினும் நிறைய மக்கள் தங்களிடம் இன்னமும் பாவமிருப்பதாக நினைக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் தம் பாவங்கள் அவர் மீது செலுத்தப்பட்டதைக் குறித்த அறிவு இல்லை. அவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டார்கள். சாத்தான் அவர்களின் மாமிச சிந்தனைகளின் மூலம் அவர்களிடம் முணுமுணுக்கிறான். “நீ தினமும் பாவம் செய்கிறாய். நீ எப்படி பாவமில்லாதவனாக இருக்க முடியும்?”

அவர்கள் தாம் பாவமற்றவர்களாக இருப்பதற்கு கர்த்தரை மட்டுமே நம்பவேண்டும். அவர்கள் பாவம் செய்து கொண்டிருப்பதால், சாத்தான் அவர்களை பாவிகள் என்று கூறி ஏமாற்றுகிறான். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிக்கும்போது யாருமே பாவிகள் இல்லை.

நாம் இவ்வுலகில் குறையுள்ளவர்களும் பலவீனர்களுமாக இருப்பதால், நம்முடைய செய்கைகளினாலும், காரியங்களாலும் நீதிமான் ஆனோம் என்று எப்பொழுதும் கூறமுடியாது. ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகிய உண்மையின் மீது விசுவாசித்திருப்பதால் இரட்சிக்கப் பட்டோம் என்று கூறமுடியும். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றால் நம் இருதயம் பரிசுத்தமாகியது என்று புரிந்துகொள்ளும்பொழுது நம்மில் பாவமில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

“நான் விடுவிக்கப்பட்டேன், நீர் என்னை விடுதலையாக்கினீர். நாமெல்லாம் விடுவிக்கப்பட்டோம்” நற்செய்தியை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டு வாழ விரும்புவது மிகவும் மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துகிறது. நாம் ஆவியால் வழி நடத்தப்படுகிறோம் என்று அறிந்துகொள்ளவேண்டும்.

விசுவாசிகளாகிய நாம் தினமும் பாவம் செய்கிறோம். ஆனாலும் நாம் பாவிகளில்லை. நம் இருதயத்தில் இயேசுவின் ஞானஸ்நானமும் அவர் இரத்தமும் உள்ளன. நம் இருதயங்கள் பாவம் நிறைந்தவையாக இருந்தன. ஆனால் நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கும்போது நாம் எப்படித் தொடர்ந்து பாவிகளாகவே இருக்கமுடியும்?

“அந்த நாட்களுக்கு பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நாம் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்கிறார் என்பதை உரைத்தபின்பு” (எபிரெயர் 10:16).

நம் இருதயங்கள் பாவமற்றுள்ளன. இயேசு நாம் முற்றிலும் விடுதலையடையும்படி தம் ஞானஸ்நானம் மூலமும் அவரின் சிலுவை மரணம் மூலமும் அதை நமக்கு சாத்தியமக்கினார். வேத வாக்கிலிருந்து இரட்சிப்பு முளைவிடுகிறது.

இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும்அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்போர் மீண்டும் பாவிகளாகவே முடியாது

  • நாம் பாவம் செய்தால் மீண்டும் பாவிகளாவோமா?
  • இல்லை. நாம் மீண்டும்பாவிகளாகமட்டோம்.

இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகியவற்றை நாம் விசுவாசிக்காத நாட்களில் நாம் எத்தனை முறை பாவமன்னிப்புக்காக ஜெபித்தபோதிலும், நம் இருதயங்களில் பாவங்கள் இருந்தன. ஆனால் நாம் உண்மையான நற்செய்தியை விசுவாசிக்கும்போது, நம் பாவங்கள் யாவையும் கழுவப்பட்டன.

“ஏய், எப்படி இந்நாட்களில் நீ பிரகாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறாய்?”

“இதோ பார், என் இருதயத்தில் பாவங்கள் எதுவும் இல்லை.”

“உண்மையாகவா? நீ விரும்பும் அளவு பாவங்களைச் செய்யலாம் என்று நான் யூகிக்கிறேன்.”

“மனிதன் பாவம் செய்வதை தவிர்க்கமுடியாது என்று நீ அறிவாய். மனிதன் அப்படிப்பட்டவன். ஆனால் இயேசு தம் ஞானஸ்நானம் மூலம் பாவங்களைச் சுமந்து, அதற்கான தீர்ப்பை சிலுவையில் பெற்றார். இது காரணம் பற்றியே நற்செய்தியை ஆலயத்தில் கூறும்படி என்னை அர்ப்பணித்தேன். ரோமர் 6ஆம் அதிகாரம் நாம் இதுபோல் வாழ வேண்டும் என்று கூறுகிறது. என்னுடைய இருதயத்தில் பாவங்கள் இல்லாததால், நான் நீதியான செயல்களை செய்ய விரும்புகிறேன். இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை நாம் விசுவாசித்து உலகம் முழுவதும் இந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கவேண்டும்! விடுதலையின் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கும்போது நாம் மீண்டும் பாவியாக முடியாது. நித்திய இரட்சிப்பான இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் நாம் விசுவாசிக்கவேண்டும். நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!”

ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதுயார்?

  • இயேசுவைக் குறித்துயோவான் ஸ்நானன் பகன்றசாட்சி யாது?
  • இயேசுவே தேவ ஆட்டுக்குட்டி, அவர் உலகின்எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போட்டார்.அப்பாவங்களில், கடந்த காலப் பாவங்கள்,நிகழ்காலப் பாவங்கள், எதிர்காலப் பாவங்கள்மற்றும் மூலப் பாவங்கள் ஆகியவைஅடங்கும்.

இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்போர் இரட்சிப்பை பெறுகின்றனர். நாம் எப்படி ஆவியானவரைப் பெறுகிறோம்? அப்போஸ்தலர் 2:38-39 பதிலளிக்கிறது “பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனம் திரும்பி, ஒவ்வொரும் பாவ மன்னிப்புக்கென்று கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி”

இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதென்பது இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து விடுதலையாவதைக் குறிக்கிறது. ஆவி கர்த்தரால் பரிசாக கொடுக்கப்படுகிறது.

இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதென்பது இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து பரிசுத்தமாவதையும் குறிக்கிறது. இந்நம்பிக்கையை நாம் தழுவும்போது நாம் விடுதலையாக்கப்பட்டு நீதிமான்களாகிறோம். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் மூலமாக விசுவாசிகள் உரைந்த பனியைப்போல் வெண்மையாவர்.

“அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” நம்முடைய பாவங்கள் எல்லாம் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அவரில் சுமத்தப்பட்டு அவற்றிற்கு தீர்ப்பாக சிலுவையில் மரித்தார் என்பதை உறுதியாக நம்பும்போது, நம் இருதயங்கள் சுத்தமாக கழுவப்படுகின்றன. இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிக்கும்போது புதிய வாழ்க்கைத் தொடங்குகிறது. நாம் ஆவியின் வரத்தைப்பெற்று கர்த்தரின் பிள்ளைகளாகிறோம்.

“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) கர்த்தர் சிலுவையில் தண்டிக்கப்பட்டதற்கான உண்மை காரணத்தை நாம் அறியவேண்டும். இயேசு தம் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம் மூலம் நம் பாவங்கள் எல்லாவற்றையும் துடைத்துபோட்டார் என்பதே உண்மையாகும். நாம் உண்மையை விசுவாசிக்கும்போது பாவ விடுதலைப் பெறுகிறோம்.

இயேசுவின் ஞானஸ்நானம் நம்மை விடுதலையாக்குகிறது

  • யார் ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள்?
  • இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின்இரத்தத்தையும் விசுவாசித்து, பாவங்களில்இருந்து விடுதலையானவன் ஆவியைப் பெற்றுக்கொள்கிறான்.

பழைய ஏற்பாட்டின் பலியிடும் முறை மூலம் பாவ நிவர்த்தி செய்வது புதிய ஏற்பாட்டில் இயேசு ஞானஸ்நானம் பெற்றதற்கு சமமாகும். இயேசுவின் ஞானஸ்நானமே பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் முக்கிய கருவாகும். பழைய ஏற்பாட்டின் பலிமீது கைவைக்கும் முறையை புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் பார்க்கலாம்.

இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்கள் எல்லாம் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது; இஸ்ரவேலின் பாவங்கள் எல்லாம் போக்காடின் மீது கை வைத்து பாவங்களைச் சுமத்தியது போலாகும்.

நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலைப் பெற வேண்டுமானால், இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிக்க வேண்டுமா? ஆம், அப்படியே செய்யவேண்டும்! இயேசு தன் ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களை எடுத்துப்போட்டார் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிக்கவில்லை என்றால் நம் பாவங்கள் அவர் மீது சுமத்தப்படாது. நம்முடைய இரட்சிப்பு முழுமையடையும் படி நாம் விசுவாசிக்கவேண்டும். இல்லையென்றால் நாம் நீதிமான்களாக முடியாது.

இயேசு தம்முடைய ஞானஸ்நானம் மூலம், மிகவும் பொருந்தத்தக்கதும், நீதியுமான வழியில் உலகின் பாவிகளை இரட்சித்தார். இதற்குமேல் பொருந்தத்தக்க வகையில் அதனைச் செய்யமுடியாது. இயேசுவின் ஞானஸ்நான முறையின் மூலமே உலகின் பாவங்கள் அவரின் மீது சுமத்தப்பட்டதால் நம் இருதயம் நிரந்தரமாக சுத்தமாய் இருக்கும்பொருட்டு நாம் அதனில் நம்பிக்கை வைக்கவேண்டும்.

இயேசுவின் இரத்தம் நம் பாவங்களுக்கான தீர்ப்பு என்பதால், நாம் இதையும் நம்பவேண்டும். இப்படியாக இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்போர் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவர்.

பரலோக ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்கேதுவாக இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிக்கவேண்டும். இதுவே நாம் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படும் ஒரே வழி. இதனால் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து நாம் தப்ப முடியும்.

புதிய ஏற்பாட்டின் இயேசுவின் ஞானஸ்நானமும், பழைய ஏற்பாட்டின் பலிமீது கைவைத்தலும் கண்ணாடியின் பிரதி பிம்பங்களாகும். அதுவே புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டையும் இணைக்கும் முடிச்சாகும்.

புதிய ஏற்பாட்டில் யோவான் ஸ்நானன் இயேசு பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் பிறந்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அதுவே “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்” (மாற்கு 1:1). இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலம் பாவங்களை ஏற்றுக்கொண்ட வேளையில் நற்செய்தி தொடங்கியது.

மனிதர்களை இரட்சிக்கும் வேலை சங்கிலி தொடர் போன்ற நிகழ்ச்சிகளால் நடத்தப்பட்டது. அவை இயேசுவின் பிறப்பு, அவரின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல் மற்றும் அவரின் பரலோகத்திற்கு ஏறுதல் ஆகியவையாகும். இந்த தொடர் நிகழ்ச்சிகளை நாம் அறிந்து அவற்றைப் புரிந்துகொண்டு விசுவாசித்தால் நாம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாவோம். இயேசுவின் ஞானஸ்நானமே நற்செய்தியின் தொடக்கம். சிலுவையின் இரத்தத்தால் அது முழுமைப் பெற்றது.

“தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்” (மாற்கு 1:1) அவர் செய்த நீதியின் செயல்களான - அவரின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம், அவரின் உயிர்த்தெழுதல், அவரின் பரலோகம் ஏறல், அவரின் இரண்டாம் வருகை ஆகியவற்றிலிருந்து எதனையும் நீக்கமுடியாது. இது தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் நற்செய்தியாகும்.

இயேசு இவ்வுலகிற்கு மாமிசமாக வந்து, தம் ஞானஸ்நானத்தின் மூலம் மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவினார். இதுவே பரலோக நற்செய்தியின் தொடக்கமாகும். இவற்றில் ஏதாவது ஒன்று இல்லாமற் போகுமானால், பரலோக நற்செய்தி நிறைவேறியதாகாது.

ஆகவே, யாரேனும் மறுபடியும் பிறக்க விரும்பினால், அவன் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் நம்பவேண்டும். இந்நாட்களில் அநேகர், இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் குறித்த உண்மையை நம்புவதில்லை. இயேசுவின் ஞானஸ்நானத்தை அவர்கள் மதச்சடங்காக எண்ணுகிறார்கள். இது அபாயமான, தவறான எண்ணமாகும். யாரொருவன் இயேசுவை விசுவாசிக்கிறானோ, அவன் இயேசுவின் ஞானஸ்நானத்தையும், இரத்தத்தையும் கூட கண்டிப்பாக விசுவாசிக்கவேண்டும்.

பாவ மன்னிப்புக்காக ஜெபித்தால் நம்முடைய பாவங்கள் எப்படி கழுவப்படும்? இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றபோது, நம்முடைய பாவங்கள் யாவும் அவர் மீது சுமத்தப்பட்டன. அவருக்கு மனிதர்களின் பாவங்களை ஏற்றுக்கொள்வதற்கு வேறு வழிகள் இருக்கவில்லை.

பரலோக ராஜ்ஜியத்திற்குள் போகவேண்டுமானால், நீர் மற்றும் ஆவியால் நாம் மறுபடியும் பிறக்கவேண்டும். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம், ஆவியானவர் இல்லாமல் பாவ விடுதலை இல்லை. இயேசு நிக்கொதேமுவிடம் யோவான் 3:5 இல் கூறியபடி மறுபடியும் பிறந்த சிலர் மட்டுமே கர்த்தரைக் காணமுடியும். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் மூலம் மட்டுமே உண்மையான இரட்சிப்பு வரும்.

இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாமல் நாம் இரட்சிப்படைய முடியுமா?

  • இயேசு எப்படி நம் இரட்சகரானார்?
  • அவரின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களைத் தம் மீது ஏற்றுக்கொண்டதன் மூலம். 

இயேசுவின் பொது ஊழியத்தின் போது அவரின் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களையெல்லாம் இவ்வுலகிற்கு வந்து ஏற்றுக்கொண்டார், என்பதையோ, இயேசுவின் புனிதத்துவத்தை குறைவாகவோ, அவர் கன்னிமரியாளுக்கு பிறந்தார் என்பதையோ, இயேசுவின் சிலுவையையோ; விட்டுவிட்டோமானால் கிறிஸ்தவம் வெறும் மூடப்பழக்கங்கள் உள்ள சமயமாகி இருக்கும். அதன் விசுவாசிகள் “என்னை மன்னியும், என்னை மன்னியும், என்னை மன்னியும்என்று புத்தர்கள் தம் ஆலயத்தில் செய்வது போல; உச்சாடனம் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டுவிட்டோமானால் நம் பாவங்கள் அவரின் மீது சுமத்தப்படவில்லை என்று பொருளாகும். நம் விசுவாசத்திற்கு எந்த மதிப்பும் இராது. ஒரு கடனாளி தன் கடனைக் கட்டாமலேயே, தான் முழுக்கடனையும் கட்டிவிட்டதாக கூறினால் அவனிற்கும் நமக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இது நம்மை பொய்யர்களாக்குகிறது. ஒரு கடனாளி, தன் கடனைக் கட்டாமலேயே, தான் முழுக்கடனையும் கட்டிவிட்டதாக கூறினாலும், இன்னும் அவன் மனசாட்சியின் படியும் சட்டத்தின் படியும் கடனாளியே.

இயேசு தம் ஞானஸ்நான நீரின் மூலம் தம் விசுவாசிகளைக் கழுவி அவர்களைக் கர்த்தரின் பிள்ளைகளாக்கினார். எல்லா விசுவாசிகளும் பரிசுத்தமாகும்படி யோவான் ஸ்நானன் மூலம் உலகின் பாவங்களனைத்தையும் தான் ஏற்றுக்கொண்டார். இதனை நாம் தெரிந்து விசுவாசித்தோமானால் நம் இருதயம் நிரந்தரமாக, சுத்தமாக இருக்கும்.

கர்த்தருடைய கிருபைக்கு நன்றிகள். லூக்கா 2:14 கூறுகிறது “உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள்.” நீர் மற்றும் இயேசுவின் இரத்தம் ஆகியவை மீது நாம் வைக்கும் நம்பிக்கையானது நமக்கு முழு இரட்சிப்பை அளித்து கர்த்தரின் பிள்ளைகளுமாக்குகிறது. இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் நம்மை இரட்சித்தது. இவ்விரண்டையும் யார் நம்புகிறார்களோ அவர்கள் இரட்சிக்கப்படுவர்.

இயேசுவின் செய்கையிலிருந்து எவற்றையும் அசட்டை செய்யமுடியாது. ஒரு சிலர் அப்போஸ்தலனாகிய பவுல் சிலுவையை மட்டும் பெருமைப் பாராட்டுவதாகக் கூறி இரத்தத்தை மட்டும் விசுவாசிக்கிறார்கள். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவையில் அடங்கியுள்ளது.

ரோமர் 6 ஆம் அதிகாரத்தில் பவுல் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றதையும், கிறிஸ்துவுக்குள் மரித்ததையும் நாம் பார்க்கலாம். கலாத்தியர் 2:20 இல் “கிறிஸ்துவுடனே கூட சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாமிசத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்பு கூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.”

மேலும் கலாத்தியர் 3:27-29 இல் “ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ, அத்தனைப் பேரும் கிறிஸ்துவை தரித்துக்கொண்டீர்களே. யூதன் என்றும் கிரேக்கன் என்றும் இல்லை, அடிமை என்றும் சுயாதீனன் என்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.”

இயேசுவுக்குள் ஞானஸ்நானம் என்பது, அவர் உலகில் செய்த இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் உட்பட எல்லாவற்றையும், நம்புவதாகும். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் நம்புவதானது, இயேசு 2000 வருடங்களுக்கு முன்பே நம் பாவங்கள் அனைத்தையும் துடைத்துப்போட்டார் என்பதையும் விசுவாசிப்பாதாகும். இரட்சிப்பு வேறு எந்த வழிகளிலும் இல்லை.

இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றை விசுவாசிக்கும்போது நாம் கர்த்தரால் இரட்சிக்கப்படுகிறோம்

  • பாவ மன்னிப்பு ஜெபங்களை ஏறெடுப்பதால்நம் பாவங்கள்கழுவப் படுமா?
  • இல்லை. இயேசு யோவான் ஸ்நானனால்ஞானஸ்நானம் பெற்ற போது எல்லாப்பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டனஎன்பதை விசுவாசிப்பதன் மூலம்மட்டுமே பாவ மன்னிப்பு சாத்தியம்.

“நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப் பண்ணப்படும்.” (ரோமர் 10:10)

“உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைப் பேரோ, அத்தனைப் பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே.” (கலாத்தியர் 3:27) நம் விசுவாசம் இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெறவும், கிறிஸ்துவுக்குள்ளாக்கவும், கர்த்தரின் பிள்ளைகளாக்கும்படியும் வழி நடத்துகின்றது. இயேசு இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்றபோது, நம் எல்லாப் பாவங்களும், உலகின் எல்லாப் பாவங்களும் அவரின் மீது சுமத்தப்பட்டது.

விசுவாசம் நம்மை கிறிஸ்துவுடன் ஒன்றாக்கியது. அவர் மரித்தபோது நாமும் மரித்தோம். அவர் உயிரோடெழுந்தபோது நாமும் உயிரோடெழுந்தோம். இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம், அவரின் உயிர்த்தெழுதல், அவரின் பரலோகம் ஏறல், அவரின் இரண்டாம் வருகை ஆகியவற்றை இப்பொழுது நாம் விசுவாசிப்பதால் பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசித்து நித்தியமாக வாழலாம்.

இயேசுவின் இரத்தத்தை மட்டுமே மக்கள் விசுவாசிக்கும்போது அவர்கள் தம் இருதயத்தில் இருக்கும் பாவத்தினால் அவதிப்படுவதைத் தவிர்க்க முடியாது. ஏன்? அவர்களுடைய பாவங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, பாவமிருந்த இருதயத்தை துப்புரவாக்கி, அவர்களை நிரந்தரமாக பனியைப்போல் வெண்மையாக்கும், இயேசுவின் ஞானஸ்நானத்தின் பொருளைக் கேட்டோ, ஏற்றுக்கொண்டோ இல்லாமையே.

உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும், இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றை நீ விசுவாசிக்கிறாயா? மாற்றமுடியாத இவ்வுண்மையை தயவு செய்து விசுவாசியுங்கள். இயேசுவின் ஞானஸ்நானத்தில் விசுவாசமில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீண். இயேசுவின் ஞானஸ்நானம் மீது விசுவாசமில்லாவிட்டால் உன் பாவங்களிலிருந்து உனக்கு விடுதலைக் கிட்டாது. நீ தேவையில்லாத காதலில் ஈடுபட்டிருக்கிறாய்.

சிலுவையை மட்டும் நம்புபவர்கள் கூறுகிறார்கள். “இயேசு என் கர்த்தர், என் இரட்சகர், எனக்காக சிலுவையில் மரித்தார். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினார். பரலோகம் செல்வதற்கு முன்னால் 40 நாட்கள் தம் உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சி பகன்றார். இப்பொழுது கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். நம்மை நியாயம் தீர்க்கும்பொருட்டு இரண்டாம் முறை அவர் வருகிறார். அவரைச் சந்திக்கும்படி, என்னை முற்றிலுமாக மாற்றும்படி இயேசுவிடம் ஜெபிக்கிறேன். ஓ. அன்புள்ள இயேசுவே, என் கர்த்தரே.”

அவர்கள் தம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள். பாவமற்று இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் இருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறது. “நான் இயேசுவை விசுவாசிக்கிறேன், ஆனால் என் இருதயத்தில் பாவமிருக்கிறது; இயேசுவை நான் நேசிக்கிறேன், ஆனால் என் இருதயத்தில் பாவமிருக்கிறது; என்னால், ‘மணவாளனே, தயவுசெய்து வாரும்' என்று கூறமுடியாது, ஏனெனில் என்னில் பாவமிருக்கிறது. இரட்சிப்புக்குறித்த நிச்சயம் என்னிடமில்லை. நான் கடினமாகவும், மனம் வருந்தியும் ஜெபித்தால்தான் இயேசு என்னிடம் வருவார். என் முழு இருதயத்தாலும் அவரை நான் நேசிக்கிறேன். ஆனால் என் இருதயத்தில் பாவங்கள் இருப்பதால் அவரைச் சந்திக்கும் துணிச்சல் என்னிடமில்லை.”

“நீ முழுமையடையாதவன் என்று ஏன் எண்ணுகிறாய்?” என்று இயேசு அத்தகைய மக்களிடம் கேட்டால், அவர்கள் பதிலளிப்பார்கள், “கர்த்தரே நான் தினமும் பாவம் செய்வதால் நான் நீதிமானல்ல. ஆகவே, பாவிகளை நீர் அழைக்கும்போது தயவு செய்து என்னையும் அழையும்”

கர்த்தர் படைத்தவர், நியாயாதிபதியான அவர் பாவிகளை ஏற்றுகொள்வதோ, அவர்களை தமது பிள்ளைகளாக்குவதோ இல்லையென்று அவர்களுக்குத் தெரியாது.

மணவாளன் வந்து மணவாட்டியின் பாவப்பிரச்சினைகளைத் தீர்த்துப்போட்டார். இது குறித்து மணவாட்டிற்கு சரிவர தெரியாததால், அவள் கடும் வேதனையடைந்தாள். நாம் மாமிசத்தால் பாவம் செய்யும்பொழுது நாம் பாவிகள் என்று நினைப்பதால், கர்த்தர் மீது நமக்கு நம்பிக்கை இருப்பதில்லை. வேதவாக்கின் உண்மை தெரியாததாலோ, புரியாததாலோ, நம் இருதயத்தில் இருக்கும் பாவங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.

  • இருதயத்தில் இருக்கும்பாவங்களினால் சிலர் துன்பப் படுவதேன்?
  • பாவங்கள் அனைத்தையும் நீக்கிப்போட்டஇயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்த கருத்தைப்பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது,அல்லது இந்த உண்மையை அவர்கள்ஏற்க மறுப்பது.

மணவாளன் இவ்வுலகின் பாவங்களை நீக்கினார். எங்கே? அவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது. இதனை விசுவாசியாதவர்கள் தொடர்ந்தும் பாவிகளாகவே இருக்கின்றனர். அவர்கள் கைவிடப்பட்ட மணவாட்டிகள்.

மணவாளன் மணவாட்டியிடம் கேட்கிறார், “நீ என்னுடைய மணவாட்டியாக இல்லாதபோது, நீ எப்படி என்னை நேசிக்கலாம்? நீ என்னை மணவாளன் என்று அழைக்கும் முன், உன் எல்லாப் பாவங்களும் கழுவப் பட்டிருக்க வேண்டும்.”

இயேசுவின் ஞானஸ்நானம் இல்லாமல் விடுதலைப் பெறுவோமா? இல்லை. நாம் கர்த்தரின் சாயலில் உருவாக்கப் பட்டோம், ஆகவே நம் இருதயத்தில் நீதியை எதிர்பார்க்கிறோம். நம்முடைய மனசாட்சி நீதியுடன் இருக்க விழைகிறது. ஆனால் நம்முடைய இருதயங்கள் சுத்தம் பண்ணப்படாதிருந்தால், நாம் பாவமில்லாதவர்கள் என்று நினைக்கவே முடியாது. இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் ஏற்று அதனை விசுவாசித்தால், நாம் பாவமற்றவர்கள் என்றும், நாம் நீதிமான்கள் என்றும் கூறலாம்.

நம்முடைய இருதயங்களில் பாவங்களை வைத்துக் கொண்டு நம்மை பாவமற்றவர்கள் என்று நாம் கருதுவதால், நம் மனசாட்சி எப்பொழுதும் பரிசுத்தமடையாது. கர்த்தர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார். கர்த்தர் பொய் சொல்வதில்லை.

கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேலர்களைக் கணக்கெடுக்கும் படி கூறினார். இதனால் அவர்கள் அவருக்குத் தம் வாழ்விற்கான கிரயத்தைக் கொடுக்க முடியும். செல்வந்தர்களும் அரை ஷேக்கலுக்கு மேல் கொடுக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் ஏழைகளும் இத்தொகைக்கு குறைவாக கொடுக்கக்கூடாது. எல்லோரும் கிரயம் கொடுத்தேயாக வேண்டும்.

ஆகவே, அவன் வாழ்க்கைக்கு கிரயம் கொடுத்த இயேசுவை அவன் விசுவாசிக்காவிட்டால், அவன் எப்படி பரிசுத்தனாக முடியும்? அப்படிப்பட்டவன் இருதயத்தில் பாவத்துடன் தொடர்ந்து வாழ்கிறான்.

இயேசுவின் இரத்தத்தை மட்டுமே நாம் விசுவாசித்தால், நம்மிருதயத்தில் பாவமிருக்கிறது; நாம் பாவிகளென்று அறிக்கைச் செய்யவேண்டும். ஆனால் நாம் இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை ஆகிய இரண்டையும் விசுவாசிக்கும்போது நம்மில் பாவமில்லை என்று கூறமுடியும். இரட்சிப்பும் நித்திய ஜீவனும் நம்முடையவை.


ஆவியானவருக்கு எதிராக தூஷனம் செய்தல்

  • எத்தகையப் பாவம் மனிதனை நரகாக்கினைக்குள்ளாக்குகிறது?
  • ஆவியானவருக்கு எதிரான பாவங்கள்.இயேசுவின் ஞானஸ்நானத்தைவிசுவாசிக்காததே அத்தகைய பாவமாகும்.

ரோமர் 1:17 கூறுகிறது. “விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” தேவநீதி நற்செய்தியில் வெளிப்படுத்தப்படுகிறது. இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து, தம் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம் மூலமாக, நம் எல்லாப் பாவங்களையும் கழுவினார். இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் நற்செய்தியின் வல்லமையாகும். இயேசு நம் பாவங்களையெல்லாம் ஒரே தரம் கழுவினார்.

விசுவாசித்தால் இரட்சிப்பும், விசுவாசிக்காவிட்டால், நித்திய நரகமும் கிட்டும். பரலோகத்திலிருக்கும் நம் பிதா, தம் ஒரே நேசகுமாரனை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்து, பாவ நிவர்த்தி செய்யும் பொருட்டு, இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்வித்தார். இப்படியாக அவரை விசுவாசிப்பவன் தன் மீறுதல்களையெல்லாம் சுத்தமாக்க முடியும்.

இவ்வுலகில் எஞ்சியிருக்கும் ஒரே பாவமானது, இயேசுவின் ஞானஸ்நானத்தையும், இரத்தத்தையும் விசுவாசியாததே. இதனை விசுவாசிக்காதது ஆவிக்கெதிரான தூஷனமாகும். இந்த பாவத்திற்கு தீர்ப்பை கர்த்தரே வழங்குவார். அவிசுவாசியை நரகாக்கினைக்குட்படுத்துவார். இதுவே மிகக் கொடிய பாவமாகும். இந்த பாவத்தை உங்களில் யாராவது செய்தீர்களானால், மனம் வருந்துங்கள். மேலும் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து விடுதலைப் பெறுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் நித்திய அழிவை பெறுவீர்கள்.

இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலம் வரும் விடுதலையின் சாட்சியினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களா? யோவான் 1:29 இல் “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று எழுதப்பட்டுள்ள யோவானின் சாட்சியைப் பெற்றீர்களா? எபிரெயர் 10:18 இல் “இவைகள் மன்னிக்கப் பட்டதுண்டானால், இனி பாவத்தின் நிமித்தம் பலி செலுத்தப் படுவதில்லையே.” என்று கூறப் பட்டுள்ளபடி, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசிக்கிறீர்களா?

இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் இரத்தத்தை இதயபூர்வமாக விசுவாசிப்போருக்கு கர்த்தர் உறுதிகூறுகிறார். அவர்களை கர்த்தர் தம் பிள்ளைகளாக்குகிறார். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிப்போர், இயேசுவின் நீதியின் அன்பால் விடுதலையடைவர்.

கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள் வேதவாக்கை பிரசங்கிக்கிறார்கள். உலக சம்பந்தமானவர்களும், கர்த்தரால் அனுப்பப்படாதவர்களும் தம் சொந்த யோசனைகளைப் பிரசங்கிக்கிறார்கள். இவ்வுலகில் தேவ வாக்கை பிரசங்கிக்கும் அநேகர் இருக்கின்றனர். கர்த்தரால் அனுப்பப்பட்டவர்கள் இயேசுவின் ஞானஸ்நானம் குறித்தும், அவரின் இரத்தம் குறித்தும், பேசுகிறார்கள்.

தம்முடைய சொந்த வாக்கியங்களைப் பேசுவோர் தம் சொந்த யோசனைகளை மட்டுமே தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுகின்றனர் “நாம் மூலப் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றோம், நாம் அன்றாட பாவங்களுக்கு மனம் வருந்த வேண்டும்.” நாம் படிப்படியாக பரிசுத்தமாக வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஒருவன் தன்னாலே பரிசுத்தனாக முடியுமா? நம் நற்குணத்தின் பலத்தினாலும், நம் சொந்த முயற்சிகளினாலும் பரிசுத்தமடைய முடியுமா? நம்முடைய பாவங்களைக் கர்த்தர் கழுவிப்போட்டதால் பரிசுத்தமானோமா? அல்லது பாவ விடுதலையை நாமே முயற்சித்து பெற்றதால் பரிசுத்தமானோமா?

உண்மையான விசுவாசமே நம்மை பரிசுத்தமாக்குகிறது. கரியை ஆயிரம் முறைக் கழுவினாலும் வெள்ளையாக்க முடியாதல்லவா? கறுப்புத் தோலை வெள்ளைத் தோலாக்க முடியுமா? எத்தனை சோப்புகளினாலும் நம் பாவங்களை கழுவ முடியாது. நமது சொந்த நீதியானது குப்பை நிறைந்த பை. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து நீதிமானானோமா? அல்லது இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டும் விசுவாசித்து நீதிமான் ஆனோமா?

உண்மையான விசுவாசமானது, இயேசுவின் ஞானஸ்நானத்தின் நீரினாலும் அவரின் சிலுவை இரத்தத்தினாலும் வருகிறது. இரட்சிப்பு நம் சொந்த செய்கைகளினால் வருவதில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் சிலுவை இரத்தம் மீது நமக்குள்ள விசுவாசமே நம்மை விடுதலையாக்கி, நம்மை நீதிமான்களாக்குகிறது.

பிதா தம் குமாரனின் கைகளில் எல்லா மக்களையும் ஒப்படைத்திருக்கிறார். இயேசுவை நம்புவோருக்கு நித்திய ஜீவன் உண்டாவதாக. குமாரனில் விசுவாசிக்கவேண்டும் என்பதன் பொருள், அவரின் ஞானஸ்நானம், இரத்தம் மூலம் கிட்டும் பாவ விடுதலையை விசுவாசிப்பதாகும். விசுவாசிப்போர் நித்திய ஜீவனுடன் கர்த்தரின் பிள்ளைகளாவர். இரட்சிக்கப்பட்டோர் கர்த்தரின் வலது பக்கத்தில் என்றென்றும் வாழ்வர்.

விசுவாசமென்பது இயேசுவின் ஞானஸ்நானத்துடன் அவரின் பிதாவிடம் உள்ள ஒருமைப்பாட்டையும், ஆவியானவர் மீதுள்ள விசுவாசத்தையும் குறிக்கிறது. உண்மை வசனம் நம்மை மறுபடியும் பிறக்க அனுமதியளிக்கிறது. நாம் இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பதால் இரட்சிக்கப்பட்டோம்.

நம்பிக்கையுடன் இருங்கள். இயேசுவின் ஞானஸ்நானம் அவரின் இரத்தம் ஆகியவற்றை விசுவாசிப்பது பாவ விடுதலையை சம்பாதிப்பதாகும். உண்மையான நற்செய்தியை விசுவாசித்து, பாவ மன்னிப்பு பெறுங்கள். *






விசுவாசத்தினால் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவோமாக

【3-9】< மத்தேயு 7:21-23 >


< மத்தேயு 7:21-23 >

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே, பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”

நானே அதுவாக இருக்கலாம்....

  • கர்த்தாவே! கர்த்தாவே! என்பவர்கள் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியுமா?
  • இல்லை. கர்த்தரின் சித்தத்தை செய்பவர்கள் மட்டுமே.

இயேசுகிறிஸ்து கூறினார். “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே, பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” இவ்வார்த்தைகள் அநேக கிறிஸ்தவர்களின் இருதயத்தில் பீதியை உண்டாக்கி, அவர்களைப் பிதாவின் சித்தத்தைக் கஷ்டப்பட்டு செய்யும்படிச் செய்தது.

பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க தாம் செய்ய வேண்டியதெல்லாம் இயேசுவை விசுவாசிப்பதே என்று அநேக கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மத்தேயு 7:21 நம்மிடம் சொல்வது என்னவென்றால், அவரை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று கூறுபவர்களில் எல்லோரும் பரலோக ராஜ்ஜியத்தினுள் நுழைவதில்லை.

இந்த வசனத்தைப் படிக்கும் அநேகர் “அது நானாக இருக்கலாம்” என்று ஆச்சரியத்திற்குள்ளாவார்கள். “இது அவிசுவாசிகளைக் குறித்து இயேசு கூறியதாக இருக்கலாம்” என்று தம்மை தாமே சிலர் திருப்திபடுத்திக் கொள்வார்கள். ஆனால், இந்த சிந்தனை அவர்கள் மனதில் குடிகொண்டு, அவர்களை நச்சரித்துக்கொண்டேயிருக்கும்..

ஆகவே, அவர்கள் வசனத்தின் “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே, பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான்” என்ற பகுதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். “என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே” என்ற வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு அதனை தம்மால் செய்யமுடியும் என்றெண்ணி, தவறாமல் தசம பாகம் கொடுப்பது, அதிகாலையில் ஜெபிப்பது, பிரசங்கம் செய்வது, நற்செய்கைகளில் ஈடுபடுவது, பாவம் செய்யாதிருப்பது. . . இவற்றையெல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு முயற்சி செய்கிறார்கள். இத்தகையவரைப் பார்க்கும்போது என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது.

இந்த வசனத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளாததாலேயே அநேக மக்கள் தவறு செய்கிறார்கள். ஆகவே, இந்த வசனத்தைப் பற்றி தெளிவாக விளக்க விரும்புகிறேன், அதனால் கர்த்தரின் சித்தம் என்ன என்று நாம் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் வாழ முடியும்.

முதலாவதாக, கர்த்தரின் சித்தம் எனப்படுவது மக்களை பாவங்களிலிருந்து விடுவிக்கும்பொருட்டு அவரின் குமாரர், மக்களின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும்.

எபேசியர் 1:5 இல் எழுதப்பட்டுள்ளது, “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நம்மை மறுபடியும் பிறக்கச்செய்ய அனுமதிக்கும்படியாக, இயேசு நம் பாவங்களையெல்லாம் கழுவி விட்டார் என்ற உண்மையான நற்செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவரின் நோக்கம். அவரின் குமாரரான இயேசுவின் மீது நம் பாவங்களையெல்லாம் சுமத்தி நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் நாம் பிறக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். இதுவே கர்த்தரின் சித்தமாகும்.

“கர்த்தாவே! கர்த்தாவே!” என்பதைக் குறித்து

  • இயேசுவை விசுவாசிக்கும்போது நமக்கு தெரிந்திருக்கவேண்டியது என்ன?
  • கர்த்தரின் சித்தம்.

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே, பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” (மத்தேயு 7:21)

கர்த்தரின் சித்தத்தை இரண்டு வழிகளில் அறிய வேண்டியவர்களாக இருக்கிறோம். முதலாவது, அவருடைய சித்தத்தின்படியே நாம் பாவ மன்னிப்பு பெற்றோம் என்பதையும் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தோம் என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டாவதாக, அவ்விசுவாசத்திற்கேற்றபடி செய்யவேண்டும்.

பூமியிலுள்ள எல்லா மனிதர்களின் பாவங்களையும் துடைத்துப்போட வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாகும். சாத்தான் நம் மூதாதையரான ஆதாமை பாவத்தில் விழும்படிச் செய்தான். ஆனால், கர்த்தரின் சித்தம் மனிதனின் எல்லாப் பாவங்களையும் கழுவுவதாக இருந்தது. விசுவாசத்துடன் தசம பாகம் செலுத்துவதோ, அதிகாலையில் ஜெபம் செய்வதோ, கர்த்தரின் சித்தமல்ல என்பதையும், பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பதே அவர் சித்தம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாமெல்லாம் பாவக்கடலில் மூழ்கிபோகக்கூடாது என்பதும் அவரின் சித்தமாக இருக்கிறது.

வேதாகமம் கூறுகிறது. ‘கர்த்தரே, கர்த்தரே' என்று கூப்பிடும் எல்லோரும் பரலோக ராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்கமாட்டார்கள். இதன் பொருள் என்னவென்றால், இயேசுவை மட்டும் நாம் விசுவாசிக்காது, நம்மிடமிருந்து கர்த்தர் எவற்றை எதிர்ப்பார்க்கிறார் என்பதனை அறிவதுமாகும். பாவங்களிலிருந்து நம்மை மீட்பதும் அவர் சித்தமாயிருக்கிறது. ஆதாம் மற்றும் ஏவாளின் சாசனப்படி நாம் பாவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் அறிந்திருக்கிறார்.

கர்த்தரின் சித்தம்

  • கர்த்தரின் சித்தம் யாது?
  • நம்மைப் பாவங்களிலிருந்து விடுவித்து தம் பிள்ளைகளாக்குவது.

மத்தேயு 3:15 கூறுகிறது, “இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றவே நம்மை எல்லாப்பாவங்களிலிருந்தும் இரட்சிக்கும் பொருட்டு இயேசு இவ்வுலகிற்கு வந்தார். யோவான் ஸ்நானனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, கர்த்தரின் சித்தம் நிறைவேறிற்று.

அவர் நம்மை இரட்சித்து தம் பிள்ளைகளாக்கும்படி விரும்புகிறார். அப்படிச் செய்வதற்கு அவர் குமாரன் நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. எல்லோரையும் அவர் பிள்ளைகளாக்குவது அவர் சித்தமாய் இருந்தது. ஆகவே சாத்தானின் பொறியிலிருந்து மக்களைக் காப்பாற்ற, அவர்களின் எல்லாப் பாவங்களையும் சுமக்கும்படி அவரின் சொந்த குமாரரை இவ்வுலகத்திற்கு அனுப்பினார். மக்கள் அவரின் பிள்ளைகளாகும்படி தம் ஒரே குமாரரைப் பலியாக மக்களுக்கு ஈந்ததும் அவரின் சித்தமாகும்.

இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் மரித்ததால் கர்த்தரின் சித்தம் நிறைவேறிற்று. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நமது எல்லாப்பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது என்பதையும், தம் சிலுவை மரணத்தின் மூலம் நம் மீறுதல்களின் தீர்ப்பினை ஏற்றார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாய் இருக்கிறது.

“அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). கர்த்தர் தம் மக்களை பாவங்களிலிருந்து இரட்சித்தார். அதனைச் செய்வதற்கு, இயேசு செய்த முதல் வேலை யாதெனில் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதாகும்.

“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்” (மத்தேயு 3:15). இயேசு இவ்வுலகிற்கு வந்தது, தம் ஞானஸ்நானத்தின் மூலம் இவ்வுலகின் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டது, சிலுவையில் மரித்தது, உயிரோடு எழும்பியது; இவையெல்லாம் கர்த்தரின் சித்தங்களாகும்.

இவற்றை நாம் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். நிறைய மக்கள் மத்தேயு 7:21 ஐ வாசித்து, மரணம் முடிவு என்று தெரிந்தாலும், கர்த்தரை சேவிப்பதும், உலகிலுள்ள உடமைகளையெல்லாம் ஆலயம் கட்டுவதற்கு கொடுப்பதும் கர்த்தரின் சித்தம் என்றெண்ணுகிறார்கள்.

உடன் கிறிஸ்தவர்களே, இயேசுவை விசுவாசிக்கும் நமக்கு முதலில் தெரியவேண்டியது கர்த்தரின் சித்தம் என்னவென்று புரிந்துகொண்டு அதன்படி செய்வதேயாகும். அவரின் சித்தத்தை அறிந்து கொள்ளாமல், உன்னை ஆலயத்திற்கு அர்ப்பணிப்பது தவறாகும்.

முறையான ஆலயங்களில் விசுவாசத்துடன் வாழ்வதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும் என்று மக்கள் தமக்குள் கேட்டுக்கொள்கிறார்கள், நானும் ஒரு பிரஸ்பைட்டியன் ஆலயத்தில் கல்வானிசம் பயின்று, ஒரு முழுமையான மதப்போதகரைப் போன்ற தாயால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டேன். “முறையான ஆலயம்” என்றழைக்கப்படும் ஆலயத்தில் பயின்றேன்.

மிகப்பெரிய ரபியான கமாலியேலிடம் சட்டமும், பெஞ்சமின் கோத்திரத்தில் பிறந்ததையும் குறித்து தான் பெருமைப் பாராட்ட முடியும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். பவுல் மறுபடியும் பிறப்பதற்கு முன்னால், இயேசுவை விசுவாசிப்போர்களை கைது செய்வதற்காக தன் வழியில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் அவன் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் இயேசுவிடம் விசுவாசம் கொண்டு, நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறத்தலை ஆசீர்வாதமாகப் பெற்று நீதிமானானான்.

செய்கைக்கு முன்பு கர்த்தரின் சித்தத்தை நாமறிந்திருக்க வேண்டும்.

  • இயேசுவை விசுவாசிக்கும்முன் எது அவசியம்?
  • அவருடைய சித்தத்தை முதலில்அறிந்திருக்க வேண்டும்.

நம்முடைய பரிசுத்தமே கர்த்தரின் சித்தமாகும். “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகி இருந்து.” (1 தெசலோனிக்கேயர் 4:3) நீர் மற்றும் ஆவியால் நாம் முற்றிலும் பரிசுத்தமாக்கப்படுவதும், விசுவாச வாழ்வு வாழவேண்டியதும் கர்த்தரின் சித்தமென்று நாம் அறிந்திருக்கிறோம்.

யாரொருவன் இயேசுவை விசுவாசித்தபோதிலும் தன் இருதயத்தில் இன்னும் பாவியாய் இருந்தால், அவன் தேவனுடைய சித்தத்தின்படி வாழவில்லை என்று அர்த்தமாகும். இயேசுவினுள் கண்ட இரட்சிப்பின் மூலம் நாம் பரிசுத்தப்படுவது அவர் சித்தத்தின் தேவையாய் இருக்கிறது. இதனை நாமறிய வேண்டியது அவர் சித்தஞ்செய்வதாகும்.

நான் உங்களிடம் “நீங்கள் இயேசுவை விசுவாசித்தபோதிலும், உங்கள் இருதயத்தில் பாவமிருக்கிறதா?” என்று கேட்டால், அதற்கு உங்கள் பதில் ஆமாம் என்றிருந்தால், அதன்பொருள் நீங்கள் இன்னமும் கர்த்தரின் சித்தத்தை தெளிவாக அறியவில்லை என்பதே. நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம்பிக்கையின் மூலம் நாம் இரட்சிக்கப்படுவதும், பரிசுத்தமடைவதும் கர்த்தரின் சித்தமாயிருக்கிறது.

கீழ்ப்படிதலுள்ள மகன்களின் தந்தை ஒருவன் இருந்தான். ஒரு நாள், மிகவும் கீழ்ப்படிதலுள்ள தன் மூத்த மகனை அழைத்து “மகனே, வயல்வெளி மூலம் கிராமத்திற்குச் செல்...” என்று கூறினான்.

அவன் கூறி முடிக்குமுன் “சரி. அப்பா என்று மகன் கூறிச்சென்றான். தான் என்ன செய்யவேண்டும் என்று கண்டறிய சிறிதும் பொறுத்தானில்லை. அவன் சென்றுவிட்டான்.

தகப்பன் சத்தமிட்டு அவனை அழைத்து, “மகனே, நீ மிகவும் கீழ்ப்படிதலுடன் இருப்பது நன்றாக இருக்கிறது. ஆனால் அங்கு நீ எனக்கு என்னசெய்யவேண்டுமென்று அறிய வேண்டும்.”

மகன் கூறினான், “அது சரி, அப்பா. நான் உங்களுக்கு கீழ்ப்படிவேன். என்னைவிட யார் உமக்கு அதிகம் கீழ்ப்படிவர்?”

கடைசியில் அவன் வெறுங்கையுடன் திரும்பி வந்தான். அவன் தகப்பனுக்கு என்ன காரியமாகவேண்டும் என்பது அவனுக்குத் தெரியாததால், அவன் தந்தையின் சித்தத்தை செய்ய அவனுக்கு வழியில்லை. அவன் குருட்டுத்தனமாக கீழ்ப்படிந்தான்.

இயேசுவைக் குறித்து நாம் அறிந்திராவிட்டால், நாமும் அந்தப்படியே இருப்போம். நிறைய பேர் தம்மை அர்ப்பணிப்பர், நிறையபேர் இறையியல் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள், தசம பாகத்தை நம்பிக்கையுடன் செலுத்துகிறார்கள், இரவு முழுவதும் ஜெபிக்கிறார்கள். உபவாசம்... இவற்றையெல்லாம் கர்த்தரின் சித்தம் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்.

தம் இருதயத்திலிருக்கும் பாவங்களுடனே அவர்கள் இறக்க நேரிட்டால், பரலோகத்தின் வாசலில் அவர்கள் திருப்பிவிடப்படுவர். கர்த்தரின் சித்தத்தைச் செய்ய அவர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தாலும், கர்த்தருக்கு என்னவேண்டும் என்பது குறித்து அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

  • அக்கிரமம் என்பதன் பொருள் என்ன?
  • நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும்குறித்து எதுவும் தெரியாது; இயேசுவைபாவியாக இருந்துகொண்டு விசுவாசிப்பது.

“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கத் தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்றுப் போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:22-23).

சில காரியங்களை நாம் செய்யவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவர் நம்மிடமிருந்து விசுவாசத்தைக் கேட்கிறார். நிறையபேர் தீர்க்கதரிசனம் கூறுவார்கள், பிசாசுகளை விரட்டுவார்கள், அவரின் பெயரால் அதிசயங்களைச் செய்வார்கள். அவர்களுக்கு நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாது.

அதிசயங்களை செய்வதென்பது அவர்களைப் பொருத்தவரையில் ஆலயங்களை கட்டுவது, தன் சொத்தையெல்லாம் விற்று ஆலயத்திற்கு செலுத்துவது, தன் வாழ்வை கர்த்தருக்காக கொடுப்பது ஆகியவையாகும்.

அவருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் கூறுவதென்பது தலைவராக இருப்பதாக பொருள்படும். அத்தகைய மக்கள் பரிசேயரைப் போன்றவர்கள். பரிசேயர்கள் தாம் சட்டப்படி வாழ்வதாகக் கூறிக்கொண்டு இயேசுவை துன்புறுத்துவார்கள். இது முறையான ஆலயங்களிலுள்ள கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தும்.

பிசாசுகளை விரட்டுவதென்பது அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகும். அவர்கள் விசுவாசத்தில் அத்தனை ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், கடைசியில்; நான் உங்களை அறியேன், என்று கர்த்தர் கூறுவார். தமக்கு அவர்களைப் பற்றி தெரியாதபோது, அவர்களுக்குத் தம்மைப் பற்றி எப்படித் தெரியும் என்று கர்த்தர் கேட்பார்.

கர்த்தர் கூறுகிறார், “நான் ஒருக்காலும் உங்களை அறியேன்; அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்.” அந்நாளிலே மக்கள் கூட்டம், அவரிடம் அழும். “கர்த்தரே, நான் விசுவாசிக்கிறேன். நீர் என் இரட்சகர் என்று நான் விசுவாசிக்கிறேன்.” தாம் அவரை நேசிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் இருதயத்தில் பாவமிருக்கின்றது. கர்த்தர் அவர்களை அக்கிரமச் செய்கைக்காரரே (விடுதலைப் பெறாத பாவிகள்) என்றழைக்கிறார். அவர்களை அகன்றுப் போகும் படியும் கூறுகிறார்.

அந்நாளிலே, மறுபடியும் பிறவாதவர்கள் மரித்து இயேசுவின் முன்னால் நிற்கும்போது கூறுவார்கள். “நான் தீர்க்க தரிசனம் உரைத்தேன், ஆலயங்களைக் கட்டினேன். உமது நாமத்தினால் 50 மிஷினரிகளை அனுப்பினேன்.”

அப்பாவிகளுக்கு இயேசு கூறுவார், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள்.”

“நீர் என்ன கூறுகிறீர்? உம்முடைய பெயரால் நான் தீர்க்கதரிசனம் கூறியது உமக்குத் தெரியாதா? ஆலயத்தில் நிறைய வருடங்கள் பணியாற்றியுள்ளேன். . . மற்றவர்களுக்கு உம்மை விசுவாசிப்பதைக் குறித்து கற்றுகொடுத்திருக்கிறேன். உமக்கு எப்படி என்னைப் பற்றி தெரியாதிருக்கலாம்?”

அவர் பதிலளிப்பார், “உன்னை எனக்குத் தெரியாது. என்னைத் தெரிந்ததாக கூறும் உன் இருதயத்தில் பாவமிருக்கிறது. என்னைவிட்டு அகன்று போ!”

இருதயத்தில் பாவங்களை வைத்துக் கொண்டு அவரை விசுவாசிப்பது கர்த்தர் முன் அக்கிரமச் செய்கையாகும். அந்தப்படியே அவரின் இரட்சிப்பின் விதியின்படி விசுவாசிக்காததும் அக்கிரமச் செய்கையாகும். அவரின் சித்தத்தை அறிந்து கொள்ளாததும் அக்கிரமச்செய்கையாகும். அவரின் சித்தத்தை அறியாமல் அவரின் சித்தத்தை செய்ய முயல்வதும் அக்கிரமச்செய்கையாகும். நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்கும் ஆசீர்வாதத்தைக் குறித்து தெரிந்துக் கொள்ளாததும் அக்கிரமச் செய்கையாகும். அவருடைய சித்தத்திற்கு கீழ்படியாமல் அவரைப் பின்பற்றுவதும் அக்கிரமச் செய்கையாகும். அக்கிரமச் செய்கையும் ஒரு பாவமாகும்.

வேதாகமத்தில் காணப்படும் கர்த்தரின் சித்தம்

  • கர்த்தரின் பிள்ளைகள் யார்?
  • பாவங்கள் இல்லாத நீதிமான்கள்.

நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறத்தலைக் குறித்த நற்செய்தியை விசுவாசிக்கவேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாகும். உண்மையான நற்செய்தி நம் மறுபிறப்பைக் காப்பாற்றும். நாம் அவரின் பிள்ளைகளாக, அவருடைய நற்செய்திக்காக வாழ்கிறோம் என்பதும் அவரின் சித்தமாகும். நமக்கு கர்த்தரின் சித்தம் இன்னதென்று தெரியவேண்டும். ஆனால் அநேகருக்கு நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பதான நற்செய்தி தெரியாது.

நான் மக்களிடம் நீங்கள் ஏன் இயேசுவை விசுவாசிக்கிறீர்கள் என்று கேட்டால், அநேகர், தம் பாவங்களிலிருந்து இரட்சிப்படைய இயேசுவை விசுவாசிப்பதாகக் கூறுகிறார்கள்.

நான் கேட்பேன், “அப்படியானால் உங்கள் இருதயத்தில் பாவமிருக்கிறதா?”

அவர்கள் கூறுகிறார்கள், “ஆமாம். இருக்கிறது.”

அப்படியானால், நீங்கள் இரட்சிக்கப்பட்டவரா, இல்லையா?”

ஆமாம், நான் இரட்சிக்கப்பட்டவன்.”

தன் இருதயத்தில் பாவமிருக்கும் ஒரு பாவி பரலோக ராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்க முடியுமா?”

இல்லை, அவனால் முடியாது.”

அப்படியானால், நீங்கள் பரலோக ராஜ்ஜியம் போவீர்களா? அல்லது எரியும் நரகத்திற்கு போவீர்களா?”

அவர்கள் தாம் பரலோக ராஜ்ஜியத்திற்கு செல்வதாக கூறுவர், ஆனால் அவர்களால் செல்லமுடியுமா? அவர்கள் நரகத்திற்கே செல்வார்கள்.

தம் இருதயத்தில் பாவங்கள் இருந்தாலும் தாம் இயேசுவை விசுவாசிப்பதால், பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்றும், இதுவே தாம் செய்யவேண்டிய கர்த்தரின் சித்தமென்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால் கர்த்தர் பாவிகளை பரலோக ராஜ்ஜியத்திற்குள் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

கர்த்தரின் சித்தம் என்ன? இயேசுவை விசுவாசிப்பதும், இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம் மூலம் பாவ விடுதலையின் ஆசீர்வாதத்தை விசுவாசிப்பதும் கர்த்தரின் சித்தம் என்று வேதம் கூறுகிறது.

நீர் மற்றும் ஆவியின் மூலம் மறுபடியும் பிறக்கும் ஆசீர்வாதத்தை விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் பிள்ளைகளாவார்கள். அவரின் பிள்ளைகளாவது நமது மகிமையாகும். அவரின் பிள்ளைகள் நீதிமான்கள்.

கர்த்தர் நீதிமான் என்றழைக்கும்போது, அவர் ஒரு கிறிஸ்தவ பாவியை நீதிமான் என்று கருதுகிறாரா? கர்த்தர் பொய்ச் சொல்பவர் அல்ல. ஆகவே அவரின் முன்னால், நீ ஒரு பாவி அல்லது நீதிமான். அங்கே, ‘பாவமில்லாதவனாகக் கருதலாம்' என்பது அறவே கிடையாது. நீர் மற்றும் ஆவியைக் குறித்த நற்செய்தியை விசுவாசிப்போரை மட்டுமே பரிசுத்தமாகும்படி அவர் அழைக்கிறார்.

  • நாம் எப்படி கர்த்தரின் பிள்ளைகளாக முடியும்?
  • நீர் மற்றும் இரத்தம் பற்றிய நற்செய்தியை ஏற்றுக்கொள்வதால்.

கர்த்தர் இவ்வுலகின் பாவங்கள் அனைத்தையும் தம் குமாரனின் மீது சுமத்தியதால், அவரின் சொந்த மகன் கூட சிலுவையில் தீர்க்கப்படவேண்டியதாயிருந்தது. கர்த்தரால் பொய்ச் சொல்ல முடியாது. “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 6:23) அவருடைய குமாரன் மரித்தபோது, பூமியின் மீது மூன்று மணி நேரம் இருள் கவிழ்ந்தது.

“இயேசு: ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்” (மத்தேயு 27:46).

உலகின் அனைத்து மக்களையும் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்பொருட்டு தம் ஞானஸ்நானம் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றார். தான் கர்த்தரால் கைவிடப் படப்போவதையும் சிலுவையில் அறையப்பட போவதையும் அவர் அறிந்திருந்தாலும், மனிதர்களின் பாவங்களை அவர் ஏற்றுக்கொண்டார். ஆகவே யோர்தான் நதியில் இயேசு ஏற்றுக்கொண்ட பாவங்களுக்காக கர்த்தர் தன் குமாரனாகிய இயேசுவைத் தீர்த்தார். மேலும் மூன்று மணி நேரங்களுக்கு தம் முகத்தையும் திருப்பிவிட்டார்.

“அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைப் பேர்களோ, அத்தனைப் பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12).

நீங்கள் கர்த்தரின் பிள்ளைகளா? நாம் நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறக்கும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டதால் நாம் மறுபடியும் பிறந்தவர்களானோம். நீராலும், ஆவியாலும் மறுபடியும் பிறந்தவர்கள் நீதிமான்கள். நாமெல்லாம் இப்போது நீதிமான்களானோம்.

“தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31) நீதிமானாயிருக்கும் ஒருவன், கர்த்தருக்கு முன்பும், மக்களுக்கு முன்பும் தன்னை நீதிமான் என்றழைக்கையில், விடுதலையடையாதோர் அவனைத் தீர்க்க முயற்சிக்கிறார்கள். ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான் “தேவன் தெரிந்துக்கொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.” (ரோமர் 8:33) கர்த்தர் இயேசு மூலமாக நம் பாவங்கள் எல்லாவற்றையும் கழுவி விட்டு, பரிசுத்தமானவன், நீதிமான், என் பிள்ளைகள் என்றழைக்கிறார். நாம் அவரின் மகிமையின் பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுத்தார்.

நீராலும், ஆவியாலும் மறுபடியும் பிறந்தவர்கள் கர்த்தரின் பிள்ளைகள். அவர்கள் நிரந்தரமாக அவருடன் வாழ்வார்கள். அவர்கள் இப்பூமியின் வெறும் உயிரினமில்லை. அவர்கள் பரலோகத்திற்கு சொந்தமான தேவனின் பிள்ளைகள்.

இப்பொழுது அவர்கள் கர்த்தருடைய நீதியின் புத்திரர்கள். யாராலும் அவர்கள் மீது குற்றஞ்சொல்லவோ, தீர்க்கவோ கர்த்தரிடமிருந்து பிரிக்கவோ முடியாது.

இயேசுவை விசுவாசிக்கவேண்டுமானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். வேதாகமத்தைத் தெரிந்திருக்க வேண்டும். கர்த்தரின் சித்தத்தை அறிந்து அவரை விசுவாசிப்பது மிகவும் அவசியம். அப்பொழுது நம்மால் அவரின் சித்தப்படிச் செய்யமுடியும்.

பாவிகள், நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறப்பது கர்த்தரின் சித்தமாகும்

  • ஒரு பாவியைப் போல் இயேசுவைகர்த்தர் அனுப்பியதேன்?
  • எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்படும்பொருட்டு.

நீராலும் ஆவியாலும் நாம் மறுபடியும் பிறப்பதும், விடுதலைப் பெற்றோராவதும் கர்த்தரின் சித்தமாக இருக்கிறது. “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” (1 தெசலோனிக்கேயர் 4:3)

நாம் இரட்சிக்கப்படும்பொருட்டு, நம் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட, கர்த்தர் தன் குமாரனை அனுப்பியது கர்த்தரின் சித்தமாகும். நீராலும், ஆவியாலும் மறுபடியும் பிறக்க வைக்கும் இதுவே ஆவியானவரின் சட்டமாகும். அது நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக்கிற்று.

நாம் விடுவிக்கப்பட்டவர்கள். இப்பொழுது உங்களால் கர்த்தரின் சித்தத்தை உணர்ந்துகொள்ளமுடிகிறதா? நம்மை விடுவிப்பது அவரின் சித்தமாகும். நாம் உலகத்தோடு ஒப்புரவாகப் போவதை அவர் விரும்பவில்லை. ஆனால் அவரின் வார்த்தைகளை மட்டும் விசுவாசிக்க வேண்டுமென்றும், அவரை மட்டும் சேவிக்கவேண்டுமென்றும் விரும்புகிறார்.

மறுபடியும் பிறந்தவர்கள், நற்செய்தியை சாட்சி கொடுக்க வேண்டுமென்பதும், ஆலயத்தில் இருக்கவேண்டுமென்பதும், மற்ற ஆத்துமாக்களைத் திரும்ப கர்த்தரிடம் அழைத்துவரும் பணியில் அர்ப்பணிக்கவேண்டுமென்பதும் கர்த்தரின் சித்தமாயிருக்கிறது.

நாம் பாவம் செய்வது வேண்டுமென்றே அல்ல. அதன் காரணம் நாம் பலவீனர்களாக இருப்பதே. ஆனால் இயேசு அப்பாவங்களை நீக்கிப்போட்டார். கர்த்தர் யோவான் ஸ்நானன் மூலம், உலகின் பாவங்களையெல்லாம் இயேசுவின் மீது சுமத்தினார். இக்காரணம் பற்றியே தம் குமாரனை அனுப்பி யோவானால் ஞானஸ்நானம் பெறும்படிச் செய்தார். இதனை விசுவாசிப்பதால் நாம் இரட்சிக்கப்பட்டோம். இது கர்த்தரின் சித்தமாகும்.

கர்த்தரால் அனுப்பப்பட்ட இயேசுவை நாம் விசுவாசிக்க வேண்டுமென்பது கர்த்தரின் சித்தமாகும்

  • இயேசு ஏன் பாவிபோல் வந்தார்?
  • மனிதர்களின் பாவங்களைத்தன்மீது ஏற்றுக்கொள்வதற்காக.

கர்த்தரால் அனுப்பப்பட்டவரை விசுவாசிப்பது, கர்த்தரின் சித்தம் என்று வேதம் சொல்லுகிறது. “அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாய் இருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவை புசித்தார்களே என்றார்கள்.” (யோவான் 6:28-31).

இயேசுவிடம் மக்கள் கூறினர். கானான் நாட்டிற்கு செல்லும் வழியில் கர்த்தர் மோசேயிற்கு ஒரு அடையாளத்தைக் காண்பித்தார். இஸ்ரவேலர்களுக்கு பரலோகத்திலிருந்து மன்னாவைக் கொடுத்தார். அதனால் அவர்கள் கர்த்தரை நம்பினார்கள். (யோவான் 6:32-39) மக்கள் இயேசுவிடம் கேட்டனர், “தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.”

கர்த்தருக்கேற்ற செய்கைகளை செய்யவேண்டுமானால் தன்னை அவர்கள் நம்பவேண்டுமென்று இயேசு கூறினார். நம் கர்த்தரின் செய்கைகளை நம்பவேண்டுமானால், இயேசுவின் செய்கைகளை நம்பவேண்டும். நற்செய்தியை விசுவாசிப்பதும், பிரசங்கிப்பதும் மட்டுமல்ல, அதன்படி வாழ்வதும் கர்த்தரின் சித்தமாக இருக்கிறது.

கர்த்தர் நமக்கு கட்டளையிடுகிறார். “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும், சீஷராக்கி, பிதா குமாரர் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைகொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” (மத்தேயு 28:19-20).

இயேசு தெளிவாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கும்படி கூறுகிறார். அவர் பிதாவிற்காகவும், ஆவியானவருக்கும் செய்தவைகளெல்லாம், அவரின் ஞான்ஸ்நானத்தில் அடங்கியிருக்கிறது. நாம் இதனை அறிந்துக் கொள்ளும்பொழுது கர்த்தரை விசுவாசிக்கவும், இயேசு இவ்வுலகில் செய்தவற்றை நோக்கவும், இவை குறித்து ஆவியானவர் எப்படி சாட்சி கொடுக்கிறார் என்பதையும் அறிய முடியும்.

நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து சாட்சி சொல்ல கர்த்தர் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார். ஆகவே, நாம் வேதவாக்கை விசுவாசித்தால் மட்டும் இரட்சிக்கப்படுவோம்.

கர்த்தரின் வேலையைச் செய்தல்

  • நம் வாழ்வின்நோக்கம் என்ன?
  • கர்த்தரின் சித்தத்தின்படிஉலகமெங்கும்போய் நற்செய்தியைபரப்புவதே.

நாம் கர்த்தருடைய வேலையைச் செய்ய வேண்டுமென்றால், முதலில் இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் நம்பவேண்டும். கர்த்தரால் அனுப்பப்பட்டவரை விசுவாசிப்பதே கர்த்தருக்காக நாம் செய்யும் வேலையாகும். இயேசுவை விசுவாசிக்கும் பொருட்டு, அவர் நம்மை நீரினாலும் இரத்தத்தினாலும் இரட்சித்தார் என்பதை நாம் முதலில் விசுவாசிக்க வேண்டும்.

கர்த்தரின் சித்தமானது நாம் இயேசுவை விசுவாசித்து நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் முற்றுப் பெறுகிறது. இதன் மூலமாக நாம் கர்த்தரின் வேலையைச் செய்கிறோம். அவர் கூறினார் நீராலும், ஆவியாலும் மறுபடியும் பிறத்தலான ஆசீர்வாதத்தை விசுவாசிப்பவர்கள் மட்டுமே பரலோக ராஜ்ஜியத்தினுள் பிரவேசிக்க முடியும்.

கீழ்க்கண்ட முக்கியமான உண்மைகளை அறிந்து பரலோக ராஜ்ஜியத்தில் நம்மிடத்தைப் பெறுவோமாக. கர்த்தரின் உண்மையான சித்தத்தை அறிந்துகொள்ளுதல், இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் நம் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதை அறிந்து விசுவாசித்தல், பரலோக ராஜ்ஜியத்தின் விரிவிற்காக வாழ்தல், மற்றும் நீ மரணமடையும்வரை நற்செய்தியை பிரசங்கித்தல்.

சக கிறிஸ்தவர்களே! நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்பவர்களே, கர்த்தரின் வேலையைச் செய்பவர்கள். கர்த்தரால் அனுப்பப்பட்டவரை விசுவாசிப்பதே கர்த்தருக்கான வேலையாகும். கர்த்தரால் அனுப்பப்பட்டவரின் மீது நம் பாவங்கள் சுமத்தப்பட்டடதையும், இயேசு நம் இரட்சகர் என்பதையும் விசுவாசிப்பது கர்த்தரின் சித்தப்படி செய்வதாகும்.

மனிதனைப் பாவத்திலிருந்து விடுவிப்பதான இயேசுவின் செய்கை, அவர் யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றதாலும், நமக்காக சிலுவையில் மரித்ததாலும் நிறைவேற்றப்பட்டது. கர்த்தருக்கான இரண்டாம் கட்டவேலை யாதெனில், அவரால் அனுப்பப்பட்டவரை நம்புவதும், உலகின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொண்ட இரட்சகரை நம்புவதும், நற்செய்தியை உலகமெங்கும் பிரசங்கிப்பதுமாகும்.

மறுபடியும் பிறந்தவர்களான நாம், உலகின் முடிவு வரையும் நற்செய்தியின் படி வாழ்ந்து பிரசங்கிக்கவேண்டும்.

  • கர்த்தரின் சித்தம் தெரியாமல் இயேசுவை விசுவாசிப்பவர்கள் எங்கே போவார்கள்?
  • அவர்கள் நரகத்திற்குப் போவார்கள்.

“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களை செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:22-23).

இந்த வசனங்கள் கர்த்தர் முன்பு பாவிகள் யார், அக்கிரமச்செய்கைக்காரர் யார் என்று மிகவும் தெளிவாக கூறுகிறது.

‘கர்த்தரே, கர்த்தரே' என்று அநேக மறுபடியும் பிறவாதவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் இருதயத்தில் பாவமிருப்பதால் அவர்கள் வேதனையில் உள்ளார்கள். ஆகவே, அவர்கள் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டு ‘கர்த்தரே, கர்த்தரே' என்று அறைவாசி குற்றஞ்சொல்வது போலவும், ஜெபத்திற்கு பொருந்தாத விதத்திலும் அழைக்கிறார்கள்.

ஜெபத்தில் சத்தமிட்டால் அவர்கள் மனசாட்சி சுத்தமாகும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது அப்படியாகாது: ஏனெனில் அவர்கள் இருதயத்தில் இன்னும் பாவமிருக்கிறது. அவர்கள் மலைகளுக்குச் சென்று ஜெபிக்கிறார்கள், கர்த்தர் வெகு தூரத்திலிருப்பது போல வியாகூலமாக சத்தமிட்டு அழுகிறார்கள். நம்மிடம் முழுமையான விசுவாசம் இல்லாவிட்டால் அடிக்கடி ‘கர்த்தரே, கர்த்தரே' போடவேண்டியதுதான்.

மறுபடியும் பிறவாதோராலான சபைகளில், நற்செய்திப் பெட்டி உடைந்துபோகும்படியாக மிகவும் ஆவலுடன் ஜெபிக்கிறார்கள்.

‘கர்த்தரே, கர்த்தரே' என்று கூறுபவர்களில் எல்லோரும் பரலோக ராஜ்ஜியம் போக முடியாது என்று வேதாகமத்தில் நாம் பார்க்கலாம். நற்செய்தியாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்பவர்களுக்கு, கர்த்தரின் வேலையைச் செய்யும்படி அவர்களை வழி நடத்தும் நம்பிக்கை இருக்கிறது.

இருதயத்தில் பாவத்தை வைத்துக்கொண்டு, அவரின் பெயரைக் கூப்பிடுவது, அக்கிரமச்செய்கை என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் மலைகளில் நடக்கும் ஜெபக்கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறீர்களா? சில பெண் டீக்கன்கள் ஒரேயடியாக அழுவார்கள். அவர்கள் அவரின் பெயரை அழைக்கிறார்கள், ஏனெனில் இயேசுவை சத்தியத்தில் அவர்கள் சந்தித்ததில்லை. ஆவியானவரை அவர்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டதில்லை, நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறக்கவில்லை. அவர் பெயரை மிகவும் அவசரமாகக் கூப்பிடும் காரணம், தாம் நரகத்திற்குச் செல்வோம் என்ற நிரந்தர பயம் அவர்களிடம் உள்ளதே.

ஒருவன் தன் வாழ்வை ஆலயப்பணிகளைச் செய்யும்பொருட்டு மிஷனரியாகவோ, போதகராகவோ அர்ப்பணித்து வாழுகிறான். இறுதியில் அவன் கர்த்தரால் கைவிடப்பட்டான் என்று கொள்க. பெற்றோராலோ, வாழ்க்கைத் துணையினாலோ கைவிடப்படுதலே ஒருவனுடைய இதயத்தை உடைத்துவிடும். ஆனால், நம் கர்த்தரால், ராஜாதிராஜாவால், நம் ஆத்துமாவின் நீதிபதியால், கைவிடப்பட்டால் நாம் எங்கே போவோம்

இந்நிலை உங்களில் ஒருவருக்கும் வராதிருப்பதாக. தயவுசெய்து நீர் மற்றும் ஆவியைக்குறித்த நற்செய்தியைக் கேட்டு விசுவாசியுங்கள். நாம் மறுபடியும் பிறப்பதும், நீர் மற்றும் ஆவி குறித்த நற்செய்தியில் வாழ்வதும் கர்த்தரின் சித்தமாக இருக்கிறது.

கிறிஸ்தவர்களாகிய நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை, உண்மையாக விசுவாசித்து வேதாகமத்தின் சத்தியத்திலிருந்து பலத்தைப் பெறவேண்டும். அப்பொழுது மட்டுமே கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்து நாம் இரட்சிக்கப்படமுடியும். *